பூஜை காலங்களில் தேங்காய் இன்றி பூஜை இல்லை. தேங்காய் இன்றி பூஜை செய்தால் பூஜையின் முழுத்தன்மை அடைவதில்லை. நம் முன்னோர் தான் தேங்காய் வைத்து பூஜை செய்யும் வழக்கத்தை உருவாக்கித் தந்துள்ளார்கள். திருமணம், சடங்கு, பூப்படைதல், விழா, ஹோமம், கிரகபிரஷேம், கும்பாபிஷேகம், பூரண கும்பம் கொண்டு மரியாதை செய்தல்,இது போன்ற பல செயல் பாட்டில் தேங்காயைப் பயன் படுத்துகிறோம். தேங்காய் வடிவத்தில் மும்மலம் கருத்து உள்ளது. தேங்காய் ஓடு, நார் மனிதனின் உடல், தேங்காயின் உள்பகுதி வெண்மை உள்ள நிலை மனிதனின் மனம். தேங்காய் உள்ள நீர் மனிதனின் உயிர். பூஜை நேரத்தில் தேங்காயைப் படிப்படியாக களையும் போது அங்காரம் என்ற ஓடு நோறுங்க மனம் வெண்மையாக பிரகாசிக்கிறது. அதன் நீரை இறைவனுக்கு அர்பணிக்கப்படுகிறது. மனிதனின் உயிர் இறைவனுடன் ஐக்கியமாகும் நிலை உருவாகும்.
இறைவனுடைய திருக்காட்சியைக் காண மனிதனின் அகங்காரம் என்ற தேங்காய் ஓடு உடைத்தால் மனத்தூய்மை (தேங்காய் உள்ள வெண்மை) உருவாகி மனிதனின் உயிர் (நீர்) ஞான உணர்வு பெற்று இறைவனை தரிசிக்கிறது. மனிதனுக்கு இரண்டு கண்கள் மூன்றாவது கண் ஞானக்கண், இது போன்று தேங்காய்க்கு மூன்று கண் அமையபட்டுள்ளது. தத்துவக்குணத்துடன் சஞ்சலமில்லாமல் மனிதனின் ஞானக்கண்ணால் இறைவனை தரிசிக்கும் போது பக்தி உணர்வுகள் இதயம் உணர்கிறது.
சிதறு தேங்காய்
வழிப்பாட்டில் தேங்காயை தூள் தூளாக தரையில் அடிப்பது வழக்கத்தில் காணலாம். நான்கு திசைகளில் சிறும்படி தேங்காய் உடைப்பது சதுர் தேங்காய் வழிபாடு. சிதறும் தேங்காய் துண்டுகள் பலரும் எடுத்துக்கொள்வது வழக்கம் இது போன்ற முறை குறிப்பாக விநாயகர் கோவிலில் காணலாம். சிதறும் தேங்காய் துண்டுகள் குழந்தை பிள்ளையாரின் பிரசாதம். இதன் காரணமாக என்னவோ சிதறும் தேங்காய் பகுகளைக் குழந்தைகள் எடுத்துக்கொள்ளும் நிலை காணப்படுகிறது.
சிதறு தேங்காய் வழிபாட்டு தன்மையில் மனிதனின் அகங்காரத்தின் முடிவையும் தியாகத்தின் தொடக்கத்தின் நிலை உணற முடிகிறது. ஏழை சிறுவர்கள் சிதறு தேங்காய் துண்டுகள் எடுத்துக் கொள்ளும் நிலை மறைமுகமாக செய்யும் தர்மமாகும். அகங்கார மண்டை உடைய வேண்டும் அமுதமான அறிவுநீரை அடைய வேண்டும் என்பதுதான் சிதறு தேங்காய் வழிபாட்டின் தத்துவம்.
ஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001
Jothida mamani Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001
No comments:
Post a Comment