Saturday, January 27, 2018

பிப்ரவரி மாத ராசிப்பலன் - 2018


பிப்ரவரி மாத ராசிப்பலன் - 2018
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,






               
திருக்கணித கிரக நிலை

ராகு சந்தி
சூரிய கேது 
சுக்கி புதன்

சனி
  செவ்
               
குரு 

கிரகமாற்றம்
06-2-2018 கும்பத்தில் சுக்கிரன் பகல் 11.59 மணிக்கு
13-2-2018 கும்பத்தில் சூரியன் அதிகாலை 02.48 மணிக்கு
15-2-2018 கும்பத்தில் புதன் அதிகாலை 03.24 மணிக்கு
               
இம்மாத சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மேஷம்           20-02-2018 மதியம் 02.07 மணி முதல் 22-02-2018 இரவு 07.27 மணி வரை.
ரிஷபம்           22-02-2018 இரவு 07.27 மணி முதல் 24-02-2018 இரவு 10.45 மணி வரை.
மிதுனம்         24-02-2018 இரவு 10.45 மணி முதல் 27-02-2018 அதிகாலை 12.32 மணி வரை.
கடகம்              30-01-2018 மதியம் 03.00 மணி முதல் 01-02-2018 மதியம் 03.07 மணி வரை மற்றும்                           27-02-2018 அதிகாலை 12.32 மணி முதல் 01-03-2018 அதிகாலை 01.45 மணி வரை.
சிம்மம்            01-02-2018 மதியம் 03.07 மணி முதல் 03-02-2018 05.08 மணி வரை.
கன்னி              03-02-2018 மாலை 05.08 மணி முதல் 05-02-2018 இரவு 10.32 மணி வரை.
துலாம்            05-02-2018 இரவு 10.32 மணி முதல் 08-02-2018 காலை 07.45 மணி வரை.
விருச்சிகம்                08-02-2018 காலை 07.45 மணி முதல் 10-02-2018 இரவு 07.49 மணி வரை.
தனுசு               10-02-2018 இரவு 07.49 மணி முதல் 13-02-2018 காலை 08.44 மணி வரை.
மகரம்              13-02-2018 காலை 08.44 மணி முதல் 15-02-2018 இரவு 08.39 மணி வரை.
கும்பம்            15-02-2018 இரவு 08.39 மணி முதல் 18-02-2018 காலை 06.33 மணி வரை.
மீனம்                                18-02-2018 காலை 06.33 மணி முதல் 20-02-2018 மதியம் 02.07 மணி வரை.


இம்மாத சுப முகூர்த்த நாட்கள்
04.02.2018 தை 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதி உத்திரம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.00 மணி முதல் 08.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

05.02.2018 தை 23 ஆம் தேதி திங்கட்கிழமை பஞ்சமி திதி அஸ்தம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

07.02.2018 தை 25 ஆம் தேதி புதன்கிழமை சப்தமி திதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

11.02.2018 தை 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதி மூலம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.30 மணி முதல் 08.00 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

14.02.2018 மாசி 02 ஆம் தேதி புதன்கிழமை சதுர்த்தசி திதி திருவோணம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

19.02.2018 மாசி 07 ஆம் தேதி திங்கட்கிழமை சதுர்த்தி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

25.02.2018 மாசி 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தசமி திதி மிருகசிருஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

26.02.2018 மாசி 14 ஆம் தேதி திங்கட்கிழமை ஏகாதசி திதி புனர்பூசம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
நல்ல வாக்கு சாதுர்யமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் ஜென்ம ராசியை பார்ப்பதால் உங்களது பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். மேலும் மாத கோளான சூரியன், சுக்கிரன் மாத முற்பாதியில் 10-ஆம் வீட்டிலும் பிற்பாதியில் 11-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் பொன், பொருள் சேரும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். உற்றார், உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். எனினும் செவ்வாய் 8-ல் இருப்பதால் வாகனங்களில் செல்கின்ற போது சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள்.

பரிகாரம் - செவ்வாய்க்கிழமை விரதமிருந்து முருக கடவுளை வழிபடுவதாலும், கந்த சஷ்டி கவசம் படிப்பதாலும் நினைத்த காரியம் நிறைவேறி மகிழ்ச்சி உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - 4, 5, 6, 7, 13, 14, 15, 16, 17, 21, 22, 25, 26.

சந்திராஷ்டமம்      - 08-02-2018 காலை 07.45 மணி முதல் 10-02-2018 இரவு 07.49 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன், புதனுடன் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாகும். 3-ல் ராகு இருப்பதால் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் குரு சனி சாதகமற்று இருப்பதால் தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் நற்பலனை அடைய முடியும். சில நேரங்களில் நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் மற்றவர்களுக்கு வீண் பிரச்சனகளை ஏற்படுத்திவிடும் என்பதால் எதிலும் கவனம் தேவை. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே முன்னேற வேண்டியிருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்கள் கல்விக்கான சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

பரிகாரம் - சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி எள் தீபம் ஏற்றி வழிபடுவதால் சகல நன்மைகளும் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள் - 1, 6, 7, 8, 9, 10, 16, 17, 18, 19, 20, 23, 24, 27, 28.

சந்திராஷ்டமம்      -- 10-02-2018 இரவு 07.49 மணி முதல் 13-02-2018 காலை 08.44 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ள கூடிய மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் குரு பகவான் வலுவாக சஞ்சரிப்பதாலும் ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பதாலும் மாத கோளான சூரியன் மாத முற்பாதியில் 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். கணவன்- மனைவி இடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் பேச்சில் நிதானத்தை கடைபிடித்து, விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்தநிலை போன்ற பாதிப்புகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருந்தால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதன் மூலம் நல்ல லாபத்தை பெறுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு கௌரவமான பதவி உயர்வு கிடைக்கும். பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலால் தங்கள் மதிப்பும் மரியாதையும் உயர்வடையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் வீண் அலைச்சல் டென்ஷன் போன்றவற்றை குறைத்துக் கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொண்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும்.

பரிகாரம் - சிவாலயங்களுக்குச் சென்று சிவ பெருமானை வணங்குவதும், சூரியனுக்கு செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்வதும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 1, 2, 3, 8, 9, 10, 11, 12, 18, 19, 20, 21, 22, 25, 26.

சந்திராஷ்டமம்      -- 13-02-2018 காலை 08.44 மணி முதல் 15-02-2018 இரவு 08.39 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சனி பகவான் பலமாக சஞ்சரிப்பதால் உங்களது பலமும் வலிமையும் கூடக்கூடிய மாதமாகும். சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையும் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். மாத கோளான சூரியன் மாத முற்பாதியில் 7-ஆம் வீட்டிலும், பிற்பாதியில் 8-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அனுகூலப்பலனை அடையலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி ஏற்படும். நல்ல வரன்கள் அமையும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணமும் நிறைவேறும். கொடுக்கல்---- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியுடன் எதிர்பார்த்த லாபத்தை பெற்று விட முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப்பெறும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும்.

பரிகாரம் - ராகு காலங்களில் துர்கையம்மனுக்கு கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்து எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - 1, 4, 5, 11, 12, 13, 14, 20, 21, 22, 23, 24, 27, 28.

சந்திராஷ்டமம்      -- 15-02-2018 இரவு 08.39 மணி முதல் 18-02-2018 காலை 06.33 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்
சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு அதிபதியான சூரியன் 6-ஆம் வீட்டில் கேது சேர்க்கைப் பெற்று பலமாக சஞ்சரிப்பதால் பிரச்சினைகள் எல்லாம் குறைந்து வலமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பணவரவுகள் தேவைகேற்ப இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும். செவ்வாய் 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்திலும் சற்று கவனம் செலுத்துவது நல்லது. வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளால் சிறுசிறு மருத்துவ செலவுகளை எதிர்கொள்வீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தடை தாமதங்கள் ஏற்படலாம். கணவன்- மனைவி இடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனம் தேவை. பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரம் நல்ல நிலையில் நடைபெற்று எதிர்பார்த்த லாபத்தை தரும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை பெற முடியும். என்றாலும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

பரிகாரம் - வியாழக்கிழமைகளில் தடசிணாமூர்த்திக்கு கொண்ட கடலை மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பணவரவில் இருக்கும் தடைகள் விலகி பொருளாதார நிலை உயரும்.

வெற்றி தரும் நாட்கள் - 1, 2, 3, 6, 7, 13, 14, 15, 16, 17, 23, 24, 25, 26.

சந்திராஷ்டமம்      -- 18-02-2018 காலை 06.33 மணி முதல் 20-02-2018 மதியம் 02.07 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்
சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன் பஞ்சம ஸ்தானத்தில் சாதகமாக சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். அன்னிய தேசத்தில் இருந்து அனுகூலமான செய்திகள் வந்து சேரும். மேலும் 2-ல் குரு சஞ்சரிப்பதாலும் முயற்சி ஸ்தாமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றியினை அடைவீர்கள். சூரியன் மாத பிற்பாதியில் 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்கள் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளை தடையின்றி செய்ய முடியும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி மனநிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். உற்றார், உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சற்றே மந்த நிலை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை எடுத்து விடுவீர்கள்.

பரிகாரம் - சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபடுவதாலும் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு அளிப்பதாலும் கஷ்டங்கள் குறைந்த நற்பலன்களை அடைவீர்கள்.

வெற்றி தரும் நாட்கள் - 1, 4, 5, 8, 9, 10, 16, 17, 18, 19, 25, 26, 28.

சந்திராஷ்டமம்      -- 20-02-2018 மதியம் 02.07 மணி முதல் 22-02-2018 இரவு 07.27 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு கேந்திர திரிகோண ஸ்தானாதிபதியான சனி முயற்சி ஸ்தானமான 3-ல் வலுவாக சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய காலமாக தற்போது இருந்தாலும் இம்மாதம் உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க தடை, தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் எதிலும் சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும் என்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது மூலம் ஓரளவுக்கு நற்பலனை அடைய முடியும்.  பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது உத்தமம். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைபளு அதிகரித்தாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களால் மன நிம்மதி உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் ஓரளவுக்கு அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். மாணவர்கள் தேவையற்ற சகவாசங்களை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம்.

பரிகாரம் - தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. ஞாயிற்றுக்கிழமைகளில் வெல்லம், கோதுமை போன்றவற்றை தானம் செய்வதால் நன்மை உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - 1, 2, 3, 6, 7, 11, 12, 18, 19, 20, 21, 27, 28.

சந்திராஷ்டமம்      -- 22-02-2018 இரவு 07.27 மணி முதல் 24-02-2018 இரவு 10.45 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் செவ்வாயும், 2-ல் சனியும் சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்பட்டால் தான் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சினைகளையும் சமாளிக்க முடியும். எனினும் உங்கள் ராசிக்கு மாத கோளான சூரியன் மாத முற்பாதியில் 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நெருங்கியவரின் உதவியால் எதையும் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியை அடைவீர்கள். உடல் நிலையில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். கணவன்- மனைவியிடையே ஏற்படும் கருத்து வேறுபாட்டால் ஒற்றுமை குறையக்கூடும் என்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் சற்றே ஆதரவுடன் செயல்படுவார்கள். சிலருக்கு புத்திர வழியில் சிறு மனசஞ்சலம் ஏற்படும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் ஓரளவுக்கு சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் ஊதிய உயர்வுகள் கிடைக்க சற்று தாமதம் ஏற்படலாம். சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகளும் அமையும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் தோன்றினாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும்.

பரிகாரம் - சனிப்ரீதி ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவதாலும் ஹனுமன் துதிகளை படிப்பதாலும் மனகவலைகள் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - 1, 2, 3, 4, 5, 8, 9, 10, 13, 14, 15, 20, 21, 22, 23, 24.

சந்திராஷ்டமம்      -- 24-02-2018 இரவு 10.45 மணி முதல் 27-02-2018 அதிகாலை 12.32 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு லாப ஸ்தானத்தில் வலுவாக சஞ்சரிப்பதாலும் தன ஸ்தானமான 2-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதாலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். மேலும் சூரியன் மாத பிற்பாதியில் 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சனைகள் யாவும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் உண்டாகாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் சாதகப் பலன்கள் உண்டாகும். கணவன்-- மனைவி இடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் இருந்தாலும் ஒற்றுமையுடன் இருப்பார்கள். பொருளாதார மேம்பாடுகளால் சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் எண்ணம் ஈடேற கூடிய வாய்ப்பும் அமையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். உற்றார், உறவினர்கள் வழியிலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும், கூட்டாளிகளையும், தொழிலாளர்கள¬யும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்பட்டு முன்னேற்றத்தை அடைவார்கள்.

பரிகாரம் - கருணை வடிவான முருகனை வணங்கினால் இல்லத்தில் மங்களங்கள் உண்டாகும். மேலும் சஷ்டி விரதம் மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 4, 5, 6, 7, 11, 12, 16, 17, 23, 24, 25, 26.

சந்திராஷ்டமம்      -- 30-01-2018 மதியம் 03.00 மணி முதல் 01-02-2018 மதியம் 03.07 மணி வரை மற்றும் 27-02-2018 அதிகாலை 12.32 மணி முதல் 01-03-2018 அதிகாலை 01.45 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர் கொண்டு வாழக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதாலும் லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் எவ்வளவு சங்கடங்கள் வந்தாலும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தினால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்றாலும் விட்டு கொடுத்து சென்றால் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. தேவையின்றி பிறர் விஷயத்தில் தலையீடு செய்வதை தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது உத்தமம்.  பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்பதால் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். என்றாலும் உங்கள் ராசிக்கு குரு, சனி சாதகமற்று இருப்பதால் தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் மிகவும் கவனமுடன் நடந்து கொண்டால் நற்பலனை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றத்தை அடையலாம். எதிர்பாராத திடீர் தனவரவுகள் கிடைக்கப் பெறுவதால் மன மகிழ்ச்சி ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்த நிலையே நிலவும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் இருப்பது நல்லது.

பரிகாரம் - சனீஸ்வர பகவானை வழிபடுவது, சனிக்கவசம் படிப்பது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 6, 7, 8, 9, 10, 13, 14, 15, 18, 19, 25, 26, 27, 28.

சந்திராஷ்டமம்      -- 01-02-2018 மதியம் 03.07 மணி முதல் 03-02-2018 05.08 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் உங்கள் ராசிக்கு 10-ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். ராசியதிபதி சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீண்ட நாட்களாக நீங்கள் நினைத்த காரியம் எல்லாம் எளிதில் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் பணிபுரிய முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிட்டும். கணவன்- மனைவி இடையே இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். குடும்ப விஷயங்களை முடிந்தவரை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதிருப்பது நல்லது. அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒத்துழைப்போடு அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கொடுத்த கடன்களும் எதிர்பாராத வண்ணம் திரும்ப கிடைக்கப்பெறும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். வெளியூர் வெளிநாட்டில் பணிபுரிய விரும்புபவர்களின் எண்ணமும் நிறைவேறும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப வேலைவாய்ப்பு அமையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.

பரிகாரம் - தினமும் விநாயகரை வணங்குவது நல்லது. சதுர்த்தி நாளில் விரதமிருந்து விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியம் எண்ணியபடி நிறைவேறும்.

வெற்றி தரும் நாட்கள் - 1, 2, 8, 9, 10, 11, 12, 16, 17, 20, 21, 22, 27, 28.

சந்திராஷ்டமம்      -- 03-02-2018 மாலை 05.08 மணி முதல் 05-02-2018 இரவு 10.32 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சூரியன், சுக்கிரன், புதன், கேது சஞ்சரிப்பதால் இம்மாத முற்பாதியில் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குரு 8-ல் சஞ்சரிப்பதாலும் மாத பிற்பாதியில் சூரியன் 12-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் விலகி தாராள தனவரவு உண்டாகும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். உடல் ஆரோக்கியமும் ஓரளவிற்கு சிறப்பாக அமையும். கணவன்- மனைவி உறவு சுமூகமாக இருக்கும். குடும்பத்தில் மகிழச்சியும் நிம்மதியும் நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் ஓரளவுக்கு ஆதரவுடன் செயல்படுவார்கள். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் எண்ணங்கள் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது உத்தமம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம்.  தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் சற்று குறைந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். வெளியூர், வெளிநாடு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் பயணங்களால் தேவையற்ற அலைச்சல்களை சந்திப்பீர்கள். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்றே முழு முயற்சியுடன் பாடுபடுவது உத்தமம்.

பரிகாரம் - வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வணங்குவதாலும், குரு பகவானுக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வதாலும் குருவிற்குரிய ஸ்தோத்திரங்கள் படிப்பதாலும் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - 1, 2, 3, 4, 5, 11, 12, 13, 14, 15, 18, 19, 23, 24.

சந்திராஷ்டமம்      -- 05-02-2018 இரவு 10.32 மணி முதல் 08-02-2018 காலை 07.45 மணி வரை.


No comments: