Friday, October 21, 2016

வார ராசிப்பலன் அக்டோபர் 23 முதல் 29 வரை 2016

வார ராசிப்பலன்  அக்டோபர்  23  முதல் 29   வரை   2016


 நவம்பா் 6 முதல்   இந்த வார ஜோதிடம்”    ஜோதிட வார இதழ் 


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
ஆசிாியா்     ”இந்த வார ஜோதிடம்” ஜோதிட வார இதழ்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனிசென்னை -- 600 026
தமிழ்நாடுஇந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com
E-mail-   murugu.astro@gmail.com 





கேது 
கிரக   மாற்றம் இல்லை





ராகு
செவ்  
சனி  சுக்கி
சூரிய புதன் 
குரு 


இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள் 
கடகம்          22.10.2016 மதியம் 02.31 மணி முதல் 24.10.2016 இரவு 09.32 மணி வரை.
சிம்மம்         24.10.2016 இரவு 09.32 மணி முதல் 27.10.2016 காலை 07.38  மணி வரை.
கன்னி           27.10.2016 காலை 07.38 மணி முதல் 29.10.2016 இரவு 07.35 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
27.11.2016 கார்த்திகை 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திரயோதசிதிதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் தனுசு இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
தன்னுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 7ல் சூரியன் 8ல் சனி, சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் ஏற்ற இறக்கமானப் பலன்களையேப் பெற முடியும் என்றாலும் எதையும் எதிர் கொள்ளும் பலமும் வளமும் கூடும் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்பதால் எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள்       27,28,29.            

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் ரிஷப ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 6ல் சூரியன், 5ல் குரு, 7ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் தாராள தன வரவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தினமும் முருகப்பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் 23,24.         

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
சற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்த வித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 3ல் ராகு, 6ல் சனி சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பு என்தால் அனுகூலமான பலன்களைப் பெற முடியும். தாராள தனவரவுகள் உண்டாவதால் பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தட்சிணாமுர்த்தியை வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் 25,26.         

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
இரக்க குணமும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவளாகவும் இருந்தாலும் எதையும் முன்கூட்டியே  அறிந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 6ல் செவ்வாய் சாதகமான அமைப்பு என்றாலும், 3ல் குரு, 4ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. கணவன் மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாக  இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது மூலம் வீண் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். துர்கை அம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் 23,24,27,28,29.                       

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
பிறர் பழிச் சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 2ல் குரு, 3ல் சூரியன், 4ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வது அனுகூலங்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். பண வரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று நிவர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை இருப்பதால் நல்ல லாபத்தினை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகளை கிடைக்கப் பெறுவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல் பட முடியும். சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் 25,26.

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
எவ்வளவு அவசரமான  காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்தே செயல்படும் கன்னி ராசி நேயர்களே மாதகோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும் ஜென்ம ராசிக்கு 2ல் சூரியன், 4ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் வீண் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். எதிலும் சிந்தித்து செயல் பட்டால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு  பிரச்சனைகள் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தாமத நிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் ஏற்படும். வீடு வாகனம் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடனில்லா கண்ணிய வாழ்க்கை அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு சற்றே அலைச்சல்கள் ஏற்படும். பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் 23,24,27,28,29.

துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
தராசு எவ்வளவு சிறியதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை  போல மற்றவர்களையும் எடைபோட்டு வைத்திருக்கும் துலா ராசி நேயர்களே ஜென்ம ராசியில் புதன், 3ல் செவ்வாய்  சஞ்சாரம் செய்வதால் ஏற்ற இறக்கமானப் பலன்களையேப் பெற முடியும் என்றாலும் எதையும் எதிர் கொள்ளும் பலமும் வளமும் கூடும் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. முருக பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் 23,24,25,26.

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
என்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சிகளில் விட்டு கொடுக்காமல் வெற்றி பெறும் விருச்சிக ராசி நேயர்களே ஏழரை சனி தொடருவதும், ஜென்ம ராசிக்கு 2ல் செவ்வாய்,  12ல் சூரியன்  சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்றாலும் 11ல் குரு சஞ்சரிப்பதால் பண வரவுகள் தேவைக் கேற்றபடியிருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலனை அடைய முடியும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெறலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றும். கணவன் மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு  கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் 25,26,27,28,29.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
எப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புடன் எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும் எல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும் கொண்ட தனுசு ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 11ல் சூரியன், புதன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் தேவையற்ற மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும் குடும்ப தேவைகள் யாவும் பூ£ங்த்தியாகும். பயணங்களால் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்கள் ஏற்பட்டாலும் அதன் முலம் ஆதாயங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு உயர்வுகள் சற்று  தாமதப்படும் என்றாலும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். அசையா அசையா சொத்துக்களால் சிறுசிறு வீண் விரயங்களை சந்திப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. சனிக்குரிய பரிகாரங்களை செய்வது சிவ பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள். 27,28,29.
சந்திராஷ்டமம்                      22.10.2016 மதியம் 02.31 மணி முதல் 24.10.2016 இரவு 09.32 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால்  மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்பாக பழகும் மகர ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 9ல் குரு, 10ல் சூரியன், 11ல் சுக்கிரன், சனி சஞ்சாரம் அற்புதமான அமைப்பு என்பதால் பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளையும் தற்போது மேற்கொள்ளலாம். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். தொழில் வியபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர் பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற சற்றே தாமதநிலை உண்டாகும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம். பணம் கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் 23,24.
சந்திராஷ்டமம்                      24.10.2016 இரவு 09.32 மணி முதல் 27.10.2016 காலை 07.38  மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
தவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிக்கும் குணமும், தன்னிடம் பழகுபவர்களை  துல்லியமாக எடை போடும் ஆற்றலும் கொண்ட கும்ப ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 9ல் புதன், 11ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றியினைப் பெற முடியும். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூட சற்று தாமத நிலை உண்டாகும். புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்தாலே வீண் பிரச்சனைகள் உண்டாவதை குறைத்து கொள்ள முடியும்உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் 23,24,25,26.
சந்திராஷ்டமம்                      27.10.2016 காலை 07.38 மணி முதல் 29.10.2016 இரவு 07.35 மணி வரை.


மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
சமயத்திற்கேற்றார்போல மாறிவிடும் சுபாவம் இருக்கும் என்றாலும் துர்போதனைகளுக்கும், கெட்டசகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகாத மீன  ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 7ல் குரு, 10ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்பதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உறறார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பண வரவுகள் ஏற்ற சிறப்பாக இருப்பதால் ஆடம்பர பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூடும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் மூலம் ஆதாயங்கள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாமல் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள்உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் 25,26,27,28,29.



No comments: