Friday, August 25, 2017

வார ராசிப்பலன் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 2 வரை 2017

வார ராசிப்பலன்  ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 2 வரை   2017
ஆவணி 11 முதல் 17 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் ( மாத  இதழ் )
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,












திருக்கணித கிரக நிலை

செவ்
ராகு சுக்கி

கேது 
புதன் வ
சூரிய,


சனி

சந்திர
குரு

               
கிரக மாற்றம்
27-08-2017 சிம்ம செவ்வாய் காலை 08.30 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
துலாம்             26-08-2017 அதிகாலை 03.12 மணி முதல் 28-08-2017 மதியம் 01.33 மணி வரை.
விருச்சிகம்  28-08-2017 மதியம் 01.33 மணி முதல் 31-08-2017 அதிகாலை 01.52 மணி வரை.
தனுசு                                31-08-2017 அதிகாலை 01.52 மணி முதல் 02-09-2017 பகல் 01.56 மணி வரை.
மகரம்               02-09-2017 பகல் 01.56 மணி முதல் 04-09-2017 இரவு 11.52 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
27-08-2017 ஆவணி 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சஷ்டிதிதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

31-08-2017 ஆவணி 15 ஆம் தேதி வியாழக்கிழமை தசமிதிதி மூல நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே, ராசியதிபதி செவ்வாய் ராகு சேர்க்கைப் பெற்று சுக ஸ்தானமான 4-ல் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல், டென்ஷன்கள், இருப்பதை அனுபவிக்க தடை ஏற்படும். உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படலாம். கணவன்---- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும்உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒரு சில ஆதாயங்கள் கிட்டும். குரு 6-ல் இருப்பதால் பணவரவு சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை தவிர்ப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருந்தாலும் லாபம் குறையாது. கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் கிடைக்க வேண்டிய புதிய வாய்ப்புகள் சற்று காலதாமதமாக கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனை வழிபடுவது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் - -              27, 2.

சந்திராஷ்டமம்                      28-08-2017 மதியம் 01.33 மணி முதல் 31-08-2017 அதிகாலை 01.52 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்புதன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே ராசியதிபதி சுக்கிரன் செவ்வாய் ராகுவுடன் 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும்கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். ஆடை ஆபரணம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும் என்றாலும் பேச்சில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் கடந்த காலங்களில் இருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். விரோதிகளும் நண்பர்கள் ஆவார்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். திறமைகள் பாராட்டப்படும். தொழிலாளர்களும் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். மாணவர்கள் அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்பட்டாலும் ஆசிரியர்களின் ஊக்குவிப்பால் முன்னேற்றம் அடைவார்கள். சூரியனின் அதிதேவதையான சிவனை வணங்குதாலும், சனி பகவானை வழிபடுவதாலும் நற்பலன் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - -              27, 28, 29, 30.

சந்திராஷ்டமம்                      31-08-2017 அதிகாலை 01.52 மணி முதல் 02-09-2017 பகல் 01.56 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும் கலை, இசைத்துறைகளிலும் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே ராசியதிபதி புதன் சூரியன் சேர்க்கைப் பெற்று 3-ல் இருப்பதும் 6-ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதும் சகல விதத்திலும் ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். அசையும் அசையா சொத்துக்களால் லாபம் உண்டாகும். குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருப்பதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கணவன்- மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகும். 2-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானமாக இருப்பது மிகவும் சிறப்பு. உற்றார் உறவினர்களையும் குடும்பத்தில் உள்ளவர்களையும் அனுசரித்து நடப்பதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எடுக்கும் காரியங்களில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்தொழில் வியாபார ரீதியாக நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும் எதிர்பார்க்கும் லாபங்களும் கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவச் செலவுகள் உண்டாகாது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களின் கல்வி திறன் சிறப்பாகவே இருக்கும். வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்வது, ராகு காலங்களில் அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - -28, 29, 30, 31, 1.

சந்திராஷ்டமம்                      02-09-2017 பகல் 01.56 மணி முதல் 04-09-2017 இரவு 11.52 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
தன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி ஏமாற்றங்களை சந்திக்கும் கடக ராசி நேயர்களே ஜென்ம ராசியில் செவ்வாய் ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சில தடங்கலுக்குப் பின் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். சூரியன் 2-ல் சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டு மனஅமைதி குறையலாம். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாவதால் மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமத நிலை ஏற்பட்டாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும். ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, செந்தாமரை பூவால் சூரியனுக்கு அர்ச்சனை செய்வதால் மனஅமைதி உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - -              31, 1, 2.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
அன்பு, பண்பு, மரியாதை, தெய்வ பக்தி யாவும் உடையவராகவும், சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடுபவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக அமையாது. அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் மந்தநிலை உண்டாகும் என்பதால் ஆரோக்கிய விஷயத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. ஆண்டு கோளான குரு பகவான் 2-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதும் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நற்பலனைத் தரும். பூர்வீக சொத்துக்களால் லாபகரமான பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளிடம் சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால்  தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வேலைபளு குறையும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று அனைவரின் ஆதரவைப் பெறுவார்கள். தினமும் சூரிய நமஸ்காரம் செய்தல், ஞாயிற்றுக்கிழமைகளில் வெல்லம், கோதுமை போன்றவற்றை தானம் செய்வதால் நற்பலன்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - -              27, 28, 2.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
எவ்வளவு தான் கற்றறிந்து இருந்தாலும் எந்தவித அகம் பாவமும் இன்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதும், லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சுக்கிரன் செவ்வாய் ராகுவுடன் சஞ்சரிப்பதும் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் சிறப்பான அமைப்பாகும். பண வரவுகள் நன்றாக இருக்கும். கடன்கள் குறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகலாம். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் நட்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்த்த உயர்வுகளும் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதுடன் விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்குவார்கள். பிரதோஷகால விரதங்கள் மேற்கொள்ளுதல், குரு தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபடுதல் சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் - 28, 29, 30.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவராகவும், கொடுத்த வாக்குறுதியினை எப்பாடு பட்டாவது காப்பாற்றும் பண்பு கொண்டவராகவும் விளங்கும் துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் சூரியன் புதன் சஞ்சரிப்பதும் தொழில், வியாபார ரீதியாக மேன்மையும், புதிய வாய்ப்புகளை அடையும் யோகத்தையும் உண்டாகும். இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிக்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து சுமூகமான உறவு ஏற்படும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு மந்த நிலை தோன்றும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் கைகூடும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தையும், பொழுது போக்குகளையும் தவிர்த்தால் படிப்பில் முன்னேறலாம். குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து வழிபட்டால் நல்லது நடக்கும்.

வெற்றி தரும் நாட்கள் - -              27, 28, 31, 1, 2.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
பேச்சில் கடுமை இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, இந்த வாரம் சூரியன், புதன் 10-ல் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் உங்களுக்கு இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்உற்றார் உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர வழியிலும் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் கிடைக்க வேண்டிய அனுகூலம் கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதோடு எதிர்பாராத தனவரவுகளாலும் பொருளாதார நிலை உயர்வடையும். கடன்களும் படிப்படியாக குறையும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். தொழில் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிட்டும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். செண்பகப்பூவால் செவ்வாய்க்கு அர்ச்சனை செய்வது, சனிப்ரீதி அனுமனை வழிபடுவது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் - -              28, 29, 30, 2.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும் சிறு வயதிலிருந்தே தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் கொண்ட தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 8-ஆம் வீட்டில் சுக்கிரன் செவ்வாய் ராகுவுடன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய வாரமாகும். வண்டி வாகனங்களில் செல்லும் போது நிதானமாக செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் தேவையற்ற கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்திலும் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது உத்தமம். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு கூடினாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். மாணவர்கள் கல்வி ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சனிக்கிழமைகளில் உபவாச விரதம் இருப்பது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வதால் வாழ்வில் மேன்மை உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - 27, 28, 31, 1, 2.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கள்ள கபடமற்ற வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சனி 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் 9-ல் குரு சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் தொழில் ரீதியாக பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் லாபமும் முன்னேற்றமும் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று அபிவிருத்தி பெருகும். எதிர்பார்க்கும் கடன் உதவிகளும் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று
குடும்பத்துடன் ஒன்று சேரும் வாய்ப்பு அமையும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உங்கள் ராசிக்கு செவ்வாய் ராகு 7-லும் சூரியன் 8-லும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் அனைவரையும் அனுசரித்து விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் மந்தமான நிலை இருந்தாலும் அன்றாட பணிகளை செய்ய முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். சூரியனின் அதிதேவதையான சிவனை வணங்குவதாலும் பிரதோஷ விரதமிருப்பதாலும் நற்பலன்கள் கிட்டும்.

வெற்றி தரும் நாட்கள் - 27,28, 29, 30.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கும் தானமளிக்க கூடிய அளவுக்கு பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் கும்ப ராசி நேயர்களே இந்த வாரம் சுக்கிரன் செவ்வாய் ராகுவுடன் இணைந்து 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடக்கூடிய காலமாகும். எடுக்கும் முயற்சிகளில் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து வெற்றிகளை பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள், உடன் பிறந்தவர்களால் அனுகூலப் பலன் கிட்டும். தாராள தனவரவு உண்டாகும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். 7ல் சூரியன் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் மறைந்து வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகி எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். பூமி மனை வாங்கும் விஷயங்களில் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது. மாணவர்கள் முயன்று படித்து தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். செந்தாமரை பூவால் சூரியனுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - -              29, 30, 31, 1, 2.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல் கொண்ட மீன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி குரு ஜென்ம ராசியை பார்ப்பதாலும் பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் சுபிட்சமான பலன்களை அடைவீர்கள். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும். புத்திரர்கள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொண்டால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைந்து ஏற்றமிகுந்த பலன்கள் உண்டாகும். கூட்டாளிகள் அனுகூலமாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதுடன் வேலைப் பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். வெளியூர் பயணங்களினால் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் கிட்டும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதோடு விளையாட்டு போட்டிகளிலும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றியினைப் பெற முடியும். வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து மஹாலட்சுமி தேவிக்கு வெண்மை நிற தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்தால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -                 31, 1, 2,.


சந்திராஷ்டமம்                      26-08-2017 அதிகாலை 03.12 மணி முதல் 28-08-2017 மதியம் 01.33 மணி வரை.

No comments: