Tuesday, August 15, 2017

இன்று - 15.08.2017

இன்று -  15.08.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com







இன்றைய  பஞ்சாங்கம்
15-08-2017, ஆடி- 30, செவ்வாய்கிழமை, அஷ்டமி திதி மாலை 05.40 வரை பின்பு தேய்பிறை நவமி. கிருத்திகை நட்சத்திரம் பின்இரவு 02.31 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் பின்இரவு 02.31 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம்- 1, ஜீவன்- 1/2. ஆடி கிருத்திகை. கால பைரவர்- முருக வழிபாடு நல்லது. சுப முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.



சந்தி

சுக்கி
  கேது
திருக்கணித கிரக நிலை
15.08.2017
சூரிய செவ்

புதன்(வ) ராகு

சனி  (வ)

  குரு

இன்றைய ராசிப்பலன் - 15.08.2017
மேஷம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சனை குறையும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு குடும்பத்தில் நிலவிய பிரச்சனைகள் விலகி மன நிம்மதி உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தந்து லாபம் பெருகும். பொன் பொருள் சேரும். பெண்களுக்கு பணிசுமை குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும்.
மிதுனம்
இன்று குடும்பத்தினரிடம் ஒற்றுமை குறைவு உண்டாகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன் பிரச்சினைகள் குறையும்.
கடகம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலனை தரும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும்.
சிம்மம்
இன்று நீங்கள் எந்த செயலையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். சுபகாரிய முயற்சியில் வெற்றி கிட்டும்.
கன்னி
இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சுபமுயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.
துலாம்
இன்று உங்களுக்கு மன கஷ்டம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. பயணங்களை தவிர்க்கவும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக அமையும். புதிய பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். கொடுத்த கடன் வசூலாகும்.
தனுசு
இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறப்புகளுக்கிடையே ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சிலருக்கு வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும்.
மகரம்
இன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். உறவினர்களின் வாக்குவாதங்கள் மன உளைச்சலை உண்டாக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
கும்பம்
இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்கள் நட்புடன் இருப்பார்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளியூர் பயணங்களினால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
மீனம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நண்பர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் குறைந்து ஒற்றுமை கூடும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியை தரும்.

No comments: