Saturday, October 1, 2016

அக்டோபர் மாத ராசிப்பலன் 2016

அக்டோபர் மாத ராசிப்பலன்  2016

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை -- 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com





கேது 
கிரக   மாற்றம்
03.10.2016  கன்னி புதன்   
13.10.2016 விருச்சிக சுக்கிரன்   
17.10.2016  துலா சூரியன்
21.10.2015  துலா புதன்   




ராகு புதன் 
செவ்  
சனி 
சுக்கி
குரு 
சூரிய
                                                               


மேஷம்    அஸ்வினி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கொண்ட உங்களுக்கு  ஜென்ம ராசிக்கு 6ல் சூரியன், 7ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வது மிகவும் அற்புதமான அமைப்பாகும். இதனால் இது வரை தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் அனைத்தும் தடை விலகி கைகூடும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சொந்த பூமி, மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகமும் அமையும். போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். அழகான புத்திர பாக்கியமும் உண்டாகும். சிலர் நினைத்தவரையே கரம்பிடித்து மகிழ்வர். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகுவதுடன் புதிய புதிய வாய்ப்புகள் யாவும் தேடி வரும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். பொருளாதாரநிலை உயரும்.
பரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சனிக்கு எள் எண்ணெய் தீபமேற்றுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் 05.10.2016 அதிகாலை 01.57 மணி முதல் 07.10.2016 மதியம் 02.24 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே இனிமையான சுபாவம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 5ல் குரு மாதபிற்பாதியில் 6ல் சூரியன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை, சோர்வு போன்றவை உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தர கூடிய சம்பவங்கள் நடைபெறும். தெய்வ காரியங்களுக்காகவும், பொதுநலத் திட்டங்களுக்காகவும் செலவுகள் செய்து மகிழ்வீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்த்த பதவி உயர்விகளை பெறுவார்கள். பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். தொழில் வியாபாரத்திலிருந்த நெருக்கடிகள் விலகி புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது.
பரிகாரம். முருக பெருமானை வழிபாடு செய்வது சஷ்டி விரதங்கள் இருப்பது நல்லது.
சந்திராஷ்டமம் 07.10.2016 மதியம் 02.24 மணி முதல் 09.10.2016 இரவு 12.53 மணி வரை

மிதுனம் மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே எதிலும் சுறு சுறுப்பாக செயல்படக் கூடிய திறமை கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 4ல் புதன், 5ல் சுக்கிரன், 6ல் சனி, சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்பத்திலிருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் கடன்களும் படிப்படியாகக் குறைந்து நிம்மதி நிலவும். கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும், கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே அபிவிருத்தியைப் பெருக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். எதிர் பார்க்கும் பதவி உயர்வுகள் கிட்டும்.

பரிகாரம். சிவ வழிபாடு செய்வது, தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 09.10.2016 இரவு 12.53 மணி முதல் 12.10.2016 காலை 07.50 மணி வரை.

கடகம்       புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத குணம் கொண்ட உங்களுக்கு 3ல் சூரியன், 6ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் இதனால் உங்களுக்குள்ள எதிர்ப்புகள் யாவும் குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரத்திலும் எதிர்பார்த்த வகையின் லாபம் கிட்டும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது முன் கோபத்தைக் குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல்  லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவும் முடியும்வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

பரிகாரம். விநாயகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 12.10.2016 காலை 07.50 மணி முதல் 14.10.2016 காலை 10.55 மணி வரை.

சிம்மம்       மகம், பூரம். உத்திரம்&1& ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே வாழ்க்கையில் பல முறை தோற்றாலும் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2ல் குரு, மாத பிற்பாதியில் 3ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயங்களில் கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தினை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்  பெறும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவுக்கு முன்னேற்றமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

பரிகாரம். முருகப் பெருமானை வழிபாடு செய்வது, சனிக்கு பரிகாரம் செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 14.10.2016 காலை 10.55 மணி முதல்16.10.2016 காலை 11.13 மணி வரை.

கன்னி   உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய உங்களுக்கு  ஜென்ம  ராசியில் சூரியன், குரு, 4ல் செவ்வாய் சஞ்சரிப்பது வீண் விரயங்களை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் 3ல் சனி சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணமாவதில் தடைகள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல நேரிடும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் சில தடைகளுக்கு பின் கிடைக்கப் பெறும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும்.

பரிகாரம். துர்கை அம்மனை வழிபடுவது சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 16.10.2016 காலை 11.13 மணி முதல் 18.10.2016 காலை 10.35 மணி வரை.

துலாம்    சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே உயர்ந்த நிலையை அடைய வேண்டிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு  ஜென்ம ராசிக்கு 12ல் சூரியன், குரு சஞ்சரிப்பதால் தேவையற்ற வீண் விரயங்களும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளும் ஏற்படும் என்றாலும் 3ல்  செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் தொழில், வியாபாரத்திலிருப்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கப் பெறும். பயணங்களால் சற்றே அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலமும் உண்டாகும். கணவன் மனைவி இடையே சிறுசிறு கருத்து சேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டி வரும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் குறையும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதால் தேவையற்ற பிரச்சனைகளை குறைத்துக் கொள்ள முடியும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெறும், தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல் குறையும்.

பரிகாரம். சனி பகவானை வழிபாடு செய்வது, துர்க்கைஅம்மன் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் 18.10.2016 காலை 10.35 மணி முதல் 20.10.2016 காலை 11.07 மணி வரை.

விருச்சிகம் விசாகம்4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே தன்னுடைய கொள்கைகளை எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட உங்களுக்கு லாப ஸ்தானமான  11ல் குரு புதன் சூரியன் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்  தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது, உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அபிவிருத்தியும் பெருகும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறுவதால் நல்ல லாபம் கிட்டும். கொடுத்த கடன்களும் வீடு தேடி  வரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்க்கும் இட மாற்றங்களும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் கவனமுடன் செயல்படுவீர்கள்.

பரிகாரம். ஆஞ்சநேயரை வழிபடுவது, சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 20.10.2016 காலை 11.07 மணி முதல் 22.10.2016 மதியம் 14.31 மணி வரை.

தனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே வேகமாக பேசினாலும், திருத்தமாக பேசக் கூடிய உங்களுக்கு  மாத கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதாலும்  3ல் கேது, 11ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதாலும்  பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. எதிலும் கவனமுடன் செயல்படுவது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக் கூடிய பாதிப்புகளால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியாத நிலை ஏற்படும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அலைச்சல், டென்ஷன் அதிகரித்தாலும் உடன்  பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது.

பரிகாரம். சனி கிழமைகளில் சனிக்கு எள்எண்ணெய் தீபமேற்றி வழிபடுவது முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் 22.10.2016 மதியம் 02.31 மணி முதல் 24.10.2016 இரவு 09.32 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2,ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே தானுண்டு தன் வேலையுண்டு என பாடுபடும் குணம் கொண்ட உங்களுக்கு  9ல் குரு 10ல் சுக்கிரன், 11ல் சனி சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும்  லாபம் கிட்டும். நினைத்ததை நிறைவேற்றி விடுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். ணூடன்களும் படிப்படியாக நிவர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்தாலே வீண் பிரச்சனைகள் உண்டாவதை குறைத்து கொள்ள முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவுகள் அபிவிருத்தியை பெறுக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர் பார்க்கும் உயர்வுகளை தடையின்றி பெறுவார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

பரிகாரம். ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 24.10.2016 இரவு 09.32 மணி முதல் 27.10.2016 காலை 07.38  மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே மற்றவரின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 8ல் குரு சூரியன் புதன் சஞ்சரிப்பது சாதமற்ற அமைப்பு என்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகளை எதிர் கொள்ள வேண்டி வரும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும் என்றாலும் குடும்பத் தேவைகள் அதிகரிப்பதால் வரவிக்கு மீறிய செலவுகள் உண்டாகும். நண்பர்களும் எதிரிகளாக மாறுவார்கள். பயணங்களில் கவனமுடன் இருப்பது நல்லது. சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடைகளுக்கு பின் அடைய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறுவதில் சற்று தாமதநிலை ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ளலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நெருக்கடிகள் அதிகரிக்கும்.

பரிகாரம். விநாயகர் வழிபாடு துர்கை வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் 27.10.2016 காலை 07.38 மணி முதல் 29.10.2016 இரவு 07.35 மணி வரை.

மீனம்  பூரட்டாதி4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன  ராசி நேயர்களே  புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் செவி சாய்க்காத உங்களுக்கு மாத கோளான சூரியன் சாதகமின்றி சஞ்சாரம் செய்தால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டியிருக்கும் என்றாலும் 7ல் குரு 10ல் செவ்வாய்  சஞ்சாரம் செய்வதால் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிலவும். ஆடம்பர பொருட் சேர்க்கைகள் பொன் பொருள் சேரும் அமைப்பு உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். இதனால் கிடைக்க வேண்டிய லாபங்கள் தடையின்றிக் கிடைக்கும். புதிய பூமி, மனை வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு கௌரவமான வேலை வாய்ப்பு கிட்டும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

பரிகாரம். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது அம்மன் வழிபாடு மெற்கொள்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் 02.10.2016 மதியம் 01.19 மணி முதல் 05.10.2016 அதிகாலை 01.57 மணி வரை.
மற்றும் 29.10.2016 இரவு 07.35 மணி முதல் 01.11.2016 காலை 08.15 மணி வரை.

சுபமுகூர்த்த நாட்கள்

03.10.2016 புரட்டாசி 17 ஆம் தேதி திங்கட்கிழமை துவிதியைதிதி சுவாதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை

05.10.2016 புரட்டாசி 19 ஆம் தேதி புதன்கிழமை சதுர்த்திதிதி அனுஷ நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் விருட்சிக இலக்கினம். வளர்பிறை

06.10.2016 புரட்டாசி 20 ஆம் தேதி வியாழக்கிழமை பஞ்சமிதிதி அனுஷ நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் துலா இலக்கினம். வளர்பிறை

19.10.2016 ஐப்பசி 3 ஆம் தேதி புதன்கிழமை சதுர்த்திதிதி ரோகிணி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் விருட்சிக இலக்கினம். தேய்பிறை


28.10.2016 ஐப்பசி 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரயோதசிதிதி அஸ்த நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் துலா இலக்கினம். தேய்பிறை

No comments: