Friday, July 28, 2017

வார ராசிப்பலன் ஜுலை 30 முதல் ஆகஸ்ட் 5 வரை 2017

வார ராசிப்பலன்  ஜுலை  30  முதல் ஆகஸ்ட் 5 வரை   2017   (ஆடி  14 முதல்  20 வரை)

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம்மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

வாங்கி படிக்க தவறாதீர்கள்

ஆகஸ்ட் 2017 ஓம்சரவணபவா இதழுடன்
குரு பெயர்ச்சி பலன்கள் 2017 & 2018
(12 ராசிகளுக்கும் பொதுப்பலன்,பரிகாரம்,
 அதிர்ஷ்டக்குறிப்புகள் அடங்கியது
96 பக்கம் இலவச இனைப்பு

இப்படிக்கு
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பாலமுருகன்

ஆசிரியர் & இந்த வார ஜோதிடம் மாத இதழ்








சுக்கி
கேது 
திருக்கணித கிரக நிலை

சூரிய,
செவ்


ராகு
புதன்


சனி ( )

சந்திர
குரு

               
கிரக மாற்றம்  இல்லை

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
துலாம்             29-07-2017 மாலை 06.30 மணி முதல் 01-08-2017 காலை 05.42 மணி வரை.
விருச்சிகம்  01-08-2017 காலை 05.42 மணி முதல் 03-08-2017 மாலை 06.13 மணி வரை.
தனுசு                                03-08-2017 மாலை 06.13 மணி முதல் 06-08-2017 காலை 06.06 மணி வரை.


இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
30.07.2017 ஆடி 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சப்தமிதிதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை

02.08.2017 ஆடி 17 ஆம் தேதி புதன்கிழமை தசமிதிதி அனுச நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

04.08.2017 ஆடி 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவாதசிதிதி மூல நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, இந்த வாரம் ராசியதிபதி செவ்வாய் சூரியன் சேர்க்கை பெற்று 4--ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஏற்ற இறக்கமானப் பலன்களையேப் பெறுவீர்கள். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகும். அசையும் அசையா சொத்துகளால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். பொருளாதார நெருக்கடி காரணமாக மற்றவர்களிடம் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். எதிர்பாராத வகையில் கிடைக்கப் பெறும் உதவிகளால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் வேலையாட்களையும் அனுசரித்து சென்றால் நற்பலனைப் பெற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மேலதிகாரிகளால் கெடுபிடிகள் இருந்தாலும் உடன் பணிபுரிபவர்கள் ஒரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். சிலருக்கு வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் அனுகூலமான பலனை அடைவார்கள். உங்கள் ராசிக்கு 8-ல் சனி இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும் என்பதால் உணவு விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. சிவ வழிபாடு, தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 30, 31.

சந்திராஷ்டமம்                      01-08-2017 காலை 05.42 மணி முதல் 03-08-2017 மாலை 06.13 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
பிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டு பிடிக்காதவாறு அளவோடு பேசும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமாக 3-ஆம் வீட்டில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும்சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபங்களை அடையலாம். குரு 5-ல் இருப்பதால் சிறப்பான பணவரவு உண்டாகி குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும்  கிடைக்கப் பெறுவதால் வாழ்க்கைத் தரம் உயரும். புதிய சொத்து வாங்கி மகிழ்வீர்கள். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே அவர்களால் சாதகப்பலனைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். சனி ப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 30, 31, 1, 2, 3.

சந்திராஷ்டமம்                      03-08-2017 மாலை 06.13 மணி முதல் 06-08-2017 காலை 06.06 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
எந்த வித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்க கூடிய ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 6-ல் சனி சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் காரியங்களில் எல்லாம் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றி அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் படிப்படியாக விலகும். நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளை தடையின்றி பெற முடியும். சிலருக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், செவ்வாய் இருப்பதால் கோபத்தை குறைத்துக் கொண்டு பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடை பிடிப்பது உத்தமம். கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களையும் குடும்பத்தில் உள்ளவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது.  சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலனை அடைய முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலப்பலன் ஏற்படும். சிவ வழிபாடு முருக வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 1, 2, 3, 4, 5.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
நல்ல கற்பனை திறனும், சிறந்த ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் ஏற்ற இறக்கமானப் பலன்களையேப் பெற முடியும் என்றாலும் நீங்கள் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு மற்றவர்களிடம் நிதானமாக செயல்படுவதன் மூலம் எதையும் எதிர் கொள்ளும் பலமும் வளமும் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக அமையும். சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய மருத்துவ செலவுகள் ஏற்படாது. எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நற்பலனை தரும். உற்றார் உறவினர்களிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாகலாம். பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும் என்பதால் சில காலம் தள்ளி வைப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 3-ல் குரு இருப்பதால் பணவரவு சுமாராக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதன் மூலம் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் உண்டாகும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் - 4, 5.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
தனக்கு நிகரில்லாதவர்களிடம் பழகுவதை தவிர்க்கும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ராசிக்கு 2-ல் குரு, லாப ஸ்தானமான 11-ல் சுக்கிரன் இருப்பது நற்பலன்களை தரும் அமைப்பாகும். திடீர் பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். பொன் பொருள் சேரும். புதிய சொத்து வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை கூடும். உடல் ஆரோக்கியமும் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். இதுவரை உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே மறையும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபங்களை அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறைவதால் அபிவிருத்தி பெருகி சிறப்பான லாபங்கள் உண்டாகும். சொந்த தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய புதிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் சிறுசிறு தடைகளுக்குப் பின் கிடைக்கும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். சிவ வழிபாடு செய்வது, சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் -                 30, 31.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சுக்கிரன், 11-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பது எல்லா வகையிலும் யோகத்தை கொடுக்கும் அமைப்பாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். புதிய வீடு மனை வாங்கும் யோகம் கிட்டும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல் படுவதால் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் வழியிலும் சுப செய்திகள் கிடைக்கும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் நல்ல அனுகூலங்களை பெறலாம். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால்  புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் லாபம் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். அரசு வழியில் சில எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிட்டும். சிலருக்கு வெளியூர் வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும். துர்க்கையம்மனை வணங்குவதும் தட்சணாமூர்த்தியை வழிபாடு செய்வதும் உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -                 1, 2, 3.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
வசீகரமான தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சூரியன், செவ்வாய், 11-ல் புதன், ராகு சஞ்சரிப்பது நல்ல அற்புதமான அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்களே உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். ஆடை ஆபரணம் போன்றவற்றை வாங்குவீர்கள். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் தேடி வரும். பெரிய மனிதர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். 2ல் சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பதன் மூலமும் உற்றார் உறவிர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலமும் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம், உடல் நிலையிலும் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும் என்பதால் குறித்த நேரத்திற்கு சாப்பிடுவது உத்தமம். குரு பகவானை வணங்குவது சனி ப்ரீதி விநாயகரை வணங்குவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -                 30, 31, 4, 5.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
முன்கோபம் உடையவராகவும், எளிதில்  உணர்ச்சி வசப்படக்கூடியவராகவும் விளங்கும் விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் புதன் ராகு, லாப ஸ்தானமான 11-ல் தனக்காரகன் குரு சஞ்சரிப்பது எல்லா வகையிலும் ஏற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் சுபகாரியங்களில் வெற்றி கிட்டும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். ஆடை ஆபரணங்களை வாங்கி சேர்ப்பீர்கள். உங்கள் ராசிக்கு ஏழரைச் சனி நடப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபங்களும் அபிவிருத்தியும் பெருகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். பல பெரிய மனிதர்களின் உதவியும் ஆதரவும் தடையின்றிக் கிடைக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். சற்று அலைச்சல் டென்ஷன்களும் அதிகரிக்கும். சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்கினால் நற்பலன்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - 1, 2, 3.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமையும், தற்பெருமையும் அதிகம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதும் 10-ல் குரு சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்த செயல் செய்வது என்றாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கிய ரீதியாக உஷ்ண பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பதும், பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கொடுப்பதை தவிர்க்கவும். பணவரவு சுமாராக இருந்தாலும் தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பாராமல் கிடைக்கும் உதவியால் கடன்கள் ஓரளவு குறையும். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படக்கூடும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. புத்திர வழியில் தேவையற்ற மனசஞ்சலங்கள் ஏற்படலாம். பூர்வீக சொத்துகளால் வீண் செலவுகள் உண்டாக கூடும். செய்யும் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நெருங்கியவர்கள் மற்றும் உடனிருப்பவர்களால் பகை ஏற்படக்கூடும் என்பதால் எந்த விஷயத்திலும் கவனமாக இருப்பது உத்தமம். பிரதோஷ விரதம் மேற்கொள்வது முருக பெருமானை வணங்குவது மேன்மையை தரும்.

வெற்றி தரும் நாட்கள் - 30, 31, 4, 5.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
மனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அனைவரிடமும் சகஜமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசியை குரு பார்வை செய்வதும் ராசியதிபதி சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
பணவரகள் சிறப்பாக அமையும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர பொருள் வாங்கி மகிழ்வீர்கள். 7-ஆம் வீட்டில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொண்டால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெற முடியும். தொழில் வியாபாரம் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். கூட்டாளிகளிடம் சற்று கவனத்துடன் இருப்பது மிகவும் நல்லது. சிவ பெருமானை வழிபாடு செய்வது முருக கடவுளை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 30, 31, 1, 2, 3.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் 6-ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பது உங்கள் பலத்தை அதிகரிக்க கூடிய அமைப்பாகும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாதுகுடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திரர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். பணம் பல வழிகளில் தேடி வரும். பூர்வீக சொத்துக்கள் வழியிலும் லாபம் கிட்டும். பொன் பொருள் வாங்கும் வாய்ப்பு அமையும். சிலருக்கு வீடு மனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும் வாய்ப்பு உண்டாகும். திருமணம் சம்பந்தமான பேச்சு வார்த்தைகளில் அனுகூலமான பலன் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கப்பெறும். இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறும் சூழ்நிலை உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் நல்ல நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். ராகு காலங்களில் துர்க்கையம்மனுக்கு விளக்கு போட்டு வணங்குவதும் தட்சிணாமூர்த்தியை வணங்குவதும் சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் - 1, 2, 3, 4, 5.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
மற்றவர்களின் சுக துக்கங்களையும் தன்னுடைய சுக துக்கங்களாக நினைக்கும் பண்பு கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு சமசப்தம ஸ்தானமான 7-ல் அமையப்பெற்று ஜென்ம ராசியை பார்ப்பதும் 4-ல் சுக்கிரன் 6-ல் ராகு சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் தாராள தனவரவு ஏற்பட்டு குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர வழியிலும் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் கிடைக்க வேண்டிய அனுகூலம் கிட்டும். எதிர்பாராத தனவரவுகளால் பொருளாதார நிலை உயர்வடையும். கடன்களும் படிப்படியாக குறையும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். தொழில் ரீதியாக நவீனகரமான பொருட்களை வாங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகி லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிட்டும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 4, 5.


சந்திராஷ்டமம்                      29-07-2017 மாலை 06.30 மணி முதல் 01-08-2017 காலை 05.42 மணி வரை.

No comments: