Tuesday, March 27, 2012

இறைபணியில் ஈடுபட வைக்கும் அமைப்பு

இறைவன் என்பவன் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறான். தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்றாலும், மனிதனாய்ப் பிறந்த எல்லோருக்குமே இறைபக்தி என்பது இயற்கையிலேயே இருப்பதில்லை. நம் நாட்டில் ஆத்திக வாதிகளும் உண்டு. நாத்திக வாதிகளும் உண்டு. சிலர் இளம் வயதிலேயே ஆன்மிகத்தில் ஈடுபட்டு முற்றும் துறந்து விடுவார்கள். சிலருக்கு நடுத்தர வயதில் ஆன்மிகத்தில் ஈடுபடக்கூடிய சூழநிலைகள் உண்டாகும். சிலருக்குக் குடும்ப வாழ்வில் ஈடுபட்டுக் கொண்டே இறைபணி, ஆன்மிக பணிகளில் அதிக அக்கறை செலுத்துவார்கள்.

இறைபணி செய்வது என்பது ஒரு சிறந்த பாக்கியமாகும். இந்த பாக்கியம் என்பது எளிதில் எல்லோருக்கும் கிடைத்து விடாது. குறிப்பாக இறைபணி என்பது எல்லா மதத்திற்கும் பொதுவான ஒன்றாகும். அவரவர் மதத்திற்கு ஏற்றவாறு இறைபணிகளில் ஈடுபடுவார்கள். இறைபணியில் ஈடுபடுவதற்கு அவரவரின் ஜனன ஜாதகப்படி 5ம் பாவம் பலமாகவும், சுப கிரகங்கள் அமையப் பெற்றும், பார்வை பெற்றும் அமைந்திருக்க வேண்டும். அது மட்டுமின்றி 5ம் பாவத்திற்கு 5ம் பாவமான 9ம் பாவமும் பலமாக இருந்தால் இன்னும் மிகச் சிறப்பாக இருக்கும்.

நவக்கிரகங்களில் தேவர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கக்கூடிய குரு பகவான், ஒருவர் ஜாதகத்தில் வலுப்பெற்றிருந்தால் தெய்வீக எண்ணம், ஆன்மிக எண்ணம், இறைபணியில்  ஈடுபடக்கூடிய சூழ்நிலை உண்டாகும். அது போல நவக்கிரகங்களில் நிழல் கிரகம், சாயாகிரகம் என வர்ணிக்கப்படக் கூடிய கேது பகவான் ஞான காரகன் என்பதால், ஒருவர் ஜாதகத்தில் கேது வலுப்பெற்றிருந்தாலும் ஆன்மிக, தெய்வீக எண்ணங்கள் உண்டாகும்.

அது போல கேதுவின் நட்சத்திரமான அஸ்வினி, மகம், மூலத்தில் பிறந்தாலும் குருவின் நட்சத்திரமான புனர்பூசம், விசாகம், பூரட்டாதியில் பிறந்திருந்தாலும் தெய்வீக எண்ணங்கள் உண்டாகும்.

குரு, கேது வலுப்பெற்றால் தெய்வீக எண்ணங்கள் ஏற்படும் என்றாலும், எங்கு வலுப்பெற்றால் சிறப்பு என்று பார்க்கும்போது, ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 5ம் வீட்டில் வலுப்பெற்றால் தான் தெய்வீக  எண்ணங்கள் ஏற்படும். 5ல்  குரு, கேது இருந்தாலும் 5ம் வீடு குரு வீடாக அமைவது, 5ம் வீட்டைக் குரு பார்வை செய்வதாலும் 5ம் அதிபதி குரு கேது சேர்க்கைப் பெற்றாலும், அந்த ஜாதகருக்கு தெய்வீக எண்ணம், இறை பணி பல்வேறு ஆன்மிக செயல்களில் ஈடுபடும் அமைப்பு கொடுக்கும்.

சந்திரனானவர் மனோகாரகன் என்பதால், அவர் குரு கேது சேர்க்கைப் பெற்று 5ல் அமையப்பெற்றாலும், சந்திரனுக்கு 5ல் அமையப் பெற்றாலும், சந்திரனுக்கு 5ல் குரு, கேது அமையப் பெற்றாலும் தெய்வீக நாட்டம் உண்டாகும். குரு கேது ஆகிய கிரக சேர்க்கைப் பெற்று 5ல் அமைந்தோ, 5க்கு 5ல் அமைந்தோ அதன் தசாபுக்தி நடைபெற்றால் கண்டிப்பாக ஆன்மிகம், தெய்வீகம் போன்றவற்றில் ஈடுபாடு கொடுக்கும்.

கேது பகவான் விருச்சிக ராசியில் உச்சம் பெறுவதால், ஒருவர் ஜாதகத்தில் கேது உச்சம் பெறுவதால், ஒருவர் ஜாதகத்தில் கேது உச்சம் பெற்று  லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ, அது 5ம் பாவமாக அமையப் பெற்றுவிட்டால் தெய்வீகப் பணிகளில் ஈடுபடக்கூடிய அமைப்பு உண்டாகும். 5ல் அமையப் பெற்று விட்டால் தெய்வீகப் பணிகளில் ஈடுபடக்கூடிய அமைப்பு உண்டாகும். 5ல் அமையும் குரு பகவான் சூரியன், சந்திரன், செவ்வாய், கேது ஆகியவற்றில் ஏதேனும் ஒரு  கிரகச் சேர்க்கைப் பெற்று, அதன் தசா அல்லது புக்தி நடைபெற்றால்  கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். அதுவே குரு பலஹீனமாக இருந்தாலும், 5ம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவிகள் அமையப் பெற்றாலும் ஆன்மிக, தெய்வீக சிந்தனைகளால் ஈடுபாடு குறையும்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001


Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001

No comments: