Saturday, July 22, 2017

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017- 2019

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017- 2019
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் -  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடுஇந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



துலாம் 
சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்


வசீகரமான உடல்வாகும், அழகான முக அமைப்பும், யாருக்கும் பயப்படாத குணமும் கொண்ட துலா ராசி நேயர்களே! வாக்கியப்படி வரும் 27-7-2017 முதல் 13-2-2019வரை சர்ப்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசிக்கு 10-ஆம் வீட்டிலும் கேது 4-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. இதனால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். தொழில், வியாபாரரீதியாக மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். வீண் வம்பு வழக்குகளைச் சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்தநிலை போன்றவை உண்டாகும்.2-9-2017முதல் குரு ஜென்ம ராசியில் சஞ்சரிக்க இருப்பதும் அவ்வளவு அனுகூலத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்க முடியாது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது என்றாலும் சனிபகவான் 19-12-2017முதல் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதாரநிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். அசையும், அசையாச் சொத்துகள் வாங்கும் விஷயங்களில் அனுகூலப்பலன் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் ஓரளவுக்கு எதிர்பார்த்த லாபத்தை அடைந்து விடமுடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்துச்செல்வதன்மூலம் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ளலாம். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் நற்பலன் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் விரிவடையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் சில தடைகளுக்குப்பின் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் பிறர் விஷயங்களில் தலையிடாதிருப்பது நல்லது. தனகாரகன் குரு தனஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தடைப்பட்ட சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை விலகி வெற்றி கிட்டும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். சிலருக்கு புத்திரபாக்கியம் அமையும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் யாவும் பைசல் ஆகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளைத் தடையின்றி பெறமுடியும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். எடுக்கும் பணிகளைச் சிறப்பாக செய்துமுடிப்பதால் உயரதிகாரிகளின் ஆதரவுகளைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற சற்று அதிகம் பாடுபட வேண்டியிருக்கும் என்றாலும் மக்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனம் எடுத்துக்கொள்வதன் மூலம் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியும்.

உடல் ஆரோக்கியம் 

உடல்நிலையில் தேவையற்ற பாதிப்புகளை உண்டாக்கும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளிக்கக்கூடிய வலிமையையும் வல்லமையையும் பெறுவீர்கள். அடிக்கடி பயணங்கள் செல்வதால் உடல்நலம் சோர்வடைந்தாலும் எதிர்பாராத அனுகூலத்தையும் அடைவீர்கள். சிலருக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது உத்தமம். 

குடும்பம், பொருளாதார நிலை 

குடும்பவாழ்வில் வீண்பிரச்சினைகளும் கருத்து வேறுபாடுகளும் உண்டாகும் என்பதால் கணவன் -மனைவி விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. உற்றார் உறவினர்களால் ஓரளவுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பொருளாதாரநிலையில் மேன்மையும் ஏற்றமும் உண்டாகும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். 

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன், ஏஜென்ஸி கான்டிராக்ட் போன்றவற்றில் பெரிய லாபம் எதிர்பார்க்க முடியாது. கொடுக்கல் -வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் போது சிந்தித்துச்செயல்படுவது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளை எப்பாடுபட்டாவது காப்பாற்றிவிடமுடியும். பழைய தொகைகளும் தடையின்றி வசூலாகும். 

தொழில், வியாபாரம் 

சிறுசிறு மறைமுக எதிர்ப்புகளால் வரவேண்டிய வாய்ப்புகள் தாமதம் அடைந்தாலும் தொழில், வியாபாரத்தில் நல்ல மேன்மையும் முன்னேற்றமும் உண்டாகும். கடந்தகால பிரச்சினைகள் அனைத்தும் விலகி அனுகூலமான பலனைப் பெறுவீர்கள். கூட்டாளிகளும் வேலையாட்களும் ஆதரவாக செயல்பட்டு தொழிலை அபிவிருத்தி செய்வார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் நல்ல லாபம் அமையும். புதிய நவீன கருவிகள் வாங்க அரசுவழியில் எதிர் பார்த்த உதவி கிடைக்கும். 

உத்தியோகம் 

உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எந்தக் காரியத்தையும் எளிதில் செய்துமுடிக்கக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உங்களது சோர்வுகள் விலகி உற்சாகமாகப் பணியாற்ற முடியும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற்று அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். புதிய பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் சில தடைகளுக்குப்பின் கிடைக்கப்பெறும். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகள் சிறப்பாக அமையும். புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக்கேற்ற உத்தியோகத்தைப் பெறுவார்கள்.

பெண்கள் 

எடுக்கும் காரியங்களில் சில தடைகளுக்குப்பின் வெற்றி பெறுவீர்கள். தனவரவு ஓரளவுக்கு சிறப்பாக அமையும். புதிய பொருட்சேர்க்கைகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் வீண்வாக்குவாதங்களாலும் தேவையற்ற பிரச்சினைகளாலும் நிம்மதி குறைந்தாலும் ஒற்றுமை குறையாது. உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன் அமைவதில் தாமதநிலை ஏற்படும் என்றாலும் மணவாழ்க்கை சிறப்பாக அமையும். தாய்வழியில் ஆதரவைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு நல்ல உயர்வும் முன்னேற்றமும் உண்டாகும். 

அரசியல் 

அரசியல்வாதிகள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் எடுக்கும் காரியங்களில் சிறப்பாகப் பணியாற்ற முடியும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளால் அனுகூலம் உண்டாகும். மறைமுக வருவாய் அதிகரிக்கும். கட்சிப் பணிகளுக்காக அதிகம் செலவுகளைச் செய்யும் சூழ்நிலைகள்  ஏற்படும். தொண்டர்களின் ஆதரவும் சிறப்பாக அமையும். 

விவசாயிகள்

பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். மழை வளம் குறைவாக இருந்தாலும் கையாள வேண்டிய முறைகளைக் கையாள்வதால் லாபங்களைப் பெற்று விடுவீர்கள். பயிர்களை இன்சூரஸ் செய்வதன்மூலமும் அரசுவழியில் ஆதாயங்களைப் பெறமுடியும்.

கலைஞர்கள் 

எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்களை பிறர் தட்டிச்சென்றாலும் புதிய வாய்ப்புகள் தேடிவரும். பொருளாதாரரீதியாக முன்னேற்றத்தை அடைவீர்கள். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் அதனால் அனுகூலப்பலனும் உண்டாகும். பாடல் மற்றும் இசைத்துறைகளில் உள்ளவர்களும் அனுகூலம் அடைவார்கள். 

மாணவ- மாணவியர்

கல்வியில் சற்று கடினமுயற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற்று முன்னேற்றம் அடையமுடியும். விளையாட்டுப்போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற கூடிய வாய்ப்புகள் அமையும். பெற்றேர், ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். சுற்றுலா செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். 

ராகு ஆயில்ய நட்சத்திரத்தில், கேது அவிட்ட நட்சத்திரத்தில் 27-7-2017முதல் 29-11-2017வரை

ராகுபகவான் உங்கள் ராசியாதிபதி சுக்கிரனுக்கு நட்பு கிரகமான புதனின் நட்சத்திரத்தில் 10-ஆம் வீட்டிலும், கேது பகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் 4-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது அவ்வளவு சாதமான அமைப்பு என்று கூறமுடியாது. இக்காலங்களில் 2-9-2017முதல் குருவும் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் எதிலும் ஏற்ற இறக்கமான பலன்களையே பெறமுடியும். எந்தவிதப் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வெற்றிபெறும் ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் ஓரளவுக்கு மேன்மையாக இருக்கும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூர்வீகச் சொத்துகளால் சிறுசிறு நெருக்கடிகள் தோன்றினாலும் தடைகளுக்குப்பின்பு வெற்றி கிட்டும். உடல்நிலையில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்துச்செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகையை ஈடுபடுத்தும்போது சிந்தித்துச்செயல்படவும். கொடுத்த கடன்களை வசூலித்துவிடமுடியும். தொழில், வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து முன்னேற்றம் அடைவீர்கள். பயணங்களால் சாதகப் பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. குருப்பரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

ராகு ஆயில்ய நட்சத்திரத்தில், கேது திருவோண நட்சத்திரத்தில் 30-11-2017முதல் 4-4-2018வரை

ராகுபகவான் உங்கள் ராசியாதிபதி சுக்கிரனுக்கு நட்பு கிரகமான புதனின் நட்சத்திரத்தில் 10-ஆம் வீட்டிலும் கேது பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 4-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது அவ்வளவு சாதமான அமைப்பு என்று கூறமுடியாது என்றாலும் சனிபகவான் 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பொருளாதாரம் உயர்வடையும். செல்வம், செல்வாக்கு பெருகும். புத்திரவழியில் சிறுசிறு மன சஞ்சலங்களும், பூர்வீகச் சொத்துகளால் வீண் விரயங்களும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். திருமண சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும். கொடுக்கல் -வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். 19-12-2017முதல் சனிபகவான் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலங்கள் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் பணியில் கௌரவமான நிலையினைப் பெறமுடியும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிட்டும்.  ராகு கேதுவுக்கு சர்ப்ப சாந்தி செய்வது உத்தமம்.

ராகு பூச நட்சத்திரத்தில், கேது திருவோண நட்சத்திரத்தில் 5-4-2018முதல் 8-8-2018வரை

ராகு பகவான் உங்கள் ராசியாதிபதி சுக்கிரனுக்கு நட்பு கிரகமான சனியின் நட்சத்திரத்தில் 10-ஆம் வீட்டிலும் கேது பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 4-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதும், 3-ல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியில் சஞ்சாரம் செய்வதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். தொழில், வியாபார ரீதியாக சிறுசிறு நெருக்கடிகள் உண்டாகும். போட்ட முதலீட்டினை எடுப்பதில் சிரமங்கள் ஏற்படும். நிறைய போட்டிகளும் அதிகரிக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பணவரவுகளிலும் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். உத்தியோகஸ்தர்களும் தங்கள் பணிகளில் நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிவரும். குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதைத் தவிர்ப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் என்பதால் உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலிலும் பெரிய தொகை ஈடுபடுத்துவதையும் தேவையற்ற பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.

ராகு பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 9-8-2018முதல் 12-12-2018வரை

ராகு பகவான் உங்கள் ராசியாதிபதி சுக்கிரனுக்கு நட்பு கிரகமான சனியின் நட்சத்திரத்தில் 10-ஆம் வீட்டிலும் கேது பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 4-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு இல்லை என்றாலும் சனி 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும்.4-10-2018முதல் குரு பகவான் தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞசரிக்க இருப்பதால் பணவரவுகளிலில் இருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் தடைப்பட்ட திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி தரும். மணமாகாதவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவரும். கணவன் -மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் அனுகூலப் பலனைத் தரும். சிலருக்கு பூர்வீகச் சொத்துகளால் அனுகூலம் கிட்டும். அசையும், அசையாச் சொத்துகளையும் வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. செய்யும் தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபங்களைப் பெறமுடியும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கடன்கள் படிப்படியாகக் குறையும். ராகு காலங்களில் துர்க்கையமம்மனை வழிபடுவது உத்தமம்.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-12-2018முதல் 13-2-2019வரை

ராகுபகவான் குருவின் நட்சத்திரத்தில் 10-ஆம் வீட்டிலும் கேது பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 4-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு இல்லை என்றாலும் சனி 3-லும், குரு 2-லும் சாதகமாக சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் மேன்மையான பலன்கள் உண்டாகும். தடைப்பட்டுக் கொண்டிருக்கும் திருமண சுபகாரியங்கள் யாவும் தடை விலகி தடபுடலாகக் கைகூடும். பொன் பொருள் சேரும். பொருளாதாரநிலையும் சிறப்பாக இருப்பதால் கடன்கள் யாவும் குறையும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியமும் ஓரளவுக்கு சிறப்பாக அமைவதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கணவன் -மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களிடமிருந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாகக் குறையும். பணம் கொடுக்கல் -வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். தொழில், வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபங்கள் தடையின்றிக் கிடைக்கும். போட்டிகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்படச் செயல்படமுடியும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். சேமிப்பும் பெருகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். ராகு- கேதுவுக்குப் பரிகாரம் செய்வது நல்லது.

பரிகாரம்

துலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 4-ல் கேது, 10-ல் ராகு சஞ்சரிப்பதால் சர்ப்ப சாந்தி செய்வது, ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, நாணயங்கள் போன்றவற்றை தொழுநோயாளிகளுக்கு தானம் கொடுப்பது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றைப் பயன்படுத்துவது நல்லது. 

கேதுவுக்குப் பரிகாரமாக தினமும் விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பீஜ மந்திரத்தைக் கூறிவருவது, செவ்வரளிப் பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ணமயமான போர்வை, வெள்ளைப் புள்ளிகள் உடைய பழுப்பு நிறப்பசு போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை,

எண்   - 4,5,6,7,8
நிறம்   - வெள்ளை, பச்சை,
கிழமை - வெள்ளி, புதன்,
கல்     - வைரம்
திசை   - தென் கிழக்கு,
தெய்வம் - லட்சுமி

No comments: