Wednesday, January 24, 2018

வார ராசிப்பலன் - ஜனவரி 28 முதல் பிப்ரவரி 3 வரை

வார ராசிப்பலன் - ஜனவரி 28 முதல்  பிப்ரவரி 3 ரை
தை 15 முதல்  21 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,



சந்தி

               
திருக்கணித கிரக நிலை

ராகு
சூரிய கேது புதன் சுக்கி

சனி
  செவ்
குரு    
 
               

கிரக மாற்றம் இல்லை

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
ரிஷபம்              26-01-208 மதியம் 01.15 மணி முதல் 28-01-2018 மதியம் 02.58 மணி வரை.
மிதுனம்            28-01-2018 மதியம் 02.58 மணி முதல் 30-01-2018 மதியம் 03.00 மணி வரை.
கடகம்                30-01-2018 மதியம் 03.00 மணி முதல் 01-02-2018 மதியம் 03.07 மணி வரை.
சிம்மம்               01-02-2018 மதியம் 03.07 மணி முதல் 03-02-2018 மாலை 05.08 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள் இல்லை

மேஷம்  அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவி செய்யும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சூரியன், சுக்கிரன், புதன் வலுவாக சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குரு பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும். உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடையமுடியும். தொழில் வியாபாரத்தில் வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிடைப்பதால் லாபம் பெருகும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாகவே இருக்கும். வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் அமையும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிப்பதால் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். முருக வழிபாடு உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -        28, 29,

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
எந்த கஷ்டத்தையும் தாங்கி கொள்ளக்கூடிய அளவிற்கு சகிப்புதன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், புதன் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் அனுகூலமான பலன்கள் ஏற்படும். 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். எடுக்கும் முயற்சியில் சாதகப்பலன் கிட்டும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. எல்லா வகையிலும் நற்பலன்கள் தேடி வரும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். சிலருக்கு சொந்த வீடு மனை வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள் என்றாலும் அளவோடு வைத்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்களைப் பெற முடியும். இதுவரை இருந்த பிரச்சனைகள் குறையும் சூழ்நிலை உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் அமையும். பயணங்களாலும் அனுகூலம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் சிறு தாமதத்திற்குப் பின் கிடைக்கப்பெறும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -- 28, 30, 31, 1.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும் கலை, இசை துறைகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, குருபார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதாலும் சிறப்பான பணவரவுகள் உண்டாகும். தொழில் வியாபாரத்திலும் லாபகரமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். எதிர்பார்க்கும் லாபங்களும் கிடைக்கும். உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2-ல் ராகு 8-ல் சூரியன் கேது சஞ்சரிப்பதால் உடலில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். எனவே ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதும், உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பதும் நல்லது. பணவரவுகள் திருப்திகரமாக இருப்பதால் கடந்த கால நெருக்கடிகள் குறைந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் லாபகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகள் சற்று தாமதத்திற்கு பிறகு கிடைக்கப்பெறும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் அவர்கள் எதிர்பார்த்தபடி வேலைவாய்ப்பு அமையும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தி எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள். விநாயகர் வழிபாடு செய்வதும், விநாயகர் துதிகளை படிப்பதும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -- 28, 29, 30, 2, 3.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
கோபமாகவும் வேகமாகவும் பேசினாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் ராகு, 7-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவதும் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. சனி 6-ல் சஞ்சரிப்பதால் பணவரவிற்கு எந்த விதத்திலும் குறை இருக்காது. எதிர்பார்த்த அளவுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். கடன்களும் படிப்படியாக குறையும். எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் வெற்றி கிட்டும். திருமண சுபகாரியங்கள் சில தடைகளுக்குப்பின் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வுகள் இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். துர்கையம்மன் வழிபாடு செய்வது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் --       28, 30, 31, 1.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்
எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவராகவும், கொடுத்த வாக்குறுதியினை எப்பாடுபட்டாவது காப்பாற்றும் ஆற்றல் உடையவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன் கேது சேர்க்கைப் பெற்று 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். திருமண சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொன், பொருள், ஆடை ஆபரணம் யாவும் சேரும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். என்றாலும் குரு பகவான் 3-ல் சாதகமற்று சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு சிக்கனமாக செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் சாதகமான செயல்பாட்டால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். மாணவர்கள் கல்வியில் சற்று ஈடுபாட்டுடன் செல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -- 28, 29, 30, 2, 3.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
அனைவரிடத்திலும் அன்பும் பண்பும், மரியாதையும் கொண்டவராகவும், தெய்வ பக்தி உடையவராகவும் விளங்கும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குரு பகவான் 2-ல் வலுவாக இருப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருப்பதால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். சனி பகவானை வழிபாடு செய்வதும் சனிகவசங்கள் படிப்பதும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் --       28, 29, 30, 31, 1.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
தம்முடைய எந்த பொருட்களையும் கேட்பவருக்கு தானமளிக்க கூடிய பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் துலா ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 2-ல் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் அலைச்சல் டென்ஷன் குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படக்கூடிய வாரமாக இவ்வாரம் இருப்பதால் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக இருப்பது நல்லது. பல்வேறு பிரச்சினைகள் உங்களுக்கு இருந்தாலும் முயற்சி ஸ்தானமான 3-ல் சனி சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளகூடிய வலிமை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்களும், உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகளும் உண்டாகும் என்பதால் அனைவரிடமும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துக்களால் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது நல்லது. கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு சற்றே வேலைபளு அதிகமாக இருக்கும் என்றாலும் எதையும் சமாளித்து விடுவீர்கள். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற அதிக பாடுபட வேண்டியிருக்கும். சிவ வழிபாடு மற்றும் முருக வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -- 30, 31, 1, 2, 3.

சந்திராஷ்டமம் -         26-01-208 மதியம் 01.15 மணி முதல் 28-01-2018 மதியம் 02.58 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
எவ்வளவு தான் கற்றறிந்திருந்தாலும் அகம் பாவமின்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய், 12-ல் குரு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் தேவையற்ற இடையூறுகள் உண்டாகும். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று நிதானமாக இருப்பது நல்லது. தேவையற்ற வாக்கு வாதங்களால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து குடும்பத்தில் நிம்மதி குறையலாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும், உறவினர்களை அனுசரித்து நடப்பதும் நற்பலனைத் தரும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் சூரியன் 3-ல் இருப்பதால் நெருங்கியவர்களின் உதவிகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் தாமத பலன்களையே பெற முடியும். உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் உண்டாககூடும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உயரதிகாரிகளின் ஆதரவுகளைப் பெற சற்று பாடுபட வேண்டியிருக்கும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் முழு முயற்சியுடன் ஈடுபடுவது உத்தமம். குருப்ரீதி தட்சிணாமூர்த்தியை வணங்குவது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் --       1, 2, 3.

சந்திராஷ்டமம் -         28-01-2018 மதியம் 02.58 மணி முதல் 30-01-2018 மதியம் 03.00 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு லாப ஸ்தானத்தில் சாதகமாக சஞ்சரிப்பதாலும் 2-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் தேவைகேற்றபடி இருந்து கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் குறையும். கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர வழியிலும் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலும் சரளமாக நடைபெறுவதால் லாபம் சிறப்பாக அமையும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளை சுறுசுறுப்பாக செய்ய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க முடியும். சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -- 28, 29.

சந்திராஷ்டமம் -         30-01-2018 மதியம் 03.00 மணி முதல் 01-02-2018 மதியம் 03.07 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கள்ள கபடமற்று வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் புதன், சுக்கிரன் லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்பாராத திடீர் தனசேர்க்கை ஏற்பட்டு அனுகூலங்களை பெறுவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் ஏற்படும். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் நினைத்ததை நிறைவேற்றி கொள்ள முடியும். உடல் நிலையில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சாதகமான பலனைப் பெற முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்தே எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். கடன்கள் சற்றே குறையும். தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளின் ஆதரவை பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம். சிவ வழிபாடு செய்வது பிரதோஷ விரதம் மேற்கொள்வது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் --       28, 29, 30, 31.

சந்திராஷ்டமம் -         01-02-2018 மதியம் 03.07 மணி முதல் 03-02-2018 மாலை 05.08 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும், சிறு வயதிலிருந்தே சிறந்த தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சனி லாப ஸ்தானத்தில் வலுவாக சஞ்சரிப்பதாலும் 9-ல் குரு 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகமும் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொண்டால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். என்றாலும் சூரியன் சாதகமற்று இருப்பதால் அகலகால் வைக்காமல் பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி மேல் வெற்றியினை அடையலாம். வீண் செலவுகளை குறைப்பது உத்தமம். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் நல்ல பலனைப் பெற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர் கொள்ள நேர்ந்தாலும் எதையும் சமாளித்து முன்னேற்றம் அடைவீர்கள். பல புதிய வாய்ப்புகளும் உங்களை தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருந்தாலும் அதற்கேற்ப ஊதிய உயர்வும் கிடைக்கப்பெறும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். சிவ வழிபாடு மற்றும் விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் --       30, 31, 1, 2, 3.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
தன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி ஏமாற்றங்களை சந்திக்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சூரியன், புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சுபகாரியங்கள் கைகூடும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி மேன்மையடையும். வெளியூர் பயணங்களாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் யாவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் அமைப்பும் உண்டாகும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று கல்வியில் உயர்வடைவார்கள். ராகு காலங்களில் துர்கையம்மனை வழிபாடு செய்தால் மேன்மை உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் --       2, 3.



No comments: