Sunday, May 28, 2017

வார ராசிப்பலன் மே 28 முதல் ஜுன் 3 வரை 2017

வார ராசிப்பலன்  மே 28 முதல் ஜுன் 3 வரை 2017 (வைகாசி 14 முதல் 20  வரை)

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



சுக்கி

புதன்
சூரிய,

செவ்
சந்திர
கேது 
திருக்கணித கிரக நிலை



ராகு
சனி ( )



குரு ()


கிரக மாற்றம்
31-05-2017 மேஷ சுக்கிரன் காலை 08.56 மணிக்கு
03-06-2017 ரிஷப புதன் இரவு 07.53 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மிதுனம்          - 27-05-2017காலை 07.38 மணி முதல் 29-05-2017காலை 07.56 மணி வரை.
கடகம்              - 29-05-2017காலை 07.56 மணி முதல் 31-05-2017பகல் 11.14 மணி வரை.
சிம்மம்            - 31-05-2017பகல் 11.14 மணி முதல் 02-06-2017மாலை 06.20 மணி வரை.
கன்னி               - 02-06-2017மாலை 06.20 மணி முதல் 05-06-2017அதிகாலை 04.36 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
29-05-2017 வைகாசி 15-ஆம் தேதி, திங்கட்கிழமை, சதுர்த்தி திதி, புனர்பூச நட்சத்திரம், அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடக லக்னம். வளர்பிறை

மேஷம்  அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்
சிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் கேது சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேற்றங்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் எடுத்து கொள்வது உத்தமம். அன்றாட பணிகளை சிரமமின்றி முடித்து விடுவீர்கள். குடும்பத்தின் ஒற்றுமை சுமாராக இருக்கும் என்பதால் கணவன்- மனைவி விட்டு கொடுத்து செல்வது, உற்றார்- உறவனர்களிடம் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சிரமம் இருக்காது. பெரிய தொகைளுக்கு மற்றவர்களை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருள் தேக்கம் உண்டாகாது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். பயணங்களால் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். மாணவர்கள் கடின முயற்சிகளை மேற்கொண்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். சிவ பெருமானை வழிபடுவது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள்  - 28, 3.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 5-ல் குருவும், 11-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் படிப்படியாகக் குறையும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலனை அடைவீர்கள். அதிநவீன பொருட்களையும், ஆடை ஆபரணங்களையும் வாங்கும் வாய்ப்பு அமையும். அசையா சொத்துகளில் இருந்த பிரச்சினைகளில் சாதகப்பலன்கள் உண்டாவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு வாக்கு, வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர்களும் ஓரளவுக்கு சாதகமாகவே நடந்து கொள்வார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்து கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை தடையின்றி வசூலிக்க முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் புதிய வாய்ப்பு தேடி வரும். தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். வேலை பளுவும் குறையும். முடிந்தவரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். முருகப் பெருமானை வழிபடுவது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள்  - 29, 30, 31

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் பண்பு கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் புதன் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார ரீதியாக ஒரளவுக்கு மேன்மைகளை அடைய முடியும். 7-ல் சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவினைப்பெற முடியும். பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். திருமண சுபகாரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குபின் அனுகூலம் ஏற்படும். புத்திர வழியிலும் சில மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபத்தை அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவு படுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. கூட்டாளிகளின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தூர பயணங்களை தவிர்த்தால் அலைச்சல், டென்ஷன்கள் குறையும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளையும், பொழுது போக்குகளையும் குறைத்து கொள்வது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள்  - 28, 1, 2.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 10-ல் புதன், 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் செய்யும் தொழில், வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபங்கள் கிட்டும். போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு தேடி வரும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வதன் மூலம் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடித்தால் மட்டுமே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலங்களை அடைய முடியும். பணவரவுகள் ஏற்ற, இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது உத்தமம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைய முடியும். கடன்கள் படிப்படியாகக் குறையும். பொன், பொருள் சேரும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சிரமம் இருக்காது. மாணவர்கள் கல்வியில் சற்று முழு முயற்சியுடன் செயல்பட்டால் நற்பெயர் அடைய முடியும். துர்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள்  -  29, 30, 31, 3.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்
இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 2-ல் குரு, 10-ல் சூரியன், 11-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களும் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். எடுக்கும் முயற்சிகள் எல்லாவற்றிலும் மேன்மையும், உயர்வும் உண்டாகி மனமகிழ்ச்சி ஏற்படும். திருமண சுப காரியங்களில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்க பெறுவதால் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பும் அமையும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றா உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பார்த்த லாபமும் கிட்டும். கடன் பிரச்சினைகளும் சற்றே குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். துர்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்  - 28, 1, 2.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 9-ல் சூரியன், 10-ல் செவ்வாய் செய்வதால் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் சற்றே விலகுவதால் தடைபட்ட வாய்ப்புகளை பெறுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன் பணிபுரிபவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு மறையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கை, கால் வலி சோர்வு போன்றவை உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உறவினர்களை அனுசரித்து  செல்ல வேண்டியிருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்களை அடைய இடையூறு ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்  - 28, 29, 30, 31, 3.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்
வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட உங்களுக்கு துலா ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 8-ல் சூரியன், 12-ல் குரு சஞ்சரிப்பதும் சாதமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் சற்று கவனம் எடுத்து கொள்வது நல்லது. தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். கணவன்- மனைவி இடையே உண்டாக கூடிய வாக்குவாதங்களால் நிம்மதி குறைவு உண்டாகும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். 11ல் ராகு இருப்பதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன் ஏற்படுவதை தவிர்க்கலாம். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்றி தள்ளி வைக்கவும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்பட்டால் வீண் விரோதங்களை ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில், வியாபாரம் செய்பவர்கள் மறைமுக எதிர்ப்புகளையும், போட்டிகளையும் சமாளித்தே முன்னேற முடியும். வெளிவட்டார தொடர்புகளால் ஓரளவுக்கு நற்பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது வீண் பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். மாணவர்கள் வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருப்பது உத்தமம். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்  - 29, 30, 31, 1, 2.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 7-ல் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், 11-ல் குரு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு திருமண சுப காரியங்கள் கை கூடுவதற்கான வாய்ப்புகள் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் -மனைவி இடையே வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவும் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்படுவார்கள். வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். வேலை பளுவும் குறையும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். எந்தவொரு விஷயத்திலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். சிவவழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்  - 1, 2, 3.

சந்திராஷ்டமம் - 27-05-2017காலை 07.38 மணி முதல் 29-05-2017காலை 07.56 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடு படும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 3-ல் கேது, 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பாராத வகையில் சில உதவிகள் தேடி வரும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல், டென்ஷனை குறைத்து கொள்ள முடியும். குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்களால் ஒற்றுமைக் குறைவு உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உற்றார்- உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்தநிலை போன்றவை உண்டாகி அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியாமல் போகும். முடிந்த வரை நேரத்திற்கு உணவு உண்பது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொள்வது-, மற்றவர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருந்தாலும் பெரிய தொகைகளை கடனாக பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். செய்யும் தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். போட்டிகளை சமாளித்து முன்னேறி விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்கள் நல்ல நட்புகளாக தேர்ந்தெடுத்து பழகுவது, கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். ஆஞ்சநேயரை வழிபடுவது, தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது  நல்லது.

வெற்றி தரும் நாட்கள்  - 28, 3.

சந்திராஷ்டமம் - 29-05-2017காலை 07.56 மணி முதல் 31-05-2017பகல் 11.14 மணி வரை.

மகரம்    உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்
எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும், வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 4-ல் புதன், 6-ல் செவ்வாய், 9-ல் குரு சஞ்சரிப்பதால் அதிநவீன பொருட்களையும், ஆடை ஆபரணங்களையும் வாங்கி சேர்ப்பீர்கள். கடன்கள் படிப்படியாகக் குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்கு பின் அனுகூலமான பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாக கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களும் ஓரளவுக்கு சாதகமாகவே நடந்து கொள்வார்கள். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே ஏமாற்றுவார்கள் என்பதால் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். கொடுத்த கடன்களை வசூலிக்க முடியும்-. அசையும் அசையா சொத்துகள் வாங்கும் எண்ணங்களை சற்று தள்ளி வைப்பது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். தொழிலில் மந்தநிலை ஏற்படாமல் லாபங்களை பெற்று விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும்மாணவர்களுக்கு தேவையில்லாத அலைச்சல் ஏற்படும். சனிபகவானை வழிபடுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்  - 28, 29, 30.

சந்திராஷ்டமம் - 31-05-2017பகல் 11.14 மணி முதல் 02-06-2017மாலை 06.20 மணி வரை.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
அன்பும், சாந்தமும், அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய, அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 2-ல் சுக்கிரன், 11-ல் சனி சஞ்சாரம் செய்வது நற்பலனை ஏற்படுத்தும் என்றாலும், 4-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் சோர்வு ஏற்பட்டு அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் சிரமம் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடைகளுக்கு பின்பு அனுகூல பலனை அடைவீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். கணவன்- மனைவி தேவையற்ற வாக்குவாதங்கள் தவிர்த்து விட்டு கொடுத்து நடந்து கொண்டால் மட்டுமே குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உற்றார், உறவினர்களிடம் பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் அதிகரிக்கும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும், முடிந்தவரை தூர பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் இருந்த சோதனைகள் சற்றே விலகும். மாணவர்கள் எதிலும் சுறுசுறுப்பு இல்லாது இருப்பார்கள். விநாயகரை வழிபடுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்  - 29, 30, 31, 1.

சந்திராஷ்டமம் - 02-06-2017மாலை 06.20 மணி முதல் 05-06-2017அதிகாலை 04.36 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் சூரியன், 6-ல் ராகு, 7-ல் குரு சஞ்சாரம் செய்வதால் எண்ணிய எண்ணங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். உற்றார்- உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பது, விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சில தடைகளுக்குப் பின் நல்ல வரன்கள் அமைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், தொழிலாளர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் அனுகூலம் ஏற்படும். சொந்த வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் நோக்கமும் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கு ஏற்ற உயர்வுகள் யாவும் தடையின்றி கிட்டும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். முருப்பெருமானை வழிபடுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்  - 1, 2, 3.


No comments: