வார ராசிப்பலன் - ஏப்ரல் 11 முதல் 17 வரை 2021
பங்குனி 29 முதல் சித்திரை 4 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர்
கோயில் தெரு,
தபால் பெட்டி எண் -
2255. வடபழனி,
சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
சூரிய
புதன் சந்திர |
சுக்கி
|
ராகு
செவ் |
|
குரு
|
திருக்கணித
கிரக நிலை |
|
|
சனி
|
|
||
|
கேது
|
|
|
கிரக மாற்றம்
14-04-2021 மிதுனத்தில்
செவ்வாய் அதிகாலை 01.14 மணிக்கு
14-04-2021 மேஷத்தில்
சூரியன் அதிகாலை 02.23 மணிக்கு
16-04-2021 மேஷத்தில் புதன்
இரவு 08.58 மணிக்கு
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மீனம் 10-04-2021
அதிகாலை 00.16 மணி முதல் 12-04-2021 பகல் 11.29 மணி வரை.
மேஷம் 12-04-2021 பகல்
11.29 மணி முதல் 15-04-2021 அதிகாலை 00.09 மணி வரை.
ரிஷபம் 15-04-2021 அதிகாலை
00.09 மணி முதல் 17-04-2021 பகல் 01.09 மணி வரை.
மிதுனம் 17-04-2021
பகல் 01.09 மணி முதல் 20-04-2021 அதிகாலை 00.28 மணி வரை.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள் இல்லை
மேஷம் அசுவனி, பரணி,
கிருத்திகை 1-ஆம் பாதம்.
நல்ல வாக்கு சாதுர்யமும்,
சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில்
சுக்கிரன் லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.
வரும் 14-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் செயல்களுக்கு
வெற்றி கிடைக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன்
உண்டாகும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப்பலனை
பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட
பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவிடையே சிறு சிறு கருத்து
வேறுபாடுகள் இருந்தாலும் வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமை சிறப்பாக
இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சிறப்பான பணவரவால் தேவைகள்
அனைத்தும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி
லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை
இருந்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது. கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக
நடந்து கொள்வார்கள். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள்
எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சிவ வழிபாடும், முருக
வழிபாடும் செய்தால் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 12, 13, 14, 17.
ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம்
பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
சாமர்த்தியமாகவும்,
சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி
நேயர்களே, உங்கள் ராசிக்கு 9-ல் சனி, 11-ல் புதன் சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன்
13-ஆம் தேதி வரை 11-ல் சஞ்சரிக்க இருப்பதும் அனுகூலமான பலன்களை தரும் அமைப்பாகும்.
உங்களுக்குள்ள பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து சாதகமான பலன்கள் உண்டாகும்.
நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்தலும்
சற்று கவனம் செலுத்தினால் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவி
அனுசரித்து நடந்து கொள்வதாலும், உறவினர்களிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை
தவிர்ப்பதாலும் குடும்பத்தில் ஒற்றுமையும் நிம்மதியும் நிலவும். செவ்வாய், ராகு
சாதகமற்று இருப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் சிறப்பாக
அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுபகாரிய முயற்சிகளை சற்று தள்ளி
வைப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். தொழில்
வியாபாரத்தில் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம்
ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு
கூடுதலாக இருக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.
தட்சிணாமூர்த்தி வழிபாடும் முருக வழிபாடும் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 11, 12,
15, 16.
மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
நிதானமான அறிவாற்றல்
இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி
நேயர்களே, தனகாரகன் குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதும் உங்கள்
ராசிக்கு 10,11-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதும் மிகவும் சிறப்பான அமைப்பு
என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய உன்னதமான வாரமாக இவ்வாரம் இருக்கும்.
குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் எல்லாம் விலகி மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
பனவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும்
படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மருத்துவ செலவை
தவிர்க்க முடியும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை
அதிகரிக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும்.
உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள்
விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். புதிய
வாய்ப்புகள் தேடி வருவதால் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகத்தில்
இருப்பவர்களுக்கும் பணியில் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம்
ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். முருக வழிபாடும்,
சனிபகவான் வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 11, 12,
13, 14.
கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம்,
பூசம், ஆயில்யம்.
சுறுசுறுப்பாக செயல்பட்டு
எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள்
ராசிக்கு 9, 10-ல் சூரியன், 10-ல் சுக்கிரன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும்
எதிர்கொண்டு அனுகூலப் பலன்களை அடைவீர்கள். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும்
முயற்சிகளில் வெற்றி மேல் வெற்றி கிட்டும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும்
பயணங்களால் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு
வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரிய முயற்சிகளில்
தாமதப் பலன் உண்டாகும். தாராள தனவரவுகளால் தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் குரு
8-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. அசையும் அசையா
சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல்
போன்றவற்றில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு
பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். பேச்சில்
சற்று நிதானத்தை கடைபிடிப்பது உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது.
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். வெளியூர்
வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும்.
தட்சிணாமூர்த்தியையும், விநாயகரையும் வழிபடுவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 12, 13, 14, 15, 16,
17.
சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
சூது வாது அறியாமல்
அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு
6-ல் சனி, 7-ல் குரு, 10, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி,
எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். தாராள தனவரவுகள் உண்டாகும். தேவைகள்
அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று நிவர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில்
உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில்
அனுகூலப்பலனை அடைய முடியும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக
இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும் என்றாலும் விட்டு
கொடுத்து நடந்து கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில்
ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும்.
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள்
மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தி பெருகும். பயணங்களால்
அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட
முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும்.
உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். சிவ வழிபாடும் விஷ்ணு வழிபாடும்
சிறப்பான பலன்களை அளிக்கும்.
வெற்றி தரும் நாட்கள் - 15, 16, 17.
சந்திராஷ்டமம் - 10-04-2021 அதிகாலை 00.16 மணி முதல் 12-04-2021
பகல் 11.29 மணி வரை.
கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம்
பாதங்கள்.
சூழ்நிலைக்கு தக்கவாறு
தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள்
ராசிக்கு 6-ல் குரு, 7, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எந்த செயல்
செய்வதென்றாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. நெருங்கியவர்களே உங்களுக்கு
தேவையற்ற நெருக்கடிகளை உண்டாக்குவார்கள். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது,
குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது உத்தமம். உடல்
ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும் என்பதால் சற்று கவனமுடன்
இருப்பது நல்லது. பணவரவுகள் சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து
உங்களது பிரச்சினைகள் விலகும். னுந்த விஷயத்திலும் சிக்கனத்துடன் இருப்பது, ஆடம்பர
செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக
எதிர்ப்புகள் அதிகரிக்க கூடும் என்பதால் எதிலும் சற்று பொறுமையுடன் இருப்பது,
கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம்
அலைச்சல்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள்
கிடைக்க சற்று தாமத நிலை ஏற்படும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின்
விருப்பம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. தட்சிணாமூர்த்தி
வழிபாட்டையும் மகாலட்சுமி வழிபாட்டையும் மேற்கொண்டால் சுபிட்சம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 11, 17.
சந்திராஷ்டமம் - 12-04-2021 பகல் 11.29 மணி முதல் 15-04-2021
அதிகாலை 00.09 மணி வரை.
துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
நேர்மையே குறிக்கோளாக கொண்ட
துலா ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதும் உங்கள்
ராசிக்கு 5-ல் குரு, 13-ஆம் தேதி வரை 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு
என்பதால் உங்களுக்குள்ள கஷ்டங்கள் எல்லாம் குறைந்து வளமான பலன்களை அடைவீர்கள்.
எந்தவித பிரச்சனைகளையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில்
உள்ளவர்களை சற்று அனுசரித்து சென்றால் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும்.
சிறப்பான பணவரவால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும்.
புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம்
செலுத்துவது நல்லது. பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிறு சிறு
அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேரிடும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்த்து
விடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள்
மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். முடிந்த வரை உயர் அதிகாரிகளிடம் நிதானமாக நடந்து
கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம்
அடைவீர்கள். கொடுத்த கடன்க-ளும் வசூலாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு
எதிர்பார்த்த லாபம் கிட்டும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். முருக கடவுளையும்
துர்கையம்மனையும் வணங்கி வழிபடுவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 11, 12,
13, 14.
சந்திராஷ்டமம் - 15-04-2021 அதிகாலை 00.09 மணி முதல் 17-04-2021
பகல் 01.09 மணி வரை.
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
நியாய அநியாயங்களை பயமின்றி
தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல்
சனி, 5-ல் புதன், வரும் 14-ஆம் தேதி முதல் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதால்
உங்களுக்கு உள்ள நெருக்கடிகள் எல்லாம் விலகி ஏற்றங்களை பெறுவீர்கள். சிறப்பான பண
வரவால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான
முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் அனுகூலப் பலன் உண்டாகும். குடும்பத்தில் சிறு
சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடமும், உற்றார்
உறவினர்களிடமும் பேசும் போது நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தொழில் ரீதியாக
எடுக்கும் முயற்சிகளில் லாபகரமான பலன்களை அடையும் யோகம் உண்டு. போட்டி பொறாமைகள்
அதிகரித்தாலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்பட்டால் எதையும் சமாளிக்க
முடியும். கூட்டாளிகளும் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் வெளிநாட்டு
தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில்
எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை அடைய கூடிய சந்தர்ப்பங்கள் அமையும்.
முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில்
சற்று கவனமுடன் இருந்தால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். சிவ வழிபாடும்,
தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 12, 13,
14, 15, 16.
சந்திராஷ்டமம் - 17-04-2021 பகல் 01.09 மணி முதல் 20-04-2021
அதிகாலை 00.28 மணி வரை.
தனுசு மூலம், பூராடம்,
உத்திராடம் 1-ஆம் பாதம்.
பல சாதனைகளைப் படைக்கும்
வல்லமை கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் குரு, 4, 5-ல் சூரியன்
சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சனி 2-ல் இருப்பதால்
பேச்சில் நிதானமாக இருப்பது, ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.
ராகு 6-ல் இருப்பதால் பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தும்
பூர்த்தியாகும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலப்பலன் உண்டாகும்.
குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படும் என்பதால் கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை
தவிர்த்து, விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று
அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பூர்வீக சொத்துக்களால் ஒருசில அனுகூலங்கள்
உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனம்
தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருந்தாலும் தங்கள் பணிகளை சிறப்பாக
செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். புதிய வேலை
தேடுபவர்களுக்கும் சிறப்பான வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த
நிலை ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல்கள்
அதிகரிக்கும் என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியையும்
விநாயகரையும் வழிபட்டால் நன்மைகள் பல உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 15, 16,
17.
மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம்
பாதங்கள்.
எத்தனை துன்பங்கள்
ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர்கொண்டு வாழக்கூடிய ஆற்றல்
கொண்ட மகர ராசி நேயர்களே, உங்களுக்கு ஏழரைச் சனி நடைப்பெற்றாலும் குரு 2-ல்
சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக சாதகமான பலன்கள் ஏற்படும். வரும் 14-ஆம் தேதி
முதல் செவ்வாய் 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்படும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம்
அதிகரிக்கும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து
கொள்வது நல்லது. நீண்ட நாட்களாக தடைபட்ட திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான
முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் நற்பலனை அடைய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கல்
போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். அசையும் அசையா
சொத்துக்கள் வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவு
முன்னேற்ற நிலை ஏற்படும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு
மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால்
உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். சனிபகவானை வழிபாடு செய்வதும்,
சனிப்ரீதியாக ஆஞ்சநேயர், விநாயகர் வழிபாட்டை மேற்கொள்வதும் சிறப்பான பலனை அளிக்கும்.
வெற்றி தரும் நாட்கள் - 11, 12, 17.
கும்பம் அவிட்டம் 3,4-ஆம்
பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
அன்பும் சாந்தமும் அமைதியான
தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியில் குரு, 2-ல் சூரியன், 4-ல்
செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள், வரவுக்கு மீறிய செலவுகள், உடல்
அசதி, டென்ஷன் போன்றவை உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, உணவு
விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே
சிறு சிறு பிரச்சனைகள், வாக்குவாதங்கள் போன்றவை ஏற்படும். உற்றார் உறவினர்களும்
தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் விட்டு கொடுத்து செல்வது, பிறர்
விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தாமதத்திற்கு
பின் அனுகூலப்பலன் கிட்டும். பணவரவு சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும்
நெருங்கியவர்களின் ஆதரவால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். ஆடம்பர
செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். கொடுக்கல்-
வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் ஓரளவு
முன்னேற்றமான நிலை இருக்கும். அதிக முதலீடு கொண்ட செயல்களை சற்று தள்ளி வைப்பது
நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமதம்
உண்டாகும். பணியில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். சிவ வழிபாடு மற்றும்
முருக வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 12, 13,
14.
மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம்,
உத்திரட்டாதி, ரேவதி .
பொறுமையும்
தன்னம்பிக்கையும் கொண்டு திறமை சாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள்
ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் செவ்வாய், ராகு, 11-ல் சனி சஞ்சரிப்பதால் சகல
விதத்திலும் மேன்மையான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி மேல்
வெற்றி அடையும் யோகம் உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள்
அனைத்தும் நிறைவேறும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல்
ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை செய்து
முடிப்பதில் எந்த தடையும் இருக்காது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது
உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். கணவன்-
மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும்
விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படுவதை
குறைக்கலாம். கொடுக்கல்-- வாங்கல் விஷயத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில்
வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பயன்படுத்தி கொள்வதன்
மூலம் லாபகரமான பலன்களை அடையலாம். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள்
பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம்
செலுத்துவது நல்லது. சிவ வழிபாடு மகாலட்சுமி வழிபாடு செய்தால் மேன்மைகள்
உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 11, 12,
15, 16, 17.
No comments:
Post a Comment