Saturday, July 15, 2017

வார ராசிப்பலன் ஜுலை 16 முதல் ஜுலை 22 வரை 2017

வார ராசிப்பலன்  ஜுலை 16 முதல் ஜுலை 22 வரை   2017 ( ஆனி  32 முதல்  ஆடிவரை)

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



சந்திர


சுக்கி
சூரிய,

கேது 
திருக்கணித கிரக நிலை

புதன்
செவ்


ராகு

சனி ( )


குரு

               
கிரக மாற்றம்
16-07-2017 கடக சூரியன் மாலை 04.25 மணிக்கு
21-07-2017 சிம்ம  புதன் காலை 10.20 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மீனம்                               14-07-2017 மாலை 06.33 மணி முதல் 16-07-2017 இரவு 12.23 மணி வரை
மேஷம்           16-07-2017 இரவு 12.23 மணி முதல் 19-07-2017 அதிகாலை 03.21 மணி வரை.
ரிஷபம்           19-07-2017 அதிகாலை 03.21 மணி முதல் 21-07-2017 அதிகாலை 04.13 மணி வரை.
மிதுனம்         21-07-2017 அதிகாலை 04.13 மணி முதல் 23-07-2017 அதிகாலை 04.30 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
16-07-2017 ஆனி 32 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சப்தமிதிதி ரேவதி நட்சத்திரம் அமிர்தயோகம் 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் சிம்ம இலக்கினம்தேய்பிறை

21-07-2017 ஆடி 05 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரயேதசிதிதி மிருசீரிஷ நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவி செய்யும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 2-ல் சுக்கிரன் வலுவாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் ஏற்படும். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். 4-ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால்  உடல் நிலையில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சாதகமான பலனைப் பெற முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்தே எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். கடன்கள் சற்றே குறையும். தேவையில்லாத அலைச்சல்கள் இருக்கும். தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளின் ஆதரவை பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம். சிவ வழிபாடு முருக வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 17, 18, 21, 22.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
எந்த கஷ்டத்தையும் தாங்கி கொள்ளக்கூடிய அளவிற்கு சகிப்புதன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சுக்கிரன் 3-ல் சூரியன் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். குரு 5-ல் இருப்பதால் சுபகாரியங்கள் கைகூடும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மையடையும். கூட்டாளிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் யாவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் அமைப்பும் உண்டாகும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று கல்வியில் உயர்வடைவார்கள். துர்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 16, 19, 20.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும் கலை, இசை துறைகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு 6-ல் சனி சஞ்சரிப்பது வலமான வாழ்வை ஏற்படுத்தும் அமைப்பாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருப்பதால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய இடம் பொருள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும். உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவதோடு பள்ளி கல்லூரிக்கும் பெருமை சேர்ப்பார்கள். முருக கடவுளை வணங்குவதும் குரு பகவானை வணங்குவதும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 16, 17, 18, 21, 22.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
கோபமாகவும் வேகமாகவும் பேசினாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன் செவ்வாய் 3-ல் குரு சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள், எதிர்பார்த்த பணவரவுகள் கிடைக்க இறையூறுகள் ஏற்படும். விண் வாக்கு வாதங்களால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து குடும்பத்தில் நிம்மதி குறையும். விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உறவினர்களை அனுசரித்து நடப்பதும் நற்பலனைத் தரும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகளால் எதையும் சமாளிக்க முடியும்திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் தாமத பலன்களையே பெற முடியும். உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் உண்டாககூடும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உயரதிகாரிகளின் ஆதரவுகளைப் பெற சற்று பாடுபட வேண்டியிருக்கும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கடன் சற்றே குறையும். மாணவர்கள் கல்வியில் முழு முயற்சியுடன் ஈடுபடுவது உத்தமம். தட்சணாமூர்த்தி வழிபாடு செய்வது நற்பலனை தரும்.

வெற்றி தரும் நாட்கள் - 17, 18, 19, 20.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவராகவும், கொடுத்த வாக்குறுதியினை எப்பாடுபட்டாவது காப்பாற்றும் ஆற்றல் உடையவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, இவ்வாரம் 2-ல் குரு 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக சாதகமான பலன்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உங்கள் ராசிக்கு சூரியன் செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதால் வீண் செலவுகள் ஏற்படலாம் எனவே எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதற்கு முன் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிடைப்பதால் லாபம் பெருகும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாகவே இருக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் அமையும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிப்பதால் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். சிவ வழிபாடு சனி பகவான் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 19, 20, 21, 22.

சந்திராஷ்டமம் 14-07-2017 மாலை 06.33 மணி முதல் 16-07-2017 இரவு 12.23 மணி வரை

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
அனைவரிடத்திலும் அன்பும் பண்பும், மரியாதையும் கொண்டவராகவும், தெய்வ பக்தி உடையவராகவும் விளங்கும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சனி 11-ல் சூரியன் செவ்வாய் புதன் சஞ்சரிப்பது சிறப்பான கிரக அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் முன்னேற்றம், தாராள தனவரவு, கடன் பிரச்சனை குறையும் சூழ்நிலை உண்டாகும். பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்திலுள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர வழியிலும் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலும் சரளமாக நடைபெறுவதால் லாபம் சிறப்பாக அமையும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளை சுறுசுறுப்பாக செய்ய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிட்டும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க முடியும். துர்கையம்மனை வணங்குவதும் சரபேஸ்வரரை வழிபாடு செய்வதும் உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 16, 21, 22.

சந்திராஷ்டமம் 16-07-2017 இரவு 12.23 மணி முதல் 19-07-2017 அதிகாலை 03.21 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
தம்முடைய எந்த பொருட்களையும் கேட்பவருக்கு தானமளிக்க கூடிய பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் துலா ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 10-ஆம் வீட்டில் சூரியன் செவ்வாய் புதன் சஞ்சரிப்பதும் 11-ல் ராகு இருப்பதும் சாதகமான பலன்களை உண்டாக்கும் அமைப்பாகும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை பலப்படும். குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொண்டால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும் என்றாலும் குரு சனி சாதகமற்று இருப்பதால் அகல கால் வைக்காமல் பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி மேல் வெற்றியினை அடையலாம். வீண் செலவுகளை குறைப்பது உத்தமம். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் நல்ல பலனைப் பெற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர் கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருந்தாலும் அதற்கேற்ப ஊதிய உயர்வும் கிடைக்கப்பெறும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வியாழக்கிழமைகளில் தட்சணாமூர்த்தியை வணங்குவது மேன்மையை தரும்.

வெற்றி தரும் நாட்கள் - 16, 17, 18.

சந்திராஷ்டமம் 19-07-2017 அதிகாலை 03.21 மணி முதல் 21-07-2017 அதிகாலை 04.13 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
எவ்வளவு தான் கற்றறிந்திருந்தாலும் அகம் பாவமின்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, இவ்வாரம் சமசப்த ஸ்தானமான 7-ல் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். கடந்த கால நெருக்கடிகள் குறைந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் ஏற்படும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எடுக்கும் காரியங்களில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபார ரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் லாபங்களும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படக்கூடும். உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகள் சற்று தாமதத்திற்கு பிறகு கிடைக்கப்பெறும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 17, 18, 19, 20.

சந்திராஷ்டமம் 21-07-2017 அதிகாலை 04.13 மணி முதல் 23-07-2017 அதிகாலை 04.30 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் ஏழரைச் சனி நடப்பதாலும் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டிய வாரமாகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுக்க வேண்டியிருக்கும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்களும், உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகளும் உண்டாகும் என்பதால் அனைவரிடமும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது, பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துக்களால் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வீண் விரயங்களும் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்திலும் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது நல்லது. கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு சற்றே வேலைபளு அதிகமாக இருக்கும் என்றாலும் எதையும் சமாளித்து விடுவீர்கள். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற அதிக பாடுபட வேண்டியிருக்கும். சிவ வழிபாடு முருக வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 19, 20, 21, 22.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கள்ள கபடமற்று வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன் 9-ல் குரு 11-ல் சனி சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் வெற்றி கிட்டும். பண வரவுகள் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இருக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். திருமண சுபகாரியங்கள் சில தடைகளுக்குப்பின் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வுகள் இருக்கும். உங்கள் ராசிக்கு சமசப்த ஸ்தானமான 7-ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 16, 21, 22.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும், சிறு வயதிலிருந்தே சிறந்த தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன் 6-ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கணவன்மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் அமையும். மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும். எல்லா வகையிலும் நற்பலன்கள் தேடி வரும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். சிலருக்கு சொந்த வீடு மனை வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள் என்றாலும் அளவோடு வைத்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்களைப் பெற முடியும். இதுவரை இருந்த பிரச்சனைகள் குறையும் சூழ்நிலை உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் அமையும். பயணங்களாலும் அனுகூலம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப்பெறும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். விநாயகரை வழிபாடு செய்வதும் தட்சணாமூர்த்தியை வழிபாடு செய்வதும் உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 17, 18.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
தன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி ஏமாற்றங்களை சந்திக்கும் மீன ராசி நேயர்களே இவ்வாரம் குருபார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் 5-ல் புதன் 6-ல் ராகு சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். சுபகாரியங்கள் கைகூடும். திருமண சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொன், பொருள், ஆடை ஆபரணம் யாவும் சேரும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. தெய்வ தரிசனங்களுக்காக வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் சாதகமான செயல்பாட்டால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். மாணவர்கள் கல்வியில் சற்று ஈடுபாட்டுடன் செல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியும். தினமும் விநாயக பெருமானை வழிபாடு செய்வது நற்பலனை தரும்.

வெற்றி தரும் நாட்கள் - 16, 19, 20.


No comments: