Friday, April 23, 2021

கடகம் - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022

 

கடகம்  - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022

(06-04-2021 முதல் 13-04-2022)

ஜோதிட மாமணி

முனைவர் முருகுபாலமுருகன்

 

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

உயர்ந்த நோக்கங்களுடன் பிறர் மெச்சும்படியான காரியங்களைச் செய்யக் கூடிய ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி சந்திரனுக்கு நட்பு கிரகமான பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் வரும் 06-04-2021 முதல் 13-04-2022 வரை உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் உங்களது பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சர்ப்ப கிரகமான ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் யோகம் உண்டு என்றாலும் எதிலும் சிக்கனத்துடன் இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.

ஒரு ராசியில் அதிக நாட்கள் தங்கும் கிரகமான சனி பகவான் தற்போது உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பது சற்று சாதகமான அமைப்பு என்பதால் உங்களது ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்றாலும் 5-ல் கேது சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.

குரு உங்கள் ராசிக்கு 2, 4, 12-ஆம் வீடுகளை பார்வை செய்வதால் நெருங்கியவர்களால் ஒரு சில அனுகூலம், வீடு, வாகனம் போன்றவற்றை புதுப்பிக்கக் கூடிய சூழ்நிலை உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு சிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் சுமாராக இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையொழுத்திடும் போது கவனம் தேவை. கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல்பட்டால் தொழில் வியாபாரத்தில் எதையும் சமாளித்து வலமான பலனை அடைய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நம்பிவயவர்களே நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு சற்று அதிகப்படியாக இருக்கும். பெறுப்புகள் அதிகரிக்கும், சில நேரங்களில் மற்றவர்கள் வேலையையும் நீங்கள் எடுத்து செய்ய நேரிடும். தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் சூழ்நிலை அதன் மூலம் தேவையற்ற அலைச்சல் ஏற்படும்.

உங்கள் ராசிக்கு குரு 8-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் வரும் 21-06-2021 முதல் 14-09-2021 வரை குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும், வரும் 15-09-2021 முதல் 19-11-2021 வரை குரு உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதாலும் இக்காலத்தில் உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருந்து எல்லா வகையிலும் அனுகூலங்கள் ஏற்படும்.

 

தேகஆரோக்கியம்

உங்களது உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. உடல்நிலையில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரணக் கோளாறுகள் உண்டாகும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் சற்றே குறையும். உணவு விஷயத்தில் கவனம் தேவை.

குடும்பம் பொருளாதாரம்

குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக அமையும். பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். முடிந்த வரை ஆடம்பரச் செலவுகள் செய்வது, மற்றவர்களிடம் கடன் வாங்குவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகள் உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினாலும் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது சிறப்பு.

கொடுக்கல்- வாங்கல்

பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும் ராகு 11-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பண வரவுகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். பெரிய தொகைகளை பிறருக்கு கடனாகக் கொடுக்கும் போது சற்று சிந்தித்துச் செயல்படவும். அதிக தொகைகளை முதலீடு செய்யும் போது உங்கள் பெயரில் செய்யாமல் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்வது நல்லது.

தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரத்தில் சற்றே மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் மனமறிந்து விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய இருக்கும் காரியங்களில் கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்களுக்கு

பணிபுரிபவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல்கள் உண்டாகும். நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலை, வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வீண்பழிகளைச் சுமக்க வேண்டிய காலம் என்பதால் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் உங்கள் பணியில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுக்க வேண்டிய காலமிது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவினாலும் புத்திரர்களால் வீண் மன சஞ்சலங்களை சந்திக்க நேரிடும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி விடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணிபுரிபவர்களுக்கு அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும்.

அரசியல்வாதிகளுக்கு

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றவதில் நிறைய சிக்கல்கள் உண்டாகும். கட்சிப் பணிகளால் வீண் விரயங்களும் அதிகரிக்கும். அடிக்கடி பயணம் மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலைகளால் உடல் நிலை பாதிப்படையும். எதிர்பார்த்துக் காத்திருந்த பதவிகள் சிறு தடைக்கு பின்பு கிடைக்கும்.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் சுமாராக இருப்பதால் உழைப்பிற்கேற்ற பலனை பெறமுடியாமல் போகும். பூமி, மனை போன்றவற்றால் வீண் விரயங்களும் அதிகரிக்கும். வாய்க்கால், வரப்பு பிரச்சினைகளால் பங்காளிகளிடம் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. பயிர்களை காப்பீடு செய்வது உத்தமம்.

படிப்பு

கல்வியில் மந்த நிலையும், உடல் நிலையில் சோர்வும், ஞாபகமறதியும் உண்டாகும். தேவையற்ற நட்புகளால் படிப்பில் நாட்டம் குறையும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் உங்களுக்கு எப்பொழுதும் குறையாமல் இருக்கும் என்ற தைரியத்துடன் படிப்பில் நாட்டம் கொள்வது நல்லது. கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை மனதில் கொள்ளவும்.

 

குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 06-04-2021 முதல் 21-05-2021 வரை

குரு பகவான் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் செவ்வாய் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. சனி 7-ல் சஞ்சரிப்பதால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு ஏற்படும் என்றாலும் ராகு 11-ல் இருப்பதால் எதையும் சமாளித்து விடக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமைந்து குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்யத் துணிவார்கள் என்பதால் முடிந்த வரை பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்வற்றைத் தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கவனமாக செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். முடிந்த வரை கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தாலும் வேலைபளு சற்று கூடுதலாக இருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ள முடியும்.

 

குரு பகவான் சதய நட்சத்திரத்தில் 22-05-2021 முதல் 20-06-2021 வரை

குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சதய நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும் என்றாலும் ராகு 11-ல் இருப்பதால் எதையும் எதிர் கொள்ளும் பலம் கிடைக்கும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சனி 7-ல் இருப்பதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுப்பாடு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைக் குறைக்க முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் நீங்கள் கவனமாக செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் நெருக்கடிகளை சமாளித்து ஏற்றங்களை அடையலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மரியாதையை பெற்று விட முடியும். மேலதிகாரிகளிடம் பேச்சில் கவனமாக இருப்பது நல்லது.

 

குரு பகவான் வக்ர கதியில் 21-06-2021 முதல் 17-10-2021 வரை

குரு பகவான் வக்ர கதியில் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். ராகு 11-ல் சஞ்சரிப்பதால் உடல் நலம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். கடன்களும் குறையும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் அனுகூலப்பலன் கிடைக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் ரீதியாக இருந்த தேக்கங்கள் விலகி லாபகரமான பலன் கிடைக்கும். சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் சாதகமான பலன்கள் உண்டாகி அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்கள் கௌரவமான பதவி உயர்வுகளைப் பெறுவதுடன் பணியில் நிம்மதியான நிலையையும் அடைவார்கள். சக ஊழியர்களால் சிறு இடையூறுகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள்.

 

குரு பகவான் மகர ராசியில் 18-10-2021 முதல் 19-11-2021 வரை

8-ல் சஞ்சரிக்கும் குரு பின்னோகி உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் மகர ராசியில் சனி சேர்க்கை பெற்று  சஞ்சாரம் செய்வதால் பொருளாதார ரீதியாக சாதகமான பலன்கள் கிடைக்கும். தடைப்பட்ட திருமணம் போன்ற சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். சர்ப்ப கிரகமான ராகு லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக லாபங்கள் பெருகும். கூட்டாளிகளின் ஆதரவும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். உங்கள் திறமைகளை வெளிகாட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமும் கிட்டும். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள்.

 

குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 20-11-2021 முதல் 01-01-2022 வரை

குரு பகவான் செவ்வாய் நட்சத்திரத்தில் உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் நன்மை தீமை கலந்த பலன்களை சந்திப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகளுக்குப்பின் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மேடை பேச்சுகளில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. ராகு 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும். சனி 7-ல் சஞ்சரிப்பதால் உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் நற்பலன் உண்டாகும். வீண் பிரச்சினைகளில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. உத்திகோகஸ்தர்கள்  கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பார்த்துக் கொள்வது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் எதிர்பார்க்கும் லாபங்களைப் பெற முடியும்.

 

குரு பகவான் சதய நட்சத்திரத்தில் 02-01-2022 முதல் 01-03-2022 வரை

குரு பகவான் சதய நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு அட்டம ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டவாதுடன் குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகளை சந்திப்பீர்கள். சனி 7-ல் சஞ்சரிப்பதால் உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகளால் மனநிம்மதிக் குறைவு ஏற்படக் கூடும் என்பதால், வீண் வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். சர்ப்ப கிரகமான ராகு 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்து எல்லாத் தேவைகளும் பூர்த்தியாகி விடும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தநிலை ஏற்படக்கூடும் என்றாலும் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகளிடம் சற்று கவனமுடன் இருப்பது நற்பலனை உண்டாக்கும். உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே வேலைப் பளுவை குறைத்துக் கொள்ள முடியும். அதிக அலைச்சலால் உடல் அசதி ஏற்படும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

 

குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 02-03-2022 முதல் 13-04-2022 வரை

குரு பகவான் தனது நட்சத்திரத்தில் அட்டம ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும் ராகு 11-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று எதையும் சமாளிப்பீர்கள். குடும்பத்தின் ஒற்றுமை சிறப்பாக இருக்கும் என்றாலும் சனி 7-ல் சஞ்சரிப்பதால் உறவினர்களிடம் அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் சிறிது நெருக்கடிகள் இருந்தாலும் எதிர்பார்க்கும் லாபங்களை அடைவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் அபிவிருத்தியை பெருக்க முடியும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் கடுமையான உழைப்பினை மேற்கொண்டால் எதிர்பார்த்த பதவி உயர்வுகளைப் பெற முடியும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களை அடையலாம். பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

 

பரிகாரம்

கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி கொண்டை கடலை மாலை சாற்றுவது, வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது, இல்லத்தில் மற்றும் தொழில் செய்யும் இடங்களில் குரு எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்வது, ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வது உத்தமம். மஞ்சள் நிற ஆடைகள் அணிவது நல்லது.

கேது 5-ல் சஞ்சரிப்பதால் கேதுவுக்கு பரிகாரமாக தினமும் விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9                   நிறம் - வெள்ளை, சிவப்பு                                கிழமை - திங்கள், வியாழன்

கல் -  முத்து                                 திசை - வடகிழக்கு                                தெய்வம் - வெங்கடாசலபதி

No comments: