Sunday, April 25, 2021

வார ராசிப்பலன்- ஏப்ரல் 25 முதல் மே 1 வரை 2021

 

வார ராசிப்பலன்- ஏப்ரல் 25 முதல் மே 1 வரை 2021

சித்திரை 12 முதல்  18 வரை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

 

சுக்கி சூரிய புதன்

ராகு 

செவ்

குரு

திருக்கணித கிரக நிலை

 

 

சனி 

 

 

கேது  

 

சந்திர

 

 

 

 

 

 

 

 

 

கிரக மாற்றம்

01-05-2021 ரிஷபத்தில் புதன் காலை 05.41 மணிக்கு

 

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

கன்னி          24-04-2021 பகல் 11.55 மணி முதல் 26-04-2021 பகல் 12.31 மணி வரை.

துலாம்         26-04-2021 பகல் 12.31 மணி முதல் 28-04-2021 பகல் 11.55 மணி வரை.

விருச்சிகம் 28-04-2021 பகல் 11.55 மணி முதல் 30-04-2021 பகல் 12.07 மணி வரை.

தனுசு            30-04-2021 பகல் 12.07 மணி முதல் 02-05-2021 பகல் 02.45 மணி வரை.

 

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

25.04.2021 சித்திரை 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திரயோதசி திதி அஸ்தம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் ரிஷப இலக்கினம். வளர்பிறை

 

29.04.2021 சித்திரை 16 ஆம் தேதி வியாழக்கிழமை திருதியை திதி அனுஷ நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 08.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். தேய்பிறை

 

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கூர்ந்து கவன¤க்கும் ஆற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் 3-ல் சஞ்சரிப்பதும் குரு 11-ல் சஞ்சரிப்பதும் எடுக்கும் முயற்சியில் உங்களுக்கு அனுகூல பலன்களை தரும் அமைப்பாகும். எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். புதன், சுக்கிரன் ஜென்ம ராசியில் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று குறையும். சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை மட்டும் சற்று குறைத்துக் கொண்டால் ஏற்றமிகுந்த பலன்களை அடைய முடியும். கணவன்-- மனைவி இடையே பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கொடுக்கல்-- வாங்கல் சிறப்பாக நடைபெறும். கொடுத்த கடன்களும் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருந்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்க்கும் முன்னேற்றங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கான ஊதியம் பெருகும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் கிடைக்கும். சிவ ஸ்தலங்களுக்கு செல்வதும் அம்மன் வழிபாடு செய்வதும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -                       25, 26, 27.

சந்திராஷ்டமம் - 28-04-2021 பகல் 11.55 மணி முதல் 30-04-2021 பகல் 12.07 மணி வரை.

 

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்பு தன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 10-ல் குரு, 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் இருப்பதும், பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும், நல்லது. பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் நெருங்கியவர்களின் உதவியால் உங்களது தேவைகள் பூர்த்தியாகும். பண விஷயத்தில் சிக்கனத்துடன் செயல்படுவதும், ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதும் நல்லது. கணவன்-- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது, விட்டு கொடுத்து செல்வது உத்தமம். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் சில தடங்கல்களுக்குப் பின் அனுகூலப் பலன் ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். பணம் கொடுக்கல்-- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடை தாமதங்களுக்குப் பின் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சிறப்பான முன்னேற்றங்களைப் பெற முடியும். சித்ரா பௌர்ணமி நாளில் விரதமிருந்து சிவ வழிபாட்டை மேற்கொண்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் -                       26, 27, 28, 29.

சந்திராஷ்டமம் - 30-04-2021 பகல் 12.07 மணி முதல் 02-05-2021 பகல் 02.45 மணி வரை.

 

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும், கலை, இசைத் துறைகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன் சுக்கிரன் சூரியன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் வலுவாக சஞ்சரிப்பதால் உங்களுக்கு எல்லா வகையிலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் கணவன்-- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள். பணம் கொடுக்கல்-- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று எதிர்பார்த்த லாபங்கள் பெருகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும். முருக வழிபாடு செய்வதும், சனிபகவான் வழிபாடு செய்வதும் நன்மையை அளிக்கும்.

வெற்றி தரும் நாட்கள் -                       28, 29, 30, 1.

 

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

பேச்சில் கடுமை இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், சுக்கிரன், புதன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணவரவுகள் ஒரளவு சிறப்பாக அமைந்து உங்களது கடந்த கால கடன் பிரச்சினைகள் குறையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்-- மனைவி இடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. சனி 7-ல் இருப்பதால் நெருங்கியவர்களை உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பூர்வீக சொத்துக்களால் ஒரு சில ஆதாயங்கள் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். எதிர்பார்த்து காத்திருந்த வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். வெளியூர், வெளி நாடுகளில் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் தேடி வரும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். குரு தட்சிணாமூர்த்திக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -                       25, 26, 30, 1.

 

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவராகவும், கொடுத்த வாக்குறுதியை எப்பாடுபட்டாவது காப்பாற்றும் ஆற்றல் உடையவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன், புதன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாராமாக இவ்வாரம் இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகளைப் பெறுவதொடு, எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேறக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் விலகி மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்-- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். கொடுக்கல்-- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். பணி புரிபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற உயர்வுகளும், திறமைகேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு உடனிருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவதால் லாபகரமான பலன்களை கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மகாலட்சுமி வழிபாடும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகர் வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -                       26, 27, 28.

 

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

அன்பு, பண்பு, மரியாதை, தெய்வ பக்தி உடையவராகவும், சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பி விடுபவராகவும் விளங்கும் கன்னி ராசி நேயர்களே, நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய வாரமாகும். உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். முடிந்த வரை உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பதும், ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதும், தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதும் நல்லது. கணவன்-- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும்.  பொருளாதார நிலை ஏற்ற, இறக்கமாக இருந்தாலும் உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். குரு 6--ல் சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது சிறப்பு. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். சிந்தித்து செயல்பட்டால் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்-- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். சிவ வழிபாடும் விஷ்ணு வழிபாடும் செய்தால் நன்மைகள் பல உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -                       25, 26, 28, 29.

 

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கு தானமளிக்க கூடிய அளவிற்கு பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன், புதன் சேர்க்கைப் பெற்று 7-ல் சஞ்சரிப்பதாலும் குருபார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் சகல விதத்திலும் அனுகூலங்கள் ஏற்படும். தொழில் வியாபார ரீதியாக லாபகரமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். சூரியன் 7-ல், ராகு 8-ல் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது, ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருந்தால் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். கணவன்-- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல்-- வாங்கலில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உடன் பணிபுரிபவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். சித்ரா பௌர்ணமி நாளில் சிவ வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -                       -26, 27, 28, 30, 1.

 

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

எவ்வளவு தான் கற்று அறிந்திருந்தாலும் எந்தவித தயக்கமும் இன்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சனி, 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் துணிவுடன் செயல்பட முடியும். எடுக்கும் எந்தவொரு காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் ராசிக்கு 7-ல் ராகு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சற்று கவனத்துடன் இருப்பது, தேவையற்ற பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் கணவன்-- மனைவி இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்த்து பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதும், வண்டி வாகனங்களில் செல்கின்ற போது கவனமாக இருப்பதும் நல்லது. பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும் என்றாலும் வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்-- வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைத்து விடும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். சித்ரா பௌர்ணமி நாளில் துர்கையம்மனுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபட்டால் குடும்பத்தில் மங்களங்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -                       25, 26, 29, 30.

 

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன் புதன் 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் அதனை எதிர்கொள்ளக்கூடிய பலம் ஏற்படும். உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பணம் பல வழிகளில் தேடி வரும். உங்கள் பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் சற்று குறையும். சூரியன் 5-ல், செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. கணவன்-- மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிறைந்திருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடை தாமத்திற்கு பின் கிட்டும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். சனிப்ரீதியாக சனிக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் கஷ்டங்கள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் -                       25, 26, 27, 28, 1.

 

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கள்ளம் கபடமற்று வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்களுக்கு ஏழரைச் சனி நடைப்பெற்றாலும் 2-ல் குரு 4-ல் சுக்கிரன் புதன் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் கஷ்டங்கள் குறையும். எடுக்கும் முயற்சியில் வெற்றி, தொழில் பொருளாதார ரீதியாக மேன்மை ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும். ஆன்மீக, தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்-- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி சிறப்பான லாபத்தினை பெற முடியும். சனி பகவானை வழிபடுவதும், சனிக்குரிய பரிகாரங்கள் செய்வதும், சனிக்கவசங்கள் படிப்பதும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -                       26, 27, 28, 29.

 

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும், சிறு வயதிலிருந்தே சிறந்த தெய்வ பக்தியும், நல்ல தர்ம சிந்தனையும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் குரு, 4-ல் ராகு சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்-- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் சூரியன் 3-ல் இருப்பதால் எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைத்து எதையும் சமாளிப்பீர்கள். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் ஏற்படும். அசையும், அசையா சொத்துக்களால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்-- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனம் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். துர்கையம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் துயரங்கள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் -                       28, 29, 30, 1.

சந்திராஷ்டமம் - 24-04-2021 பகல் 11.55 மணி முதல் 26-04-2021 பகல் 12.31 மணி வரை.

 

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி.

தன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி ஏமாற்றங்களை சந்திக்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், புதன், 3-ல் ராகு, 11-ல் சனி சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் குறைந்து அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்து இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் நீண்ட நாட்களாக இருந்த தடைகள் விலகி எளிதில் கைகூடும். கணவன்-- மனைவி இடையே அனுசரித்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படலாம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மை அடையும். கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நட்புகரம் நீட்டுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் யாவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் அமைப்பும் உண்டாகும். பிரதோஷ நாளில் விரதமிருந்து சிவ வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -                       25, 30, 1.

சந்திராஷ்டமம் - 26-04-2021 பகல் 12.31 மணி முதல் 28-04-2021 பகல் 11.55 மணி வரை.

No comments: