Wednesday, January 31, 2018

வார ராசிப்பலன் - பிப்ரவரி 4 முதல் 10 வரை


வார ராசிப்பலன் - பிப்ரவரி 4 முதல் 10 வரை 
தை 22 முதல் 28 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,






                               
திருக்கணித கிரக நிலை


ராகு
கேது  சுக்கி சூரிய புதன்

சனி
  செவ்
குரு    
  சந்தி

கிரக மாற்றம்
06-02-2018 கும்ப சுக்கிரன் பகல் 11.59 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
கன்னி                               03-02-2018 மாலை 05.08 மணி முதல் 05-02-2018 இரவு 10.32 மணி வரை.
துலாம்                             05-02-2018 இரவு 10.32 மணி முதல் 08-02-2018 காலை 07.45 மணி வரை.
விருச்சிகம்  08-02-2018 காலை 07.45 மணி முதல் 10-02-2018 இரவு 07.49 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
04.02.2018 தை 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதி உத்திரம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.00 மணி முதல் 08.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

05.02.2018 தை 23 ஆம் தேதி திங்கட்கிழமை பஞ்சமி திதி அஸ்தம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

07.02.2018 தை 25 ஆம் தேதி புதன்கிழமை சப்தமி திதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை


மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
நல்ல வாக்கு சாதுர்யமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ஆம் வீட்டில் சூரியன், புதன் சஞ்சரிப்பதாலும் 6-ஆம் தேதி முதல் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபகரமான பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கடன் பிரச்சனைகள் யாவும் குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் இருக்காது. எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் ஊதிய உயர்வுகள் யாவும் தடையின்றிக் கிடைக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகளும் அமையும். மாணவர்களுக்கு பெற்றோர்கள் மூலம் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிட்டும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 4, 5, 6, 7.

சந்திராஷ்டமம் -   08-02-2018 காலை 07.45 மணி முதல் 10-02-2018 இரவு 07.49 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு, பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எதிலும் திறம்பட செயல்பட்டு ஏற்றங்களை அடைவீர்கள். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் ஜென்ம ராசிக்கு 6-ல் குரு, 8-ல் சனி சஞ்சரிப்பதால் சற்று சிக்கனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்த போட்டிகள் வம்பு வழக்குகள் எல்லாம் குறைந்து லாபகரமான பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை காணப்படும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்றே முழு முயற்சியுடன் பாடுபடுவது உத்தமம். குரு பகவான் வழிபாடு மற்றும் சனி வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 6, 7, 8, 9, 10.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். 8-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பொருளாதார நிலை மேலோங்கி இருப்பதுடன் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலால் மதிப்பும் மரியாதையும் உயர்வடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதன் மூலம் முன்னேற்றம் அடையலாம். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொண்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். சிவ வழிபாடு மற்றும் விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 8, 9, 10.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சனி சஞ்சரிப்பது எல்லா வகையிலும் ஏற்றத்தை தரக்கூடிய அமைப்பாகும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். 7-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்து செல்வது, தேவையின்றி பிறர் விஷயத்தில் தலையீடு செய்வதை தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். எதிர்பாராத திடீர் தனவரவுகள் கிடைக்கப் பெறுவதால் மன மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் இருப்பது நல்லது. பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 4, 5.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சூரியன், கேது, புதன் சேர்க்கைப் பெற்று 6-ல் வலுவாக சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். செவ்வாய் 4-ல் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், அலைச்சல், டென்ஷன் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தடை தாமதங்களுக்கு பிறகு அனுகூலப் பலன் கிட்டும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமாக செயல்பட்டால் பெரிய இழப்புகளை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை பெற முடியும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரம் நல்ல நிலையில் நடைபெற்று எதிர்பார்த்த லாபத்தை தரும். பொருட் தேக்கம் ஏற்படாது. மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு மற்றும் முருக வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 6, 7.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன் பஞ்சம ஸ்தானத்தில் சாதமாக சஞ்சரிப்பதாலும் 2-ல் குரு, 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் வெற்றி மேல் வெற்றி அடையக்கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். தாராள தனவரவுகள் உண்டாகி உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். குடும்பத்திலிருந்து வந்த கடன் பிரச்சனைகள் யாவும் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. உற்றார் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை உண்டாகும். சுபமுயற்சிகளில் தடைகள் விலகி சாதகப் பலன்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். சனிக்கிழமை சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 4, 5, 8, 9, 10.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 2-ல் செவ்வாய், 4-ல் சூரியன், கேது சஞ்சரிப்பது உங்கள் மன அமைதியை குறைக்கும் அமைப்பாகும். குடும்பத்தில் நிம்மதி குறைவு, தேவையற்ற அலைச்சல் ஏற்படும். பணவிஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு, வீண் மருத்துவ செலவுகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது உத்தமம். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. சில நேரங்களில் நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் மற்றவர்களுக்கு வீண் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும் என்பதால் எதிலும் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே பிரச்சனைகளை சமாளிக்க முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே முன்னேற வேண்டியிருக்கும். மாணவர்கள் கல்விக்கான சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். சிவ வழிபாடு மற்றும் முருக வழிபாடு செய்வது சிறந்தது.

வெற்றி தரும் நாட்கள் - 6, 7.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், புதன், கேது சஞ்சரிப்பது அனுகூலத்தை தரும் அமைப்பாகும். ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் சனி சஞ்சரிப்பதால் எந்த விஷயத்திலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. மற்றவர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது உத்தமம். பணவரவுகள் தேவைகேற்றபடி அமைந்து தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது மூலம் ஓரளவுக்கு நற்பலனை அடைய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள் என்பதால் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் ஓரளவுக்கு அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைபளு அதிகரித்தாலும் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களால் மன நிம்மதி உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற சகவாசங்களை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 4, 5, 8, 9, 10.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட தனுசு ராசி நேயர்களே குரு பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் வலுவாக சஞ்சரிப்பதாலும், 2-ல் புதன், 6-ஆம் தேதி முதல் 3-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் அமையும். ஜென்ம ராசியில் சனி, 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறையும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது உத்தமம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது போன்றவற்றால் குடும்ப ஒற்றமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி  லாபம் அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள். சனிப்ரீதியாக ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது மற்றும் முருக கடவுளை வணங்குவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 4, 5, 6, 7.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர் கொண்டு வாழக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் புதன், லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் தக்க சமயத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று உங்கள் பிரச்சினைகள் யாவும் குறையும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். கணவன்- மனைவி ஒருவரையொருவர் அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சிறு தடை தாமதத்திற்கு பிறகு அனுகூலப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களை பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். துர்கையம்மனுக்கு கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்தால் மேன்மை உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - 6, 7, 8, 9, 10.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சனி லாப ஸ்தானத்திலும், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பென்பதால் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்ககூடிய வாராமாகும். குரு பகவான் சாதகமாக இருப்பதால் திருமண முயற்சிகளில் நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி நிலவும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் பொன், பொருள் சேரும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உழைப்பிற்கான பலனை எளிதில் அடைவீர்கள். பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சுட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பர். சிவ பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 8, 9, 10.

சந்திராஷ்டமம்      03-02-2018 மாலை 05.08 மணி முதல் 05-02-2018 இரவு 10.32 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீனராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது சஞ்சரிப்பதால் இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து அனுகூலமான பலன்களை அடைவீர்கள். உங்களது பலமும் வலிமையும் கூடும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்ப்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளும், இடமாற்றங்களும் தக்க சமயத்தில் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சற்றே மந்தநிலை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை எடுத்து விடுவீர்கள். திங்கட்கிழமை அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 4, 5.

சந்திராஷ்டமம் -   05-02-2018 இரவு 10.32 மணி முதல் 08-02-2018 காலை 07.45 மணி வரை.


No comments: