இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 மேஷம் ;
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ம் பாதம்
தன்மானமும், சுய கௌரவமும் எதிலும் சிந்தித்து செயல்படும் ஆற்றலும் கொண்ட மேஷ ராசி அன்பர்களே! சர்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசிக்கு 6&லும், கேது 12ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது ஒரளவுக்கு சாதகமான அமைப்பே ஆகும். இதனால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். குரு பகவான் 5.7.2015 முதல் ஜென்ம ராசிக்கு 5&ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று சுப காரியங்கள் தடபுடலாக நிறைவேறும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும், பூர்வீக சொத்துகளால் லாபமும் உண்டாகும். 16.12.2014 முதல் உங்களுக்கு அஷ்டம சனி தொடங்கவுள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமும் செலுத்துவது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது போன்றவை நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து செல்லவும். தெய்வ தரிசனங்களுக்காக குடும்பத்தோடு பயணங்களை மேற்கொள்ள கூடிய வாய்ப்பு கிட்டும்.
உடல் நிலை ;
உடல் நிலை ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அன்றாட பணிகளில் சுறு சுறுப்புடன் செயல் பட கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களும் சுபிட்சமாக அமைவார்கள். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டிருப்பவர்களுக்கு மருத்துவ செலவுகள் குறையும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.
குடும்பம் குழந்தை
பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுப காரிய முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையேயும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூமி மனை வாங்கும் யோகம் தாமதமாக அமையும்.
கொடுக்கல் வாங்குல்
பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக நடைபெறும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும் என்றாலும் கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. மறைமுக எதிர்ப்புகள், போட்டிகள் யாவும் விலகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் லாபம் கிட்டும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். தொழிலாளர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு
செய்யும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும். உயரதிகாரிகளால் சிறு சிறு கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடன் பணி புரியவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கப்பெறும்.
பெண்களுக்கு
உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறு சுறுப்புடன் செயல்பட முடியும். மணவயதை அடைந்தவர்களுக்கு திருமணம் அமைய சற்று தாமதமாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். ஆடை ஆபரணம் சேரும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. அசையும் அசையா சொத்துகள் வாங்கும் யோகம் கிட்டும்.
அரசியல்வாதிகளுக்கு
பெயர், புகழ் சிறப்பாக இருக்கும். மக்களின் ஆதரவை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி வரும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். சிறப்பான வருவாய்கள் வந்தபடியே இருக்கும்.
விவசாயிகளுக்கு
விளைச்சல் சிறப்பாக இருக்கும் பட்டபாட்டிற்கான முழு பலனையும் தடையின்றி பெற முடியும். விளை பொருளுக்கேற்ற விலையும் சிறப்பாக கிடைக்கும். அரசு வழியில் கிடைக்கப் பெறும் உதவியால் நவீன கருவிகளை வாங்கி போடுவீர்கள்.
கலைஞர்களுக்கு
நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிட்டும். தாராள தன வரவுகளால் அசையும் அசையா சொத்துக்களை வாங்கி சேர்க்க முடியும். படபிடிப்பிற்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்.
மாணவ மாணவியர்களுக்கு,
கல்வியில் சற்றே மந்த நிலை ஏற்படக் கூடிய காலம் என்றாலும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கல்விக்காக சுற்றுலா பயணங்களை மேற்கொள்வீர்கள். நல்ல நண்பர்களின் சேர்க்கையால் நற்பலன்களை அடைய முடியும்.
ராகு பகவான் சித்திரை நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 21.06.2014 முதல் 24.10.2014 வரை
சர்ப கிரகங்களான ராகு பகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் 6&ஆம் வீட்டிலும், கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் 12ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது அனுகூலமான அமைப்பாகும். இதனால் எதிர்பாராத பணவரவுகள் கிட்டும். குரு 4இல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். நல்ல நட்புகள் தேடி வரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பொருளாதார மேன்மையால் சுபிட்சமான வாழ்க்கை அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகளில் தடை இருக்காது. போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி பெற முடியும். சனி 7&இல் சஞ்சரிப்பதால் கூட்டாளிகளையும். தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல் பட முடியும். உயர் பதவிகளை வகிக்கும் வாய்ப்பும் உண்டாகும்.
ராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25.10.2014 முதல் 27.02.2015 வரை
ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 6&ஆம் வீட்டிலும், கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் 12ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களிலும் சாதகப் பலன்களையே அடைய முடியும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பண வரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர் பாராத உதவிகள் மூலம் குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. 16.12.2014 இல் ஏற்படவுள்ள சனி மாற்றத்தின் மூலம் சனி பகவான் 8&ஆம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதால் அஷ்டம சனி உங்களுக்கு தொடங்கவுள்ளது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பது, உற்றார் உறவினர்களையும், குடும்பத்திலுள்ளவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் நிம்மதியுடன் செயல்பட முடியும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும்.
ராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில் கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28.02.2015 முதல் 03.07.2015 வரை
ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்திலும் 6ஆம் வீட்டிலும், கேது சனியின் நட்சத்திரத்திலும் 12ஆம் வீட்டிலும், சஞ்சாரம் செய்யும் காலங்களில் தெய்வ தரிசனங்களுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். சிறு சிறு வீண் விரயங்களை எதிர் கொள்ள நேரிட்டாலும் பெரிய கெடுதியில்லை. உங்களுக்கு அஷ்டம சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. திருமண சுப காரியங்கள் சிறு சிறு தடைகளுக்கு பின் கை கூடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்கள் இன்றி வாழலாம். பணம் கொடுக்கல் வாங்கலிலும் கொடுத்த கடன்களை திரும்ப பெறுவதில் தடைகள் உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு லாபம் அமையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடமும், விட்டு கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நெருக்கடிகளை சந்தித்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும்.
ராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில் கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 04.07.2015 முதல் 06.11.2015 வரை
ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 6ஆம் வீட்டிலும், கேது பகவான் சனியின் நட்சத்திரத்தில் 12ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களிலும் நற்பலன்களே உண்டாகும். குரு பகவானும் பஞ்சம ஸ்தானமான 5&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் திருமணம் போன்ற சுப காரியங்கள் கை கூடி தடபுடலாக நடைபெறும். அஷ்டம சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரம் லாபமளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைய முடியும். கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தலாகும்.
ராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில் கேது பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 07.11.2015 முதல் 08.01.2016 வரை
ராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 6ஆம் வீட்டிலும் கேது பகவான் குருவின் நட்சத்திரத்தில் 12ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களிலும் அனுகூலமான பலனே அமையும். குரு பகவான் 5&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் லாபமும், அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தினாலும் அன்றாட பணிகளின் சுறு சுறுப்பாக செயல்பட முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களைப் பெற முடியும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும்.
அஸ்வினி
ஒருவரை பார்த்தவுடன் எடைபோடும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு பண வரவுகள் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றியீனை கொடுக்கும். உற்றார் உறவினர்கள் சற்று சாதகமாக இருப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். புதிய பூமி, மனை வாங்கும் ஆசைகள் தாமதமாக நிறைவேறும்.
பரணி
மற்றவரை கவரக் கூடிய உடலமைப்பும், சிறந்த பேச்சாற்றலும் கொண்ட உங்களுக்கு திருமண சுப முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் தோன்றி மறையும். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறையும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்திலிருப்பவர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும்.
கிருத்திகை &1ம் பாதம்
நல்ல உடல் வலிமையும் புத்திசாலி தனமும் கொண்ட உங்களுக்கு பணவரவுகள் தேவைக் கேற்றபடி இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் தடைகளுக்குப் பின் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டே முன்னேறுவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஒரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல் படுவது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். பணி புரிபவர்களுக்கு வேலை பளு குறைவாக இருக்கும்.
அதிர்ஷ்டம் அளிப்பை
எண் 1,2,3,9,10,11,12
நிறம் ஆழ் சிவப்பு
கிழமை செவ்வாய்
கல் பவளம்
திசை தெற்கு
தெய்வம் முருகன்
பரிகாரம்
மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது பகவான் விரயஸ்தானமான 12 இல் சஞ்சரிப்பதால் தினமும் விநாயகரை வழிபடவும். 05.07.2015 வரை குரு 4 இல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது. 16.12.2014 முதல் அஷ்டம சனி தொடங்க விருப்பதால் சனிக்குரிய பரிகாரங்களை செய்வது மிகவும் நல்லது.
Contact
For your consultation
Please sent Rs 500 ,( 20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer ) in favour of MURUGU BALAMURUGAN with your birth details (date of birth,time,place) & 5 questions to ( e-mail ) me for horoscope reading
please contact my postal adress
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani, Chennai-600026 Near Bank of Baroda
My Cell - 0091 - 7200163001, 9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
My Cell - 0091 - 7200163001, 9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
Bank accounts details are
Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078
or
Name ; Murugubalamurugan
Bank name - Bank of Barado
Savings Account No - 29900100000322
Branch name - VadapalaniChennai - 600026.
INDIA.MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078
Person who is will to sent money by western union money transfer or by money gram details are as follows as
R.Balamurugan,
S/O Murugu Rajendran,
No 33 Palani andavar koil street,
Vadapalani Chennai -600026,
South India. Cell 9841771188/7200163001
No comments:
Post a Comment