Wednesday, October 26, 2016

மாத ராசிப்பலன் சுப முகூர்த்த நாட்கள்- நவம்பர் - 2016





மாத ராசிப்பலன்  சுப முகூர்த்த நாட்கள்-  நவம்பர் - 2016

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்

Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

ஆசிாியா்     ”இந்த வார ஜோதிடம்ஜோதிட வார இதழ்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனிசென்னை -- 600 026
தமிழ்நாடுஇந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com
E-mail-   murugu.astro@gmail.com 

கேது 
கிரக   மாற்றம் 
01.11.2016 மகர செவ்வாய்.
07.11.2016 தனுசு சுக்கிரன்
09.11.2016 விருச்சிக புதன்
16.11.2016 விருச்சிக சூரியன்.
28.11.2016 தனுசு புதன்.
ராகு
செவ்  
சனி  சுக்கி
சூரிய புதன் 
குரு 

                                                               
மேஷம்   ; அஸ்வினி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே சிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு அஷ்டம ஸ்தானமான 8ல் சனி சஞ்சரிப்பதும், களத்திர ஸ்தானமான 7ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பாகும். இதனால் நீங்கள் எதிலும் சற்று நிதானமுடன் செயல் படுவதே நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றியினைப் பெற முடியும். கணவன் மனைவியிடையே ஏற்பட கூடிய சிறு சிறு வாக்கு வாதங்களால் ஒற்றுமைக் குறைவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து விட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூட தாமத நிலை உண்டாகும்உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும்.
பரிகாரம். சிவ பெருமானை, வழிபடுவது சனிக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் 01.11.2016 காலை 08.15 மணி முதல் 03.11.2016 இரவு 08.45 மணி வரை.
மற்றும் 28.11.2016 மதியம் 02.19 மணி முதல் 01.12.2016 அதிகாலை 02.36 மணி வரை

ரிஷபம்  ;கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 5ல் குரு சஞ்சாரம் செய்வதும் சூரியன் 6ல் சஞ்சரிப்பதும் சிறப்பான முன்னே ற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். இதனால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பூர்வீக சொத்து பிரச்சனைகளிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தினை அடைய முடியும். கொடுக்கல் வாங்கல்  லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும் முடியும்.  
பரிகாரம். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது, துர்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 03.11.2016 இரவு 08.45 மணி முதல் 06.11.2016 காலை 08.00 மணி வரை.

மிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும்  சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்ட உங்களுக்கு  ருண ரோக ஸ்தானமான 6ல் சனி சஞ்சாரம் செய்வதும், மாத பிற்பாதியில் 6ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பு ஆகும். இதனால் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல் பட முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். பணம் கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறமையுடன் செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள்
பரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 06.11.2016 காலை 08.00 மணி முதல் 08.11.2016 மாலை 04.32 மணி வரை.

கடகம்     ;  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே
எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட உங்களுக்கு சுக ஸ்தானமான 4ல் சூரியன், 7ல் செவ்வாய் சஞ்சாரம்  செய்வது தேவையற்ற அலைச்சல் டென்ஷன்களை ஏற்படுத்தும் என்றாலும் எடுக்கும் முயற்சிகளில் ஓரளவுக்கு வெற்றியினை ஏற்படுத்தும். பொளாதார நிலை ஏற்ற இறக்கமான இருந்தாலும் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. சொந்த பூமி மனை வாங்கும் விஷயங்களில் கசனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கயும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். கூட்டாளிகளால் சிறுசிறு வீண் பிரச்சனைகள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். உத்தியோகஸ்தர்கள் திறம்பட செயல்பட்டு உயர்வடைவார்கள்.
பரிகாரம். முருகப் பெருமானை வழிபாடு  சஷ்டி விரதமிருப்பது நல்லது.
சந்திராஷ்டமம் 08.11.2016 மாலை 04.32 மணி முதல் 10.11.2016 இரவு 09.16 மணி வரை.

சிம்மம்     ;  மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே
இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2ல் குரு,  3ல் சூரியன், 6ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். எதிர்பார்க்கும் உதவிகளும் தடையின்றி கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சற்று செல்ல வேண்டியிருக்கும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அசையும் அசையா சொத்துக்களால் அருந்து வந்த வீண் பிரச்சனைகள் மறையும். தொழில் வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி உற்பத்தியை பெருக்க முடியும்கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் தொடர்புகளால் சிறப்பான லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று பணியில் நிம்மதியுடன் செயல் பட முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம். துர்கை அம்மனை வழிபடுவது தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 10.11.2016 இரவு 09.16 மணி முதல் 12.11.2016 இரவு 10.29 மணி வரை.

கன்னிஉத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே
பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3ல் சனி, மாத பிற்பாதியில் 3ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெற முடியும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன் மனைவி விட்டு கொடுத்து நடப்பதும் உற்றார் உறவினர்களிடையே பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நல்லது. தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் சிறுசிறு தடைகளுக்கு பின் கைகூடும். பண வரவுகளில் சுமாரான நிலையே இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்த கடன்களை திரும்ப பெறுவதில் தடைகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர் பார்க்கும் இட மாற்றங்களும் கிடைக்கும்.
பரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 12.11.2016 இரவு 10.29 மணி முதல் 14.11.2016 இரவு 09.39 மணி வரை.

துலாம்   ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே
வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், 2ல் சனி, 4ல் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கரை எடுத்து கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டி பொறாமைகளை சந்திக்க வேண்டியிருக்கும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் யாவும் கை நழுவிப் போகும்கூட்டாளிகளின் ஆதரவற்ற செயல்படுகளால் மன நிம்மதி குறையும். குடும்பத்தில் ஒற்றுமை சுமாராக இருக்கும். கணவன் மனைவி சற்று விட்டு கொடுத்து செல்வது நல்லது. திருமண சுப காரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிப்பதாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம். சிவபெருமானை வழிபாடு செய்வது பிரதோஷ கால விரதமிருப்பது மிகவும் நல்லது.
சந்திராஷ்டமம் 14.11.2016 இரவு 09.39 மணி முதல் 16.11.2016 இரவு 08.56 மணி வரை.

விருச்சிகம்; விசாகம்4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே
எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3ல் செவ்வாய், 11ல் குரு சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்தால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடை விலகி கை கூடும். பொன் பொருள் சேரும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் நல்ல லாபம் அமையும். கடன்கள் குறையும். கணவன்-மனைவி சற்று விட்டு கொடுத்த நடப்பது நல்லது. உடல் ரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும்பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும்.
பரிகாரம். சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது, சிவ வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 16.11.2016 இரவு 08.56 மணி முதல் 18.11.2016 இரவு 10.33 மணி வரை.

தனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே
எல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும் கள்ளம் கபடமின்றி  ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட உங்களுக்கு ஏழரை சனியில் விரய சனி நடைபெறுவது ஆரோக்கிய பபாதிப்புகளையும், தேவையற்ற வீண் விரயங்களையும் ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் மாத முற்பாதியில் லாப ஸ்தானமான 11ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எல்லா வகையிலும் அனுகூலங்களை பெறுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. கணவன் மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப் பெற்றாலும் வேலைபளு  சற்று அதிகமாகவே இருக்கும்.
பரிகாரம். சனி கிழமைகளில் சனிக்கு எள் எண்ணெய் தீப மேற்றி வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் 18.11.2016 இரவு 10.33 மணி முதல் 21.11.2016 காலை 04.02 மணி வரை.

மகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2,ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே
எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட உங்களுக்கு மாத கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், 9ல் குரு, 11ல் சனி சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற முடியும்பொருளாதார நிலை தேவைக்கேற்ற படியிருக்கும்சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும்தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் கிடைக்கப் பெறும்மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் அதிர்ஷ்டமும் உண்டாகும்.
பரிகாரம். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 21.11.2016 காலை 04.02 மணி முதல் 23.11.2016 மதியம் 01.31  மணி வரை

கும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 8ல் குரு, 9ல் சூரியன், 12ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக தான் இருக்கும். கணவன் மனைவியிடையே கருத்துவேறு பாடுகள் தோன்றும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கடன்கள் படிப்படியாக குறையும்வீடு வாகனம் போன்றவற்றை வாங்கும் வுஷயங்களில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்கள் ட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வற்றால் அலைச்சல் அதிகரிக்கும்உத்தியோகத்தில் வேலைபளு கூடும். உயரதிகாரிகளின் கெடுபிடிகளால் மன நிம்மதி குறையும்.
பரிகாரம். விநாயகப்பெருமானை வழிபாடு செய்வது அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம் 23.11.2016 மதியம் 01.31 மணி முதல் 26.11.2016 அதிகாலை 01.33 மணி வரை.

மீனம் ; பூரட்டாதி4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன  ராசி நேயர்களே
தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் உங்களுக்கு 7ல் குரு, 11ல் செவ்வாய் சஞ்சாரம் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். 8ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை உண்டாக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமையும் சுபிட்சமும் உண்டாகும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணமாகும். Ðயங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரித்தாலும் அதனால் அனுகூலமும் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறைந்து லாபம் அதிகரிக்கும். விரோதிகளும் நண்பர்கள் ஆவார்கள். வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளில் தடையின்றி கிடைக்கும்வேலை பளுவும் குறைவாகவே இருக்கும்.
பரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 26.11.2016 அதிகாலை 01.33 மணி முதல் 28.11.2016 மதியம் 02.19 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்

02.11.2016 ஐப்பசி 17 ஆம் தேதி புதன்கிழமை திருதியைசிதிதி அனுஷ நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் தனுசு இலக்கினம். வளர்பிறை

06.11.2016 ஐப்பசி 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சஷ்டிசிதிதி உத்திராட நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் விருட்சிக இலக்கினம். வளர்பிறை

07.11.2016 ஐப்பசி 22 ஆம் தேதி திங்கட்கிழமை சப்தமி திதி திருவோண நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் விருட்சிக இலக்கினம். வளர்பிறை

11.11.2016 ஐப்பசி 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவாதசிதிதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் தனுசு இலக்கினம். வளர்பிறை

13.11.2016 ஐப்பசி 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்தசிதிதி அசுவினி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் விருட்சிக இலக்கினம். வளர்பிறை

27.11.2016 கார்த்திகை 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திரயோதசிதிதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் தனுசு இலக்கினம். தேய்பிறை


No comments: