Monday, July 17, 2017

ராகு- கேது பெயர்ச்சிப் பலன்கள் ரிஷபம்

ராகு- கேது பெயர்ச்சிப் பலன்கள்

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


ரிஷபம்  
கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்


நல்ல திறமைமிக்கவராகவும், மற்றவர்களுக்காகப் பாடுபடும் நற்குணம் கொண்டவர்களாகவும் விளங்கும் ரிஷப ராசி நேயர்களே! வாக்கியப்படி வரும் 27-7-2017முதல் 13-2-2019வரை ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் ராகுவும், 9-ஆம் வீட்டில் கேதுவும் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பாகும். இதனால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற்றுவிடுவீர்கள். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். 2-9-2017முதல் குரு 6-ல் சஞ்சரிப்பதாலும், 19-12-2017முதல் சனி அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் அஷ்டமச்சனி நடைபெற இருப்பதாலும் பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவும் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நற்பலனைத்தரும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். ராகு, கேது சாதகமாக சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்துவிடமுடியும் என்றாலும் குரு, சனியின் சாதகமற்ற சஞ்சாரத்தால் சில இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல் -வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகையை ஈடுபடுத்துவதில் வீண் விரயங்களைச் சந்திப்பீர்கள். 


வரும் 4-10-2018முதல் குரு பகவான் சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பணவரவுகள் சிறப்பாவே இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். குடும்பத்தில் சுபவிரயங்கள் ஏற்படும். கடன்கள் படிப்படியாகக் குறையும். அசையும், அசையாச் சொத்துகள் வாங்கக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவதன்மூலம் அன்றாடப் பணிகளில் திறம்படச் செயல்படமுடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தை அடையமுடியும். தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றநிலை ஏற்படும். போட்டிகள் குறைந்து நல்ல வாய்ப்புகள் தேடிவரும். கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். அரசியல்வாதிகள் மக்களின் தேவையறிந்து செயல்படுவது நல்லது. எதிர்பார்க்கும் மாண்புமிகு பதவிகள் சில தடைகளுக்குப்பின் கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் யோகத்தைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் சற்று ஈடுபாடு குறைவாக இருந்தாலும் முழுமுயற்சியுடன் செயல்பட்டால் நற்பலனை அடையமுடியும். 

உடல் ஆரோக்கியம் 
சிறுசிறு உடல்நிலை பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகள் ஏற்படும். உணவு விஷயத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. எதையும் சமாளித்து வெற்றி பெறக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், சோர்வு ஏற்படும் என்பதால் முடிந்தவரை பயணங்களைத் தவிர்க்கவும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பதே உடல்நிலையிலும், மனநிலையிலும் பாதிப்பைக் குறைக்கும்.
குடும்பம், பொருளாதார நிலை 
குடும்பவாழ்வில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றிமறையும். விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. பொருளாதாரநிலை சிறப்பாக இருந்தாலும், சிறுசிறு வீண்விரயங்களும் தேவையற்ற செலவுகளும் ஏற்படும். உறவினர்களிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நிலவினாலும் தடைகளுக்குப்பின் சாதகப்பலன்கள் உண்டாகும்.
கொடுக்கல்- வாங்கல்
கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபம் அமைவதில் சற்று தடைகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருந்தாலும் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. பழைய கடன்கள் வசூலாவதில் எந்தவிதத் தடையும் இருக்காது.
தொழில், வியாபாரம்  
தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். அந்நிய நாட்டுத் தொடர்புடையவற்றால் அபரிதமான லாபத்தை அடைவீர்கள். அரசு வழியிலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் எதிர்பார்த்த கடனுதவிகள் தாமதமாகக் கிடைக்கும். பெரிய முதலீடுகள் கொண்டு செய்யும் முயற்சிகளில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது உத்தமம். மறைமுக எதிர்ப்புகள் விலகி போட்டி பொறாமைகள் குறையும்.
உத்தியோகம் 
உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள் தடையுடன் கிடைக்கப்பெறும். வேலைப்பளு அதிகரித்தாலும் சிரமம்பாராது எல்லாப் பணிகளையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக அமையும். பதவி உயர்வுகளால் பொறுப்புகள் அதிகரிக்கும். சில நேரங்களில் பிறர்செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க நேரிடும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை ய்ப்பு சிறப்பாக அமையும்.

பெண்கள் 

பெண்களுக்கு உடல் நிலையில் சிறுசிறு பிரச்சினைகளும், வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் மாதவிடாய்க் கோளாறுகள் போன்றவற்றால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். பண விஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் தருவது கூடாது. பொருளாதாரநிலையில் சில சங்கடங்கள் இருந்தாலும் பிற்பாதியில் எதையும் சமாளிப்பீர்கள். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவரும். திருமண சுபகாரியங்கள் கைகூடும்.

அரசியல் 
ங்கள் பதவிகளுக்கு சிறுசிறு பிரச்சினைகள் தோன்றும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும், தலைவர்களின் ஆதரவுகளும் சிறப்பாக அமையும். மக்கள் மத்தியில் நல்லதொரு செல்வாக்கினைப் பெறுகின்ற நிலை உண்டாகும். 
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சுமாராக இருப்பதால் லாபமும் குறைவாகவே இருக்கும். அரசுவழியில் எந்தவித உதவியையும் எதிர்பார்க்க முடியாது. பங்காளிகளால் வாய்க்கால் வரப்பு பிரச்சினைகள் உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலனைப் பெறமுடியாததால் மனநிம்மதி குறையும். பொருளாதாரநிலை சிறப்பாக இருந்து எதையும் சமாளிக்க முடியும்.
கலைஞர்கள் 
புதிய வாய்பபுகள் உங்களைத் தேடிவந்து பூரிப்படையச் செய்யும். எதிர்பாராத பணவரவுகளால் பொருளாதாரநிலை உயரும். மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். இசைத்துறையில் உள்ளவர்களுக்கும் முன்னேற்றமான பலன்களே உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பும் ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கும். 
மாணவ- மாணவியர்
கலவியில் அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். தேவையற்ற பொழுதுபோக்குகள், நண்பர்கள் சகவாசம் போன்றவற்றைத் தவிர்த்தால் வீண் பிரச்சினைகள் குறையும். விளையாட்டுப்போட்டிகளில் சற்று கவனமுடன் செயல்பட்டால் பரிசுகளையும், பாராட்டுகளையும் பெறமுடியும். 
ராகு ஆயில்ய நட்சத்திரத்தில், கேது அவிட்ட நட்சத்திரத்தில் 27-7-2017முதல் 29-11-2017வரை
ராகு பகவான் புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 3-ஆம் வீட்டிலும், கேது பகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் 9-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் நற்பலன்களைப் பெறுவீர்கள் என்றாலும் வரும் 2-9-2017முதல் குரு 6-ல் சஞ்சரிப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் முடிந்தவரை குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை, தாமத நிலை உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். சிலருக்கு அசையும், அசையாச் சொத்துகள்மூலம் வீண்செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்தநிலையைச் சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது அலைச்சலைக் குறைக்க உதவும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெறமுடியும். குரு, சனிக்குப் பரிகாரம் செய்வது உத்தமம்.
ராகு ஆயில்ய நட்சத்திரத்தில், கேது திருவோண நட்சத்திரத்தில் 30-11-2017முதல் 4-4-2018வரை
ராகு பகவான் தன பஞ்சமாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 3-ஆம் வீட்டிலும், கேது பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 9-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் ஓரளவுக்கு சாதகமானப் பலன்களைப் பெறமுடியும். என்றாலும் குரு 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும், வரும் 19-12-2017 முதல் சனி 8-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் அமைவதில் தாமதநிலை உண்டாகும். அசையும், அசையாச் சொத்துகளால் வீண்விரயம் ஏற்படும் காலம் என்பதால் வீடு, வாகனம் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். பொருளாதாரநிலை தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடனில்லா கண்ணிய வாழ்க்கை அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படக்கூடிய காலம் என்பதால் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதைப் பயன்படுத்திக்கொள்வது உத்தமம். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறமுடியும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

ராகு பூச நட்சத்திரத்தில், கேது திருவோண நட்சத்திரத்தில் 5-4-2018முதல் 8-8-2018வரை

ராகு சனியின் நட்சத்திரத்தில் 3-ஆம் வீட்டிலும் கேது சந்திரனின் நட்சத்திரத்தில் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதாலும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். 6-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலங்கள் ஏற்படும். அஷ்டமச்சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். மருத்துவச் செலவுகள் ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்து விடமுடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளைத் தற்போது மேற்கொள்ளலாம். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகக்கூடிய காலம் என்பதால் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான முன்னேற்றப்பலன்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றங்கள் உண்டாகும். அசையும், அசையாச் சொத்துகளால் லாபங்கள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். சனிக்குரியப் பரிகாரங்களைச் செய்வது உத்தமம்.

ராகு பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 9-8-2018முதல் 12-12-2018வரை
சர்ப்ப கிரகங்களான ராகு சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 3-ஆம் வீட்டிலும், கேது சூரியனின் நட்சத்திரத்தில் 9-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். அஷ்டமச்சனி நடைபெறுவதால் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவி இருவரும் எந்தவொரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களால் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றினாலும் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். 4-10-2018முதல் குரு சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். அசையும், அசையாச் சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பணவரவுகள் தேவைக் கேற்றபடி இருப்பதால் குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். கூட்டாளிகளால் ஆதாயங்கள் கிட்டும். எதிர்பாராத அரசு உதவிகளும் கிடைக்கப்பெற்று தொழிலை விரிவுசெய்ய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உடன்பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.
ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-12-2018முதல் 13-2-2019வரை
ராகு பகவான் குருவுன் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 3-லும், கேது பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 9-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் குருபகவான் 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் கிடைக்கப்பெறும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். அசையும், அசையாச் சொத்துகள் வாங்கும் யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிலும் திறம்படச் செயல்படும் ஆற்றல் உண்டாகும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளும், உத்தியோக உயர்வுகளும் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை விலகி நல்ல மதிப்பெண்களைப்பெறும் ஆற்றல் உண்டாகும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.
பரிகாரம்
ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சனி பகவான் 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீபாலாஜ வேங்கடாசலபதியை வழிபடுவது, அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, சனிக்கிழமைகளில் விரதமிருந்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது, சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்குப் பூக்கள் மற்றும் கருங்குவளைப் பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, அனுமன் துதிகளைக்கூறுவது நல்லது.

 திர்ஷ்டம் அளிப்பை
எண்       - 5,6,8,
நிறம் - வெண்மை, நீலம்
கிழமை  - வெள்ளி, சனி
கல் - வைரம்
திசை - தென்கிழக்கு
தெய்வம் - விஷ்ணு, லட்சுமி

No comments: