புத்தாண்டு பலன் 2014மிதுனம்
மிதுனம் மிருகசீரிஷம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள்
வசீகரமான கண்களும், சிறந்த பேச்சாற்றலும் எதிலும் சுறு சுறுப்பாக செயல்படக் கூடிய திறமையும் கொண்ட மிதுன ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் ஜென்ம ராசியிலேயே சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளும் உடல் நிலையில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் உண்டாகும். இது மட்டுமின்றி சனியும் ராகுவும் 5&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பூர்வீக சொத்துக்களால் வீண் விரயங்கள், புத்திர வழியில் மனசஞ்சலங்கள் போன்றவற்றை எதிர் கொள்வீர்கள் என்றாலும் கேது லாபஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று எதையும் சமாளிப்பீர்கள். வரும் 13.06.2014 இல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் 2&ஆம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பது நல்ல அமைப்பாகும். இதனால் உங்களுக்குள்ள பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து பொருளாதார நிலை மேன்மையடையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கணவன்&மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளிலும் அனுகூலமானப் பலன்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபங்களைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர் பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். வரும் 21.06.2014&இல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் ராகு 4லும் கேது 10லும் சஞ்சாரம் செய்யவிருப்பது ஒரளவுக்கு சுமாரான அமைப்பாகும். இந்த ஆண்டின் இறுதியில் 16.12.2014 ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனி பகவான் 6&ஆம் வீட்டிற்கு மாறுதலாகவிருப்பது அற்புதமான அமைப்பு- என்பதால் நினைத்தது நிறைவேறும்.
தேக ஆரோக்கியம்
உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள், சற்று மந்த நிலை, கைகால் அசதி போன்றவை ஏற்படும். அஜீரண கோளாறுகளும் உண்டாகும் என்றாலும் பெரிய அளவில் எந்த வித மருத்துவ செலவுகளும் ஏற்படாது. உடனே சரியாக அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத்தில் நிம்மதி நிலவும்.
குடும்பம் பொருளாதார நிலை
இந்த ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள், திருமணத் தடைகள் உண்டாகும் என்றாலும், ஆண்டின் பிற்பாதியில் குடும்பத்தில் சுபிட்சமான நிலை நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூமி மனை போன்றவற்றால் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய சொத்துக்கள் கிடைக்கும்.
கொடுக்கல் வாங்கல்
பண வரவுகளில் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும், பிற்பாதியில் தாராள தன வரவுகள் உண்டாகும். கொடுக்கல்&வாங்கலிலும் சரளமான நிலை ஏற்படும். நெருக்கடிகள் விலகும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் யாவற்றிலும் தடைகளுக்குப் பின்பே வெற்றி கிட்டும். பெரிய முதலீடுகளையும் ஈடுபடுத்தி லாபம் காண முடியும்.
தொழில் வியாபாரிகளுக்கு
இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிறு சிறு போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் போன்றவற்றால் வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போனாலும், ஆண்டின் பிற்பாதியில் எல்லா வகையிலும் மேன்மைகளை அடைய முடியும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலங்கள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகள் ஒற்றுமையுடனிருப்பார்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் சற்று வேலை பளு அதிகரிப்பதுடன், எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும் என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் பணியில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் கௌரவமான பதவிகள் கிடைக்கும். திறமைக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதல் மனமகிழ்ச்சி உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் பணியினை தற்போது பயன்படுத்தி கொள்வது நல்லது.
அரசியல்வாதிகளுக்கு
கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய வேண்டியிருந்தாலும், கௌரவம் புகழ் யாவும் சிறப்பாக இருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி மக்களின் ஆதரவையும் பெறுவீர்கள். பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய வாய்ப்புகள் உண்டாகும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் ஒரளவுக்குச் சிறப்பாக இருக்கும் என்றாலும் புழு பூச்சிகளின் தொல்லைகளால் பயிரை காப்பாற்ற அதிக செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். அரசு வழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கப் பெற்று அனைத்தையும் சரி செய்ய முடியும். புதிய பூமி மனை வாங்கும் வாய்ப்பும் ஏற்படும். தொழிலாளர்களின் உதவியும் கிடைக்கும்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்காது. ஆண்டின் முற்பாதிவரை பணவரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும், பிற்பாதியில் தாராள தன வரவைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் குடியேறும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் தேடி வரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.
படிப்பு
கல்வியில் சற்று ஈடுபாட்டுடன் செயல் பட்டால் அடைய நினைத்த மதிப்பெண்களை அடைந்து விட முடியும். கல்விக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அரசு வழியில் ஆதரவுகளும் உண்டாகும். பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும்.
ஸ்பெகுலேஷன்
இந்த ஆண்டின் முற்பாதி வரை லாட்டரி, ரேஸ்,ஷேர், போன்றவற்றில் பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். பிற்பாதியில் எதிலும் லாபத்தை அடையக் கூடிய அதிர்ஷ்டம் உண்டாகும்.
ஜனவரி
கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கும் உங்களுக்கு இம்மாதம் ஜென்ம ராசிக்கு 4&இல் செவ்வாயும் 7&இல் சூரியனும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். லாபஸ்தானமான 11&இல் கேது சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது, தேவையற்றப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. 7&இல் சூரியன் சஞ்சரிப்பதால் கணவன்&மனைவி இடையே தேவையற்ற வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். பொது நலக் காரியங்களில் ஈடுபடக் கூடிய வாய்ப்பு, பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். இம் மாதம் முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 02.01.2014 மதியம் 03.50 மணி முதல் 04.01.2014 மாலை 06.18 மணி வரை
மற்றும் 29.01.2014 இரவு 12.04 மணி முதல் 01.02.2014 அதிகாலை 02.28 மணி வரை
பிப்ரவரி
ஜென்ம ராசியில் குருவும், 4&இல் செவ்வாயும், 8&இல் சூரியனும் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று நிதானமுடன் செயல் படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் டென்ஷன்களை சந்திப்பீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்திலும் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும். பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டானாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்&வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். இம்மாதம் சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 26.02.2014 காலை 08.08 மணி முதல் 28.02.2014 காலை 10.29 மணி வரை
மார்ச்
தந்திரமாக எதையும் சாதிக்க கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு இம்மாதம் பாக்கிய ஸ்தானத்தில் சூரியனும், லாப ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் கடந்த கால பிரச்சனைகளிலிருந்து ஒரளவுக்கு விடுபடுவீர்கள். பணவரவுகள் தேவைக் கேற்றபடி இருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களும், புத்திரர்களால் மனசஞ்சலங்களும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் நிம்மதியுடன் செயல் பட முடியும். துர்க்கை அம்மனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 25.03.2014 மாலை 04.04 மணி முதல் 27.03.2014 இரவு 06.26 மணி வரை.
ஏப்ரல்
உயரமான தேகமும், மெலிந்த உடலமைப்பும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 10&இல் சூரியனும், 11&இல் கேதுவும் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். பணவரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் உண்டானாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். பணம் கொடுக்கல்&வாங்கலில் கவனமுடனிருப்பது நல்லது. திருமண சுப காரியங்களில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல் பட்டால் வீண் விரயங்களை குறைக்கலாம். இம்மாதம் சனி ப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடவது நல்லது.
சந்திராஷ்டமம் 21.04.2014 இரவு 12.07 மணி முதல் 24.04.2014 அதிகாலை 02.26 மணி வரை.
மே
பிறரை நையாண்டி செய்வதில் வல்லவரான உங்களுக்கு, ஜென்ம ராசிக்கு 10&இல் சுக்கிரனும், 11&இல் சூரியனும் புதனும் சஞ்சாரம் செய்வதால் தாராள தன வரவுகள் உண்டாகி குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல்&வாங்கலில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. கணவன்&மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத உயர்வுகள் கிட்டும். இம்மாதம் தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 19.05.2014 காலை 08.16 மணி முதல் 21.05.2014 காலை 10.35 மணி வரை
ஜீன்
யாருக்கும் அடிபணியாத குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 4&இல் செவ்வாயும் 12&இல் சூரியனும் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன், ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் வரும் 13&ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் தனஸ்தானத்தில் சஞ்சரிக்கவிருப்பதால் பணவிஷயங்களிலிருந்த நெருக்கடிகள் யாவும் குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும். இம்மாதம் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் இது வரை 5,11&இல் சஞ்சரித்த ராகு கேது, மாறுதலாகி 4&இல் ராகுவும் 10&இல் கேதுவுமாக சஞ்சரிக்க விருப்பதும் குறிப்பிடத் தக்கதாகும். ஆஞ்ச நேயரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 15.06.2014 மதியம் 04.21 மணி முதல் 17.06.2014 மாலை 06.51 மணி வரை.
ஜீலை
நல்ல அறிவும் சாமர்த்தியமும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பது உஷ்ண சம்மந்தப்பட்ட ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றாலும், உங்கள் ராசியாதிபதி புதன் ஆட்சிப் பெற்று அமைந்திருப்பதாலும், குரு 2&ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதாலும் நினைத்ததெல்லாம் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் கை கூடும். கொடுக்கல்&வாங்கலிருந்தப் பிரச்சனைகள் விலகி கொடுத்த கடன்களும் வசூலாகும். தொழில் வியாபாரத்திலும் லாபம் பெருகும். போட்டி பொறாமைகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். வேலை பளு குறையும். சிவ பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 12.07.2014 இரவு 12.52 மணி முதல் 14.07.2014 இரவு 03.13 மணி வரை.
ஆகஸ்ட்
வசீகரமான கண்களைக் கொண்ட உங்களுக்கு தன ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் பண வரவுகள் தாராளமாக இருக்கும். குடும்த்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கணவன் &மனைவியிடையே ஒற்றுமை நிலவும். சொந்த பூமி மனை வாங்கும் யோகம் உண்டாகும் என்றாலும் சற்று சிந்தித்து செயல் படவும், பயணங்களின் போது கவனமுடனிருப்பது, வேகத்தை குறைப்பது நல்லது. மாத பிற்பாதியில் சூரியன் 3&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் யோகமும், பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். துர்கை அம்மனை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 09.08.2014 காலை 09.04 மணி முதல் 11.08.2014 காலை 11.29 மணி வரை.
செப்டம்பர்
வெளி வட்டாரங்களில் அனைவரிடமும் அன்பாக பழகக் கூடிய பண்பு கொண்ட உங்களுக்கு, ஜென்ம ராசிக்கு 2&இல் குருவும், 3&இல் சூரியனும், 6&இல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் தொட்ட தெல்லாம் துலங்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் இனிமையானப் பலன்களைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும். வேலை பளு குறையும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 05.09.2014 இரவு 05.09 மணி முதல் 07.09.2014 இரவு 07.35 மணி வரை.
அக்டோபர்
பிறரை எளிதில் வசப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு தனஸ்தானத்தில் குருவும் மாத முற்பாதி வரை செவ்வாய் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் எந்த வித பிரச்சனைகளையும் எதிர் கொள்ளக் கூடிய வலிமையும் வல்லமையும் கூடும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக அமையும். பொருளாதார நிலையில் நல்ல மேம்பாடுகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். கொடுக்கல்&வாங்கலில் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். உடன் பணி புரிபவர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். இம்மாதம் சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.
சந்திராஷ்டமம் 03.10.2014 அதிகாலை 01.10 மணி முதல் 05.10.2013 காலை 03.39 மணி வரை.
நவம்பர்
தர்ம குணமும், தெய்வ பக்தியும் கொண்ட உங்களுக்கு 2&இல் குரு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சமும், சுப காரியங்கள் கை கூடக் கூடிய அமைப்பும் உண்டாகும். மாத பிற்பாதியில் சூரியனும் 6&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் விலகும். பொன் பொருள் சேரும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். தொழில் வியாபாரம் சிறப்பாக அமையும். அசையும் அசையா சொத்துக்கள் சேரும். கடன்கள் யாவும் குறையும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 30.10.2014 காலை 09.15 மணி முதல் 01.11.2014 பகல் 11.48 மணி வரை.மற்றும் 26.11.2014 மாலை 05.24 மணி முதல் 28.11.2014 இரவு 07.59 மணி வரை.
டிசம்பர்
ஆடம்பரமாக செலவு செய்வதில் அலாதிப்பிரியம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2&இல் குரு, 6&இல் சூரியன், 10&இல் கேது சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் மேன்மையடையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கொடுக்கல்&வாங்கலில் லாபம் கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். உற்றார் உறவினர்களிடையே தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பார்க்கும் உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைக்கும். இந்த மாதம் 16 ஆம் தேதி முதல் சனி 6&இல் சஞ்சரிக்கும் விருப்பதால் வெற்றி மேல் வெற்றி கிட்டும். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 23.12.2014 இரவு 01.35 மணி முதல் 26.12.2014 அதிகாலை 04.18 மணி வரை.
மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள்
ரத்த காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் எப்பொழுதும் பரபரப்பாக செயல்படக் கூடிய ஆற்றல் இருக்கும். இந்த வருடத்தில் தொடக்கத்தில் சிறு சிறு பிரச்சனைகள், மறைமுக எதிர்ப்புகள் போன்றவற்றை சந்தித்தாலும், ஆண்டின் பிற்பாதியில் எல்லா வகையிலும் மேன்மைகள் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்&வாங்கல் லாபமளிக்கும். தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரவுகளும் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உயர்வுகள் உண்டாகும்.
திருவாதிரை
சர்ப கிரகமான ராகுவின் நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் முன்கோபமும், முரட்டுத்தனமும் இயல்பிலேயே இருக்கும். இந்த ஆண்டின் முற்பாதி வரை சோதனைகளும் வேதனைகளும் ஏற்பட்டாலும், ஆண்டின் பிற்பாதியில் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிக் கிட்டும். ஆடை ஆபரணம் சேரும். சிலருக்கு சொந்த பூமி மனை வாங்க கூடிய யோகமும் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். செய்யும் தொழில் வியாபாரத்தை விருத்தி செய்ய இயலும். பயணங்களின் போது சற்று கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களின் பெயர் புகழ் உயரும். கடன்கள் குறையும்.
புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்
குருவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ளதால் நல்ல வாக்கு வன்மையும் நன்றி மறவாத குணமும் இருக்கும். இந்த ஆண்டின் தொடக்கமானது ஏற்ற இறக்கமானப் பலன்களைக் கொடுக்கும். பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாகும் என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் எதிர்பார்க்கும் உயர்வுகள், மேன்மைகள் யாவும் கிடைக்கும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத்தின் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். கொடுக்கல்&வாங்கல் லாபமளிக்கும். தொழில் வியாபாரமும் சிறப்பாக நடைபெறும். பெரிய மனிதர்களின் நட்புக்களால் நற்பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷடம் அளிப்பை
எண் 5,6,8,14,15,17
நிறம் பச்சை, வெள்ளை
கிழமை புதன், வெள்ளி
கல் மரகதம்
திசை வடக்கு
தெய்வம் விஷ்ணு
பரிகாரம்
மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 13.06.2014 வரை குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குருப் ப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது கொண்டக்கடலை மாலை சாற்றுவது நல்லது. சனி 5 இல் சஞ்சரிப்பதால் சனி ப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடவும். 21.6.2014 வரை ராகு 5இல் சஞ்சரிப்பதால் துர்கை அம்மனை ராகு காலங்களில் வழிபடுவது நல்லது.
Contact
For your consultation
Please sent Rs 500 ,( 20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer ) in favour of MURUGU BALAMURUGAN with your birth details (date of birth,time,place) & 5 questions to ( e-mail ) me for horoscope readingplease contact my postal adress
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,
(Near Valli Thirumanamandapam)
Vadapalani,
Chennai-600026
My Cell - 0091 - 7200163001, 9383763001
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
Bank account details are
Name ; Murughu Balamurugan
Bank name - IndianbankSavings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078
Name ; R.Balamurugan
Bank name - Bank of BaradoSavings Account No - 29900100000322
Branch name - Vadapalani
Chennai - 600026.INDIA.
MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078
No comments:
Post a Comment