குரு பெயர்ச்சி பலன் - 2014-2015 தனுசு ;
மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
கம்பீரமான தோற்றமும், சிறந்த தெய்வ பக்தியும், எதிலும் தைரியத்துடன் செயல்படும் ஆற்றலும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே! உங்கள் ராசியாதிபதி குரு பகவான் அஷ்டம ஸ்தானமான 8ஆம் வீட்டில் 13.06.2014 முதல் 05.07.2015 வரை சஞ்சாரம் செய்ய விருப்பது சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் 16.12.2014 வரை சனி பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, குடும்பத்தில் முன்னேற்றம் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு சிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பொருளாதார நிலையும் தேவைக்கேற்றபடியிருப்பதால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். குரு 8&இல் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் கவனமுடனிருப்பது நல்லது. வரும் 21.06.2014 முதல் கேது 4ஆம் வீட்டிலும் ராகு 10ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க விருப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று போட்டிகளை எதிர் கொண்டே முன்னேற்ற அடைய முடியும். 16.12.2014 முதல் சனி பகவான் விரய ஸ்தானத்திற்கு மாறுதலாக விருப்பதால் ஏழரை சனி தொடங்கவுள்ளது. இதனால் எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.
தேக ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் முற்பாதி வரை ஒரளவுக்கு சுமாராக இருக்கும் என்றாலும் பிற்பாதி முதல் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும் உணவு விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது.
குடும்பம் பொருளாதார நிலை
குடும்ப சூழ்நிலை ஒரளவுக்கு மகிழ்ச்சிகரமாக இருக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பண வரவுகளில் சுமாரான நிலையே இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைக்கவும். சுப காரியங்கள் நடைபெற தாமதம் உண்டாகும்.
கொடுக்கல் வாங்கல்
பொருளாதார தேவைக்கேற்றபடி இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். தேவையற்ற வம்பு வழக்குகளாலும் பிரச்சனைகள் ஏற்படும்.
தொழில் வியாபாரிகளுக்கு
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் குறைவாக இருந்தாலும் வரவேண்டிய வாய்ப்புகளுக்கு தடை இருக்காது. நிறைய போட்டிகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்கு பின் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் வேலை பளு அதிகமாக இருந்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் வேலை பளுவை குறைக்க உதவும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளில் தாமத நிலை ஏற்படும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. சிலருக்கு எதிர் பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்தும்
அரசியல்வாதிகளுக்கு
மக்களின் தேவையறிந்து செயல்பட்டால் பெயர் புகழை காப்பாற்றி கொள்ள முடியும். கட்சி பணிகளுக்காக நிறைய வீண் செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களையும் மேற்கொள்வீர்கள். மேடை பேச்சுகளில் கவனமுடன் செயல் படுவது நல்லது. உடன் பழகுபவர்களிடமும் நிதானமாக செயல் படுவது நல்லது.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் சுமாராக இருக்கும். பட்ட பாட்டிற்கான பலனைப் பெறுவதில் இடையூறுகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் தாமதப்படும். சந்தையிலும் விளைபொருளுக்கேற்ற விலை கிடைக்காது. பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாக கூடிய காலம் என்பதால் தேவையற்ற செலவுகளை குறைக்கவும்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் தோன்றி மறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைய பெறுவதில் தடைகள் ஏற்படும். பண வரவுகளில் நெருக்கடிகள் உண்டாக கூடிய காலம் என்பதால் ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும்.
படிப்பு
கல்வியில் சற்று மந்தமான நிலையே இருக்கும். எதிர் பார்க்கும் மதிப்பெண்களை பெற அதிக முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை உங்களை வேறுபாதைக்கு அழைத்து செல்லும் என்பதால் எதிலும் கவனம் தேவை.
ஸ்பெகுலேஷன்
லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது.
குரு பகவான் புனர்பூச நட்சத்திரத்தில் 13.06.2014 முதல் 28.06.2014 வரை
உங்கள் ராசியாதிபதி குரு பகவான் அஷ்டம ஸ்தானமான 8ஆம் வீட்டில் உச்சம் பெற்று சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். குரு 8&இல் சஞ்சரித்தாலும் உங்கள் ராசியாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை செய்ய மாட்டார். சனி பகவான் லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஒரளவுக்கு முன்னேற்றமானப் பலன்களை பெற்று விடுவீர்கள். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு லாபங்கள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும்.
குரு பகவான் பூச நட்சத்திரத்தில் 29.06.2014 முதல் 28.08.2014 வரை
ராசியாதிபதி குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சனியின் நட்சத்திரத்தில் உச்சம் பெற்று சஞ்சரிப்பதால் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். 21.06.2014 இல் ஏற்பட்ட சர்ப கிரக மாற்றத்தால் கேது 4லும் ராகு 10 லும் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக ஒரளவுக்கு ஏற்றங்களைப் பெறுவீர்கள். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். கணவன் மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொள்வதால் ஒற்றுமையான நிலையினை அடைய முடியும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பிறருக்கு பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் தேக்க நிலை இல்லாமல் தொழில் செய்ய இயலும். பயணங்களால் சிறு சிறு அனுகூலங்கள் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாக கூடிய காலம் என்பதால் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை.
குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 29.08.2014 முதல் 02.12.2014 வரை
குரு பகவான் கேந்திராதிபதியான புதனின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் தொழில் வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். போட்டிகள் சற்று குறையும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகள் வேலை பளுவை குறைக்க உதவும். சனி பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஒரளவுக்கு முன்னேற்றப் பலன்களை அடையலாம். குடும்பத்திலும் சுபிட்சமான நிலை உண்டாகும். குரு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களால் கெடுபிடிகள் அதிகரிக்கும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. பயணங்களால் சிறு சிறு அலைச்சல்கள் அதிகரிக்கும். எந்தவொரு காரியத்திலும் சற்று சிந்தித்து செயல் படுவது நல்லது.
குரு பகவான் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் 03.12.2014 முதல் 17.12.2014 வரை
இக்காலங்களில் குரு பகவான் அதிசாரமாக சிம்ம ராசியில் கேதுவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். குரு 9இல் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார ரீதியான தடைகள் விலகும். தடைப்பட்ட திருமணம் போன்ற சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். புத்திர வழியிலும் பூரிப்பு உண்டாகும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும், பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமும் கிட்டும். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். சனியும் லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக லாபங்கள் பெருகும். கூட்டாளிகளின் ஆதரவும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப் பெறும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கொடுக்கல் வாங்கலும் சரளமாக நடைபெறும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும்.
குரு பகவான் வக்ர கதியில் 18.12.2014 முதல் 15.04.2015 வரை
ராசியாதிபதி குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் வக்ர கதியிலிருப்பதால் நினைத்ததை நிறைவேற்ற முடியும். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். 16.12.2014 இல் ஏற்பட்ட சனிப்பெயர்ச்சியால் உங்களுக்கு ஏழரை சனியில் விரய சனி தொடங்கி உள்ளது குறிப்பிட தக்கது. எனவே எதிர்பாராத திடீர் விரயங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் தோன்றும் குடும்ப பிரச்சனைகளை மற்றவர்களிடம் தேவையில்லாமல் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கல் லாபமளிப்பதாகவே அமையும். தொழில் வியாபாரம் செய்யவர்கள் போட்டி பொறாமைகளை சிந்தித்து முன்னேற்றமடைய முடியும். லாபங்கள் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்பட்டால் அனுகூலப்பலனை அடைய முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.
குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 16.04.2015 முதல் 05.07.2015 வரை
குரு பகவான் 7,10க்கு அதிபதியான புதனின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். இதனால் ஒரளவுக்கு நன்மை தீமை கலந்த பலன்களை பெறுவீர்கள். சனி பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் வீண் விரயங்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்படாது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது. பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சில நேரங்களில் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களாலும் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் நிறைய போட்டிகள் தோன்றினாலும் வர வேண்டிய வாய்ப்புகளில் தடை ஏற்படாது. தொழிலாளர்களின் ஆதரவுகளால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை பயன்படுத்தாதிருப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு சற்று கூடுதலாகவே இருக்கும்.
மூலம்
எந்த பிரச்சனைகளையும் தைரியமுடன் எதிர் கொள்ளும் நெஞ்சுரம் கொண்ட உங்களுக்கு குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாக கூடிய காலம் என்பதால் உணவு விஷயத்திலும் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது.
பூராடம்
எதை கண்டு பயப்படாமல் நினைத்ததை நிறைவேற்றும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மறையும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் மற்றவருக்கு வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தும். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது, குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
உத்திராடம் &1ம் பாதம்
சமூக நலனுக்காக பாடுபடும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு குரு பகவான் ஜென்ம ராசிக்கு 8&இல் சஞ்சரிப்பதால் பணவரவில் நெருக்கடிகள் உண்டாகும் முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்கு பின்பு வெற்றி கிட்டும். சுப காரியங்கள் நடைபெற தாமத நிலை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் 1,2,3,9,10,11,12
கிழமை வியாழன், திங்கள்,
திசை வடகிழக்கு,
நிறம் மஞ்சள், பச்சை,
கல் புஷ்ப ராகம்,
தெய்வம் தட்சிணா மூர்த்தி
பரிகாரம்
தனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ராசியாதிபதி குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் தட்சிணா மூர்த்தியை வழிபடவும். 21.06.2014 முதல் சர்ப கிரகங்களான கேது 4லும் ராகு 10லும் சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வது நல்லது. 16.12.2014 முதல் சனி பகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கவுள்ளதால் ஏழரை சனியில் விரய சனி தொடங்கவுள்ளது. இதனால் சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்யலாம்.
For your consultation
Please sent Rs 500 ,( 20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer ) in favour of
MURUGU BALAMURUGAN with your birth details (date of birth,time,place) & 5 questions to ( e-mail ) me for horoscope reading
please contact my postal adress
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani, Chennai-600026 Near Bank of Baroda
My Cell - 0091 - 7200163001, 9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
My Cell - 0091 - 7200163001, 9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
Bank accounts details are
Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078
or
Name ; Murugubalamurugan
Bank name - Bank of Barado
Savings Account No - 29900100000322
Branch name - VadapalaniChennai - 600026.
INDIA.MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078
Person who is will to sent money by western union money transfer or by money gram details are as follows as
R.Balamurugan,
S/O Murugu Rajendran,
No 33 Palani andavar koil street,
Vadapalani Chennai -600026,
South India. Cell 9841771188/7200163001
No comments:
Post a Comment