புத்தாண்டு பலன் & 2014 சிம்மம்
சிம்மம் ; மகம், பூரம், உத்திரம் & 1ம் பாதம்
உயர்ந்த எண்ணங்களுடன், பிறர் மெச்சும் படியாக வாழக்கூடிய ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2014 & ஆம் ஆண்டு நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். ஜென்ம ராசிக்கு 3&ஆம் வீட்டில் சனியும் ராகுவும் சஞசாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், எதிலும் துணிந்து செயல்படக் கூடிய ஆற்றலும் உண்டாகும். இந்த ஆண்டின் முற்பாதி வரை குருபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் லாபங்கள் பெருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கைகூடும். கணவன்&--மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களையும் வாங்கி சேர்ப்பீர்கள். ஆடை ஆபரணமும் சேரும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை அளிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் அனுகூலம் கிட்டும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். வரும் 13.06.2014 முதல் குருபகவான் 12&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் கொடுக்கல்&வாங்கலில் கவனமுடனிருப்பது நல்லது. 21.06.2014 இல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் ராகு 2&லும் கேது 8&லும் சஞ்சரிக்க விருப்பதால் கணவன்&மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடந்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உணவு விஷயத்தில் கவனமுடன் செயல்பட்டால் உடல் நிலை சிறப்பாக அமையும்.
தேக ஆரோக்கியம்;
உடல் ஆரோக்கியத்தில் புதுத் தெம்பும் பொலிவும் உண்டாகும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்து கொண்டிருப்பவர்களுக்கும் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களும் சுபிட்சமான இருப்பதால் மருத்துவ செலவுகள் யாவும் குறையும். மன நிம்மதி உண்டாகும்.
குடும்பம் பொருளாதார நிலை;
குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை நிலவும். சிலருக்கு புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பிரிந்து சென்ற உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமைப் பாராட்டுவார்கள். சொந்த பூமி மனை வாங்கக் கூடிய யோகங்களும் உண்டாகும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.
கொடுக்கல் வாங்கல்
ஆண்டின் தொடக்கத்தில் பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். கொடுக்கல்&வாங்கலில் சிறப்பான லாபம் அமையும். கடன்களும் குறையும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளிலும் வெற்றிக் கிட்டும். ஆண்டின் பிற்பாதியில் கொடுக்கல்&வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பது வாக்குறுதிகள் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும்.
தொழில் வியாபாரிகளுக்கு
புதிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். புதிய நவீன யுக்திகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலங்கள் உண்டாகும். போட்டி பொறாமைகளை சமாளிக்க கூடிய வாய்ப்பும், ஆற்றலும் உண்டாகும். நல்ல வேலையாட்களும் கிடைப்பார்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளும், உத்தியோக உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். செய்யும் பணிக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனநிம்மதியுடன் பணிபுரிய முடியும். உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகள் மூலம் வேலைபளுவைக் குறைத்துக் கொள்ள முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பமும் தடையின்றி நிறைவேறும். எதிர்பாராத இடமாற்றமும் கிட்டும்.
அரசியல்வாதிகளுக்கு
பெயர் புகழ் யாவும் உயரும். சமுதாயத்தில் நல்லதொரு இடத்தினைப் பிடிக்க முடியும். வரவேண்டிய வாய்ப்புகள், மாண்புமிகுப் பதவிகள் யாவும் கிட்டும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். கட்சிப் பணிகளுக்காக வெளியூர் வெளி நாடுகளுக்கும் சென்று வரக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வருமானம் பெருகும்.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். அரசு வழியிலும் பல மானிய உதவிகள் கிடைக்கப் பெறும். உழைப்பிற்கேற்றப் பலன்களை அடைவதால் பரம திருப்தி உண்டாகும். எடுக்கும் முயற்சிகளிலும் நிறைவான திருப்தி கிடைக்கும். பொருளாதார மேம்பாடுகளால் புதிய யுக்திகளை கையாண்டு மேலும் அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள். புதிய பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும்.
பெண்களுக்கு
உடல் நிலை அற்புதமாக இருக்கும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் தேடி வரும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத்தில் செலவுகளையும் தாராளமாக செய்ய முடியும். ஆடை ஆபரணம் சேரும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும்.
படிப்பு
மாணவ மாணவிகள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சியடைய முடியும். விளையாட்டுப் போட்டிகளிலும் பரிசுகளை பெற்று பாராட்டுதல்களை அடைவீர்கள். கல்விக்காக பயணங்களை மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளின் மூலம் அனுகூலம் கிட்டும்.
ஸ்பெகுலேஷன்
லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை இந்த ஆண்டின் முற்பாதி வரை ஈடுபடுத்தலாம். பிற்பாதியில் சற்று கவனம் தேவை.
ஜனவரி
அஞ்சா நெஞ்சமும், சிங்கம் போன்றத் துணிவும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் சனி ராகு சஞ்சரிப்பதாலும், மாத பற்பாதியில் சூரியன் 6&ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய விருப்பதாலும் நினைத்ததை நிறைவேற்றக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பணவரவுகள் தடையின்றிருப்பதால் கடன்கள் குறைவதோடு எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றிக்களைப் பெறுவீர்கள். சிலருக்கு சொந்த பூமி மனை வண்டி வாகனம் போன்றவற்றை வாங்கக் கூடிய யோகம் உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்களும் தடையின்றிகை கூடும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 06.01.2014 இரவு 09.36 மணி முதல் 09.01.2014 அதிகாலை 02.38 மணி வரை.
பிப்ரவரி
அன்பும், பண்பும், தெய்வீக பக்தியும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் சனி ராகுவும், மாத முற்பாதி வரை 6&இல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் இம்மாதமும் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினை அடைவீர்கள். பொருளாதார நிலை தாராளமாக இருக்கும். பொன்னும் பொருளும் சேரும். உங்களுக்குள்ள வம்பு வழக்குப் பிரச்சனைகளில் சுமூகமான தீர்ப்பு உண்டாகும். கொடுக்கல்&வாங்கலிலும் நல்ல லாபம் கிட்டும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரத்திலும் நல்லதொரு லாபமும் அபிவிருத்தியும் உண்டாகும். சேமிப்பு பெருகும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 03.02.2014 அதிகாலை 05.38 மணி முதல் 05.02.2014 காலை 10.26 மணி வரை.
மார்ச்
சூது வாது, கள்ளம் கபடம் இல்லாத உள்ளம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் சனி ராகுவும், 11&இல் குருவும் சஞ்சாரம் செய்வதால் பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும், உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்த உயர்வுகளும் கிட்டும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 02.03.2014 பகல் 01.33 மணி முதல் 04.03.2014 மாலை 06.08 மணிவரை
மற்றும் 29.03.2014 இரவு 09.23 மணி முதல் 01.04.2014 அதிகாலை 01.47 மணி வரை
ஏப்ரல்
விடா முயற்சியுடன் பல சாதனைகளை செய்யக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் ராகுவும், 11&இல் குருவும் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்றாலும் 8&ஆம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும், உற்றார் உறவினர்களிடம் பேசும் போதும் நிதானத்தை கடைபிடிக்கவும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. கொடுக்கல்&வாங்கலில் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 26.04.2014 காலை 05.17 மணி முதல் 28.04.2014 காலை 09.30 மணி வரை.
மே
பிறர் நலனில் அக்கரைக் கொள்ளும் நற்குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 9&இல் சூரியன், 11&இல் குரு சஞ்சாரம் செய்வதால் தொட்டதெல்லாம் துலங்கும். குடும்பத்திலுள்ளவர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் வெற்றியினை அடைவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் எந்த பிரச்சனைகளையும் எதிர் கொள்ளக் கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் இன்றி லாபத்தினைப் பெற முடியும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 23.05.2014 பகல் 01.21 மணி முதல் 25.05.2014 மாலை 05.26 மணி வரை
ஜீன்
தாராள மனப்பான்மையும் பெருந்தன்மையும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 10&இல் சூரியனும் 11&இல் குரு புதனும் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தொழில் வியாபாரமும் சிறப்பாக நடைபெறும். இம்மாதம் 13&ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் விரய ஸ்தானமான 12&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளார். இதனால் பணம் கொடுக்கல்&வாங்கலில் கவனமுடனிருப்பது நல்லது. வரும் 21&ஆம் தேதி ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் ராகு 2&லும் கேது 8&லும் சஞ்சரிக்கவிருப்பதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்லவும். துர்கை அம்மனை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 19.06.2014 இரவு 09.35 மணி முதல் 22.06.2014 அதிகாலை 01.27 மணி வரை
ஜீலை
முன் கோபியாக இருந்தாலும் இரக்ககுணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 10&இல் சுக்கிரனும், 11&இல் சூரியனும் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் குரு 12&இல் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்&வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. ஆடம்பர செலவுகளையும் குறைத்துக் கொள்ளவும். 2,8&இல் ராகு கேது சஞ்சரிப்பதால் கணவன்&மனைவி அனுசரித்து நடந்து கொள்வது. தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். முருகனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 17.07.2014 அதிகாலை 05.50 மணி முதல் 19.07.2014 அதிகாலை 03.31 மணி வரை
ஆகஸ்ட்
நியாயம் தவறாதவராகவும், மனசாட்சிக்கு கட்டுப்பட்டவராகவும் விளங்கும் உங்களுக்கு, ஜென்ம ராசிக்கு 3&இல் செவ்வாயும் சனியும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற முடியும். ராகு கேது 2,8&இல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் தோன்றி மறையும். விரய ஸ்தானத்தில் குரு, சூரியன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத வீண் விரயங்கள் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களை வாங்க முடியும் என்றாலும் சிந்தித்து செயல் படுவது நல்லது. தூக்கமின்மை, அலைச்சல் டென்ஷன் போன்றவற்றால் உடல் நிலையில் சோர்வு உண்டாகும். சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 13.08.2014 மதியம் 02.01 மணி முதல் 15.08.2014 மாலை 05.36 மணி வரை.
செப்டம்பர்
பிறர் மெச்சும்படியாக நடந்து கொள்ளும் உயர்ந்த பண்பு கொண்ட உங்களுக்கு முயற்சி ஸ்தானமான 3இல் செவ்வாய் சனி சஞ்சரிப்பதால் எதிலும் துணிந்து செயல்பட்டு வெற்றியினைப் பெறுவீர்கள். கொடுக்கல்&வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்யக் கூடிய காலம் என்பதால் பண விஷயங்களில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட்டால் அனுகூலம் பலனை அடைய முடியும். தேவையற்ற மருத்துவ செலவுகள் குறையும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவுகளால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். சேமிப்பு குறையும். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 09.09.2014 இரவு 10.04 மணி முதல் 12.09 2014 அதிகாலை 01.29 மணி வரை.
அக்டோபர்
எந்த காரியத்திலும் துணிந்து ஈடுபடக் கூடிய தைரியமும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் சனி ராகு சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 3&ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் எந்தவொரு காரியத்திலும் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். கொடுக்கல்&வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் நிறைய போட்டி பொறாமைகளை எதிர்கொள்ள நேரிட்டாலும், அடைய வேண்டிய லாபத்தினை அடைவீர்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். ஆடம்பர செலவுகளைக் குறைக்கவும். விநாயகரை தினமும் வழிபடவும்.
சந்திராஷ்டமம் 07.10.2014 காலை 06.04 மணி முதல் 09.10.2014 காலை 09.21 மணி வரை
நவம்பர்
எந்த கஷ்டங்களையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2,8&இல் சர்ப கிரகங்கள் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தேவையற்ற வீண் குழப்பங்கள் உண்டாகும். 3&இல் சூரியனும் சனியும் சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறைவேற்றும் ஆற்றலைப் பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை எதிர் கொள்ளும் வேண்டி வரும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். கொடுக்கல்&வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. துர்கை அம்மனை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 03.11.2014 மதியம் 02.11 மணி முதல் 05.11.2014 மாலை 05.22 மணி வரை.
டிசம்பர்
வாழ்க்கையில் பல முறை தோற்றாலும் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் உங்களுக்கு மாத பிற்பாதி வரை குரு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத விரயங்கள் உண்டாகும். 2,8&இல் ராகு கேதுவும் 4&இல் சூரியனும் சஞ்சரிப்பதால் அலைச்சல், டென்ஷன் குடும்பத்ல் தேவையற்ற பிரச்சனைகள் போன்றவை தோன்றும். தொழில் வியாபாரத்திலும் நிறைய போட்டிகள் நிலவும். இம்மாதம் 16ம் தேதி ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனி 4&ஆம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டம சனி தொடங்கவுள்ளது. இதனால் வீண் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். சிவ பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 30.11.2014இரவு 10.24 மணி முதல் 03.12.2014 அதிகாலை 01.26 மணி வரை மற்றும் 28.12.2014 காலை 06.38 மணி முதல் 30.12.2014 காலை 09.35 மணி வரை
மகம்
கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு வாழ்வில் எதையாவது சாதித்து விட வேண்டும் என்ற எண்ணம் மனதில் குடி கொண்டிருக்கும். இந்த வருடம் உங்களுக்கு ஒரு பொற்காலம் என்றே சொல்லாம். குடும்பத்தில் சுபிட்சமான நிலை, பொருளாதார மேன்மை, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி போன்ற யாவும் சிறப்பாக அமையும். சிலருக்கு சொந்த பூமி மனை, வாங்க வேண்டும் என்ற கனவுகளும் நினைவாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பொன், பொருள் சேரும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வுகள் கிட்டும்.
பூரம்
சுக்கிரனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள நீங்கள் காண்பவர்களை கவர்ந்திழுக்கும் கட்டழகு கொண்டவராக இருப்பீர்கள். இந்த வருடம் பணம் பல வழிகளில் தேடி வரும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கொடுக்கல்&வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கணவன்&மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் அனுகூலங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும்.
உத்திரம் & 1ம் பாதம்
சூரியனின் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு நல்ல மன வலிமையும் உண்மை பேசும் குணமும் இருக்கும். இந்த வருடம் முழுவதும் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றக் கூடிய ஆற்றல் உண்டாகும். பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். எடுக்கும் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். ஆடை ஆபரணம் சேரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரமும் சிறப்பாக நடைபெறும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை அபிவிருத்தியை பெருக்க உதவும். கொடுக்கல்&வாங்கலில் கவனம் தேவை.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் & 1,2,3,9,10,11,12,18
நிறம் & வெள்ளை, சிவப்பு
கிழமை & ஞாயிறு, திங்கள்
கல் & மாணிக்கம்
திசை& கிழக்கு
தெய்வம் & சிவன்
பரிகாரம்
சிம்ம ராசியில் பிறந்த உங்களுக்கு வரும் 13.06.2014 முதல் குரு விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்க விருப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது, குருப் ப்ரீதி தட்சிணா மூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சாற்றி நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. 21.06.2014 முதல் ராகு 2&லும் கேது 8&லும் சஞ்சரிக்க விருப்பதால் சர்ப சாந்தி செய்வது, துர்கை அம்மனை வழிபடுவது, தினமும் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நற்பலனை உண்டாக்கும்.
Contact
For your consultation
Please sent Rs 500 ,( 20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer ) in favour of MURUGU BALAMURUGAN with your birth details (date of birth,time,place) & 5 questions to ( e-mail ) me for horoscope readingplease contact my postal adress
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,
(Near Valli Thirumanamandapam)
Vadapalani,
Chennai-600026
My Cell - 0091 - 7200163001, 9383763001
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
Bank account details are
Name ; Murughu Balamurugan
Bank name - IndianbankSavings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078
Name ; R.Balamurugan
Bank name - Bank of BaradoSavings Account No - 29900100000322
Branch name - Vadapalani
Chennai - 600026.INDIA.
MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078
No comments:
Post a Comment