Thursday, May 29, 2025

Today rasi palan - 30.05.2025

 


Today rasi palan -
30.05.2025

இன்றைய ராசிப்பலன் -  30.05.2025

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

30-05-2025, வைகாசி 16, வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி இரவு 09.23 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. புனர்பூசம் நட்சத்திரம் இரவு 09.29 வரை பின்பு பூசம். சித்தயோகம் இரவு 09.29 வரை பின்பு மரணயோகம். மாத சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00 

 

சுக்கி சனி

 

சூரிய புதன்

குரு சந்தி

ராகு

 

30.05.2025

செவ்

 

கேது

 

 

 

 

 

இன்றைய ராசிப்பலன் -  30.05.2025

மேஷம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். வேலையில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. உறவினர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

கடகம்

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு உழைப்பிற்கேற்ற அனுகூலங்கள் கிடைக்கும்.

சிம்மம்

இன்று உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து சந்தோஷம் கூடும். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

கன்னி

இன்று தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும். சிலருக்கு உத்தியோக ரீதியாக இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். வீட்டில் பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உற்றார் உறவினர்கள் வழியில் ஓரளவு அனுகூலங்கள் கிட்டும்.

துலாம்

இன்று உங்களுக்கு மனநிம்மதி சற்று குறைந்து காணப்படும். வண்டி வாகன பராமரிப்பிற்காக செலவுகள் செய்ய நேரிடும். ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிகாட்ட நல்ல வாய்ப்புகள் உருவாகும்.

விருச்சிகம்

இன்று உங்கள் ராசிக்கு பகல் 03.42 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் தடை தாமதங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கொடுக்கல்& வாங்கலில் நிதானமாக செயல்படுவது உத்தமம். மதியத்திற்கு பிறகு பிரச்சினைகள் குறையும்.

தனுசு

இன்று தூர பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சோர்வும் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 03.42 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. முன்கோபத்தால் வேலையில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். விட்டு கொடுத்து செல்வது நல்லது.

மகரம்

இன்று எதிர்பாராத பணவரவுகள் உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். தொழில் சம்பந்தமாக வெளிவட்டார தொடர்பு உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

கும்பம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்படுவதன் மூலம் லாபம் கிட்டும். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

மீனம்

இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் பிரச்சினைகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

No comments: