Monday, April 11, 2022

குரு பெயர்ச்சி பலன் 2022 - 2023 விருச்சிகம்

 குரு பெயர்ச்சி பலன் 2022 - 2023 விருச்சிகம்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

முன்கோபமும், முரட்டு சுபாவமும் இருந்தாலும் எதிலும் தைரியத்துடன் செயல்படும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, ஆண்டு கோள் என வர்ணிக்கப்படும் குரு பகவான் வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரை உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு சகல விதத்திலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்து குடும்பத்தில் சுபிட்ஷம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்களும் புத்திர வழியில் மகிழ்ச்சியும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் தடையின்றி கைகூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகள் எடுத்து வந்தவர்களுக்கு இருந்த உடம்பு பாதிப்புகள் விலகி மன நிம்மதி ஏற்படும்.

உங்கள் ராசிக்கு சனி 3-ஆம் வீட்டில் 17-01-2023 முடிய சஞ்சரிப்பதும், ராகு 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். குடும்பத்தில் இதுவரை இருந்த கருத்து வேறுப்பாடுகள் மறைந்து கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவதால் மனநிம்மதி உண்டாகும். பகைவர்களும் நட்பு கரம் நீட்டுவார்கள். சொந்த பூமி மனை, வண்டி வாகனங்கள் போன்றவற்றை வாங்கும் யோகம் ஏற்படும். உங்களுக்கு இருந்த வம்பு வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கடந்த கால பொருட் தேக்கங்கள் விலகி லாபங்கள் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், தொழிலாளர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். திறமை வாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலுக்கு கிடைத்து பெரிய ஆடர்களையும் எளிதில் செய்து முடித்து லாபம் காண முடியும். வங்கி மூலம் நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்து கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எடுக்கும் பணிகளை திறம்பட செய்து முடித்து பாராட்டுதல்களை பெறுவீர்கள். உங்கள் திறமைகளை வெளிகாட்ட நல்ல வாய்ப்புகள் ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து தேவையற்ற அலைச்சல்கள் குறையும். வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். கடந்த காலங்களில் உங்கள் மீது இருந்த பழி சொற்கள் விலகி மன நிம்மதி ஏற்படும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு, தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் யோகம் உண்டாகும். குரு பார்வை ஜென்ம ராசிக்கும், 9, 11-ஆம் வீடுகளுக்கும் இருப்பதால் நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும். பெற்றோர்களின் ஆசிர்வாதம் சிறப்பாக இருந்து பல்வேறு வலமான பலன்களை அடைவீர்கள்.

 

உடல் ஆரோக்கியம்

உங்களின் தேக ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கடந்த காலங்களில் இருந்த மருத்துவ செலவுகள் குறையும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். சிலருக்கு வாரிசு யோகம் உண்டாகி மன மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களும் நலமுடன் இருப்பதால் எல்லா பிரச்சினைகளும் விலகி மன நிம்மதி உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்து வரும் ஆரோக்கிய பாதிப்பு படிப்படியாக குறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கடந்த காலங்களில் நீங்கள் சந்தித்த சோதனைகளும் வேதனைகளும் படிப்படியாக குறையும். நினைத்த காரியங்களை நிறைவேற்றி கொள்ளக்கூடிய அளவிற்கு வலிமையும் வல்லமையும் உண்டாகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணவாழ்க்கை சிறப்பாக அமையும். உற்றார் உறவினர்களும் உங்களை புரிந்து கொண்டு நட்பு கரம் நீட்டுவார்கள். பணவரவுகள தாராளமாக இருந்து கடன்கள் குறையும். சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும்.

கொடுக்கல்- வாங்கல் 

கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர்க்கு நல்ல லாபம் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி எதிர்பார்க்கும் ஆதாயங்களைப் பெற முடியும். கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சாதகமானப் பலன்களைப் பெற முடியும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமானப் பலன்களை பெறுவீர்கள்.

தொழில் வியாபாரம்

செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் மறைவதால் வரவேண்டிய வாய்ப்புகளும் லாபங்களும் தடையின்றி வந்து சேரும். புதிய கூட்டாளிகள் இணைவார்கள். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சாதகமானப் பலனை அடைவீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் நற்பலன்கள் எளிதில் கிடைக்கும். வெளிவட்டார தொடர்புகளால் அனுகூலமானப் பலன்கள் அதிகரிக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய பயணங்களால் நல்ல லாபங்களை அடைவீர்கள்.

உத்தியோகம்

உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கும். கடந்த கால நெருக்கடிகள் யாவும் குறையும். உயரதிகாரிகளின் ஆதரவுகளும், உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருப்பதால் எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்க முடியும். ஊதிய உயர்வுகளால் பொருளாதார நிலையானது உயரும். பணி நிமித்தமாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள கூடிய வாய்ப்புகள் ஏற்படும். வேலைபளு குறையும். சிலருக்கு எதிர்பார்க்கும் இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேருவார்கள்.

அரசியல்

தாங்கள் எதிர்பார்த்த மாண்புமிகு பதவிகள் தடையின்றி கிட்டும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். மறைமுக வருவாய்கள் அதிகரிப்பதால் பொருளாதார நிலை உயரும். பத்திரிக்கை நண்பர்களின் ஆதரவும், மக்களின் ஆதரவும் உங்கள் பெயர் புகழை உயர்த்தும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். பயணங்களால் அனுகூலமானப் பலனை பெறுவீர்கள்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கு ஏற்ற விலை சந்தையில் கிடைக்கப் பெறுவதால் பொருளாதார நிலை உயர்வடையும். புதிய பூமி மனை போன்றவற்றை வாங்கிச் சேர்ப்பீர்கள். கால்நடைகளால் லாபம் உண்டாகும். காய், கனி போன்றவற்றால் சிறப்பான லாபத்தை பெற முடியும். வங்கி கடன்கள் குறையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் தடையின்றி கிட்டும். பங்காளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள்.

கலைஞர்கள்

கலைஞர்களுக்கு திறமைக்கேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். நிலுவையில் இருந்த சம்பள பாக்கிகள் அனைத்தும் கிடைக்கப் பெறுவதால் பொருளாதார நிலையும் உயரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய வாய்ப்புகளும் அதன் மூலம் அனுகூலங்களும் உண்டாகும். ஆடம்பர கார், வீடு, மனை போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். உடனிருப்பவர்களை அனுசரித்து நடப்பது நல்லது.

பெண்கள்

உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் தடையின்றி கைகூடும். சிலர் சிறப்பான புத்திர பாக்கியங்களை பெறுவர். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்த உறவினர்களும் தேடி வந்து நட்பு கரம் நீட்ட கூடிய அளவிற்கு சந்தர்ப்பங்கள் அமையும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி தாராளமான பண நடமாட்டம் இருப்பதால் வீடு, மனை வாங்க வேண்டுமென்ற கனவுகளும் நிறைவேறும். பணிபுரிபவர்களுக்கு பணியில் உயர்வுகள் கிட்டும்.

மாணவ மாணவியர்

கல்வியில் நல்ல உயர்வினை அடைய முடியும். சிறப்பான மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு அற்புதமாக இருப்பதால் மனநிறைவு உண்டாகும். திறனை வெளிப்படுத்தும் போட்டிகளில் பரிசுகளை தட்டிச் செல்வீர்கள். நல்ல நண்பர்களின் நட்புகளால் சாதகமானப் பலன்கள் உண்டாகும். அரசு வழியில் ஆதரவு கிட்டும்.

 

குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 13.04.2022 முதல் 28.04.2022

உங்கள் ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகமான குரு தன் சொந்த நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 5-ல் சஞ்சாரம் செய்வதும், 3-ல் சனி, 6-ல் ராகு சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். உங்களுக்கு இருந்த கடன்களை எளிதில் பைசல் செய்ய முடியும். கணவன்- மனைவி இடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் நிலையில் கடந்த கால பாதிப்புகள் விலகி மருத்துவச் செலவுகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவு செய்வீர்கள். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் பெரிய தொகைளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் ஏற்படும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். திறமை வாய்ந்த வேலை ஆட்கள் தொழிலுக்கு கிடைப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வீண் பழி சொற்கள் விலகி பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் தடையின்றிக் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். சம்பள பாக்கிகள் வரும் நாட்களில் கிடைத்து உங்கள் கஷ்டங்கள் குறையும்.

குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 29.04.2022 முதல் 28.07.2022

குரு சனியின் நட்சத்திரத்தில் உங்கள் ராசிக்கு 5-ல் சஞ்சாரம் செய்வதும், 6-ல் ராகு சஞ்சரிப்பதும் நற்பலன்களை ஏற்படுத்தும் என்பதால் எடுக்கும் முயற்சிகளில் லாபமும், வெற்றியும் கிட்டும். பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே இருந்த வாக்கு வாதங்கள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவுகளால் கடன்களும் சற்றே குறையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் திறன் உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். புத்திர வழியில் சுப செய்தி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகள் ஆதரவாக இருப்பதால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். மறைமுக எதிர்ப்புகள் விலகி எதிலும் நிம்மதியுடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து மன நிம்மதி ஏற்படும். வெளியூர் வாய்ப்பை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

குரு பகவான் வக்ரகதியில் 29.07.2022 முதல் 23.11.2022

குரு இக்காலங்களில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் சிறுசிறு இடையூறுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்றாலும்  சனி 3-ல், ராகு 6-ல் சஞ்சரிப்பதால் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றலாம் என்பதால் இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பணம் வரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பரத்தை சற்று குறைத்து கொள்வது நல்லது. பொன் பொருள் வாங்கும் வாய்ப்பு அமையும். சிலருக்கு வீடு மனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும் வாய்ப்பும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்தது செயல்பட்டால் நல்ல லாபத்தை அடைய முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைப்பதை பயன்படுத்தி கொண்டால் விரைவில் நல்ல வேலை வாய்ப்பு அமையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.

குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 24.11.2022 முதல் 24.02.2023

குருபகவான் சனி நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 5-ல் சஞ்சரிப்பதும், சனி 3-ல் ராகு 6-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடந்த காலங்களில் இருந்த வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமைந்து நிம்மதி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். உங்கள் திறமைகளை வெளிபடுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். அதிகாரிகளிடம் இருந்த கருத்து வேறுப்பாடுகள் விலகி சுமுக நிலை ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஆதரவுகளால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்.

குரு பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25.02.2023 முதல் 22.04.2023

குருபகவான் புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 5-ல் சஞ்சரிப்பதும், 6-ல் ராகு சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் முன்னேற்றங்களை பெற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணம் வரவுகள் மிக சிறப்பாக இருக்கும். சிலருக்கு சொந்த வீடு வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். சனி 4-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். நல்ல வரன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அமையும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெற முடியும். தொழில் வியாபாரம் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாக அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நற்பலன்களை செய்வார்கள்.

 

பரிகாரம்

விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது 12-ல் சஞ்சரிப்பதால் கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9                                   நிறம் - ஆழ்சிவப்பு, மஞ்சள்,        கிழமை - செவ்வாய், வியாழன்

கல் - பவளம்,                              திசை - தெற்கு                                          தெய்வம் - முருகன்

No comments: