Thursday, October 6, 2016

வார ராசிப்பலன் செப்டம்பர் அக்டோபர் 2 முதல் 8 வரை 2016

வார ராசிப்பலன் செப்டம்பர் அக்டோபர்  2  முதல்  8   வரை   2016


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை -- 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com





கேது 
கிரக   மாற்றம்

13.10.2016 விருச்சிக சுக்கிரன்



ராகு
செவ்  
சனி 
சுக்கி
குரு 
சூரிய புதன் 

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
தனுசு 07.10.2016 மதியம் 02.24 மணி முதல் 09.10.2016 இரவு 12.53 மணி வரை.
மகரம் 09.10.2016 இரவு 12.53 மணி முதல் 12.10.2016 காலை 07.50 மணி வரை.
கும்பம் 12.10.2016 காலை 07.50 மணி முதல் 14.10.2016 காலை 10.55 மணி வரை.
மீனம் 14.10.2016 காலை 10.55 மணி முதல்16.10.2016 காலை 11.13 மணி வரை.


மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
சிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 6ல் சூரியன் 7ல் சுக்கிரன், 11ல் கேது சஞ்சாரம் செய்வதால் நினைத்தது நினைத்தபடி நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய திருமண சுப காரியங்களும் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் ஆதரவும் அபிவிருத்தியை நல்லபடி பெருக்க உதவும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகளும் பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன் பொருள் சேரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க முடியும். சனிபகவானை வழிபாடு செய்யவும்.


வெற்றிதரும் நாட்கள்     10,11,12,13,14

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 5ம் குருவும், புதனும் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும் என்றாலும் 7ல் சனி சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபடுகள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்திலும் நரம்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்ற முடியும். எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். பொன் பொருள் சேரும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். செய்யும் தொழில், வியாபாரத்தில் சற்று மந்தமான நிலையிருக்கும். கூட்டாளிகளையும், வேலையாட்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது. சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள்                     12,13,14,15.
சந்திராஷ்டமம்     07.10.2016 மதியம் 02.24 மணி முதல் 09.10.2016 இரவு 12.53 மணி வரை.
மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும்  சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் பண்பு கொண்ட மிதுன ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 4ல் சூரியன், 7ல் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், 6ல் சனி சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்றாலும் ஒற்றுமை குறையாதுபுத்திர வழியில் மகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்கு பின் அனுகூலங்கள் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். உற்றார் உறவினர்களிடம் வீண் பிரச்சனைகள் ஏற்பட கூடும் என்பதால் அனைவரையும் அனுசரித்து நடப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை நிலவினாலும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் கிடைக்க வேண்டிய லாபங்கள் கிடைக்கும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். சற்று வேலை பளு சற்ற கூடுதலாகவே இருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. துர்கைஅம்மனை வழிபாடு செய்வதன் மூலம் நற்பலன்களை அடைய முடியும்.
வெற்றிதரும் நாட்கள்     9,14,15.
சந்திராஷ்டமம்                  09.10.2016 இரவு 12.53 மணி முதல் 12.10.2016 காலை 07.50 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே 3ல் சூரியனும், 4ல் சுக்கிரன், 6ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணவரவுகளிலிருந்த தடைகள் விலகி பொருளாதாரம் மேம்படும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் மறையும். கணவன் மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பொன், பொருள் சேரும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சற்று தடைகள் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலிருந்த பிரச்சனைகள் விலகி கொடுத்த கடன்கள் வீடு தேடி வரும். செய்யும் தொழில் வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபத்தை பெற முடியும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வியாழக்கிழமை தோறும் தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.
வெற்றிதரும் நாட்கள்     9,10,11.
சந்திராஷ்டமம்                    12.10.2016 காலை 07.50 மணி முதல் 14.10.2016 காலை 10.55 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 2ல் குரு. புதன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வந்த பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களிடையே இருந்து வந்த பகைமை விலகி ஒற்றுமை உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களையும் மேற்கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், தொழிலாளர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். சொந்த வீடு மனை, வண்டி வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்ற பதவி உயர்வுகளும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். வெளிநாடுகளுக்கு சென்று பண்புரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும். முருகப் பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் மேலும் பல நன்மைகளை அடைய முடியும்.
வெற்றிதரும் நாட்கள்                     10,11,12,13
சந்திராஷ்டமம்        14.10.2016 காலை 10.55 மணி முதல்16.10.2016 காலை 11.13 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சூரியன், 4ல் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 3ல் சனி சஞ்சரிப்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். பணம், பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை ஏற்படும். கணவன் மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியுடனேயே இருக்க முடியும். ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. செய்யும் தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் கிடைக்க வேண்டிய லாபங்கள் தடையின்றிக் கிடைக்கும். புதிய விடு, மனை வாங்கும் விஷயத்தில் வீண் விரயங்கள் ஏற்படும். குரு ப்ரீதியாக தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.
வெற்றிதரும் நாட்கள்     12,13,14,15.

துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 12ல் சூரியன் குரு, சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 3ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். திருமண சுப காரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். உற்றார் உறவினர்களிடம் வீண் பிரச்சனைகள் ஏற்பட கூடும் என்பதால் அனைவரையும் அனுசரித்து நடப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு ஓரளவுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கும். பயணங்களால் அனுகூலங்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். வேலை பளு சற்று குறையும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். சிவ பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் நற்பலன்களை அடைய முடியும்.
வெற்றிதரும் நாட்கள்     9,14,15.

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 11ல் சூரியன், புதன், குரு சஞ்சாரம் செய்வதால் பல்வேறு பொதுக்காரியங்களில் ஈடுபட்டு பலருக்கு நன்மைகள் செய்யும் வாய்ப்பு உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மற்றவர்களின் பாராட்டுதல்கள் மன மகிழ்ச்சியினை உண்டாக்குவதாக அமையும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து எதிர்பார்த்த லாபத்தை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றமை பலப்படும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலங்கள் உண்டாகும். முருக பெருமானை வழிபடுவதன் மேலும் நற்பலன்களை பெற முடியும்
வெற்றிதரும் நாட்கள்     10,11.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
எல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும் கள்ளம் கபடமின்றி  ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட தனுசு ராசி நேயர்களே 10ல் சூரியன், புதன் 11ல் சுக்கிரன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் குவியும். கணவன் மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் தேடி வரும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். பலருக்கு உதவி செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களையும் மேற்கொள்வீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். சிலர் கட்டிய வீட்டை மேலும் புதுப்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள். கடன்கள் சற்றே குறையும். கொடுக்கல் வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெறுவதால் நல்ல லாபம் கிட்டும். சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.
வெற்றிதரும் நாட்கள்     9,12,13.

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே 9ல் குரு, 10ல் சுக்கிரன், புதன் 11ல் சனி சஞ்சரிப்பதால் எதிலும் சிறப்பான மேன்மைகளை அடைய முடியும். பணவரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பேச்சியில் நிதானத்தை கடைபிடிப்பது, குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சுப காரியங்களுக்கான முயற்சிளில் அனுகூலமான பலனை அடைய முடியும். கடன்கள் படிப்படியாகக் குறையும். பணம் கொடுக்கல் வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் அமையும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்து அடைய வேண்டிய லாபத்தை அடைவார்கள்பயணங்களால் அனுகூலம் ஏற்படும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் 10,11,14,15.

கும்பம்  அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே 11ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பு என்றாலும், 8ல் சூரியன், புதன், குரு சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனமுடனிருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருந்தாலும் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொண்டால் சேமிக்க முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனமுனிருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். மறைமுக எதிர்ப்புகளையும், போட்டி பொறாமைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது வீண் பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. துர்க்கையம்மனை வழிபடவும்.
வெற்றிதரும் நாட்கள்     9,12,13.

மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே 6ல்  ராகு, 7ல் குரு சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலும் 7ல்  சூரியன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள், தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும். குடும்பத்தில் ஓரளவுக்கு ஒற்றுமையும் சுபிட்சமும் ஏற்படும். ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகி, அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிலிருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி நிலவும். எதிர்பார்த்த ஊதிய உயர்வுகள் கிடைப்பதோடு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். கடன்கள் படிப்படியாக குறையும். சிவ பெருமானை வழிபடவும்.
வெற்றிதரும் நாட்கள்     9,10,11,14,15.


No comments: