Monday, December 23, 2013

புத்தாண்டு பலன் & 2014- மகரம்

புத்தாண்டு பலன் & 2014- மகரம்


காணத்தவறாதீர், காணத்தவறாதீர், காணத்தவறாதீர்
01.01.2014 அன்று விஜய் டிவியில் 
காலை 8.00 மணி முதல் 8.30 மணி வரை 
2014 ஆம் ஆண்டின் புத்தாண்டு பலன்கள் 
பற்றிய எனது சிறப்பு நிகழ்ச்சியை  காணத்தவறாதீர்


வாங்கி படிக்க தவறாதீர்கள் 

ஜனவரி 2014 ஓம்சரவணபவா இதழுடன்
காலம் எல்லாம் நோயின்றி 
வாழ ஜோதிட பாரிகாரங்கள் 
96 பக்கம் இலவச இனைப்பு
(மருத்துவ ஜோதிடம் பற்றிய முழுமையான புத்தகம் )

இப்படிக்கு
ஜோதிட மாமணி,முருகுபாலமுருகன்
முனைவர் பட்ட ஆய்வாளர்
 எண் 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, 
வடபழனி, சென்னை&600 026

செல்  0091&7200163001.9383763001,9841771188



மகரம் ; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதங்கள்
     
ஆக்கும் சக்தியும், அழிவதை தடுக்கும் சக்தியும் கொண்ட மகர ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2014&ஆம் ஆண்டின் தொடக்கம் உங்களுக்கு அவ்வளவு சாதகமானதாக இருக்காது. குரு பகவான் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும், கேது 4&லும், சனி,ராகு 10&லும் சஞ்சாரம் செய்வதாலும் எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைந்து கொண்டால் கடன்களின்றி வாழ முடியும். வரும் 13.06.2014 &இல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் 7&ஆம் வீட்டிற்கு மாறுதலாகவிருப்பதால் பொருளாதார நிலை மேன்மையடையும். குரும்பத்தில் தடைப்பட்ட திருமண சுப காரியங்களும் கை கூடும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்க கூடிய யோகமும் உண்டாகும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். கொடுக்கல்&வாங்கலிருந்த நெருக்கடிகள் குறையும். கொடுத்த கடன்களையும் வசூலிக்க முடியும். வரும் 21.06.2014 இல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் கேது பகவான் 3&ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்க்கும் உயர்வுகள் இடமாற்றங்கள் யாவும் சிறு சிறு தடைகளுக்குப் பின் கிட்டும். இந்த வருட இறுதியில் 16.12.2014 &இல் ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனி பகவான் லாப ஸ்தானமான 11&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.

தேக ஆரோக்கியம்
  உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்களால் உடல் நிலை சோர்வடையும் குடும்பத்தில் ஏற்படக் கூடிய பிரச்சனைகளாலும் மனநிம்மதி குறையும் என்றாலும் எதையும் எதிர் கொண்டு ஏற்றத்தை அடைவீர்கள்.

குடும்பம் பொருளாதார நிலை
  இந்த ஆண்டின் தொடக்கம் சற்று சோதனைகள் நிறைந்ததாகவே இருக்கும். உறவினர்களிடையே ஒற்றுமை குறைவு, கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடு, பொருளாதார நிலையில் இடையூறு போன்றவை உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் எல்லா வகையிலும் ஒரளவுக்கு முன்னேற்றத்தை அடைய முடியும். பொருளாதார முன்னேற்றங்களால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்கள் கை கூடி கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

கொடுக்கல் வாங்கல்
  ஆண்டின் தொடக்கத்தில் பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் பணம் கொடுக்கல்&வாங்கலில் சிந்தித்து செயல்படுவது, பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. ஆண்டின் பிற்பாதியில் பணவரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். கொடுக்கல்&வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகும்.

தொழில் வியாபாரிகளுக்கு
  தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்க்கொள்ளும் பயணங்களால் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலங்களும் உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களால் நற்பலன் ஏற்பட்டு அபிவிருத்தியை பெருக்க முடியும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

உத்தியோகஸ்தர்களுக்கு
  பணிபுரிபவர்களுக்கு பணியில் வீண் பிரச்சனைகள், பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் எதிர் பார்த்த பதவி உயர்வுகள் தடைகளுக்குப் பின் கிட்டும். சிலருக்கு எதிர் பார்க்கும் இடமாற்றங்களும் கிடைக்கப் பெறும். நிலுவையிலிருந்த சம்பள பாக்கிகளும் கைக்கு கிடைக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பால் வேலை பளுவை குறைத்துக் கொள்ள முடியும்.

அரசியல்வாதிகளுக்கு
  பெயர் புகழை காப்பாற்றிக் கொள்ள அரும்பாடு படவேண்டியிருக்கும். மக்களின் ஆதரவும் எதிர்பார்த்தபடி இருக்காது. எடுக்கும் முயற்சிகளிலும் இடையூறுகளை சந்திக்க நேரிடும். ஆண்டின் பிற்பாதியில் ஒரளவுக்கு நற்பலன்களை எதிர் பார்க்க முடியும். கட்சிப் பணிகளுக்காக செலவு செய்ய நேர்ந்தாலும் பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும்.

விவசாயிகளுக்கு
  பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபட வேண்டி வரும். புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் விரயங்களும் உண்டாகும். பங்காளிகள் மற்றும் உறவினர்களிடம் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்படும். ஆண்டின் பிற்பாதியில் எல்லா வகையிலும் லாபங்களையும் முன்னேற்றங்களையும் பெற முடியும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கடன்கள் குறையும்.

பெண்களுக்கு
  உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாடப் பணிகளில் சுறு சுறுப்பாக செயல்பட முடியும். ஆண்டின் தொடக்கத்தில் பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் பிற்பாதியில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை ஏற்படுத்துவதால் அமையும்.

படிப்பு

கல்வியில் ஞாபகமறதி, நாட்டமின்மை போன்றவை ஏற்பட்டாலும், முழு முயற்சியுடன் பாடுபட்டால் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. அரசு வழியில எதிர் பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின்பு கிடைக்கும். பெற்றோர் அசிரியரிடம் நற்பெயரை பெறுவீர்கள்.

ஸ்பெகுலேஷன்

  ஆண்டின் தொடக்கத்தில் ஷேர் லாட்டரி, ரேஸ் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. பிற்பாதியில் நற்பலனை அடைய முடியும்.

ஜனவரி

  ஈனை குணமும், உதாரண குணமும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&இல் சஞ்சரிக்கும் குரு வக்ர கதியிலிருப்பதும், 9&இல் செவ்வாய் சஞ்சரிப்பம் ஒரளவுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அமைப்பாகும். பண வரவுகள் தேவைக் கேற்ற படியிருக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். குடும்பத்திலுள்ள தடைப்பட்ட திருமணம் போன்ற சுப காரியங்கள் கை கூடும். பூமி மனை போன்றவற்றாலும் சிறு சிறு லாபங்கள் அமையும். கொடுக்கல்&வாங்கல் சரளமாக நடைபெறும் பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். இம்மாதம் சனிக்கு பரிகாரம் அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் 18.01.2014 மாலை 06.48 மணி முதல் 21.01.2014 காலை 04.56 மணி வரை.

பிப்ரவரி

  நண்பர்களிடமும், விரோதிகளிடமும் சமமாக பழகும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். 6&இல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியிலிருப்பதால் பண வரவுகள் சரளமாக இருக்கும். 9&ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால் செல்வம் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி, சுப காரியங்கள் கை கூடும் அமைப்பு, கடன்கள் குறையக் கூடிய வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்றே கவனமுடன் செயல்படுவது நல்லது. வேலையாட்களில் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியினை அளிக்கும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 15.02.2014 அதிகாலை 01.59 மணி முதல் 17.02.2014 பகல் 12.18 மணி வரை

மார்ச்

  எதையும் எளிதில் கிரகித்து கொள்ளும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் சூரியன் 10&இல் செவ்வாய் ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகள் சரளமாகவே இருக்கும். பயணங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமும், சுப காரிய முயற்சிகளில் அனுகூலமும், கணவன்&மனைவியிடையே ஒற்றுமையும் நிலவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறு சிறு போட்டிகள் பொறாமைகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். உத்தியோகத்திலும் கவனமுடன் செயல்படுவது நற்பலனை தரும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது. 

சந்திராஷ்டமம் 14.03.2014 காலை 09.05 மணி முதல் 16.03.2014 மாலை 07.34 மணி வரை.

ஏப்ரல்

  எத்தகைய துன்பம் நேர்ந்தாலும் மனம் தளராத உங்களுக்கு, மாத முற்பாதி வரை சூரியன் 3&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் ஒரளவுக்கு அனுகூலப் பலன்களைப் பெற முடியும். பணவரகளில் நெருக்கடிகள் ஏற்படக் கூடிய காலம் என்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. உற்றார் உறவினர்களிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். கொடுக்கல்&வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில் வியாபாரத்திலிருந்தப் போட்டிகள் சற்று குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிம்மதியுடன் பணிபுரிய முடியும். குரு ப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 10.04.2014 மாலை 04.09 மணி முதல் 13.04.2014 அதிகாலை 02.52 மணி வரை.

மே

  உழைப்பையே தெய்வமாக கருதும் பண்பு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 4&இல் சூரியனும், 6&இல் குருவும் சஞ்சரிப்பதால் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள், பிரச்சனைகள் உண்டாகும். குடும்பத்திலும் நிம்மதி குறைவுகள் ஏற்படும். பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. செவ்வாய் 9&இல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் திறமைக்கேற்ற உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். இம்மாதம் சிவபெருமானை வழிபாடு செய்வது நற்பலனை தரும். 

சந்திராஷ்டமம் 07.05.2014 இரவு 11.20 மணி முதல் 10.05.2014 பகல் 10.13 மணி வரை.

ஜீன்
    பிடிவாத குணம் இருந்தாலும் வீண் பிடிவாதம் இல்லாத உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 9&இல் செவ்வாய் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 6&ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததை நிறைவேற்ற முடியும். இம்மாதம் 13&ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் 7&ஆம் வீட்டிற்கு மாறுதலாகவிருப்பது சிறப்பாகும். இதனால் பணவரவுகளிலிருந்த தடைகள் விலகும். சுப காரியங்கள் கை கூடும். வரும் 21 ஆம் தேதி ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் கேது 3&ஆம் வீட்டிற்கு மாறுதலாகவிருப்பதன் மூலம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் உண்டாகும். துர்கை அம்மனை வழிபடுவது நற்பலனை தரும்.

சந்திராஷ்டமம் 04.06.2014 காலை 06.38 மணி முதல் 06.06.2014 மாலை 05.40 மணி வரை.

ஜீலை  
  எடுத்துக் கொண்ட காரியத்தில் கண்ணாக செயல்படும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&இல் சூரியனும் 7&இல் குருவும் சஞ்சரிப்பதால் பணம் பல வழிகளில் தேடி வரும். எந்த வித எதிர்ப்புகளையும் எதிர் கொண்டு வெற்றி பெறக் கூடிய வாய்ப்பு உண்டாகும். குடும்பத்திலிருந்த பிரச்சனைகள் விலகும். பிரிந்த உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். கடன்கள் குறையும். மங்களகரமான சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். தொழில் வியாபாரமும் சிறப்பாக நடைபெறும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். சனி ப்ரீதி ஆஞ்ச நேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 01.07.2014 மதியம் 02.02 மணி முதல் 04.07.2014 அதிகாலை 01.13 மணி வரை.மற்றும் 28.07.2014 இரவு 09.24 மணி முதல் 31.07.2014 காலை 08.40 மணி வரை.-

ஆகஸ்ட்
  தேவையற்ற கோபமோ, மனசஞ்சலமோ கொள்ளாத குணம் கொண்ட உங்களுக்கு 3&இல் கேதுவும், 7&இல் குருவும், 10&இல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்துக் கொண்டால் அனுகூலப்பலனை அடைய முடியும். அபிவிருத்தியும் பெருகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் குறையும். சிலருக்கு பூமி மனை வண்டி வாகனம் வாங்க கூடிய யோகமும் உண்டாகும். செல்வம் செல்வாக்கு உயரும். சேமிப்பும் பெருகும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 25.08.2014 அதிகாலை 04. 37 மணி முதல் 27.08.2014 மதியம் 03.59 மணி வரை.

செப்டம்பர்
    எவ்வளவு சிக்கல்கள் ஏற்பட்டாலும் எளிதில் சமாளிக்க கூடிய  ஆற்றல் கொண்ட உங்களுக்கு 7&ஆம் வீட்டில் குரு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும் என்றாலும் 8&இல் சூரியன் சஞ்சரிப்பதால் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு மருத்தவ செலவுகள் உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்ற படியிருக்கும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருள் தேக்கம் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களும் உயர்வடைய முடியும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 21.09.2014 பகல் 11.41 மணி முதல் 23.09.2014 இரவு 11.10 மணி வரை.

அக்டோபர்

  எதிலும் சிறிது பெரிது என வித்தியாசம் பாராமல் செயல்படும் உங்களுக்கு 3&இல் கேதுவும், 7&இல் குருவும், 11&இல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் நினைத்தது நிறைவேறும் பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சுப காரியங்களும் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்&வாங்கலும் திருப்தியளிக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகும். கூட்டாளிகளாலும், தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்பட முடியும். கடன்களும் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கும் உயர்வுகள் ஏற்படும். ஆஞ்ச நேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 18.10.2014 மாலை 06.39 முதல் 21.10.2014 காலை 06.20 மணி வரை.

நவம்பர்

  வாக்கு சாதுர்யம் படைத்த உங்களுக்கு 9&இல் சூரியனும்,11&இல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபார ரீதியாகவும் லாபங்களும், முன்னேற்றங்களும் ஏற்படும். பயணங்களால் லாபங்கள் கிட்டும். பொருளாதார உயர்வுகளால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களும் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். இம்மாதம் முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 15.11.2014 அதிகாலை 01.58 மணி முதல் 17.11.2014 மதியம் 01.25 மணி வரை.

டிசம்பர்
    தானுண்டு தன் வேலையுண்டு என பாடுபடும் குணம் கொண்ட உங்களுக்கு 7&இல் குருவும், 11&இல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. மாதபிற்பாதியில் 12&இல் சுக்கிரனும், சூரியனும் சஞ்சரிப்பதால் குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில் வியாபார ரீதியாகவும் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும் என்றாலும் இம்மாத பிற்பாதியில் ஏற்படக் கூடிய சனி மாற்றத்தால் சனி பகவான் லாப ஸ்தானமான 11&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் எல்லா வகையிலும் ஏற்றங்களும் உண்டாகும். குடும்பத்திலும் மகிழ்ச்சியும், சுபிட்சமும் ஏற்படும். அம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 12.12.2014 காலை 09.11 மணி முதல்14.12.3014 இரவு 08.51 மணி வரை.

உத்திராடம் 2,3,4ம் பாதங்கள்,

  சூரியனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு நல்ல மனவலிமையும், வைராக்கியமும் இருக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நீங்கள் எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவும். தேவையற்ற வம்பு வழக்குகளும் உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் எதிலும் ஒரளவுக்கு முன்னேற்றத்தை அடைய முடியும். பண விஷயத்திலிருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் கை கூடும். பொன்னும் பொருளும் சேரும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். தொழில் வியாபாரத்தில் லாபம் பெருகும்.

திருவோணம்

  சந்திரனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு எல்லோருக்கும் உதவ கூடிய பரந்த மனப்பான்மை இருக்கும். இந்த வருடத்தின் தொடக்கம் உங்களுக்கு அனுகூலமானப் பலனைத் தராது என்பதே உண்மை என்பதால் பணம் கொடுக்கல்&வாங்கலில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. தேவையற்ற பயணங்களையும் தவிர்க்கவும். ஆண்டின் பிற்பாதியில் குடும்பத்திலிருந்த பிரச்சனைகள் விலகி கணவன்&மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியிலும் மகிழ்ச்சி நிலவும். பயணங்களால் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் லாபங்களும் உண்டாகும். கடன்கள் யாவும் குறையும்.

அவிட்டம் 1,2ம் பாதங்கள்

  செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள நீங்கள் உங்கள் பேச்சாற்றலால் எதிரிகளை ஓட ஒட விரட்டுவீர்கள். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொடுக்கல்&வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். எதிர்பார்த்து காத்திருக்கும் உதவிகளும் தாமதமடையும் என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் நினைத்ததை நிறைவேற்றக் கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். குடும்பத்தில் சுப காரியங்களும் கை கூடும். பொருளாதார மேம்பாடுகளால் செல்வம் செல்வாக்கும் உயரும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலப் பலனை அடைய முடியும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் & 8,5,6,17,14,15 
கிழமை & சனி புதன் 
திசை & மேற்கு
நிறம் & நீலம், பச்சை
கல் & நீலக்கல்
தெய்வம் &ஐயப்பன்

பரிகாரம்
  மகர ராசியில் பிறந்துள்ள  உங்களுக்கு வரும் 13.06.2014 வரை குரு பகவான் 6&ஆம்  வீட்டில் சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது, வியாழக்கிழமை தோறும் குருப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது. சனிபகவான் ஜீவன ஸ்தானமான 10&இல் சஞ்சரிப்பதால் சனி ப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடவும் வரும் 21.06.2014 வரை கேது 4லும் ராகு 10&லும் சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வது, துர்கை அம்மன் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்க்கொள்வது நற்பலனை உண்டாக்கும்.

Contact

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal address  
From  14  January 2014 My office address as follows

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,9841771188

https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078

Name ; R.Balamurugan
Bank name  - Bank of Barado
Savings Account No - 29900100000322
Branch name - Vadapalani
Chennai - 600026.INDIA.
MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078

No comments: