புத்தாண்டு பலன் 2014 விருச்சிகம்
விருச்சிகம் ; விசாகம் &4ம் பாதம், அனுஷம், கேட்டை
நகைச்சுவையுணர்வும், சிறந்த பேச்சாற்றலும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2014 ஆம் ஆண்டு முழுவதும் உங்களுக்கு ஏழரை சனியில் விரய சனி தொடருவதால் தேவையற்ற விரயங்கள், எதிர்பாராத செலவுகள் உண்டாகும். குருவும் ஆண்டின் முற்பாதி வரை அஷ்டம ஸ்தானமான 8&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாகவும் நெருக்கடிகள் ஏற்படும். உற்றார் உறவினர்களாலும், குடும்பத்திலுள்ளவர்களாலும் மன சஞ்சலங்கள் ஏற்படும். கேது பகவான் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ள கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும். வரும் 13.06.2014 முதல் குரு பகவான் பாக்கியஸ்தானமான 9&ஆம் வீட்டிற்கு மாறுதலாகவிருப்பதால் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களும் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். வரும் 21.06.2014 இல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் ராகு 11&ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பது சாதகமான அமைப்பே ஆகும். இதனால் தொழில் வியாபாரத்திலிருந்த நெருக்கடிகள் குறைந்து லாபங்கள் பெருகும். கொடுக்கல்&வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். இந்த ஆண்டின் இறுதியில் 16.12.2014 ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனி பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிக்க விருப்பதால் உங்களுக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி தொடங்கவுள்ளது.
தேக ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் அஜீரண கோளாறு போன்றவை உண்டாகினாலும், அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல் படும் அளவிற்கு ஆற்றலைப் பெறுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களாலும் வீண் விரயங்கள், மருத்துவ செலவுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல் குறையும்.
குடும்பம் பொருளாதாரநிலை
இந்த ஆண்டின் முற்பாதிவரை தேவையற்ற பிரச்சனைகள், கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள், எல்லாம் இருந்தும் அனுபவிக்கத் தடைகள் போன்றவை ஏற்படும். ஆண்டின் பிற்பாதியில் திருமண சுப காரிய முயற்சிகளிலிருந்த தடைகள் விலகி சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும் அசையும் அசையா சொத்து வாங்கும் யோகமும் உண்டாகும்.
கொடுக்கல் வாங்கல்
ஆண்டின் முற்பாதி வரை பணவரவுகளில் இடையூறுகள், நெருக்கடிகள் ஏற்படும். தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. ஆண்டின் பிற்பாதியில் தாராள தனவரவுகளைக் கொடுக்கும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளிலும் நல்ல தீர்வு கிடைக்கும்.
தொழில் வியாபாரிகளுக்கு
இந்த ஆண்டின் முற்பாதி வரை தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல் படுவது நல்லது. பிற்பாதியில் ஒரளவுக்கு முன்னேற்றத் பெறுவீர்கள். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவதால் சிறப்பான அபிவிருத்தியும் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் தேவையற்ற குழப்பங்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் இவற்றால் மன உளைச்சல்கள் போன்றவை ஏற்பட்டாலும் ஆண்டின் பிற்பாதியில் எல்லா பிரச்சனைகளும் படிப்படியாக விலகும். எதிர் பார்க்கும் ஊதிய உயர்வுகள், இடமாற்றங்கள் போன்றவை கிடைக்கப் பெறும். புதிய வேலைத் தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பும் கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறும்.
அரசியல்வாதிகளுக்கு
ஆண்டின் முற்பாதியில் கட்சிப் பணிகளுக்கு நிறைய செலவு செய்ய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டு வீண் விரயங்கள் அதிகரிக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. ஆண்டின் பிற்பாதியில் பொருளாதார நிலையில் மேம்பாடுகள் உண்டாகி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். எதிர்பாராத உயர் பதவிகளும் கிடைக்கும். பெயர், புகழ் உயரும்.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபட வேண்டியிருக்கும். வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளால் நீர் வரத்து குறையும் என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் எதிலும் எதிர் நீச்சல் போட்டாவது லாபத்தினை பெறுவீர்கள். புதிய பூமி, மனை, வண்டி, வாகனம் வாங்க கூடிய யோகமும் உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்களும் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். அரசு வழியில் ஆதரவுகள் கிட்டும்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. குடும்ப விவகாரங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். ஆண்டின் பிற்பாதியில் திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பொன் பொருள் சேரும். பொருளாதாரம் உயரும்.
படிப்பு
கல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட வேண்டிய காலமிது. மந்த நிலை, ஞாபகமறதி போன்றவை ஏற்பட்டாலும் அடைய வேண்டிய இலக்கை எளிதில் அடைய முடியும். பயணங்களில் கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற நட்புக்களால் வீண் பழிச் சொற்களும், அவமானபடக் கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும்.
ஸ்பெகுலேஷன்
ஆண்டின் முற்பாதியில் எந்தவொரு காரியத்திலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பிற்பாதியில் ஒரளவுக்கு அனுகூலங்களை அடைந்து விட முடியும்.
ஜனவரி
நகைக்சுவை உணர்வுடன் பேசக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு, ஏழரை சனி நடைபெறுவது சற்று சாதகமற்ற அமைப்பு என்றாலும் லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். மாத பிற்பாதியில் சூரியன் 3&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். 8&இல் சஞ்சரிக்கும் குருவும் வக்ரகதியிலிருப்பதால் பணவரவுகளும் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபங்களைப் பெற முடியும். கொடுக்கல்&வாங்கலில் சற்று கவனமுடன் செயல் பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். பயணங்களில் நிதானம் தேவை. சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.
சந்திராஷ்டமம் 13.01.2014 இரவு 07.47 மணி முதல் 16.01.2014 காலை 07.13 மணி வரை.
பிப்ரவரி
வாக்கு வாதங்களில் வாதிக்கும் திறமைக் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் சூரியனும், 4&இல் புதனும், 6&இல் கேதுவும் சஞ்சாரம் செய்வதால் கடந்த கால பிரச்சனைகளிலிருந்து சற்றே விடுபடுவீர்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளிலும் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் எதிலும் திறமையுடன் செயல்பட்டு லாபத்தினைப் பெற முடியும். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 10.02.2014 அதிகாலை 03.04 மணி முதல் 12.02.2014 மதியம் 02.22 மணி வரை.
மார்ச்
பிடிவாத குணமும், முரட்டுத்தனமும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 4&இல் சூரியனும், 8&இல் குருவும், 12&இல் சனியும் ராகுவும் சஞ்சரிப்பதால் இம்மாதம் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தபட்ட பாதிப்புகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது வேகத்தை குறைப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் சற்று தேக்க நிலை ஏற்பட்டாலும் மந்த நிலை உண்டாகாது. முருகனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 09.03.2014 காலை 10.13 மணி முதல் 11.03.2014 இரவு 09.25 மணி வரை.
ஏப்ரல்
பார்ப்பதற்கு வெகுளிப் போல தோற்றமளிக்கும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&இல் கேதுவும் 12&இல் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியிலும் இருப்பதால் எந்த வித எதிர்ப்புகளையும் எதிர் கொள்ள கூடிய அளவிற்கு பலமும் வலிமையும் கூடும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல் படமுடியும். கொடுக்கல்&வாங்கலில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு லாபத்தினை பெற்று விட முடியும். சுப காரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 05.04.2014 மாலை 05.25 மணி முதல் 08.04.2014 அதிகாலை 4.28 மணி வரை.
மே
விளையாட்டுத் துறைகளில் அதிக ஆர்வம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&இல் கேதுவும், சூரியனும் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானமான செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் அனுகூலமான அமைப்பு என்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் விலகி எல்லா வகையிலும் லாபம் பெரும். குடும்பத்திலும் நிம்மதியான நிலையிருக்கும். சொந்த பூமி, மனை வாங்க கூடிய யோகம் உண்டாகும். பணவரவுகளிலிருந்த நெருக்கடிகள் சற்றே குறையும். கொடுக்கல்&வாங்கலும் லாபமளிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றத்தை அடைய முடியும். கடன்களும் குறையும். குரு ப்ரீதி, தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 02.05.2014 இரவு 12.42 மணி முதல் 05.05.2014 மதியம் 11.37 மணி வரை.
மற்றும் 30.05.2014 காலை 08.07 மணி முதல் 01.06.2014 இரவு 06.56 மணி வரை.
ஜீன்
எடுக்கும் காரியங்களை திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&இல் கேதுவும், 11&இல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதாலும், 12&இல் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியிலிருப்பதாலும் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். இம்மாதம் 13&ஆம் தேதி முதல் குரு 9&இல் சஞ்சரிக்கவிருப்பதால் பொருளாதார நிலை மேன்மையடையும் குடும்பத்தில் தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடபுடலாக நிறைவேறும். 21&ஆம் தேதி முதல் ராகு 11&இல் சஞ்சரிக்க விருப்பதால் கடன்கள் குறைந்து சேமிப்பு பெருகும். சிவனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 26.06.2014 மதியம் 03.43 மணி முதல் 29.06.2014 அதிகாலை 02.20 மணி வரை.
ஜீலை
எளிதில் யாராலும் ஏமாற்ற இயலாத துணிவு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 8&இல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். குரு 9&இல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். மாத முற்பாதி வரை செவ்வாய் 11&இல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபம் பெருகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் உயர்வுகள் கிட்டும். இம்மாதம் முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 23.07.2014 இரவு 11.21 மணி முதல் 26.07.2014 காலை 09.42 மணி வரை.
ஆகஸ்ட்
குறும்புத் தனமும், விஷமத் தனமும் அதிகம் கொண்ட உங்களுக்கு ஏழரை சனி நடைபெற்றாலும், 9&இல் குருவும், 11&இல் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் எல்லா வித பிரச்சனைகளையும் சமாளிக்க முடியும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமுடனிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபத்தினை அள்ளித் தரும். புதிய கூட்டாளிகளும் சேருவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் கிட்டும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 20.08.2014 காலை 06.48 மணி முதல் 22.08.2014 மதியம் 05.02 மணி வரை.
செப்டம்பர்
பிறரது குற்றங் குறைகளை எளிதில் அம்பலப் படுத்தக் கூடிய தைரியம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 9&இல் குருவும் 11&இல் புதன் ராகுவும் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சொந்த பூமி மனை வாங்க கூடிய யோகமும் உண்டாகும். பூர்வீக சொத்துக்களிலிருந்த வம்பு வழக்குகளில் அனுகூலப் பலனை அடைய முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்திலும் சுப காரியங்கள் கை கூடும். எதிர்பாராத சிறு சிறு விரயங்கள் ஏற்பட்டாலும் சேமிப்பு குறையாது. உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இட மாற்றத்தை பெற முடியும். இம்மாதம் சனி ப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 16.09.2014 மதியம் 02.14 மணி முதல் 18.09.2014 இரவு 12.12 மணி வரை.
அக்டோபர்
தன்னை விடப் பெரியவர்களிடம் அதிக மரியாதையுடன் பழகும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரித்தாலும் 9&இல் குருவும், 11&இல் சூரியன், சுக்கிரன் ராகுவும் சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்ற முடியும். பிரிந்து சென்ற உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். தொழில் வியாபார ரீதியாக இருந்த போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர் வெளி நாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். பொன் பொருள் சேரும். அசையா சொத்து யோகங்களும் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். முருகனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 13.10.2014 இரவு 09.38 மணி முதல் 16.10.2014 காலை 07.19 மணி வரை.
நவம்பர்
நியாய அநியாயங்களை பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2&இல் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். பண வரவுகள் தாராளமாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். திருமணம் போன்ற சுப காரியங்களும் கை கூடும். கொடுக்கல்&வாங்கலிலும் சரளமான நிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத உயர்வுகளும் திறமைக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும். சிவ பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 10.11.2014 அதிகாலை 05.08 மணி முதல் 12.11.2014 மதியம் 02.40 மணி வரை.
டிசம்பர்
தன்னுடைய கொள்கைகளை எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் செவ்வாயும், 9&இல் குருவும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், லாபமும் உண்டாகும் என்றாலும் ஜென்ம ராசியிலேயே சூரியன் சஞ்சரிப்பதாலும் வரும் 16&ஆம் தேதி ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனியும் ஜென்ம ராசியிலேயே சஞ்சாரம் செய்ய விருப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்களும் நடைபெறும். கடன்களும் குறையும். பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். எதிலம் சிந்தித்து செயல் படுவது நல்லது. சனி ப்ரீதி ஆஞ்ச நேயரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 07.12.2014 மதியம் 12.46 மணி முதல் 09.12.2014 இரவு 10.02 மணி வரை.
விசாகம் &4ம் பாதம்,
குரு பகவானின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள நீங்கள் நியாய அநியாயங்களை தெளிவாக எடுத்துரைப்பீர்கள். இந்த வருடத்தில் உங்களுக்கு தேவையற்ற சோதனைகள், வேதனைகள் உண்டாகி மனசஞ்சலங்களை ஏற்படுத்தும் என்றாலும் இவ்வருடத்தின் பிற்பாதியில் ஒரளவுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றத்தை அடைவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு வாக்கு வாதங்கள் ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்றே மந்த நிலை ஏற்பட்டாலும், பொருட்தேக்கம் உண்டாகாது. உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வை அடையலாம்.
அனுஷம்
சனியின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு ஏதாவது மனக் குறைகள் இருந்து கொண்டே இருக்கும். இந்த வருடமும் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருக்கும் என்றாலும் எதிர் பாராத உதவிகள் கிடைக்கும். ஆண்டின் பிற்பாதியில் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கொடுக்கல்&வாங்கலும் சரளமாக நடைபெறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்தாலும் சிறு சிறு அலைச்சல்களையும் எதிர் கொள்ள நேரிடும். பயணங்களில் சற்று கவனமுடன் இருப்பது வேகத்தை குறைப்பது நல்லது.
கேட்டை
புதனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு தான தர்மங்கள் செய்யும் குணம் இருக்கும். இந்த ஆண்டு நீங்கள் எந்தவொரு கரியத்திலும் சிந்தித்து செயல் படுவதே நல்லது. ஆண்டின் முற்பாதி வரை சில சங்கடங்களை சிந்தித்தாலும், பிற்பாதியில் நல்ல பல முன்னேற்றங்களைப் பெறுவீர்கள். பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். தொழில் வியாபாரமும் சிறப்பாக நடைபெறும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் &1,2,3,9,10,11
நிறம் & ஆழ் சிவப்பு, மஞ்சள்
கிழமை & செவ்வாய், வியாழன்
திசை & தெற்கு
கல் & பவளம்
தெய்வம்& முருகன்
பரிகாரம்
விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஏழரை சனி நடைபெறுவதால் சனிக்கிழமை தோறும் எள் எண்ணெயில் தீப மேற்றுவது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்வது நல்லது. 13.06.2014 வரை குரு 8&இல் சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது, தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபாடு செய்வது நல்லது. 21.06.2014 முதல் கேது 5&இல் சஞ்சரிக்கவிருப்பதால் தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.
Contact
For your consultation
Please sent Rs 500 ,( 20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer ) in favour of MURUGU BALAMURUGAN with your birth details (date of birth,time,place) & 5 questions to ( e-mail ) me for horoscope readingplease contact my postal adress
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,
(Near Valli Thirumanamandapam)
Vadapalani,
Chennai-600026
My Cell - 0091 - 7200163001, 9383763001
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
Bank account details are
Name ; Murughu Balamurugan
Bank name - IndianbankSavings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078
Name ; R.Balamurugan
Bank name - Bank of BaradoSavings Account No - 29900100000322
Branch name - Vadapalani
Chennai - 600026.INDIA.
MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078
No comments:
Post a Comment