Monday, May 29, 2017

ஜுன் மாத ராசிப்பலன் - சுப முகூர்த்த நாட்கள் - 2017

ஜுன் மாத ராசிப்பலன் - 2017

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை -- 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

சூரியன் ஏற்படுத்தும் அஸ்தங்கத விளைவு! -     கே.பி. ஐயப்ப சர்மா

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகு பாலமுருகன்

குலம் காக்கும் தெய்வம் எது? – ஆரூடம் சொல்லும்! - அம்சி விவேகானந்தன்

ரோகிணி தரும் பலன்கள்!-- -          -டாக்டர் இரா. ரகு M,Sc Astro

12 லக்னப் பலன்கள்!-                       முனைவர் முருகு பாலமுருகன்

நவதானியப் பரிகாரத்தின் அறிவியல் விளக்கம்! –      ஜோதி ஷண்முகம்

நோயின்றி வாழச் செய்யும் சந்திர தரிசனம்! – (வாரம் ஒரு பரிகாரம்)-
விசு அய்யர்

வள்ளல் குணம் யாருக்கு? -          பி. ராஜசேகரன் M.Phil Astro

சாதனைக்குத் துணை நிற்கும் வாழ்க்கைத் துணை!-
சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகு பாலமுருகன்

ஜீவ ஆற்றல் தரும் அரச மரம்! –      சித்தயோகி சிவதாசன் ரவி

வார ராசிபலன் (04-06-2017 முதல் 10-06-2017 வரை) வைகாசி 21 முதல் 27 வரை

முனைவர் முருகு பாலமுருகன்





புதன் ()
சுக்கி
சூரிய
செவ்
கேது 




ராகு 
சனி()


குரு ()


கிரக மாற்றம்

03-06-2017 - புதன் ரிஷபம்
10-06-2017 - குரு () நிவர்த்தி
15-06-2017 - மிதுன சூரியன்
18-06-2017 - மிதுன புதன்
21-06-2017 - விருச்சிகம் சனி ()
29-06-2017 - ரிஷப சுக்கிரன்

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே, நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கொண்ட உங்களுக்கு ராசியாதிபதி செவ்வாய் முயற்சி ஸ்தானமான 3-ல் இருப்பதும், இம்மாதம் 15-ஆம் தேதி முதல் சூரியன் 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதும் அற்புதமான அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உற்றார்- உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். தொழில்- வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருந்தாலும் குரு 6-ல் இருப்பதால் பண விஷயத்தில் சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம்.

பரிகாரம் - குரு ப்ரீதி, தட்சிணாமுர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்  -   - 07-06-2017 மாலை 04.39 மணி முதல் 10-06-2017 காலை 05.11 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே, இனிமையான சுபாவம் கொண்ட உங்களுக்கு 5-ல் சஞ்சரிக்கும் குரு இம்மாதம் 10-ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைய இருப்பதால் இதுநாள் வரை இருந்த தடங்கல்கள் விலகி சகல விதத்திலும் முன்னேற்றம் உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். பொன் பொருள் சேரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார்- உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். தடைப்பட்டு கொண்டிருக்கும் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களிலும் நற்பலன்கள் உண்டாகும். உங்களுக்கு இருந்த வந்த கடன் பிரச்சனைகளும் குறையும். சேமிப்புகள் பெருகும். 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களிடம் பேசும் போது நிதானமாக செயல்படுவது நல்லது. தொழில்- வியாபாரத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளும் விலகும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் லாபங்கள் அதிகரிக்கும்.

பரிகாரம் - முருக பெருமானை வழிபடுவது, சனிக்கு எள் எண்ணெய் தீபமேற்றுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்   - 10-06-2017 காலை 05.11 மணி முதல் 12-06-2017 மாலை 05.26 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே, எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக் கூடிய திறமை கொண்ட உங்களுக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்யோன்யம் உண்டாகும். உற்றார்- உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். தொழில்- வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடன் பணிபுரிபவர்களால் அனுகூலப் பலன் கிட்டும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படக்கூடும். 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும் என்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும்.

பரிகாரம் - பிரதோஷ காலங்களில் சிவனை வணங்குவதும், வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்குவதும் நன்மையை தரும்.

சந்திராஷ்டமம்    - 12-06-2017 மாலை 05.26 மணி முதல் 15-06-2017 அதிகாலை 04.24 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே, கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத உங்களுக்கு இம்மாதம் 10-ல் சுக்கிரன் மாத முற்பாதியில் 11-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பணிபுரிபவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். புதிய வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பொன், பொருள் சேரும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் கைகூடி குடும்பத்தில் மங்கள ஓசை கேட்கும். தொழில்- வியாபாரம் சிறந்த முறையில் நடைபெறும். வெளியூர் வெளிநாட்டு பயணங்களால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த வங்கி கடன் எளிதில் கிடைக்ககூடும். உடன் பிறந்தவர்களாலும் அனுகூலம் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தி அதிக லாபம் அடைவீர்கள்.

பரிகாரம் - குருப்ரீதி தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது, முருகவழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்  -  - 15-06-2017 அதிகாலை 04.24 மணி முதல் 17-06-2017 பகல் 12.44 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே, வாழ்க்கையில் பல முறை தோற்றாலும் தன் சொந்த முயற்சியால் முன்னோறும் உங்களுக்கு தன ஸ்தானத்தில் குருவும் 10-ல் சூரியன் 11-ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். தொழில் வியாபார ரீதியாக உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். போட்டிகள் விலகும். இதுவரை இருந்த பிரச்சனைகள் குறையும். தொழில்- வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எதிர்பார்த்த லாபம் கிட்டும். பொருளாதாரமும் மேலோங்கி இருக்கும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார்- உறவினர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் அமையும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை உண்டாகும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். பொன் பொருள் சேரும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான அந்தஸ்துகளையும் பெற முடியும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரியும் வாய்ப்பு உண்டாகும்.

பரிகாரம் - துர்கை வழிபாடு, மற்றும் விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்  -   - 17-06-2017 பகல் 12.44 மணி முதல் 19-06-2017 மாலை 05.29 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே, மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய உங்களுக்கு 6-ல் கேது, 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றங்களை அடைவீர்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை உண்டாகும் என்பதால் வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பற்றாக்குறையை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உறவினர்கள் ஓரளவு அனுகூலமாய் இருப்பார்கள்.                                        பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வெளியூர் பயணங்களால் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நிதானமாக செயல்படுவதன் மூலம் மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெற முடியும்.

பரிகாரம் - தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்  -  19-06-2017 மாலை 05.29 மணி முதல் 21-06-2017 மாலை 06.52 மணி வரை.

துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே, உயர்ந்த நிலையை அடைய கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், 12-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட தாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, தேவையற்ற அலைச்சல் டென்ஷன் போன்றவை ஏற்படக்கூடும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. முடிந்து வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. திருமண சம்பந்தமான சுப முயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் அனுகூலப் பலன் கிடைக்கும். தெய்வ காரியங்களுக்காகவும், பொதுநலத் திட்டங்களுக்காகவும் சிறுசிறு செலவுகளைச் செய்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை ஏற்பட்டாலும் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் அபிவிருத்தி பெருகும். முன்னேற்றம் ஏற்படும். பல புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

பரிகாரம் - சிவ வழிபாடு, குரு பகவான் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்  -   - 21-06-2017 மாலை 06.52 மணி முதல் 23-06-2017 மாலை 06.22 மணி வரை

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே, தன்னுடைய கொள்கைகளை எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட உங்களுக்கு 11-ல் சஞ்சரிக்கும் குரு இம்மாதம் 10-ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைய இருப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்கள் ஏற்படும். ஜென்ம ராசிக்கு 7-ல் சூரியன் 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்றாலும் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. உடல் நிலையில் சிறுசிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் மிகவும் கவனமுடன் நடந்து கொண்டால் நற்பலனை அடைய முடியும். தொழில்- வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்து கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து சென்றால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். எதிர்பாராத திடீர் தனச் சேர்க்கைகள் கிடைக்கப் பெறுவதால் மன மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். இருப்பினும் எந்த விஷயத்திலும் முன் எச்சரிக்கையோடு செயல்படுவது நல்லது.

பரிகாரம் - சனிபகவான் வழிபாடு செய்வது, முருகவழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்  -   - 23-06-2017 மாலை 06.22 மணி முதல் 25-06-2017 மாலை 06.04 மணி வரை

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே, வேகமாக பேசினாலும், திருத்தமாக பேசக் கூடிய உங்களுக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன் 6-ல் சூரியன் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் பல்வேறு வகையில் சாதகமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்பத்திலிருந்து வந்த பிரச்சனைகள் யாவும் குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் கடன்களும் படிப்படியாகக் குறைந்து நிம்மதி நிலவும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். உற்றார்- உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில்- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும், அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய காலம் என்பதால் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. தொழிலாளர்களின் ஒத்தழைப்பால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த வேலை மாற்றம் கிட்டும்.

பரிகாரம் - தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது, சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்  -  - 25-06-2017 மாலை 06.04 மணி முதல் 27-06-2017 இரவு 07.59 மணி வரை

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே, தானுண்டு தன் வேலையுண்டு என வாழும் குணம் கொண்ட உங்களுக்கு 6-ல் செவ்வாய் 15-ஆம் தேதி முதல் 6-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதும் 9-ல் சஞ்சரிக்கும் குரு இம்மாதம் 10-ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைய இருப்பதால் எல்லா வகையிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். சுபகாரிய முயற்சியில் அனுகூலப் பலன் கிடைக்கும். பணம் பல வழிகளில் தேடி வரும். அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திரர்கள் வழியாக சுப செலவுகள் ஏற்படும். உற்றார்- உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் லாபம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில்- வியாபாரத்திலும் எதிர்பார்த்த வகையில் லாபம் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கான நவீன கருவிகள் வாங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும்.

பரிகாரம் - விநாயகர் வழிபாடு செய்வது, அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம்  -   - 31.05.2017 பகல் 11.14 மணி முதல் 02-06-2017 மாலை 06.20 மணி வரை. மற்றும்  27-06-2017 இரவு 07.59 மணி முதல் 30-06-2017 அதிகாலை 01.34 மணி வரை

கும்பம்  அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே, மற்றவரின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட உங்களுக்கு சுக ஸ்தானமான 4-ல் சூரியன் 7-ல் ராகு 8-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனமாக செயல்பட வேண்டிய காலமாகும். உடனிருப்பவர்களால் மனநிம்மதி குறையும். தொழில்- வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக எதிரிகளால் போட்டி பொறாமைகள் அதிகரிக்க கூடும். கிடைக்க வேண்டிய புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அனுகூலப் பலன்களும் கிடைக்கும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆடம்பரச் செலவுகளை குறைப்பதால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். இம்மாதத்தில் எதையும் சிந்தித்து செயல்படுவதன் மூலமும் மற்றவர்களை அனுசரித்து செல்வதன் மூலமும் நற்பலன்களை அடையலாம்.

பரிகாரம் - துர்கையம்மனை வழிபாடு செய்வது, வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்  -  - 02-06-2017 மாலை 06.20 மணி முதல் 05-06-2017 அதிகாலை 04.36 மணி வரை. மற்றும்  30-06-2017 அதிகாலை 01.34 மணி முதல் 02.07.2017 காலை 10.55 மணி வரை


மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன  ராசி நேயர்களே, புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் செவி சாய்க்காத உங்களுக்கு 2-ல் சுக்கிரன் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும் 7-ல் சஞ்சரிக்கும் குரு இம்மாதம் 10-ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைய இருப்பதும் உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் அமைப்பாகும். தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கடன் பிரச்சினைகள் சற்றே குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உற்றார்- உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்த சேரும். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாய் அமைவார்கள். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில்- வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி மகிழ்ச்சி ஏற்படும். வெளியூர் பயணங்களாலும் அனுகூலம் கிட்டும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப் பட்டாலும் ஊதிய உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும்.

பரிகாரம் - முருக வழிபாடு மற்றும் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்  - 05-06-2017 அதிகாலை 04.36 மணி முதல் 07-06-2017 மாலை 04.39 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்

01-06-2017 வைகாசி 18 ஆம் தேதி வியாழக்கிழமை சப்தமிதிதி மக நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 04.30 மணி முதல் 06.00 மணிக்குள் ரிஷப இலக்கினம். வளர்பிறை

04-06-2017 வைகாசி 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தசமிதிதி அஸ்த நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 08.30 மணிக்குள் மிதுன இலக்கினம். வளர்பிறை

08-06-2017 வைகாசி 25 ஆம் தேதி வியாழக்கிழமை சதுர்தசிதிதி அனுச நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 08.30 மணிக்குள் மிதுன இலக்கினம். வளர்பிறை

11-06-2017 வைகாசி 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவிதியைதிதி மூல நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் மிதுன இலக்கினம். தேய்பிறை

14-06-2017 வைகாசி 31 ஆம் தேதி புதன்கிழமை பஞ்சமிதிதி திருவோண நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மிதுன இலக்கினம். தேய்பிறை

16-06-2017 ஆனி 02 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சப்தமிதிதி சதய நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மிதுன இலக்கினம். தேய்பிறை

19-06-2017 ஆனி 05 ஆம் தேதி திங்கட்கிழமை தசமிதிதி ரேவதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மிதுன இலக்கினம். தேய்பிறை

25-06-2017 ஆனி 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துதியைதிதி புனர்பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை

26-06-2017 ஆனி 12 ஆம் தேதி திங்கட்கிழமை திருதியைதிதி பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். வளர்பிறை

28-06-2017 ஆனி 14 ஆம் தேதி புதன்கிழமை பஞ்சமிதிதி மக நட்சத்திரம் சித்தயோகம் 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். வளர்பிறை


30-06-2017 ஆனி 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சப்தமிதிதி உத்திர நட்சத்திரம் சித்தயோகம் 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். கடக இலக்கினம். வளர்பிறை

No comments: