Thursday, August 17, 2017

வார ராசிப்பலன் ஆகஸ்ட் 20 முதல் 26 வரை 2017

வார ராசிப்பலன்  ஆகஸ்ட் 20 முதல்  26 வரை   2017

ஆவணி 4 முதல் 10 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் ( மாத  இதழ் )
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,









சுக்கி

திருக்கணித கிரக நிலை

செவ்
ராகு
சந்திர
கேது 
புதன் வ
சூரிய,


சனி ( )


குரு

               
கிரக மாற்றம்
21-08-2017 கடக சுக்கிரன் பகல் 10.52 மணிக்கு
25-08-2017 சனி வக்ர நிவர்த்தி மாலை 05.38 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
கடகம்                              19-08-2017 மதியம் 01.39 மணி முதல் 21-08-2017 மதியம் 03.52 மணி வரை.
சிம்மம்                            21-08-2017 மதியம் 03.52 மணி முதல் 23-08-2017 இரவு 08.02 மணி வரை.
கன்னி                              23-08-2017 இரவு 08.02 மணி முதல் 26-08-2017 அதிகாலை 03.12 மணி வரை.
துலாம்                            26-08-2017 அதிகாலை 03.12 மணி முதல் 28-08-2017 மதியம் 01.33 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
20-08-2017 ஆவணி 04 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதூர்தசிதிதி பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கன்னி இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
முன் கோபம் அதிகம் இருந்தாலும் இனிமையாக பழகும் சுபாவம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் சூரியன் புதன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு முன்னேற்றங்களை அடைவீர்கள். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றல் உண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்க பெறுவதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் மூலமும் சில நேரங்களில் வீண் பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன் கிட்டும். சுக ஸ்தானமான 4-ல் செவ்வாய் ராகு சஞ்சரிப்பதால் வீண் அலைச்சல், வண்டி வாகனங்கள் மூலமாக செலவுகள் ஏற்படலாம். அஷ்டம சனி நடப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது சிறப்பு. பணம் கொடுக்கல்--- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் கவனமுடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். செவ்வாய்க்குரிய அதிதேவதையான முருகனையும் சிவனையும் வழிபடுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 24, 25, 26.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத பண்பும் தன்மையான குணமும் கொண்ட ரிஷப ராசி நேயர்களே இவ்வாரம் ராசியதிபதி சுக்கிரன் 2-ல் வலுவாக அமைந்து 3-ஆம் வீட்டில் செவ்வாய் ராகு சஞ்சரிப்பதால் உங்களுக்கு சகல விதத்திலும் சாதகமான பலன்கள் ஏற்படும். குரு பகவான் 5-ல் சஞ்சரிப்பதால் சிறப்பான பணவரவும், சேமிப்புகள் அதிகரிக்கும் யோகமும் ஏற்படும். பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று வாழ்க்கை தரம் உயரும். கணவன்- மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் குறைந்து ஒற்றுமை கூடும். உற்றார்- உறவினர்களாலும் அனுகூலம் கிட்டும். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் நோக்கங்களும் நிறைவேறக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்தநிலை சோர்வு போன்றவை உண்டாகலாம். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்படுவதால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். பிரதோஷ காலங்களில் சிவ பெருமானை வணங்குவது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் --               20, 21, 26.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசி காரியங்களை சாதித்து கொள்ளக் கூடிய ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சுக்கிரனும் 3-ல் சூரியனும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி ஏற்படும். சனி 6-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் ராகு சஞ்சரிப்பதால் கோபத்தை குறைத்துக் கொண்டு மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் கணவன்-- மனைவியிடையே வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். திருமண  சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி நல்ல வரன்கள் தேடி வரும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாக குறையும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்ற பள்ளி கல்லூரிக்கு பெருமை செர்ப்பார்கள். செவ்வாய்க்கிழமை முருகனுக்கு விரதம் இருப்பது, துர்க்கையம்மனை வழிபடுவதால் நற்பலன்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - 21, 22, 23.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
கொடுத்த வாக்கை எப்பாடு பட்டாவது நிறைவேற்ற கூடிய ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் செவ்வாய் ராகு 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நிதானமாக செயல்படுவது நல்லது. நெருங்கியவர்களே உங்களுக்கு சங்கடங்களை உண்டாக்குவார்கள் என்பதால் எதிலும் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் உண்டாகி ஒற்றுமை குறைவு ஏற்படலாம். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் தேவையற்ற கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். புத்திர வழியில் சிறுசிறு மனக்கவலைகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் சிறுசிறு மருத்துவ செலவுகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் வீண் பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உயர்வுகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் தொடர்புகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்கள் சாற்றி வழிபட்டால் குருவின் அருள் கிட்டும்.

வெற்றி தரும் நாட்கள் -20, 21, 24, 25.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
வாழ்க்கையில் பல முறை தோற்றாலும் எதையும் சமாளித்து தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் குரு, லாப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். எந்தவித பிரச்சனைகளையும் எதிர் கொள்ள கூடிய அளவுக்கு உங்கள் பலமும் வளமும் கூடும். பொருளாதார  நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். சுப காரியங்கள் கைகூடும். உற்றார்- உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். எதிர்பாராத உதவிகளும் தேடி வரும். ஆடை அபரணங்களை வாங்கும் வாய்ப்பு அமையும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி அடைய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் தடையின்றி நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கடன்களும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுதிடுவீர்கள். மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்குவார்கள். சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்களால் அர்ச்சனை செய்தால் கஷ்டங்கள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் - 21, 22, 23, 26.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
எதிலும் சுறு சுறுப்பாக செயல்படக் கூடிய திறமையும், அனைவரிடமும் அன்புடன் பழகும் பண்பும் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமாக 3-ல் சனி 10-ல் சுக்கிரன் 11-ல் செவ்வாய் ராகு சஞ்சரிப்பதால் தொழிலில் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்களை அடைவீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் மறைந்து எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த வாய்ப்புகள் உங்களை தேடி வரும். அபிவிருத்தி பெருகும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் சிக்கனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப்பெற்று இல்லத்தில் மங்கள ஓசை கேட்கும்பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்படுவது நற்பலனை தரும். தட்சிணாமூர்த்தியை வணங்குவது, பிரதோஷ விரதம் மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 20, 21, 24, 25.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வதில் அலாதி பிரியம் கொண்ட துலா ராசி நேயர்களே ராசியதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானமான 9-ல் தனக்கு நட்பு வீட்டில் இருப்பதும் 10-ல் செவ்வாய் 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்கள் ராசிக்கு 2-ல் சனி சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலமாகவே செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை காண முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் தடையின்றி வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கப்பெறும். வேலைபளு குறைவாகவே இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது உத்தமம். வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்வதால் நற்பலன்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள் - 20, 21, 22, 23, 26.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற லட்சியத்துடன் பாடுபடக் கூடிய ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சூரியன் புதன் வலுவாக இருப்பதால் சகல விதத்திலும் ஏற்றங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவில் இருந்த தடைகள் விலகி தாராள தனவரவுகள் உண்டாகும். குரு 11-ல் சஞ்சரிப்பதால் சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே மகிழ்ச்சியும், ஒற்றுமையும் உண்டாகும். புத்திர வழியில் பூரிப்பு ஏற்படும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றலாம். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் சற்று அனுசரித்து நடப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப்பெறும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கப்பெறும். சனிப்ரீதி அனுமனையும் விநாயகரையும் வழிபடுவதால், சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் - 21, 22, 23, 24, 25.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
தன்னுடைய கொள்கைகளை யாருக்காகவும், எதற்காகவும் எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு 10-லும் 8-ல் செவ்வாய் ராகுவும் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய காலமாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள், எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்து செயல்படுவதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். 7-ல் சுக்கிரன் 9-ல் சூரியன் புதன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் உங்களது நெருக்கடிகள் குறைந்து தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் ஒரு சில ஆதாயங்களை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புடன் சமாளித்து விடுவீர்கள். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை நிலவும். சஷ்டி விரதம் மேற்கொள்வது, கந்த சஷ்டி கவசம் படிப்பது, துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 24, 25, 26.

சந்திராஷ்டமம்                      19-08-2017 மதியம் 01.39 மணி முதல் 21-08-2017 மதியம் 03.52 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே தானுண்டு தன் வேலையுண்டு என பாடுபடும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பது 11-ல் சனி சஞ்சரிப்பது தொழில் பொருளாதார ரீதியாக சாதகமான பலன்களை உண்டாக்ககூடிய நல்ல அமைப்பாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்கள் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடன்கள் படிபடியாக குறையும். உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய் 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவு ஏற்படலாம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. ஆரோக்கிய பாதிப்புகளும் உண்டாகும் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது உத்தமம். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் சற்று தாமதத்திற்குப் பிறகு கைகூடும். முன்கோபத்தை குறைப்பது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவார்கள். தினமும் விநாயகரையும் சிவபெருமானையும் வழிபடுவது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 20, 26.

சந்திராஷ்டமம்                      21-08-2017 மதியம் 03.52 மணி முதல் 23-08-2017 இரவு 08.02 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
வேகமாக பேசினாலும், திருத்தமாகவும், திறம்படவும் பேசக் கூடிய கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் செவ்வாய் ராகு சஞ்சரிப்பது எல்லா வகையிலும் ஏற்றத்தை தரக்கூடிய நல்ல அமைப்பாகும். சிறப்பான பணவரவுகள் உண்டாகி குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரிய முயற்சிகளில் தாமதத்திற்கு பிறகு அனுகூலப்பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் செயல்படுவது நல்லது. புத்திர வழியில் தேவையற்ற மனக்கவலைகள் உண்டாகலாம். உங்கள் ராசிக்கு சூரியன் 7-லும் 8-ல் குருவும் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்திலும் உழைப்பிற்கான பலன்களை அடைய இடையூறுகள் உண்டாகும். எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் சற்று அனுசரித்து நடப்பதன் மூலம் நற்பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபட்டால் நல்லது நடக்கும்.

வெற்றி தரும் நாட்கள் -                 20, 21, 22, 23.

சந்திராஷ்டமம்                      23-08-2017 இரவு 08.02 மணி முதல் 26-08-2017 அதிகாலை 03.12 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
மற்றவர்களின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரன் 6-ல் சூரியன் 7-ல் குரு சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பென்பதால் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய சம்பவங்கள் நடக்கும். பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களின் வருகை மனமகிழ்ச்சியை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பிள்ளைகள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். அபிவிருத்தியும் பெருகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பயன்படுத்தி லாபம் அடைவீர்கள். கொடுத்த கடன்களை வசூலித்துவிட முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் சிறப்புடன் செயல்பட்டு தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, முருக கடவுளை வழிபடுவது சிறப்பு.


வெற்றி தரும் நாட்கள் - 21, 22, 23, 24, 25.

சந்திராஷ்டமம்      26-08-2017 அதிகாலை 03.12 மணி முதல் 28-08-2017 மதியம் 01.33 மணி வரை.

No comments: