Saturday, June 24, 2017

வார ராசிப்பலன் ஜுன் 25 முதல் ஜுலை 1 வரை 2017

வார ராசிப்பலன்  ஜுன் 25 முதல் ஜுலை 1 வரை  2017
ஆனி  11 முதல்  17 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



சுக்கி


செவ்
சூரிய,
புதன்
சந்திர
கேது 
திருக்கணித கிரக நிலை



ராகு

சனி ( )


குரு

               
கிரக மாற்றம்
29-06-2017 ரிஷப சுக்கிரன் இரவு 07.34 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மிதுனம்  - 23-06-2017 மாலை 06.18மணி முதல் 25-06-2017மாலை 06.00 மணி வரை
கடகம்   - 25-06-2017 மாலை 06.00 மணி முதல் 27-06-2017இரவு 07.57 மணி வரை
சிம்மம்   - 27-06-2017 இரவு 07.57 மணி முதல் 30-06-2017அதிகாலை 01.31 மணி வரை
கன்னி   - 30-06-2017 அதிகாலை 01.31 மணி முதல் 02-07-2017காலை 10.51 மணி வரை

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
25-06-2017 ஆனி 11- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, துதியை திதி, புனர்பூச நட்சத்திரம், சித்தயோகம், காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கடக லக்னம். வளர்பிறை

26-06-2017 ஆனி 12 -ஆம் தேதி திங்கட்கிழமை, திருதியை திதி, பூச நட்சத்திரம், சித்தயோகம், காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம லக்னம். வளர்பிறை

28-06-2017ஆனி 14 -ஆம் தேதி புதன்கிழமை, பஞ்சமி திதி, மக நட்சத்திரம், சித்தயோகம், 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம லக்னம். வளர்பிறை

30-06-2017ஆனி 16 -ஆம் தேதி வெள்ளிக்கிழமை, சப்தமி திதி, உத்திர நட்சத்திரம், சித்தயோகம், 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம லக்னம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்
நல்ல வாக்கு சாதுர்யமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் சூரியன், செவ்வாய், புதன், 11-ல் கேது சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்பதால் நினைத்ததெல்லாம் நிறைவேறும். உங்களுக்கிருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் உண்டாகாது. பணவரவுகள் சரளமாக இருக்கும் என்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்து வந்த கடன் பிரச்சனைகள் யாவும் படிப்படியாக குறையும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் சாதகப் பலன்கள் உண்டாகும். கணவன்-- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் எண்ணம் ஈடேற கூடிய வாய்ப்பும் அமையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். உற்றார், உறவினர்களிடையே வாக்குவாதங்கள், கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதமாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும், கூட்டாளிகளையும், தொழிலாளர்கள¬யும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்படுவது உத்தமம். துர்கையம்மனை வழிபடுவது நற்பலனை உண்டாக்கும்.

வெற்றிதரும் நாட்கள்  - 25, 30, 1.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 2-ல் புதன், 5-ல் குரு, 10-ல் கேது சஞ்சாரம் செய்வதால் பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுப்பது மூலம் அன்றாட பணிகளில் தெம்புடன் செயலாற்றுவீர்கள். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றிகளைப் பெறுவீர்கள். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். உற்றார், உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சற்றே மந்த நிலை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை எடுத்து விடுவீர்கள். முருகப்பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்  - 26, 27.
                                                                                                                                                                                                         
மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ள கூடிய மிதுன ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 3-ல் ராகு, 6-ல் சனி 11-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் எதிலும் எதிர் நீச்சல் போட்டாவது ஏற்றமிகு பலன்களை பெறுவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்றாலும் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. தேவையின்றி பிறர் விஷயத்தில் தலையீடு செய்வதை தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது உத்தமம். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். பணம் கொடுக்கல்- வாங்கலில் மிகவும் கவனமுடன் நடந்து கொண்டால் நற்பலனை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது போன்றவற்றால் அபிவிருத்தி பெருகும். எதிர்பாராத திடீர் தனவரவுகள் கிடைக்கப் பெறுவதால் மன மகிழ்ச்சி ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்த நிலையே நிலவும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் இருப்பது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வதால் வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

வெற்றிதரும் நாட்கள்  - 25, 28, 29.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 2-ல் ராகு, 12-ல் சூரியன், செவ்வாய் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகளை எதிர்கொள்வீர்கள். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் நிம்மதி நிலவும். உற்றார்- உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவுடன் செயல்படுவார்கள். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் சற்று குறைந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். வெளியூர், வெளிநாடு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் பயணங்களால் தேவையற்ற அலைச்சல்களை சந்திப்பீர்கள். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்றே முழு முயற்சியுடன் பாடுபடுவது சிறப்பு. துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதன் மூலம் வாழ்வில் ஓரளவுக்கு நற்பலனை அடைய முடியும்.

வெற்றிதரும் நாட்கள்  - 26, 27, 30, 1.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 2-ல் குரு, 11-ல் சூரியன், செவ்வாய், புதன் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் பொன், பொருள் சேரும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். உற்றார், உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சுட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்  - 25, 28, 29.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 3-ல் சனி, 10-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தடை தாமதங்கள் ஏற்படும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளால் சிறுசிறு மருத்துவ செலவுகளை எதிர் கொள்வீர்கள். அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் எந்த சிரமமும் இருக்காது. பொன், பொருள் சேரும். உற்றார்- உறவினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் நல்ல நிலையில் நடைபெற்று எதிர்பார்த்த லாபத்தை தரும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் முன்னேற்றம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை பெற முடியும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். வேலைபளு சற்று குறைவாகவே இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிறப்பு.

வெற்றிதரும் நாட்கள்  - 25, 26, 27, 30, 1.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 9-ல் சூரியன், செவ்வாய், புதன் 11-ல் ராகு சஞ்சாரம் செய்வது சற்று சாதகமற்ற அமைப்பு என்றாலும் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் கை கால் அசதி, எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியாத நிலை போன்றவை ஏற்படும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது முன் கோபத்தைக் குறைப்பது நல்லது. தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பதால் குடும்ப ஒற்றமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்படுவது உத்தமம். அசையும், அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் உண்டாகும். தொழில் வியாபாரத்திலும் மந்த நிலை ஏற்பட்டாலும் எதிர்பார்த்த லாபத்தை பெற்று விட முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமதநிலை ஏற்படும் என்றாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்று எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது வருவதன் மூலம் அனுகூலமானப் பலன்களை அடைய முடியும்.

வெற்றிதரும் நாட்கள்  - 26, 27, 28, 29.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 8-ல் சூரியன், செவ்வாய், புதன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். 11-ல் குரு சஞ்சரிப்பதால் பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைப்பதால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் நற்பலனை அடைய முடியும். சில நேரங்களில் நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் மற்றவர்களுக்கு வீண் பிரச்சனகளை ஏற்படுத்திவிடும் என்பதால் எதிலும் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை கடனாக கொடுக்கும் போது சிந்தித்து செயல்படுவது உத்தமம். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் விரயங்கள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே முன்னேற வேண்டியிருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைப்பதை பயன்படுத்திக் கொள்வது நல்லது. பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மாணவர்கள் கல்விக்காக சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும்.

வெற்றிதரும் நாட்கள்  - 28, 29, 30, 1.

சந்திராஷ்டமம்  - 23-06-2017மாலை 06.18மணி முதல் 25-06-2017மாலை 06.00 மணி வரை

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
யாருக்கும் கீழ் படிந்து அடிமையாக நடப்பதென்பதை இயலாத காரியமாக கருதும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 7-ல் சூரியன், செவ்வாய் 10-ல் குரு சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர்களை அனுசரித்து செல்வது மூலம் ஓரளவுக்கு நற்பலனை அடைய முடியும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள் என்பதால் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சற்றே கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் ஓரளவுக்கு அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். முடிந்தவரை தூர பயணங்களை குறைத்து கொள்வது நல்லது. மாணவர்கள் தேவையற்ற சகவாசங்களை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம். குரு ப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்  - 29, 30, 1.

சந்திராஷ்டமம்  - 25-06-2017மாலை 06.00 மணி முதல் 27-06-2017இரவு 07.57 மணி வரை

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர் கொண்டு வாழக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 6-ல் சூரியன், செவ்வாய், 11-ல் சனி சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் பணிபுரிய முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிட்டும். கணவன்- மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். குடும்ப விஷயங்களை முடிந்தவரை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதிருப்பது நல்லது. அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். வேலைபளு சற்று குறைவாகவே இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். தினமும் விநாயகரை வழிபாடு செய்து வந்தால் எல்லா நன்மையும் கிட்டும்.

வெற்றிதரும் நாட்கள்  - 25, 26.

சந்திராஷ்டமம்   - 27-06-2017இரவு 07.57 மணி முதல் 30-06-2017அதிகாலை 01.31 மணி வரை

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 5-ல் சூரியன், செவ்வாய், புதன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றி கிட்டும்உடல் நிலையில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலைகள் ஏற்படும்பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார்- உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். சிலருக்கு புத்திர வழியில் சிறு மன சஞ்சலம் ஏற்படும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் ஓரளவுக்கு சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் ஊதிய உயர்வுகள் கிடைக்க சற்று தாமதமாகும். வெளியூர் செல்லும் வாய்ப்புகளும் அமையும். தொழில், வியாபாரம் சற்று மந்த நிலையில் நடைபெற்றாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினைப் பெறுவீர்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்  - 26, 27, 28, 29.

சந்திராஷ்டமம்  - 30-06-2017அதிகாலை 01.31 மணி முதல் 02-07-2017காலை 10.51 மணி வரை

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன  ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 4-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்தநிலை போன்ற பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன் போன்றவையும் உண்டாகும். 6-ல் ராகு, 7-ல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை ஓரளவுக்கு ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமானப் பலனை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விட கூடிய ஆற்றல் உண்டாகும்கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும்முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலால் தங்கள் மதிப்பும் மரியாதையும் உயர்வடையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொண்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். ஆஞ்சனேயரை வழிபடுவது மிகவும் நல்லது.

வெற்றிதரும் நாட்கள்  - 28, 29, 30, 1.


No comments: