Monday, August 28, 2017

செப்டம்பர் மாத ராசிப்பலன்

செப்டம்பர் மாத ராசிப்பலன்
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com
               





திருக்கணித கிரக நிலை

ராகு
சுக்கி  
கேது 
புதன் வ சூரிய செவ்


சனி 
               
குரு
               
கிரக   மாற்றம்
05-09-2017 புதன் () நிவர்த்தி மாலை 04.59 மணிக்கு
12-09-2017 துலாத்தில் குரு காலை 06.51 மணிக்கு
15-09-2017 சிம்மத்தில் சுக்கிரன் காலை 10.32 மணிக்கு
17-09-2017 கன்னியில் சூரியன் இரவு 12.06 மணிக்கு
26-09-2017 கன்னியில் புதன் இரவு 12.29 மணிக்கு

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே சிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ராசியதிபதி செவ்வாய் தனக்கு நட்பு கிரகமான சூரியனின் வீடான 5-ல் சஞ்சரிப்பதால் உங்களது மதிப்பும் மரியாதையும் கூடும். மாத கோளான சூரியன் மாத பிற்பாதியில் 6-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகி நற்பலன்கள் உண்டாகும். கூட்டாளிகளுடன் நல்ல நட்புறவு ஏற்படும். அபிவிருத்தி பெருகி நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளையும் ஊதிய உயர்வுகளையும் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். இதுநாள் வரை 6-ல் சஞ்சரித்த குரு திருக்கணிதப்படி வரும் 12-ஆம் தேதி முதல் சமசப்தஸ்தானமான 7-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. பயணங்களை குறைத்துக் கொள்வதன் மூலம் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்களை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில் நல்ல லாபம் கிட்டும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

பரிகாரம் - - சனிப்ரீதி ஹனுமனை வழிபடுவதாலும், அனுமன் துதிகளை கூறுவதாலும் கஷ்டங்கள் குறையும்.
சந்திராஷ்டமம்  24-09-2017 இரவு 09.52 மணி முதல் 27-09-2017 காலை 09.55 மணி வரை

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட சுக்கிரனின் ராசியில் பிறந்த உங்களுக்கு சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் செவ்வாய் சூரியன் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் பல இருந்தாலும் எதையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை. உங்கள் ராசிக்கு சனி சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதால் மற்றவர்களை அனுசரித்து சென்றால் தான் அன்றாட பணிகளை திறம்பட செயல்படுத்த முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம். இதுநாள் வரை 5-ல் சஞ்சரித்த குரு திருக்கணிதப்படி வரும் 12-ஆம் தேதி முதல் 6-ஆம் வீட்டிற்கு பெயர்ச்சியாக இருப்பதால் பணவிஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. மாணவர்கள் முயற்சி செய்தால் முன்னேற்ற நிலை அடையலாம்.

பரிகாரம் - - செவ்வாய்க்குரிய அதிதேவதையான முருகனையும் சிவனையும் வழிபடுவது சிறப்பு.
சந்திராஷ்டமம்   31.08.2017 அதிகாலை 01.52 மணி முதல் 02-09-2017 பகல் 01.56 மணி வரை மற்றும் 27-09-2017 காலை 09.55 மணி முதல் 29-09-2017 இரவு 10.23 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் பண்பு கொண்ட உங்களுக்கு ராசியதிபதி புதன் செவ்வாய் சேர்க்கைப் பெற்று முயற்சி ஸ்தானத்தில் இருப்பதால் வாழ்வில் நிலவும் சங்கடங்கள் எல்லாம் படிப்படியாக குறையும். நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும். பொருளாதார நிலை மேன்மையாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடை ஆபரணம் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் சஞ்சரித்த குரு திருக்கணிதப்படி வரும் 12-ஆம் தேதி முதல் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுதலாக இருப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. மாத கோளான சூரியன் மாத முற்பாதியில் 3-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினை பெறுவீர்கள். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகி லாபம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும். மாணவர்களுக்கு முயற்சிக்கேற்ற அனுகூலமான பலன்கள் கிட்டும்.

பரிகாரம் -  தினமும் விநாயகரை வழிபடுவதால் நன்மைகள் உண்டாகும்.
சந்திராஷ்டமம்    02-09-2017 பகல் 01.56 மணி முதல் 04-09-2017 இரவு 11.52 மணி வரை மற்றும் 29-09-2017 இரவு 10.23 மணி முதல் 02.10.2017 காலை 08.48 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்ககூடிய யோகமானது இம்மாதம் உங்களுக்கு இருக்கிறது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். ஜென்ம ராசிக்கு 2-ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்பட்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து நடந்தால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதால் ஓரளவு அனுகூலப்பலனை பெறமுடியும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனினும் மாத கோளான சூரியன் மாத பிற்பாதியில் 3-ல் சஞ்சரிப்பதால் படிப்படியாக பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போதும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளிடம் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் நற்பலன்கள் கிட்டும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம் -  - செண்பகப்பூவால் செவ்வாய்க்கு அர்ச்சனை செய்வது சிறப்பு.
சந்திராஷ்டமம்    04-09-2017 இரவு 11.52 மணி முதல் 07-09-2017 காலை 07.00  மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எந்த செயல் செய்வதென்றாலும் ஒருமுறைக்கு பல முறை யோசித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனமுடன் இருப்பது நல்லதுஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் பணியில் நிம்மதியான நிலையே இருக்கும். உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் சஞ்சரித்த குரு திருக்கணிதப்படி வரும் 12-ஆம் தேதி முதல் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதத்திற்கு பிறகு முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. மாணவர்கள் முயற்சி செய்தால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும்.

பரிகாரம் - - சனிக்கிழமைகளில் உபவாச விரதம் இருப்பது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வதால் மனஅமைதி கிட்டும்.
சந்திராஷ்டமம்    07-09-2017 காலை 07.00  மணி முதல் 09-09-2017 பகல் 11.46 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் உங்களுக்கு இம்மாதம் ராசிக்கு தன பாக்கியதிபதி சுக்கிரன் ராகு சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் முன்னேற்றங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகளும் சிறப்பாகவே இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்களால் அனுகூலங்கள் கிட்டும். உங்கள் ராசிக்கு 3-ல் சனி சஞ்சரிப்பதும் ஜென்ம ராசியில் சஞ்சரித்த குரு திருக்கணிதப்படி வரும் 12-ஆம் தேதி முதல் தன ஸ்தானமான 2-ஆம் வீட்டிற்கு பெயர்ச்சியாக இருப்பதும் அற்புதமான அமைப்பாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசு வழியில் கிடைக்க வேண்டிய உதவிகள் தடையின்றி கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வுகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சியளிக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.

பரிகாரம் -  செந்தாமரை மலர்களால் சூரியனுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்    09-09-2017 பகல் 11.46 மணி முதல் 11-09-2017 மதியம் 03.04 மணி வரை.

துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட உங்களுக்கு ராசியதிபதி சுக்கிரன் 10-ஆம் வீட்டில் வலுவாக சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன், செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பண வரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப் பலனைப் பெற முடியும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். சொந்த பூமி மனை வாங்கும் யோகம் அமையும். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகளை கிடைக்கப் பெறுவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் கௌரவமான நிலைகள் ஏற்படும். எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளும் கிட்டும். சிலருக்கு வெளியூர் வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கி நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

பரிகாரம் -  ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வதால் குருவின் அருள் கிட்டும்.
சந்திராஷ்டமம்    11-09-2017 மதியம் 03.04 மணி முதல் 13-09-2017 மாலை 05.47 மணி வரை

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ராசியதிபதி செவ்வாய் சூரியனுடன் இணைந்து 10-ல் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சரிக்க இருப்பதும் மிகச் சிறப்பான அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். தாராள தன வரவுகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களால் ஓரளவுக்கு ஆதாயங்களை பெறுவீர்கள். உங்கள் மீது இருந்த வம்பு வழக்குகள், பழிச் சொற்கள் யாவும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செவுகள் ஏற்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். உங்கள் ராசிக்கு குரு திருக்கணிதப்படி வரும் 12-ஆம் தேதி முதல் 12-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு கிட்டும்.

பரிகாரம் -  சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் மனக்கவலைகள் விலகும்.
சந்திராஷ்டமம்   13-09-2017 மாலை 05.47 மணி முதல் 15-09-2017 இரவு 08.37 மணி வரை

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே எல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும் கள்ளம் கபடமின்றி  ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட உங்களுக்கு ராசியதிபதி குரு திருக்கணிதப்படி வரும் 12-ஆம் தேதி முதல் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் உங்களுக்கு நிலவும் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். பொருளாதார நெருக்கடிகள் குறைந்து தாராள தனவரவால் நீங்கள் விரும்பியதை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கணவன்- மனைவி விட்டு கொடுத்து செல்வதும், உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் ஓரளவுக்கு சரளமாகவே நடைபெறும். உங்கள் ராசிக்கு சுக்கிரன், ராகு 8-ல் இருப்பதாலும் 12-ல் சனி சஞ்சரிப்பதாலும் மற்றவர்களை அனுசரித்து சென்றால் தான் ஏற்றங்களை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலனை பெற முடியும். இதுவரை இருந்த போட்டிகள் சற்றே குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் எதிர்பார்க்கும் உயர்வுகளை அடையலாம். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம் -  - வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது நல்லது.
சந்திராஷ்டமம்   15-09-2017 இரவு 08.37 மணி முதல் 17-09-2017 இரவு 12.07 மணி வரை

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சுக்கிரன், ராகு, 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களுடன் இருப்பவர்களே உங்களது அமைதியை குறைக்கும் சூழ்நிலை உருவாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களை சற்றே அனுசரித்து நடந்து கொண்டால் நல்ல பல அனுகூலங்களை பெற முடியும். பொருளாதார ரீதியாக பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும் ராசியதிபதி சனி லாப ஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கலில் நல்ல லாபம் கிட்டும். திருமணம் போன்ற மங்களகரமான சுப காரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினை பெற்ற விட முடியும். கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கப்பெறும். மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

பரிகாரம் -  செவ்வாய்க்கிழமை விரதமிருந்து முருகனை வழிபட்டால் செவ்வாயின் பாதிப்புகள் குறையும்.
சந்திராஷ்டமம்   17-09-2017 இரவு 12.07 மணி முதல் 20-09-2017 அதிகாலை 05.00 மணி வரை

கும்பம்  அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு 10-ல் சனி சஞ்சரிப்பதாலும் 7-ஆம் வீட்டில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் தொழிலில் நெருக்கடி, கூட்டாளிகளால் நிம்மதி குறைவு ஏற்படும். இதுவரை 8-ல் சஞ்சரித்த குரு திருக்கணிதப்படி வரும் 12-ஆம் தேதி முதல் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டிற்கு செல்வது சாதகமான அமைப்பு என்பதால் சிக்கல்கள் எல்லாம் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினை பெற்று விடுவீர்கள். கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் வண்டி வாகனம், வீடு மனை போன்றவற்றால் எதிர்பாராத வீண் விரயங்கள் உண்டாகலாம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்கள் வீண் பொழுது போக்குகளை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம் - - பிரதோஷ காலங்களில் சிவனை வணங்கினால் நல்லது நடக்கும்.
சந்திராஷ்டமம்  20-09-2017 அதிகாலை 05.00 மணி முதல் 22-09-2017 மதியம் 12.04 மணி வரை

மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன ராசி நேயர்களே தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய மாதமாக இம்மாதம் இருக்கும். சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சொந்தமாக வீடு வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பும் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் தேடி வரும். உற்றார் உறவினர்கள் வழியிலும் அனுகூலங்கள் கிட்டும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கலில் நல்ல லாபம் கிட்டும். திருமணம் போன்ற மங்களகரமான சுப காரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தாராள பண வரவுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினை பெற்ற விட முடியும். கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகள் லாபமளிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்துடன் சேரும் அமைப்பு உண்டாகும். மாணவர்கள் சிறந்த முறையில் செயல்பட்டு நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர் மற்றும் பெற்றோரின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.

பரிகாரம் - விஷ்ணு பகவானை புதன் கிழமைகளில் விரதமிருந்து வழிபடுவதால் நற்பலன்கள் உண்டாகும்.
சந்திராஷ்டமம்    22-09-2017 மதியம் 12.04 மணி முதல் 24-09-2017 இரவு 09.52 மணி வரை

சுப முகூர்த்த நாட்கள்

04-09-2017 ஆவணி 19 ஆம் தேதி திங்கட்கிழமை திரயோதசிதிதி திருவோண நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் துலா இலக்கினம். வளர்பிறை

08-09-2017 ஆவணி 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துதியைதிதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கன்னி இலக்கினம். தேய்பிறை

10-09-2017 ஆவணி 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்த்திதிதி அஸ்வினி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் துலா இலக்கினம். தேய்பிறை

15-09-2017 ஆவணி 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தசமிதிதி புனர்பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் துலா இலக்கினம். தேய்பிறை


22-09-2017 புரட்டாசி 06 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவிதியைதிதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

No comments: