Wednesday, December 25, 2013

புத்தாண்டு பலன் 2014 கும்பம்

புத்தாண்டு பலன்  2014  கும்பம் 

காணத்தவறாதீர், காணத்தவறாதீர், காணத்தவறாதீர்
01.01.2014 அன்று விஜய் டிவியில் 
காலை 8.00 மணி முதல் 8.30 மணி வரை 
2014 ஆம் ஆண்டின் புத்தாண்டு பலன்கள் 
பற்றிய எனது சிறப்பு நிகழ்ச்சியை  காணத்தவறாதீர்


வாங்கி படிக்க தவறாதீர்கள் 

ஜனவரி 2014 ஓம்சரவணபவா இதழுடன்
காலம் எல்லாம் நோயின்றி 
வாழ ஜோதிட பாரிகாரங்கள் 
96 பக்கம் இலவச இனைப்பு
(மருத்துவ ஜோதிடம் பற்றிய முழுமையான புத்தகம் )

இப்படிக்கு
ஜோதிட மாமணி,முருகுபாலமுருகன்
முனைவர் பட்ட ஆய்வாளர்
 எண் 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, 
வடபழனி, சென்னை&600 026

செல்  0091&7200163001.9383763001,9841771188


கும்பம் ; அவிட்டம் 3,4 சதயம், பூரட்டாதி 1,2,3 ம் பாதங்கள்

  வெள்ளை உள்ளமும், நெறி தவறாத பண்பும் கொண்ட கும்ப ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2014&ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கேது 3&ல் சஞ்சரிப்பதும், குரு பகவான் 5&ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பாகும். இந்த ஆண்டு முழுவதும் சனி 9&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எந்தவொரு காரியத்திலும் வெற்றியினைப் பெற முடியும். குடும்பத்தில் சுபிட்சம், கணவன்&மனைவியிடையே ஒற்றுமை, எடுக்கும் சுபகாரியங்களில் வெற்றி போன்றவை உண்டாகும். பொன்னும் பொருளும் சேரும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும், புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்களும் நடைபெறும். தொழில் வியாபாரமும் சிறப்பாக நடைபெறுவதுடன் லாபமும் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய உயர்பதவிகள் கிட்டும். வரும் 13.06.2014 இல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் 6&ஆம் வீட்டிற்கு மாறுதலாக உள்ளார். இதனால் பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாகும். கொடுக்கல்&வாங்கலிலும் வீண் பிரச்சனைகள் ஏற்படும். குடும்பத்தில் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். வரும் 21.06.2014 முதல் சர்ப கிரகங்களான கேது 2&லும் ராகு 8&லும் சஞ்சரிக்க விருப்பதால் கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகளையும், உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளையும், உறவினர்களிடையே வீண் பகைமையையும் உண்டாக்கும். இந்த வருட இறுதியில் 16.12.2014 &இல் ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனி பகவான் ஜீவன ஸ்தானமான 10&இல் சஞ்சரிக்க விருப்பது குறிப்பிட தக்கது.

தேக ஆரோக்கியம்
  உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே அமையும். ஏதாவது சிறு சிற பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்படாது. குடும்பத்திலுள்ள பெரியவர்களால் சற்றே மருத்துவ செலவுகள் உண்டாகலாம். ஆண்டின் பிற்பாதியில் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் உண்டாவதால் மன நிம்மதி குறையும்.

குடும்பம் பொருளாதார நிலை
  இந்த ஆண்டின் தொடக்கமானது எல்லா வகையிலும் ஏற்றத்தைத் தருவதாக அமையும். பொருளாதார நிலையும் மேன்மையடையும். திருமண சுபகாரியங்களும் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். பொன் பொருள் சேரும். உற்றார்  உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் சிறு சிறு ஆதாயங்களைப் பெறுவீர்கள். ஆண்டின் பிற்பாதியில் முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நற்பலனை தரும்.

கொடுக்கல் வாங்கல்
    பணவரவுகள் ஆண்டின் முற்பாதியில் சிறப்பாக இருப்பதால் கொடுக்கல்&வாங்கலும் திருப்தியளிப்பதாக அமையும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளிலும் தீர்ப்பு சாதகமாகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். ஆண்டின் பிற்பாதியில் பண விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும்.

தொழில் வியாபாரிகளுக்கு
  இந்த ஆண்டின் தொடக்கம் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபத்தினை  உண்டாக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் லாபம் கிட்டும். ஆண்டின் பிற்பாதியில் புதிய வாய்ப்புகள் கிடைத்தாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதில் கவனமுடன் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளாலும் தொழிலாளர்களாலும் வீண் பிரச்சனைகள் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு
  பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். வேலை பளு அதிகரிக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் எதையும் சாதிக்க முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும் மகிழ்ச்சியளிக்கும் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பும் கிட்டும். ஆண்டின் பிற்பாதியில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு
  ஆண்டின் முற்பாதியில் பெயர் புகழ் உயர கூடிய வாய்ப்புகள் உண்டாகும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். கட்சிக்காக நிறைய செலவுகள் செய்ய நேர்ந்தாலும் பொருளாதார நிலையில் சிறப்பாக இருக்கும். ஆண்டின் பிற்பாதியில் உடன் பழகுபவர்களிடம் சற்று சிந்தித்து செயல் படுவது நல்லது பண விரயங்களும் சற்று அதிகரிக்கும் சேமிப்பு குறையும்.

விவசாயிகளுக்கு
  பயிர் விளைச்சல் எதிர் பார்த்த படி இருக்கும். பட்ட பாட்டிற்கான முழுப்பலனையும் தடையின்றி அடைய முடியும். புதிய யுக்திகளையும் கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய பூமி மனை போன்றவற்றையும் வாங்க கூடிய யோகம் உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் பூமி மனை போன்றவற்றால் உறவினர்களிடையே பகைமை ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

பெண்களுக்கு
  உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே அமையும். குடும்பத்திலும் ஒற்றுமை, சுபிட்சம் நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல மண வாழ்க்கை அமையும். புத்திர வழியிலும் மகிழ்ச்சி நிலவும். பொன் பொருள் சேரும் புதிய வீடு கார் போன்றவற்றையும் வாங்குவீர்கள். ஆண்டின் பிற்பாதியில் குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும் ஆடம்பர செலவுகளையும் குறைக்கவும்.

படிப்பு
  கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். விளையாட்டுப் போட்டிகளிலும் பரிசுகளையும், பாராட்டுதல்களையும் பெற முடியும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கைகளையும் பொழுது போக்குகளையும் தவிர்ப்பது நல்லது. அரசு வழியிலும் ஆதரவு கிட்டும்.

ஸ்பெகுலேஷன்
  ஆண்டின் தொடக்கத்தில் ஷேர்,லாட்டரி,ரேஸ் போன்றவற்றில் லாபம் உண்டாகும் என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் எதிலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது.

ஜனவரி
    இயற்கையான விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டவரான உங்களுக்கு 5&இல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியிலிருப்பதால் பணம் கொடுக்கல்&வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. 9&இல் சனியும் ராகுவும், 10&இல் சூரியன் புதனும் சஞ்சாரம் செய்வதால் தொழில்,வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல அனுகூலங்கள் உண்டாகும். பயணங்களால் லாபம் அமையும். குடும்பத்திலும் சுபிட்சமான நிலையிருக்கும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடி அமையும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். முருகனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 21.01.2014 காலை 04.56 மணி முதல் 23.01.2014 மதியம் 12.39 மணி வரை.

பிப்ரவரி
    தன்னை கேலி கிண்டல் செய்பவர்களை தண்டிக்கும் குணம் கொண்ட உங்களுக்கு இம்மாதம் குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் 8&இல் செவ்வாய் 12&இல் சூரியன் சஞ்சாரம் செய்வதாலும் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுக்க வேண்டியிருக்கும். உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தக் கூடிய பிரச்சனைகளால் மனநிம்மதி குறையும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் பிறருக்கு கஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதால் முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. பணவரவுகள் சுமாராக தானிருக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது நற்பலனை உண்டாக்கும்.

சந்திராஷ்டமம் 17.02.2014 பகல் 12.18 மணி முதல் 19.02.2014 இரவு 08.17 மணி வரை.

மார்ச்
    புரட்சிகரமான தீர்மானங்களை கொண்ட உங்களுக்கு 3&இல் கேதுவும், 5&இல் குருவும் சஞ்சாரம் செய்வதால் தாராள தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் தடைபட்ட மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும், புத்திர வழியில் மகிழ்ச்சியும் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரமும் நல்ல முறையில் நடைபெற்று மேன்மையளிக்கும். பயணங்களில் சற்று கவனமுடன் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம் 16.03.2014 இரவு 07.34 மணி முதல் 19.03.2014 காலை 03.51 மணி வரை.

ஏப்ரல்
  எடுக்கும் முயற்சிகளில் அயராது பாடுபடும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் கேதுவும், 5&இல் குருவும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பொன் பொருள் சேரும். சிலருக்கு அசையும் அசையா சொத்து யோகமும் உண்டாகும். கொடுக்கல்&வாங்கல் சரளமாக நடைபெறும். கடன்கள் யாவும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். தொழில் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றமும், கூட்டாளிகளால் அனுகூலமும் உண்டாகும். சேமிப்பும் பெருகும். சனி ப்ரீதி, ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 13.04.2014 அதிகாலை 02.52 மணி முதல் 15.04.2014 பகல் 11.21 மணி வரை.

மே
    எதிலும் ஆலோசித்து செயல்படக் கூடிய உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் சூரியனும் 5&இல் குருவும் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும் என்றாலும் உறவினர்களிடையே வீண் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். கணவன்&மனைவி விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு வெற்றி வாகை சூடுவார்கள். அதிகாரிகளின் பாராட்டுதல்களும் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்&வாங்களில் சரளமான நிலையிருக்கும். முருகனை வழிபடுவது நல்லது. 

சந்திராஷ்டமம் 10.05.2014 பகல் 10.13 மணி முதல் 12.05.2014 மாலை 06.52 மணி வரை

ஜீன்
    எதிலும் மன உறுதியுடன் பாடுபடும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு  3&இல் கேதுவும், 9&இல் சனியும் ராகுவும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பூர்வீக சொத்துக்களால் ஒரளவுக்கு லாபத்தினைப் பெறுவீர்கள். இம்மாதம் 13&ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் 6&ஆம் வீட்டிற்கு மாறுதலாக உள்ளார். இதனால் பணம் கொடுக்கல்&வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. 21&ஆம் தேதி ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் கேது 2லும் ராகு 8&லும் சஞ்சரிக்கவிருப்பதால் கணவன்&மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 06.06.2014 மாலை 05.40 மணி முதல் 09.06.2014 காலை 02.41 மணி வரை

ஜீலை
  மற்றவர்களை கூர்ந்து கவனித்து செயல்படக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 4&இல் சுக்கிரனும் 9&இல் சனியும் சஞ்சரிப்பதால் எதிலும் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள் என்றாலும் 2&இல் கேதுவும் 8&இல் ராகுவும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் சிறு சிறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 04.07.2014 அதிகாலை 01.13 மணி முதல் 06.07.2014 பகல் 10.29 மணி வரை மற்றும் 31.07.2014 காலை 08.40 மணி முதல் 02.08.2014 மாலை 06.09 மணி வரை.

ஆகஸ்ட்
  அனைவரிடமும் சர்வ சாதரணமாக பழக கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&இல் சூரியனும் 9&இல் செவ்வாயும் சனியும் சஞ்சரிப்பதால் எந்த வித எதிர்ப்புகளையும் எதிர் கொண்டு வெற்றிகளைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தொழில் வியாபாரத்திலுள்ள போட்டிகளையும் சமாளிக்க முடியும். சற்றே மந்த நிலை ஏற்பட்டாலம் பொருட் தேக்க மின்றி சமாளிக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. இம்மாதம் குரு ப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 27.08.2014 மதியம் 03.59 மணி முதல் 30.08.2014 அதிகாலை 01.41 மணி வரை.

செப்டம்பர்
  பொது நலத்திற்கு பாடுபடும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு 6&இல் குருவும் 7&இல் சூரியனும், 8&இல் ராகுவும் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்தவொரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. 9&இல் செவ்வாய் சனி சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து விடக் கூடிய ஆற்றல் உண்டாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதால் கடன்களின்றி சமாளிக்க முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் நிலை சோர்வடையும். சிவபெருமானை வழிபடுவது மிகவும் நல்லது.

சந்திராஷ்டமம் 23.09.2014 இரவு 11.10 மணி முதல் 26.09.2014 காலை 09.07 மணி வரை.

அக்டோபர்
  பிறர் வாழ்க்கையில் குறுக்கிடாத பண்பு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2&இல் கேது, 6&இல் குரு, 8&இல் சூரியன் சுக்கிரன் ராகு சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பாகும். இதனால் கணவன்&மனைவியிடையே வீண் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். சுப காரியங்களில் தடை உண்டாகும். பொருளாதார நிலையிலும் தட்டுப்பாடுகள் நிலவுவதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் நிலையும் பாதிப்படையும். இம்மாதம் தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 21.10.2014 காலை 06.20 மணி முதல் 23.10.2014 மதியம் 04.27 மணி வரை.

நவம்பர்
  தான் கற்றதை சமயமறிந்து செயல்படுத்தும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு அஷ்டம ஸ்தானத்தில் ராகு சஞ்சரித்தாலும், 9&இல் சூரியனும், 11&இல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளிலுள்ள நெருக்கடிகள் குறையும். கணவன்&மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமைக் குறையாது. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைக்கவும். தொழில் வியாபாரம் சற்று மந்த நிலையில் தான் நடைபெறும். போட்ட முதலீட்டினை எடுத்து விட முடியும். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 17.11.2014 மதியம் 01.25 மணி முதல் 19.11.2014 இரவு 11.59 மணி வரை.

டிசம்பர்
  மற்றவரின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட உங்களுக்கு 6&இல் குரு 8&இல் ராகு, 12&இல் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பண வரவுகளிலும் நெருக்கடிகள் உண்டாகும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது, கொடுக்கல்&வாங்கலில் கவனமுடன் செயல் படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். பயணங்களிலும் வேகத்தை குறைப்பது நல்லது. தினமும் விநாயகரை வழிபாடு செய்யவும்.

சந்திராஷ்டமம்14.12.2014 இரவு 08.51 மணி முதல் 17.12.2014 காலை 07.29 மணிவரை.

அவிட்டம் 3,4,ம் பாதங்கள்
    செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் உலகமே தலைகீழாக கவிழ்ந்தாலும் வருத்தப்படமாட்டீர்கள். இவ்வருடத்தின் முற்பாதிவரை தாராள தன வரவுகளும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளும் கிட்டும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களும் கை கூடும். பொன் பொருள் சேரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை நிலவுவதால் கொடுக்கல்&வாங்கலில் கவனமுடனிருப்பது நல்லது. கணவன்&மனைவியிடையே ஒற்றுமை குறைவு உண்டாகும்.

சதயம்
    ராகுவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ளதால் நல்ல உடல் வாகும், உழைத்து வாழும் திறனும் இருக்கும். இந்த வருடத்தின் முற்பாதி உங்களுக்கு சாதகமான இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். தாராள தனவரவுகளால் குடும்ப தேவைகளும் பூர்த்தியாகும். கொடுக்கல்&வாங்கலும் லாபமளிக்கும். அசையும் அசையா சொத்துக்களையும் வாங்குவீர்கள். ஆண்டின் பிற்பாதியில் கணவன்&மனைவி விட்டு கொடுத்து நடப்பது, உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகளிலும் நெருக்கடிகள் உண்டாகும். கொடுக்கல்&வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்ய துணிவார்கள்.

பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள் 
  குருவின் நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் பரந்த மனப்பான்மையுடன் காணப்படுவீர்கள். இந்த ஆண்டின் முற்பாதி உங்களுக்கு எல்லா வகையிலும் முன்னேற்றங்கள் உண்டாகும். பணவரவுகளிலும் திருப்திகரமான நிலை ஏற்படும். செல்வம் செல்வாக்கும் உயரும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாவதுடன் மன நிம்மதியும் குறையும். கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்களும் அதிகரிக்கும். சேமிப்பும் குறையும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்  5,6,8,14,15,17
கிழமை  வெள்ளி, சனி
திசை  மேற்கு
நிறம்  வெள்ளை, நீலம் 
கல்  நீலக்கல்,
தெய்வம்  ஐயப்பன்

பரிகாரம்
    கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு வரும் 13.06.2014 முதல் குருபகவான் 6ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் குரு ப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது. 21.06.2014 முதல் சர்ப கிரகங்களான கேது 2லும் ராகு 8லும் சஞ்சரிக்க விருப்பதால் சர்ப சாந்தி செய்வது, தினமும் விநாயகரை வழிபடுவது, ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது.

Contact

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal address  
From  14  January 2014 My office address as follows

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,9841771188

https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078

Name ; R.Balamurugan
Bank name  - Bank of Barado
Savings Account No - 29900100000322
Branch name - Vadapalani
Chennai - 600026.INDIA.
MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA

No comments: