Saturday, May 20, 2017

வார ராசிப்பலன் மே 21 முதல் 27 வரை 2017

வார ராசிப்பலன் மே 21 முதல் 27 வரை 2017  (வைகாசி 7 முதல் 13  வரை)

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

12 லக்னப் பலன்கள்!-                       முனைவர் முருகுபாலமுருகன்

கர்ம வினைகள் போக்கும் கன்னிகா தானம்! –    சித்தயோகி சிவதாசன் ரவி

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகுபாலமுருகன்

பரணி படுத்தும் பாடு!-- -          -டாக்டர் இராரகு M,Sc Astro

எதிரெதிர் கூட்டணியினர் இடம் மாறினால்! -     கே.பி. ஐயப்ப சர்மா

கோடிப் பொன் குவிக்கும் யோகம் யாருக்குத் தேடிவரும்! -  பி.ராஜசேகரன் M.Phil Astro

27 நட்சத்திரங்களின் தன்மைகள்! -
மன்னை ஸ்ரீமதி விஅகிலாண்டேஸ்வரிஐயர் M.Phil Astro

பிள்ளை வரம் பெற்றுத் தரும் பனை! – (வாரம் ஒரு பரிகாரம்)-   விசு அய்யர்

சாதாரணம்-அசாதாரணம் ஆனதெப்படி?!- சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகுபாலமுருகன்

கலியுக ராமனாகும் மகா பாக்கியம்? -      அம்சி விவேகானந்தன்

களத்திர தோஷம்! –             ஜோதிடச்சுடர் ந. ஞானரதம்M.Phil Astro

வார ராசிபலன் (21-05-2017 முதல் 27-05-2017 வரை) வைகாசி 7 முதல் 13 வரை
முனைவர் முருகுபாலமுருகன்



சுக்கி
சந்திர
புதன்
செவ்
சூரிய,


கேது 
திருக்கணித கிரக நிலை



ராகு
சனி ( )



குரு ()


கிரக மாற்றம்
27-05-2017  மிதுனத்தில் செவ்வாய் அதிகாலை 01.32 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மீனம்  -21-05-2017 அதிகாலை 05.18 மணி முதல் 23-05-2017 காலை 08.26 மணி வரை.
மேஷம் -23-05-2017 காலை 08.26 மணி முதல் 25-05-2017 காலை 08.33 மணி வரை.
ரிஷபம் -25-05-2017 காலை 08.33 மணி முதல் 27-05-2017 காலை 07.38 மணி வரை.
மிதுனம்-27-05-2017 காலை 07.38 மணி முதல் 29-05-2017 காலை 07.56 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
22-05-2017 வைகாசி 08-ஆம் தேதி திங்கட்கிழமை, ஏகாதசி திதி, ரேவதி நட்சத்திரம், சித்தயோகம், காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவினிபரணிகிருத்திகை 1-ஆம் பாதம்
நல்ல வாக்கு சாதுர்யம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 2-ல் சூரியன், செவ்வாய், 12-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் இந்த வாரம் ஏற்ற, இறக்கமான பலன்களே உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவினை ஏற்படுத்தும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன்களும் ஏற்படும். முடிந்தவரை மற்றவர்களிடம் வாக்கு- வாதங்களை தவிர்த்து விடுவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். போட்டி பொறாமைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவி இடையே உண்டாகக்கூடிய தேவையற்ற வாக்குவாதங்களால் மன நிம்மதி குறையும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்ய முயற்சிப்பார்கள் என்பதால் முடிந்த வரை பெரிய தொகைகளை யாருக்கும் கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும் என்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து விடுவது சிறப்பு. சிவபெருமானை வழிபடுவது, குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள் -  23, 24, 27.

ரிஷபம்  கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணிமிருகசீரிஷம் 1, 2-ஆம் பாதங்கள்
சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 5-ல் குரு, 11-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் அனுகூலமான பலன்களை பெற முடியும். உங்களுக்குள்ள எதிர்ப்புகள் பிரச்சனைகள் யாவும் குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத திடீர் தனவரவுகளும் உண்டாகி குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் தெம்புடன் செயல்பட முடியும். உற்றார்- உறவினர் ஓரளவுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக அமையும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில், வியாபாரத்திலும் எதிர்பார்த்த புதிய வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளால் லாபங்கள் கிட்டும். முன் கோபத்தைக் குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். கல்விக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள் -  21, 22, 25, 26.

மிதுனம் மிருகசீரிஷம் 3, 4-ஆம் பாதங்கள்திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும்  சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு, 10-ல் சுக்கிரன், 11ல் புதன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்ப தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துவிட முடியும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்ட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன்-மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது மூலம் தேவையற்ற கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றார்- உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். கொடுக்கல்வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை தள்ளி வைக்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் காரியங்களில் போது கவனம் தேவை. கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. கிடைக்க வேண்டிய லாபங்கள் தடையின்றி கிடைக்கும். புதிய பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம்உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள்மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்     21, 22, 23, 24, 27.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம்பூசம்ஆயில்யம்
சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 9-ல் சுக்கிரன், 11-ல் சூரியன், செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே குறையும். உடல் ஆரோக்கியத்தில் அக்கரை எடுத்து கொள்வதன் மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலனைப் பெறுவீர்கள். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். வீடு, வாகனம் போன்றவற்றையும் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உற்றார்- உறவினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும் என்றாலும் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்பட கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் என்பதால் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளையும் கௌரவமான பதவி உயர்வுகளையும் அந்தஸ்துகளையும் பெற முடியும். தொழில், வியாபாரம் தடையின்றி நடைபெற்று எதிர்பார்த்த லாபம் கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். தினமும் விநாயகரை வழிபடுவது சிவனை வணங்குவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் -  23, 24, 25, 26.

சிம்மம் மகம்பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்
சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே,   இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 2-ல் குரு 10-ல் சூரியன், செவ்வாய் சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்து கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்வதுடன், எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று கடன் சுமைகள் சற்று குறையும்உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டு போட்டிகளிலும் திறம்பட செயல்பட்டு பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டி செல்வார்கள். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது, ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள் -25, 26, 27.

சந்திராஷ்டமம்-21-05-2017 அதிகாலை 05.18 மணி முதல் 23-05-2017 காலை 08.26 மணி வரை.

கன்னி உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள்அஸ்தம்சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்
சூழ்நிலைக்கு தக்கவாரு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 6-ல் கேது, 9-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பது ஓரளவுக்கு நற்பலனை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு உண்டானாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். முன்கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில், வியாபாரம் செய்பபவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கப் பெறும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்றாலும் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்திகால் தேவையற்ற பிரச்சனைகளை குறைத்துக் கொள்ள முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவினை பெறுவார்கள். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடவும்.

வெற்றிதரும் நாட்கள் -  21, 22, 27.

சந்திராஷ்டமம் -23-05-2017 காலை 08.26 மணி முதல் 25-05-2017 காலை 08.33 மணி வரை.

துலாம் சித்திரை 3, 4-ஆம் பாதங்கள்சுவாதிவிசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்
நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 7ல் புதன்,  11ல் ராகு, அதிசாரமாக 3ல் சனி சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்றாலும் 8-ல் சூரியன், செவ்வாய் 12-ல் குரு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, எந்தவொரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார்- உறவினர்களால் தேவையற்ற மன சஞ்சலங்கள் தோன்றி ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். புத்திரர்களாலும் நிம்மதி குறையும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களை சற்று தள்ளி வைப்பது உத்தமம். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள்.----------- தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் தேவைற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள் என்றாலும் செய்ய வேண்டிய பணிகளை சிறப்பாக செய்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு எதிலும் சற்று மந்தநிலை நிலவக்கூடும் என்பதால் கவனமுடன் செயல்படுவது உத்தமம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் -  21, 22, 23, 24.

சந்திராஷ்டமம் -25-05-2017 காலை 08.33 மணி முதல் 27-05-2017 காலை 07.38 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம்அனுஷம்கேட்டை
நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 7-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், 5-ல் சுக்கிரன், 11ல்  குரு சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பனவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினைகள் சற்றே விலகும். புத்திர வழியில் சிறுசிறு வீண் செலவுகளை சந்திப்பீர்கள். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாதுகணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைவதால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. கொடுக்கல் வாங்கலில் சுமாரான லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் ஊதிய உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் நினைத்த மதிப்பெண்களை பெற முடியும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். முருகபெருமானை வழிபடுவதுசனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் -  23, 24, 25, 26.    

சந்திராஷ்டமம்  27-05-2017 காலை 07.38 மணி முதல் 29-05-2017 காலை 07.56 மணி வரை.

தனுசு  மூலம்பூராடம்உத்திராடம் 1-ஆம் பாதம்
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்த தனுசு ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 4-ல் சுக்கிரன், 6-சூரியன், செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் தாராளமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும், ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகளும், பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப காரியங்களும் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் நோக்கமும் நிறைவேறும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். வெளிவட்டாரத் தொடர்புகளும் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் பாராட்டுதல்களும் கல்வியின் தரத்தை உயர்த்தி கொள்ள உதவும். முருகப்பெருமானை வழிபாடு செய்வது நற்பலனை தரும்.

வெற்றிதரும் நாட்கள் -  25, 26, 27.

மகரம் உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள்திருவோணம்அவிட்டம்1, 2-ஆம் பாதங்கள்    
எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக வாழும் மகர ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 3-ல் சுக்கிரன், 9-ல் குரு, சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும். கணவன் -மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் கடன்களும் படிப்படியாகக் குறைந்து மன நிம்மதி நிலவும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகள் விலகும் என்றாலும் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். உற்றார்- உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அவர்களால் கிடைக்க வேண்டி உதவிகள் கிடைக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். ராகு காலங்களில் துர்கையம்மனை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் -  21, 22, 27.

கும்பம்  அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம்பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 4-ல் சூரியன், செவ்வாய், 8-ல் குரு சஞ்சாரம் செய்வதால் கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, எந்தவொரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். பணம் வரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலையே இருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு வீண் செலவுகளை சந்திக்க நேரிடலாம். உடல்நிலை சோர்வாக இருப்பதால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியாமல் போகும். உற்றார்- உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் அதிகரிப்பதால் எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் தடைபடும். கூட்டாளிகளும் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படுவதோடு பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். மாணவர்கள் நல்ல நட்புகளாக தேர்தெடுத்து பழகுவது நல்லது. ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள் -23, 24.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம்உத்திரட்டாதிரேவதி
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாகவும் விளங்கும் மீன  ராசி நேயர்களே இந்த வாரம் 3-ல் சூரியன், செவ்வாய், 6-ல் ராகு, 7-ல் குரு, சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை போன்ற பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் சிறுசிறு மருத்துவச் செலவுகளை எதிர் கொள்ள நேரிடும். கணவன்- மனைவி தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது மூலம் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த பிரச்சினையும் ஏற்படாது. தொழில், வியாபாரத்தில் வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வரும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் லாபங்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செல்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்பட்டாலும் பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைக்கும். முருகப் பெருமானை வழிபடுவது, சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்-21, 22, 25, 26.


No comments: