Tuesday, May 27, 2025

Today rasi palan - 28.05.2025

 


Today rasi palan -
28.05.2025

இன்றைய ராசிப்பலன் -  28.05.2025

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

28-05-2025, வைகாசி 14, புதன்கிழமை, துதியை திதி பின்இரவு 01.55 வரை பின்பு வளர்பிறை திரிதியை. மிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு 12.29 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். சந்திர தரிசனம். அக்னி நட்சத்திரம் முடிவு இரவு 8.48. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

சுக்கி சனி

 

சூரிய சந்தி புதன்

குரு

ராகு

 

28.05.2025

செவ்

 

கேது

 

 

 

 

 

இன்றைய ராசிப்பலன் -  28.05.2025

மேஷம்

இன்று உங்களுக்கு வரவிற்கேற்ற செலவுகள் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களால் நிம்மதி குறைவு ஏற்படும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் சாதகமான பலனை அடையலாம். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் விஷயங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கடகம்

இன்று உங்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் சக நண்பர்களின் அதரவு  கிடைக்கும். கடன் பிரச்சினை தீரும். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

சிம்மம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். நினைத்த காரியம் நிறைவேறும்.

கன்னி

இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். திடீர் பயணங்களால் அலைச்சல் சோர்வு உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது உத்தமம்.

துலாம்

இன்று உங்கள் ராசிக்கு பகல் 01.36 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பார்த்த பணவரவுகள் தாமதமாக கிடைக்கும். ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உடன் பிறந்தவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது, எதிலும் பொறுமையோடு இருப்பது நல்லது.

விருச்சிகம்

இன்று உங்கள் ராசிக்கு பகல் 01.36 முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் மனஉளைச்சல் அதிகமாகும். எடுத்த காரியம் பாதியில் தடைப்படும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்டாமல் பொறுமையோடு செயல்படுவது உத்தமம். முடிந்த வரை இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது.

தனுசு

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். வெளியிலிருந்து வர வேண்டிய பணவரவுகள் தடையின்றி வந்து சேரும். சுபகாரியம் கைகூடும்.

மகரம்

இன்று உத்தியோக ரீதியான பயணங்களால் மனஉளைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் தடைகள் ஏற்படலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். பெரியவர்களின் ஆலோசனைகளால் தொழில் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

கும்பம்

இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் இருக்கும். தேவையில்லாத பிரச்சினைகள் உங்களைத் தேடி வரும். எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்பட்டால் சாதகமான பலன்களை அடையலாம். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம்.

மீனம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள்.

No comments: