Tuesday, March 13, 2012

கற்பு


கற்பு என்பதுஆண், பெண் இருவருக்கும் சமமானதே. ஆனால் அக்காலம் முதல் இக்காலம் வரை கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே இருப்பதாக நினைக்கிறார்கள். ஒழுக்கமான நடத்தை, நல்ல பண்பு, மற்றவர்களிடம் அதிகமாக பேசாத குணம் போன்றவை  உள்ளவர்களையே கற்புள்ளவர்களாக எண்ணுகிறார்கள்.  தற்போதுள்ள கால சூழ்நிலையில் ஒரு ஆணும் பெண்ணும் நட்பாக பழகுவதென்பது சகஜமாகி வருகிறது. கல்லூரியிலோ, பள்ளியிலோ பயிலும் ஆண், பெண் இருவரும் ஒன்றாக அமர்ந்து படிப்பது, உணவு உண்பது என்பது சகஜமாக மாறி வருகிறது. அப்படி இருக்கும் சூழ்நிலையில் அனைவரையும் கற்பிழந்தவர்களாக கூறிவிட முடியுமா?

குறிப்பாக, ஒருவரின் ஜனன ஜாதகத்தில் 4ம் பாவம் பாதிக்கப்பட்டாமல் சுபர்சேர்க்கை பார்வையுடன் இருக்குமாயின், அவளின் கற்புக்கு எந்த பங்கமும் சேராது.

அதுவே 4ம் பாவமானது பாதிக்கப்பட்டிருந்தால் தேவையற்ற நட்புகள் தேடிவரும். இதனால் கெட்ட  பழக்க வழக்கங்கள் முளைக்கும். பெயர் கெடும். வாழ்வில் பல இன்னல்களையும் சந்திக்க வேண்டி இருக்கும். கற்பிழந்தவள் என்ற முத்திரையுடன் வாழ வேண்டியிருக்கும். இதனால் அடுத்து வரக்கூடிய சந்ததியினருக்கும் பாதிப்புகள் உண்டாகும்.

பொதுவாக, பெண்கள் நாட்டின் கண்கள் என்பதால் ஒரு  பெண்ணானவள் ஒழுக்க நெறியும் மற்றவர்களை அனுசரித்துச் செல்லும் பண்பும் கொண்டிருந்தால் நாட்டிற்கும் நல்லது. வீட்டிற்கும் நல்லது. அதற்காக அடுக்களையில் அடைந்து கிடக்க வேண்டும் என்பதில்லை. புலியையே முறத்தால் அடித்து விரட்டியவள் பெண் என்பதால், துணிவு, தைரியம் யாவையும், பெற்றிருத்தல் அவசியம். கெட்ட பழக்க வழக்கங்களைத் தவிர்த்து குடும்பத்திற்கு குல விளக்காகத் திகழ்வதால் அனைவரும் போற்றக்கூடியவளாக வாழ முடியும்.

பெண்களின் ஜனன ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் 4ம் பாவமும், சந்திரனுக்கு 4ம் பாவமும் சாதகமாக அமையப் பெற்றால், அப்பெண் நல்ல குண நலன்களும், ஒழுக்கமும் அனைவரையும் அனுசரித்துச் செல்லும் பண்பும் கொண்டவளாக திகழ்வாள்.

குறிப்பாக சுபகிரகமான குருபகவான் ஜென்ம லக்னத்திற்கு 4ம் பாவத்தையும், சந்திரனுக்கு 4ம் பாவத்தையும் பார்வை செய்து, 4 ம் அதிபதியையும் பார்வை செய்வது மிகவும் சிறப்பாகும். இப்படிப்பட்ட அமைப்பு ஏற்பட்டால் பண்புள்ள பெண்ணாகவும் மற்றவர்களுக்கு முன் உதாரணமானவளாகவும் விளங்குவாள்.

ஜென்ம லக்னத்திற்கு 4 ம் வீட்டிலும், சந்திரனுக்கு 4ம் வீட்டிலும்  சுபகிரகங்கள் அமைவது மிகச்சிறப்பு.

நவகிரகங்களில் சுபகிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன்  ஆகிய  கிரகங்களும் மற்றும் சுபர் சேர்க்கை, சுபர் பார்வை பெற்ற புதனும் அமையப் பெற்றால், பண்புள்ள பெண்ணாகவும் நல்ல குணவதியாகவும் இருப்பாள்.

4ம் வீட்டில் குரு பகவான் அமையப் பெற்றால் தெய்வீக எண்ணம், மற்றவர்களை வழி நடத்தும் வல்லமை இருக்கும்.

சுக்கிரன் அமையப் பெற்றால் அழகான உடலமைப்பு, மற்றவர்களை வசீகரிக்கும் அழகு அமையும். இல்லற சுகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும்.

புதன் அமையப் பெற்றால் நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், நல்ல பண்பு, அழகான உடலமைப்பு, குடும்பத்தை பாங்காக நடத்திச் செல்லும் நற்குணம் போன்ற  யாவும் உண்டாகும்.
வளர்பிறை சந்திரன் அமையப் பெற்றால் பிறரை வசீகரிக்கும் அழகான உடலமைப்பு, கவர்ச்சி சிறந் நற்குணங்களை உடைய பெண்ணாக விளங்குவாள்.

4ம் இடம் கற்பு ஸ்தானம் என்பதால், பாவக்கிரகங்கள் அமையாமல் இருப்பது நல்லது.  4ம் இடமே பாவக் கிரகத்தின் வீடாக இருந்தால் அக்கிரகம் சொந்த வீட்டில் ஆட்சி பெற்று அமைவதால் கெடுதிகள் ஏற்படாது.

நவகிரகங்களில் சூரியன், தேய்பிறை சந்திரன், செவ்வாய், பாவிகள் சேர்க்கை பெற்ற புதன், ராகு, கேது, சனி போன்ற பாவக்கிரகங்கள் 4ல்  அமைவதோ, 4ம்  வீட்டைப் பார்வை செய்வதோ,  4ம் அதிபதி மேற்கூறிய கிரகங்களின் சேர்க்கை பெற்று அமைவதோ அவ்வளவு சிறப்பில்லை.
ஒன்றுக்கும் மேற்பட்ட பாவகிரகங்கள் அதாவது 2,3 பவகிரகங்கள் கற்பு ஸ்தானமான 4ல் அமைவது, அவ்வளவு சிறப்பல்ல. இதனால் ஜாதகிக்கு தேவையற்ற நட்புகள் சேரும் அமைப்பும், அவப்பெயர், மற்றவர்கள் பழி சொல் கூறும் சூழ்நிலையும் உண்டாகும்


Astrologer MURUGUBALAMURUGAN Cell-72000163001

No comments: