Saturday, August 12, 2017

வார ராசிப்பலன் ஆகஸ்ட் 13 முதல் 19 வரை 2017

வார ராசிப்பலன்  ஆகஸ்ட் 13 முதல்  19 வரை   2017
ஆடி  28 முதல் ஆவணி 3 வரை







கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் ( மாத  இதழ் )
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,


சந்திர


சுக்கி
கேது 
திருக்கணித கிரக நிலை

சூரிய,
செவ்


ராகு
புதன் வ


சனி ( )


குரு

               
கிரக மாற்றம்
16-08-2017 சிம்ம சூரியன் இரவு 12.47 மணிக்கு
18-08-2017 கடக ராகு அதிகாலை 02.32 மணிக்கு
18-08-2017 மகர கேது அதிகாலை 02.32 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மேஷம்                           13-08-2017 காலை 05.54 மணி முதல் 15-08-2017 காலை 09.41 மணி வரை.
ரிஷபம்                            15-08-2017 காலை 09.41 மணி முதல் 17-08-2017 பகல் 11.58 மணி வரை.
மிதுனம்                          17-08-2017 பகல் 11.59 மணி முதல் 19-08-2017 மதியம் 01.39 மணி வரை.
கடகம்                              19-08-2017 மதியம் 01.39 மணி முதல் 21-08-2017 மதியம் 03.52 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
13.08.2017 ஆடி 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சஷ்டிதிதி அஸ்வினி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கன்னி இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் 4-ஆம் வீட்டில் இருப்பதால் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும் என்றாலும் 3-ல் சுக்கிரன் இருப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் சமாளிப்பீர்கள். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதன் மூலம் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். 17-ஆம் தேதி முதல் சூரியன் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் ஆரோக்கிய பிரச்சனைகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடை தாமதங்களுக்குப் பின் கிட்டும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் சிறப்பான முன்னேற்றங்களைப் பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் அமையும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும். முருக வழிபாடு நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 13, 14, 17, 18, 19.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்புதன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, ராசியதிபதி சுக்கிரன் 2-லும் 3-ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு வெற்றி பொருளாதார மேன்மை உண்டாகும். குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பிள்ளைகள் வழியிலும் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உற்றார்- உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் ஆடம்பர பொருட்களை வாங்கும் வாய்ப்பும் அமையும். கடன்கள் குறையும். பூர்வீக சொத்துக்களால் ஒருசில ஆதாயங்கள் கிட்டும். திருக்கணிதப்படி வரும் 18-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு கேது பெயர்ச்சியால் ராகு 3-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் உங்களுக்கு நிலவிய அலைச்சல்கள் குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணங்களால் நல்ல வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும். தொழிலாளர்களின் ஒத்தழைப்போடு எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். துர்கையம்மனை வழிபாடு செய்வது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் - 15, 16, 17, 19.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும் கலை, இசைத்துறைகளிலும் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் சனி சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையில் எந்தவித குறையின்றி அனுகூலங்கள் இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். எதையும் சமாளிக்க கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும். பணம் பல வழிகளில் தேடி வரும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் படிபடியாக குறையும். 2-ல் சஞ்சரிக்ககூடிய சூரியன் வரும் 17-ஆம் தேதி முதல் 3-ஆம் வீட்டிற்கு மாறுவதால் குடும்பத்தில் நிலவிய ஒற்றுமை குறைவுகள் விலகி நிம்மதி ஏற்படும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர வழியிலும் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் லாபம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். முருக வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 13, 14, 17, 18, 19.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
பேச்சில் கடுமை இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன் செவ்வாய் 3-ல் குரு சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளை தாண்டி வெற்றியினைப் பெறுவீர்கள். உடல் நிலையில் கவனம் செலுத்துவது உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் முன் கோபத்தை குறைப்பது முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். குடும்பத்தில் ஓரளவுக்கு சுபிட்சமான நிலையிருக்கும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது உத்தமம். மங்களரமான சுபகாரியங்கள் கைகூடுவதில் சற்று தாமத நிலை ஏற்படும்உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சாதகமான பலனை அடையலாம். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்தே எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும்மாணவர்கள் கடினமாக உழைத்தால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும். சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 13, 14, 15, 16, 17.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவராகவும், கொடுத்த வாக்குறுதியை எப்பாடுபட்டாவது காப்பாற்றும் சுபாவம் உடையவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, தனக்காரகன் குரு 2-ஆம் வீட்டில் வலுவாக சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேறும். உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். செய்யும் தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மையடையும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நட்புகரம் நீட்டுவார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளால் நல்ல லாபத்தை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் யாவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் அமைப்பும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதோடு விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்கி பாராட்டுகளையும் பரிசுகளையும் பெறுவார்கள். சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் - 15, 16, 17, 18, 19.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
அன்பு, பண்பு, மரியாதை, தெய்வ பக்தி உடையவராகவும் சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடுபவராகவும் விளங்கும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சனி, 10-ல் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது பலமும் வலிமையும் கூடக்கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். வரும் 18-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு கேது பெயர்ச்சியால் ராகு 11-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பது உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகளைப் பெறுவதொடு, எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேறக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடனிருப்பவர்கள் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்கு பின் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். பயணங்களினால் வீண் அலைச்சல்கள் டென்ஷன்கள் ஏற்படக்கூடும் என்பதால் அவற்றை தவிர்ப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். சிவ வழிபாடு தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 17, 18, 19.

சந்திராஷ்டமம்                      13-08-2017 காலை 05.54 மணி முதல் 15-08-2017 காலை 09.41 மணி வரை.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கும் தானமளிக்க தயங்காத பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் துலா ராசி நேயர்களே, ராசியதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் 10-ல் செவ்வாய் வரும் 17-ஆம் தேதி முதல் 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை கூடும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்ப தேவைகள் அனைத்தையும் தடையின்றி பூர்த்தி செய்து விட முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை பெறுவீர்கள் என்றாலும் குரு பகவான் சாதகமற்று இருப்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக செயல்படுவது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் வீண் விரயங்களை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் லாபம் சற்று குறைய நேரிடும். தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை எடுத்து விடுவீர்கள். தட்சிணாமூர்த்தியை வணங்கினால் மேன்மை உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - 13, 14, 19.

சந்திராஷ்டமம்      15-08-2017 காலை 09.41 மணி முதல் 17-08-2017 பகல் 11.58 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
எவ்வளவு தான் கற்றறிந்திருந்தாலும் அகம் பாவமின்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதும், 9-ல் சஞ்சரித்த சூரியன் 17-ஆம் தேதி முதல் 10-ல் சஞ்சரிக்க இருப்பதும் அனுகூலமான பலனை தரும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு அன்றாட பணிகளில் சுறுசுறுப்புன் செயல்படுவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் விலகி நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிபடுத்தி ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் - 13, 14, 15, 16.

சந்திராஷ்டமம்                      17-08-2017 பகல் 11.59 மணி முதல் 19-08-2017 மதியம் 01.39 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு ஏழரைச் சனி நடப்பதாலும் அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் ஆரோக்கிய விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. 8-ல் சஞ்சரித்த சூரியன் 17-ஆம் தேதி முதல் 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்குள்ள நெருக்கடிகள் படிபடியாக குறையும். எதிலும் தெம்புடன் செயல்படுவீர்கள். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்துச் நடந்து கொண்டால் அவர்கள் மூலம் ஒரு சில அனுகூலங்களை அடைய முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் நல்லது நடக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர் கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் வெற்றியினைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். மாணவர்கள் வீண் பொழுதுபோக்குகளில் ஈடுபடாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண் பெறலாம். முருக வழிபாடு உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 15, 16, 17, 18.

சந்திராஷ்டமம்                      19-08-2017 மதியம் 01.39 மணி முதல் 21-08-2017 மதியம் 03.52 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கள்ள கபடமற்ற வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகரராசி நேயர்களே, குருப்பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் சகல விதத்திலும் சாதகமான பலன்களை அடைய முடியும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை காணப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். 7-ஆம் வீட்டில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தை குறைப்பது, குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவச் செலவுகள் உண்டாகாது. அன்றடாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை குறைப்பதன் மூலம் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் நிம்மதி குறைவு ஏற்படும் என்பதால் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வேலைபளு சற்று அதிகரித்தாலும் உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். மாணவர்களின் கல்வி திறன் உயரும். துர்கையம்மன் வழிபடுவது விநாயகர் வழிபடுவது நற்பலனை கொடுக்கும்.

வெற்றி தரும் நாட்கள் - 17, 18, 19.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும், சிறு வயதிலிருந்தே சிறந்த தெய்வ பக்தியும், நல்ல தர்ம சிந்தனையும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எந்தவித சிக்கலையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். சிறப்பான லாபங்களும் கிட்டும். வரும் 18-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு கேது பெயர்ச்சியால் ராகு 6-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் குடும்பத்தில் நிலவிய ஒற்றுமை குறைவுகள் விலகி மகிழ்ச்சி கூடும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். தடைபட்ட சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். பூர்வீக சொத்துக்களாலும் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். மாணவர்கள் கல்விக்காக சுற்றுலா தளங்களுக்கு செல்லும் வாய்ப்பினை பெறுவார்கள். குரு பகவான் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 15, 16, 17, 19.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
தன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி ஏமாற்றங்களை சந்திக்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு 7-ல் சஞ்சரிப்பதாலும் 5-ல் சஞ்சரித்த சூரியன் 17-ஆம் தேதி முதல் 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் சிறப்பான பணவரவுகள் உண்டாகும். உடல் நிலையில் இருந்த சிறுசிறு பாதிப்புகள் குறைந்து ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களால் ஆதாயங்களை அடையலாம். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடை தாமதங்கள் விலகி அனுகூலமானப் பலனைப் பெறுவீர்கள். பண வரவுகள் தாராளமாக இருப்பதன் மூலம் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெறும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். திருக்கணிதப்படி வரும் 18-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு கேது பெயர்ச்சியால் கேது 11-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பது சிறப்பான அமைப்பாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்போடு அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருந்தாலும் உயரதிகாரிகளின் ஊக்குவிப்புகள் உற்சாகத்தை அளிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவார்கள். சனிப்ரீதி ஆஞ்சநேயரை வணங்குவதும் விநாயகரை வணங்குவதும் நன்மை அளிக்கும்.

வெற்றி தரும் நாட்கள் - 15, 16, 17.


No comments: