இராகு கேது பெயர்ச்சி பலன்கள்
2014-2016 மிதுனம் ;
மிருகசீரிஷம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3&ம் பாதங்கள்
எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவராகவும், தன்மானம் மிக்கவராகவும் விளங்கும் மிதுன ராசி அன்பர்களே ! ராகு பகவான் ஜென்ம ராசிக்கு 4&ஆம் வீட்டிலும், கேது பகவான் 10&ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் வீண் அலைச்சல்கள் அதிகரிக்கும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும் என்றாலும் 05.07.2015 வரை குருபகவான் தன ஸ்தானமான 2&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண வரவுகள் தேவைக் கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் சிறு சிறு மனசஞ்சலங்கள் தோன்றினாலும் பெரிய கெடுதியில்லை. 16.12.2014 முதல் சனி பகவான் 6&ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பது அற்புதமான அமைப்பாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பிரிந்து சென்ற உறவினர்களும் ஒற்றுமை பாராட்டுவார்கள். உடல் ஆரோக்கியமும் சிறப்படையும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறந்த முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்க்கும் லாபங்கள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திருப்தியான நிலையிருக்கும். எதிர் பாராத பதவி உயர்வுகளும் கிடைக்கும்.
உடல் நிலை
உடல் ஆரோக்கியம் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளில் திறம் பட செயல் பட முடியும். வீண் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்க கூடிய காலம் என்பதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களால் சற்றே மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும்.
குடும்பம் குழந்தை
குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு முற்பாதியில் திருமணம் கைகூடும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதியில்லை. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும்.
கொடுக்கல் வாங்கல்
பணவரவுகள் ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றியினை காண்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை ஏற்பட்டாலும், பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் சற்று தாமதமாக தீர்ப்பு கிடைத்தாலும் சாதகமாக இருக்கும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் சிறப்பாகவே நடைபெறும். நல்ல லாபத்தை கொடுக்கும். சிறு சிறு போட்டிகள் பொறாமைகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்கும் வலிமையும் வல்லமையும் உண்டாகும். அரசு வழியில் ஆதரவுகள் கிடைக்கும். வங்கி கடன்களை அடைப்பீர்கள். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட கூடிய காலம் என்பதால் பயணங்களை தவிர்க்கவும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் திருப்தியுடன் செயல் பட முடியும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகி குடும்பத்தை பிரிய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது.
பெண்களுக்கு
உடல் நிலையில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடனேயே செயல்படுவீர்கள். மணமாகாதவர்களுக்கு மணமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்களும் நடைபெறும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு சற்று வேலை பளு கூடுதலாக இருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு
பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். மக்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்வீர்கள். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் நன்றாகவே இருக்கும். விளைப்பொருட்கள் நல்ல விலைக்கு போகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். அரசு வழியில் மானிய உதவிகள் கிடைக்க பெறும். தொழிலாளர்களை அனுசரித்து செல்லவும்.
கலைஞர்களுக்கு
நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலின் கவனமுடனிருக்கவும்.
மாணவ மாணவியர்களுக்கு
கல்வியில் மந்த நிலை உண்டாக கூடிய காலம் என்பதால் சற்று முயற்சியினை எடுத்துக் கொள்வது நல்லது. நல்ல நண்பர்களின் சேர்க்கை மகிழ்ச்சியினை உண்டாக்கும். கல்விக்காக பயணங்களை மேற்கொள்ள கூடிய சூழ்நிலை இடம் விட்டு இடம் மாறக் கூடிய நிலை உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும்.
ராகு பகவான் சித்திரை நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 21.06.2014 முதல் 24.10.2014 வரை
ராகு பகவான் ஜென்ம ராசிக்கு 4&இல் செவ்வாயின் நட்சத்திரத்திலும் கேது பகவான் ஜென்ம ராசிக்கு 10&இல் புதனின் நட்சத்திரத்திலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் சற்றே அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்திலும் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்பட வேண்டியிருக்கும் என்றாலும் குரு பகவான் 2&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண வரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருந்தாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போதும், பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றிலும் கவனமுடனிருப்பது நல்லது. உடல் நிலையில் சற்று சோர்வு,மந்த நிலை தோன்றி மறையும். கணவன் மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைக்கவும்.
ராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில் கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25.10.2014 முதல் 27.02.2015 வரை
ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 4&இல் அமைந்துள்ளார். கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் 10&ஆம் வீட்டில் அமைந்துள்ளார். இது அவ்வளவு சாதகமான சஞ்சாரம் என்று கூற முடியாது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். குரு பகவான் குடும்ப ஸ்தானமான 2&ஆம் வீட்டில் அமைந்திருப்பதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமணம் போன்ற சுப காரியங்களும் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்லவும். 16.12.2014 முதல் சனிபகவான் 6&இல் சஞ்சரிக்க விருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் மறையும். செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் கிட்டும் என்றாலும் போட்டிகள் நிலவக் கூடிய காலம் என்பதால் சிந்தித்து செயல்படுவது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களும் குறையும்.
ராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில் கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28.02.2015 முதல் 03.07.2015 வரை
ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 4&ஆம் வீட்டிலும், கேது பகவான் சனியின் நட்சத்திரத்தில் 10&ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்கின்றனர். 4,10&இல் சஞ்சரிக்கும் ராகு கேதுவால் நன்மை தீமைக் கலந்த பலன்களே உண்டாகும் என்றாலும் குரு 2&இல் சஞ்சரிப்பதும், சனி 6&இல் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்களும் நடைபெறும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். செய்யும் தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். போட்டிகள் குறைந்து லாபங்கள் பெருகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது மூலம் அலைச்சல்கள் குறையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட முடியும்.
ராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில், கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 04.07.2015 முதல் 06.11.2015 வரை
ராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 4&ஆம் வீட்டிலும், கேது பகவான் சனியின் நட்சத்திரத்தில் 10&ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் ஒரளவுக்கு அனுகூலமானப் பலன்களைப் பெற முடியும். 05.07.2015 முதல் குரு பகவான் 3&ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. சனி பகவான் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொள்ளும் வலிமையும் வல்லமையும் உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகள் ஏற்பட்டாலும் மறைமுக எதிர்ப்புகள் இருக்காது. வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளால் அலைச்சல்கள் அதிகரிக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். வேலை பளு குறையும்.
ராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில், கேது பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 07.11.2015 முதல் 08.01.2016 வரை
ராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 4&ஆம் வீட்டிலும், கேது பகவான் குருவின் நட்சத்திரத்தில் 10&ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும். குரு பகவானும் 3&இல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பொருளாதார நிலையில் ஏற்றத் தாழ்வுகள் நிலவக் கூடும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். சனி பகவான் 6&இல் சஞ்சரிப்பதால் எதிரிகளும் நண்பர்களாக செயல்படுவார்கள். செய்யும் தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் திறமைக்கேற்ற பதவிகளைப் பெற முடியும். எதிர் பார்க்கும் இடமாற்றங்களும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது மூலம் மருத்துவ செலவுகள் குறையும்.
மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள்
தன்னைத் தானே வழி நடத்தக் கூடிய திடமான நம்பிக்கை கொண்ட உங்களுக்கு உடல் ஆரோக்கியம் ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். திருமண சுப காரியங்களில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். புத்திர வழியில் சிறு சிறு கவலைகள் தோன்றினாலும் பெரிய கெடுதியில்லை. செய்யும் தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. போட்டிகள் மறைமுக எதிர்ப்புகள் போன்ற அனைத்தையும் சமாளிக்கும் வலிமையும் வல்லமையும் உண்டாகும்.
திருவாதிரை
சூழ்நிலைக்கு தகுந்தாற் போல தன்னை மாற்றிக் கொள்ளும் இயல்பு கொண்ட உங்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தியாகும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலிலும் கவனம் தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலமானப் பலனைப் பெற முடியும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும்.
புனர்பூசம் 1,2,3&ம் பாதங்கள்
பொய் பேசாத குணமும், நல்ல வாக்கு வன்மையும் கொண்ட உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு லாபத்தினைப் பெற முடியும்.
அதிர்ஷ்டம் அளிப்பை
எண் & 5,6,8,14,15,17
நிறம் & பச்சை, வெள்ளை
கிழமை & புதன், வெள்ளி
கல் & மரகதம்
திசை& வடக்கு
தெய்வம் & விஷ்ணு
பரிகாரம்
மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ராகு பகவான் ஜென்ம ராசிக்கு 4&ஆம் வீட்டிலும், கேது 10&ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது. 16.12.2014 வரை சனி 5&இல் சஞ்சரிப்பதால் சனிப்ரீதி, ஆஞ்சநேயரை வழிபடவும். 5.7.2015 முதல் குரு 3&ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் வியாழக்கிழமை தோறும் தட்சிணா மூர்த்தியை வழிபடவும்.
Contact
For your consultation
Please sent Rs 500 ,( 20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer ) in favour of MURUGU BALAMURUGAN with your birth details (date of birth,time,place) & 5 questions to ( e-mail ) me for horoscope reading
please contact my postal adress
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani, Chennai-600026 Near Bank of Baroda
My Cell - 0091 - 7200163001, 9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
My Cell - 0091 - 7200163001, 9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
Bank accounts details are
Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078
or
Name ; Murugubalamurugan
Bank name - Bank of Barado
Savings Account No - 29900100000322
Branch name - VadapalaniChennai - 600026.
INDIA.MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078
Person who is will to sent money by western union money transfer or by money gram details are as follows as
R.Balamurugan,
S/O Murugu Rajendran,
No 33 Palani andavar koil street,
Vadapalani Chennai -600026,
South India. Cell 9841771188/7200163001
No comments:
Post a Comment