Wednesday, December 25, 2013

புத்தாண்டு பலன் 2014 மீனம்

புத்தாண்டு பலன்  2014 மீனம் 



காணத்தவறாதீர், காணத்தவறாதீர், காணத்தவறாதீர்
01.01.2014 அன்று விஜய் டிவியில் 
காலை 8.00 மணி முதல் 8.30 மணி வரை 
2014 ஆம் ஆண்டின் புத்தாண்டு பலன்கள் 
பற்றிய எனது சிறப்பு நிகழ்ச்சியை  காணத்தவறாதீர்


வாங்கி படிக்க தவறாதீர்கள் 

ஜனவரி 2014 ஓம்சரவணபவா இதழுடன்
காலம் எல்லாம் நோயின்றி 
வாழ ஜோதிட பாரிகாரங்கள் 
96 பக்கம் இலவச இனைப்பு
(மருத்துவ ஜோதிடம் பற்றிய முழுமையான புத்தகம் )







இப்படிக்கு
ஜோதிட மாமணி,முருகுபாலமுருகன்
முனைவர் பட்ட ஆய்வாளர்
 எண் 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, 
வடபழனி, சென்னை&600 026

செல்  0091&7200163001.9383763001,9841771188





மீனம் ; பூரட்டாதி & 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
     
அனைவரிடமும் கள்ளம் கபடமின்றி வெள்ளை உள்ளத்தோடு பழகும் மீன ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ராசிக்கு 2&இல் கேதுவும், 4&இல் குருவும், 8&ஆம் வீட்டில் ராகுவும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். இது மட்டுமின்றி சனியும் 8&இல் சஞ்சரிப்பதால் அஷ்டம சனியும் தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். எல்லா இருந்தும் அனுபவிக்க முடியாத அளவிற்கு அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். வரும் 13.06.2014இல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் 5&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் பொருளாதார நிலை மேன்மையடையும். குடும்பத்தில் தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கை கூடும். பூர்வீக சொத்தக்களால் அனுகூலங்களும், புத்திர வழியில் மகிழ்ச்சித் தர கூடிய சம்பவங்களும் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்களும் சேரும். 21.06.2014 &இல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் கேது ஜென்ம ராசியிலும் ராகு 7&லும் சஞ்சரிக்கவிருப்பதால் கணவன்-&மனைவி விட்டுக் கொடுத்து நடந்துக் கொள்வது நல்லது. நண்பர்களும் விரோதிகளாக மாறுவார்கள். இந்த வருட இறுதியில் 16.12.2014 இல் ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் உங்களுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் அஷ்டம சனி முழுவதும் முடிவடைந்து விடுவதால் வாழ்வில் நல்ல பல முன்னேற்றங்களை அடைய முடியும்.

தேக ஆரோக்கியம்

  உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய காலமிது. அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். கை கால் மூட்டுகளில் வலி, நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் போன்றவையும் உண்டாகும். எல்லா இருந்தும் அனுபவிக்க இயலாமல் போகும். குடும்பத்திலுள்ளவர்களும் நிம்மதியின்றி இருப்பார்கள்.

குடும்பம் பொருளாதார நிலை

  இந்த ஆண்டின் தொடக்கம் அவ்வளவு சாதகமானதாக இருக்கும் என்று கூற முடியாது. வீடு,வாகனம் போன்றவற்றால் வீண் செலவுகள் ஏற்படும். எல்லாம் இருந்தும் அனுபவிக்க தடையை கொடுக்கும். சுக வாழ்வு சொகுசு வாழ்வு பாதிப்படையும். கணவன்&மனைவியிடையேயும் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களும் தங்கள் பங்கிற்கு வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். ஆண்டின் பிற்பாதியில் பணவரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். திருமண சுப காரியங்களும் கை கூடும்.

கொடுக்கல் வாங்கல்

    ஆண்டின் தொடக்கத்தில் பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவும் என்பதால்  கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. ஆண்டின் பிற்பாதியிலிருந்து பணவரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். கொடுக்கல்&வாங்கல் சரளமாக நடைபெறும் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உங்களுக்குள்ள வம்பு வழக்கு பிரச்சனைகளில் இழுபறியான நிலையே நீடிக்கும். எதிலும் கவனமுடனிருப்பது நல்லது.

தொழில் வியாபாரிகளுக்கு

  தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்து செயல்படவும். வரவேண்டிய நல்ல வாய்ப்புகள் போட்டி பொறாமைகளால் கை நழுவிப் போகும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். ஆண்டின் பிற்பாதியில் எதிலும் சற்று ஆறுதலைப் பெற முடியும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிட்டும். அலைச்சல்கள் குறையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

  பணியில் வேலை பளு அதிகரிக்கும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். வீண் பழிச்சொற்களும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டு பிரிய வேண்டியிருக்கும். எதிர்பார்க்கும் சம்பள உயர்வுகளும் தாமதப்படும். ஆண்டின் பிற்பாதியில் பணியில் ஒரளவுக்கு நிம்மதியான நிலையினை அடைய முடியும். உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலை பளுவை குறைத்துக் கொள்ள முடியும்.

அரசியல்வாதிகளுக்கு

  பெயர் புகழ் மங்க கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது. மக்களின் தேவையறிந்து செயல்படுவது நல்லது. கட்சிப் பணிகளுக்காக நிறைய வீண் செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். பயணங்களாலும் அலைச்சல் அதிகரிக்கும். ஆண்டின் பிற்பாதியில் பணவரவுகளுக்கு பஞ்சம்  இருக்காது. மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும்.

விவசாயிகளுக்கு

    பயிர் விளைச்சல்  சுமாராகத் தானிருக்கும். புழு பூச்சிகளின் தொல்லைகளால் நிறைய வீண் செலவுகள் ஏற்படும். தகுந்த நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்காததால் அறுவடையில் தாமதம் உண்டாகும். விளை பொருளுக்கேற்ற  விலையினை சந்தையில் பெற முடியாமல் போகும். ஆண்டின் பிற்பாதியில் ஒரளவுக்கு எல்லா வகையிலும் முன்னேற்றத்தினை அடைய முடியும். அரசு வழியிலும் ஆதரவுகள் கிட்டும்.

பெண்களுக்கு

  உடல் ஆரோக்கியத்தில் அக்கரை எடுத்துக் கொண்டால் மட்டுமே அன்றாட பணிகளை தடையின்றி செய்து முடிக்க முடியும். ஆண்டின் பிற்பாதியில் பணவரவுகளில் இருந்த தடைகள் விலகும். கடன்கள் குறையும். திருமணம் போன்ற சுப காரியங்களும் கை கூடும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து செல்வது. உறவினர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது. மிகவும் நற்பலனை உண்டாக்கும்.

படிப்பு

  கல்வியில் சற்று ஈடுபாடற்ற நிலை ஞாபகமறதி, உடல் நிலை பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். கல்விக்காக சிலருக்கு அலைச்சல்கள் உண்டாகும். நல்ல நட்புக்களாக தேர்ந்தெடுத்து பழகுவது மூலம் அனுகூல பலனை அடையலாம்.

ஸ்பெகுலேஷன்

    லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றில் ஆண்டின் பிற்பாதியில் நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் அடைய முடியும்.

ஜனவரி

  கவர்ச்சியான முகத்தோற்றத்தை கொண்ட உங்களுக்கு, இம்மாத முற்பாதியில் சூரியன் 10&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் ரீதியாக ஒரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். கணவன்&மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய காலமாக இருக்கும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை ஏற்பட்டாலும் செலவுகள் கட்டுக்குள்  இருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைக்கவும் தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 23.01.2014 மதியம் 12.39 மணி முதல் 25,01.2014 மாலை 06.00 மணி வரை.

பிப்ரவரி
    கம்பீரமான உடலமைப்பைக் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 10&இல் சுக்கிரனும், 11&இல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். எடுக்கும் காரியங்களிலும் லாபங்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். கணவன்&மனைவியிடையே உண்டாக கூடிய வாக்கு வாதங்களால் நிம்மதி குறைவு உண்டாகும். உறவினர்களை அனுசரித்து செல்வது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். முருகனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 19.02.2014 இரவு 08.17 மணி முதல் 22.02.2014 அதிகாலை 01.53 மணி வரை.

மார்ச்
  கனிந்த பார்வையும், மலர்ந்த முகமும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 8&இல்  சனி, 12&இல் சூரியனும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களிடம், உறவினர்களிடமும் பேச்சில் கவனமுடனிருப்பது நல்லது. பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும், செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது, ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 19.03.2014 அதிகாலை 03.51 மணி முதல் 21.03.2014 காலை 09.38 மணி வரை.

ஏப்ரல்

  வெகு சீக்கிரத்தில் உணர்ச்சி வசப்பட கூடிய உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியனும் 7&இல் செவ்வாயும், 8&இல் சனி ராகுவும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் முடிந்த வரை உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்களை அடைய முடியும் என்றாலும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளாதிருப்பது நல்லது. கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சேமிக்க முடியாது. குருப்ரீதி, தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 15.04.2014 காலை 11.21 மணி முதல் 17.04.2014 மாலை 05.22 மணி வரை.

மே
  சமயத்திற்கேற்றார் போல வளைந்து கொடுத்து வாழக் கூடிய உங்களுக்கு இம்மாதமும் உங்களுக்கு சற்று சோதனைகள் நிறைந்தாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். மாத பிற்பாதியில் சூரியன் 3&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் எதிர்பாராத உதவிகள் மூலம் முன்னேற்றத்தை பெறுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே ஒற்றுமையினை அடைய முடியும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிக்கவும். ஆஞ்ச நேயரை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் 12.05.2014 மாலை 06.52 மணி முதல் 15.05.2014 அதிகாலை 01.16  மணி வரை.

ஜீன்
    நீதி நேர்மை தவறாமல் வாழும் பண்பு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். இம்மாதம் 13&ம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் பஞ்சம் ஸ்தானமான 5&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் குடும்பத்திலிருந்த பண பிரச்சனைகள் விலகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களும் தடபுடலாக நிறைவேறும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். கொடுக்கல்&வாங்கலும் சரளமாக நடைபெறும். வரும் 21 ஆம் தேதி ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் கேது ஜென்ம ராசியிலும் ராகு 7&லும் சஞ்சரிக்கவிருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. முருகப் பெருமானை வழிபாடு செய்வது நற்பலனை தரும்.

சந்திராஷ்டமம் 09.06.2014 அதிகாலை 02.41 மணி முதல் 11.06.2014 காலை 09.13 மணி வரை.

ஜீலை
    எதிலும் விட்டு கொடுத்து வாழும் மனோபாவம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் ராகுவும், 4&இல் சூரியனும் சஞ்சரிப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்றாலும் 5&இல் குரு சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். பூர்வீக சொத்து வழியில் லாபங்கள், அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவும். இம்மாதம் தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 06.07.2014 பகல் 10.29 மணி முதல் 08.07.2014 மாலை 05.14 மணி வரை.

ஆகஸ்ட்
     வெகு சீக்கிரத்தில் பிறரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக கூடிய குணம் கொண்ட உங்களுக்கு பஞ்சம ஸ்தானத்தில் குருவும் 6&இல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் எந்த வித எதிர்ப்புகளையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். தாராள தன வரவுகளால் கொடுக்கல்-&வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். பொன் பொருள் சேரும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். எதிர் பாராத உதவிகளும் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலை பளுவும் குறையும். வீடு வாகனம் போன்றவற்றை வாங்குவீர்கள். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 02.08.2014 மாலை 06.09 மணி முதல் 05.08.2014 அதிகாலை 01.09 மணி வரை.மற்றும் 30.08.2014 அதிகாலை 01.41 மணி முதல் 01.09.2014 காலை 08.58 மணி வரை.

செப்டம்பர்
    தாராள குணமும், தயாள குணமும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 5&இல் குருவும், 6&இல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் நினைத்தது நிறைவேறும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்துக் கொண்டால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்க்கவும். பயணங்களில் போது வேகத்தை குறைப்பது நல்லது. உறவினர்களால் சிறு சிறு மனசஞ்சலங்கள் ஏற்பட்டாலும் எதையும் சமாளிப்பீர்கள். முருகனை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் 26.09.2014 காலை 09.07 மணி முதல் 28.09.2014 மாலை 04.37 மணி வரை.

அக்டோபர்

     நல்ல கற்பனைத் திறன் கொண்ட உங்களுக்கு 5&இல் குரு சஞ்சரிப்பதால் பண வரவுகள் சரளமாக இருக்கும் என்றாலும் 7&இல் சூரியனும் சுக்கிரனும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை பாதிக்கும். உறவினர்களும் தங்கள் பங்கிற்கு வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். உடல் நிலையிலும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவதால் வீண் விரயங்கள் அதிகரிக்கும். மாத பிற்பாதியில் செவ்வாய் 9&இல் சஞ்சரிப்பதால் சொந்த பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். தொழில், வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. அம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 23.10.2014 மதியம் 04.27 மணி முதல் 25.10.2014 இரவு 12.17 மணி வரை.

நவம்பர்

     தன்னை நம்பியவர்களுக்கு உதவும் மனோ பாவம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 5&இல் குருவும் 10&இல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் உயர்வுகள் கிட்டும். பொருளாதார மேம்பாடுகளால் செல்வம் செல்வாக்கு உயரும். 8&இல் சூரியன் சஞ்சரிப்பதால் கணவன்&மனைவியிடையே வாக்கு வாதங்கள் உண்டாகும். உடல் நிலையிலும் பாதிப்புகள் ஏற்படும். கணவன்&மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். துர்கை அம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம் 19.11.2014 இரவு 11.59 மணி முதல் 22.11.2014 காலை 08.05 மணி வரை.

டிசம்பர்
     புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் செவி சாய்க்காத உங்களுக்கு 5&இல் குருவும் 9&இல் சுக்கிரனும், 11&இல் செவ்வாய் சஞ்சரிப்பதால் இம்மாதம் தொட்டதெல்லாம் துலங்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். செல்வம் செல்வாக்கு உயரும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். வரும் 16&ஆம் தேதி ஏற்படவுள்ள சனிப்பெயர்ச்சியால் உங்களுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் அஷ்டம சனி முழுவதும் முடிவடைந்துவிடுவதால் உடல் நிலையிலும் நல்ல மேன்மைகள் உண்டாகும். தொழில் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 17.12.2014 காலை 07.29 மணி முதல் 19.12.2014 மாலை 03.48 மணி வரை.

பூரட்டாதி& 4ம் பாதம்
குரு பகவானின் நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் நல்ல அறிவாற்றலும் பேச்சாற்றலும் இருக்கும். இந்த வருடத்தின் தொடக்கம் உங்களுக்கு அவ்வளவு சாதகமாக இருக்காது என்பதால் எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள் குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள், உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் போன்றவை உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். தொட்டதெல்லாம் துலங்கும். சேமிப்பும் பெருகும்.

உத்திரட்டாதி
    சனியின் நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் சொன்ன சொல்லை தவறாமல் காப்பாற்றக் கூடிய ஆற்றல் இருக்கும். இந்த வருடத்தின் தொடக்கத்தில் நீங்கள் எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். கொடுக்கல்&வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். ஆண்டின் பிற்பாதியில் பணவரவுகளில் முன்னேற்றம் இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கொடுக்கல்&வாங்கலும் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கும் பதவி உயர்வு கிட்டும்.

ரேவதி
  புதனின் நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் மற்றவர்களுக்கு பயன்படக் கூடிய அரிய சாதனைகளை செய்வீர்கள். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுப காரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும். நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் பிரச்சனைகள் ஏற்படும். ஆண்டின் பிற்பாதியில் உங்களுக்குள்ள பிரச்சனைகள் யாவும் விலகும். கடன்களும் குறையும். புதிய பூமி மனை சேரும். கணவன்&மனைவியிடையே சிறு சிறு பிரச்சனைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்  1,2,3,9,10,11,12
கிழமை  வியாழன், ஞாயிறு
திசை  வடகிழக்கு
நிறம்  மஞ்சள், சிவப்பு
கல்  புஷ்ப ராகம்
தெய்வம்  தட்சிணா மூர்த்தி

பரிகாரம்
    மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு அஷ்டம சனி நடைபெறுவதால் சனி ப்ரீதி ஆஞ்ச நேயரை வழிபாடு செய்வது சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெயில் தீபமேற்றுவது நல்லது. சர்ப கிரகங்களான ராகு&கேது சாதகமின்றி சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வது, ராகு காலங்களில் துர்கை வழிபாடு சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது. வரும் 13.06.2014 வரை குரு 4&இல் சஞ்சரிக்கவிருப்பதால் தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது.

Contact

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal address  
From  14  January 2014 My office address as follows

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,9841771188

https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078

Name ; R.Balamurugan
Bank name  - Bank of Barado
Savings Account No - 29900100000322
Branch name - Vadapalani
Chennai - 600026.INDIA.
MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA

No comments: