Sunday, January 14, 2018

Today rasi palan - 15.01.2018

Today rasi palan - 15.01.2018
இன்றைய ராசிப்பலன் -  15.01.2018
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
15-01-2018, தை 02, திங்கட்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 05.11 வரை பின்பு அமாவாசை. மூலம் நட்சத்திரம் மாலை 04.19 வரை பின்பு பூராடம். சித்தயோகம் மாலை 04.19 வரை பின்பு மரணயோகம். நேத்திரம்- 0. ஜீவன்- 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. மாட்டுப் பொங்கல். கரிநாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.





               
திருக்கணித கிரக நிலை
15.01.2018

ராகு
சூரிய கேது 
சுக்கி

புதன் சந்தி
சனி

செவ் குரு
 


இன்றைய ராசிப்பலன் -  15.01.2018
மேஷம்
இன்று உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டி இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.
ரிஷபம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சிறு சிறு மனக்குழப்பங்கள் உண்டாகும். உடல் நிலை மந்தமாக இருக்கும். வேலைபளு அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம்.
மிதுனம்
இன்று வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். கொடுக்கல்& வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு உயரும்.
கடகம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனைகள் நற்பலனை தரும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
சிம்மம்
இன்று பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் சற்று குறையும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். நண்பர்களின் உதவி கிட்டும்.
கன்னி
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வது நல்லது. உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
துலாம்
இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்கள் நட்புடன் இருப்பார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். புதிய பொருள் வீடு வந்து சேரும். கடன்கள் குறையும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் செய்யும் சிறு செயல்கள் கூட தாமதமாக முடியக்கூடும். பிள்ளைகளால் மன சங்கடங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். திருமண சுபமுயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு உயரும். பொன் பொருள் சேரும்.
மகரம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சற்று குறையும். உங்களின் முயற்சிகளுக்கு உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். சுப செய்திகள் வந்து சேரும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் உண்டாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
மீனம்

இன்று உங்களுக்கு தனவரவு அமோகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உற்றார் உறவினர்களுடன் ஒற்றுமை ஏற்படும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். நண்பர்களின் உதவியால் குடும்பத்தில் இருந்த பிரச்சனை தீரும். சுபகாரியங்கள் கைகூடும்.

No comments: