Thursday, May 22, 2025

Today rasi palan - 23.05.2025

 


Today rasi palan -
23.05.2025

இன்றைய ராசிப்பலன் -  23.05.2025

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

23-05-2025, வைகாசி 09, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி இரவு 10.30 வரை பின்பு தேய்பிறை துவாதசி. உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 04.02 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00 

 

சுக்கி சனி சந்தி

புதன்

சூரிய

குரு

ராகு

 

23.05.2025

செவ்

 

கேது

 

 

 

 

 

இன்றைய ராசிப்பலன் -  23.05.2025

மேஷம்

இன்று உங்களுக்கு பணவரவில் தடை தாமதங்கள் ஏற்படலாம். உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். செய்யும் செயல்களில் கவனம் தேவை. திருமண சுபமுயற்சிகள் அனுகூலமான பலன்களை தரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். வியாபார ரீதியான புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். பொருளாதார பிரச்சினைகள் விலகும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு குடும்பத்தில் உள்ளவர்களால் மனமகிழ்ச்சி கூடும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். தொழில் சம்பந்தமாக பெரிய மனிதர்களை சந்திக்க நேரிடும். நவீனகரமான பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.

கடகம்

இன்று பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அலுவலகத்தில் தேவையற்ற பிரச்சினையால் மன உளைச்சல் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் பெரிய கெடுதி இருக்காது. நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.

சிம்மம்

இன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். எடுத்த காரியம் பாதியில் தடைபட்டு மன அமைதி குறையும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.

கன்னி

இன்று உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

துலாம்

இன்று பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். வேலை சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். ஊழியர்களின் ஒத்துழைப்பால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் இருந்த தடைகள் நீங்கும். தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.

தனுசு

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். சிக்கனமாக நடந்து கொள்வதன் மூலம் பணப்பிரச்சினை விலகும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

மகரம்

இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை கூடும். பணம் கொடுக்கல் வாங்கல் ஓரளவு சிறப்பாக இருக்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நற்பலனை தரும்.

கும்பம்

இன்று தொழில் வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் நெருக்கடிகளால் வேலைபளு சற்று அதிகரிக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிட்டும். எதிர்பார்த்த உதவி தடையின்றி கிடைக்கும்.

மீனம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் மந்த நிலை நீங்கும். ஆரோக்கிய பாதிப்புகள் விலகி சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும்.

 

No comments: