Saturday, June 10, 2017

வார ராசிப்பலன் ஜுன் 11 முதல் 17 வரை 2017

வார ராசிப்பலன்  ஜுன் 11 முதல் 17 வரை   2017   ( வைகாசி 28 முதல்  ஆனி  3  வரை )

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



சுக்கி

சூரிய,
புதன்

செவ்

கேது 
திருக்கணித கிரக நிலை



ராகு
சனி ( )
சந்திர



குரு

               
கிரக மாற்றம்
15-06-2017  மிதுன சூரியன் அதிகாலை 05.33 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
தனுசு                                - 10-06-2017 காலை 05.11 மணி முதல் 12-06-2017 மாலை 05.26 மணி வரை.
மகரம்               - 12-06-2017 மாலை 05.26 மணி முதல் 15-06-2017 அதிகாலை 04.24 மணி வரை.
கும்பம்             - 15-06-2017 அதிகாலை 04.24 மணி முதல் 17-06-2017 பகல் 12.44 மணி வரை.
மீனம்                - 17-06-2017 பகல் 12.44 மணி முதல் 19-06-2017 மாலை 05.29 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
11-06-2017          வைகாசி 28-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, துவிதியை திதி, மூல நட்சத்திரம், அமிர்தயோகம், காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் மிதுன இலக்கினம். தேய்பிறை

14-06-2017          வைகாசி 31 -ஆம் தேதி புதன்கிழமை, பஞ்சமி திதி, திருவோண நட்சத்திரம், சித்தயோகம், காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மிதுன இலக்கினம். தேய்பிறை

16-06-2017          ஆனி 02 -ஆம் தேதி வெள்ளிக்கிழமை, சப்தமி திதி, சதய நட்சத்திரம், சித்தயோகம், காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மிதுன இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
நல்ல வாக்கு சாதுர்யமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் ராசியாதிபதி செவ்வாய், 11-ல் கேது, 15-ஆம் தேதி முதல் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்பதால் அனுகூலங்களை அடைவீர்கள். பண வரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று நிவர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்த நிலை போன்றவை ஏற்படும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும் என்றாலும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்கு பின் அனுகூலப்பலனை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். முடிந்த வரை பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். கூட்டாளிகள் மற்றும் உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமதம் ஏற்படும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தி பெருகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொண்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். சிவபெருமானை வழிபடுவது, அம்ம்னை வழிபடுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -               - 13, 14, 15, 16, 17.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றல் உடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 5-ல் குரு சஞ்சரிப்பது ஓரளவுக்கு அனுகூலமான அமைப்பு என்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாக கூடும் என்பதால் சற்றே கவனம் எடுத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவி அனுசரித்து செல்வது, உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். தடைபட்ட திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் நற்பலனை அடைய முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணங்கள் ஈடேறும்பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்வடைவார்கள். சிவ பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -               - 15, 16, 17.

சந்திராஷ்டமம்      -  10-06-2017 காலை 05.11 மணி முதல் 12-06-2017 மாலை 05.26 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு, 11-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வது ஓரளவுக்கு சாதகமான அமைப்பு என்பதால் பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வது, உறவினர்களிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. முன் கோபத்தால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அசையா அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே அனுகூலப்பலனைப் பெற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடுதலாகவே இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் தாமதப்படும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்க்கும் வாய்ப்புகள் போட்டி பொறாமைகளால் கை நழுவிப் போகும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தால் வீண் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -               - 11, 17.

சந்திராஷ்டமம்      - 12-06-2017 மாலை 05.26 மணி முதல் 15-06-2017 அதிகாலை 04.24 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 6-ல் சனி, 10-ல் சுக்கிரன், 11-ல் சூரியன், புதன் சஞ்சாரம் செய்வது நற்பலனை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் எந்தவித பிரச்சனைகளையும் எதிர் கொள்ள கூடிய ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது உத்தமம். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேரிடும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகளும் லாபமும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடும் என்பதால் அதிக கவனம் எடுத்து கொள்வது தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -               - 11, 12, 13, 14.

சந்திராஷ்டமம்      - 15-06-2017 அதிகாலை 04.24 மணி முதல் 17-06-2017 பகல் 12.44 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பி விடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்களுக்கு மாத கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், 2-ல் குரு, 11-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களைப் பெற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மருத்துவ செலவை தவிர்க்க முடியும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தினால் நற்பலன் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். புதிய வாய்ப்புகள் தேடி வருவதால் அபிவிருத்தியும் பெருகும். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் பணியில் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் -               - 13, 14.

சந்திராஷ்டமம்      - 17-06-2017 பகல் 12.44 மணி முதல் 19-06-2017 மாலை 05.29 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் குரு, 4-ல் சனி சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பு என்றாலும் 6-ல் கேது, 10-ல் செவ்வாய் 15-ஆம் தேதி முதல் 10-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வது உத்தமம். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஓரளவுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் வீண் அலைச்சல்கள் குறையும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து, தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தபட்ட பாதிப்புகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. உற்றார், உறவினர்களை அனுசரித்து சென்றால் மட்டுமே தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது மூலம் வீண் பிரச்சனைகள் ஏற்படுவதை குறைக்கலாம். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். சனி ப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -               - 15, 16, 17,

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் சனி, 7-ல் சுக்கிரன், 11-ல் ராகு சஞ்சாரம் செய்வது அனுகூலமான அமைப்பு என்பதால் பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தடைபட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொள்வதை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களிடம் சற்று கவனமுடன் நடந்து கொள்வது பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். கொடுத்த கடன்களையும் வசூலிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் அமையும் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர் பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை அடைய கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிக்கும். 8ல் சூரியன் இருப்பதால் முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம். மாணவர்கள் எதிர்பார்க்கும் அரசு உதவிகள் கிடைக்கப் பெறும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -               - 11, 12, 17.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்களுக்கு ஏழரைசனி தொடருவதும், 7-ல் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்றாலும் 11-ல் குரு சஞ்சரிப்பதால் இந்த வாரம் ஏற்ற இறக்கமானப் பலன்களையேப் பெற முடியும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய சிறுசிறு பாதிப்புகளால் மந்தமான நிலை நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமத நிலை உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தற்சமயம் பயன்படுத்தி கொள்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்க கூடும் என்பதால் எதிலும் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பயணங்களால் சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளிக்க கூடிய வல்லமையை பெறுவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -               - 13, 14.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட தனுசு ராசி நேயர்களே உங்களுக்கு ஏழரைசனி தொடருவதும், ஜென்ம ராசிக்கு 7-ல் செவ்வாய், 10-ல் குரு சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு  என்பதால் வீண் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவி இடையே சிறு சிறு  பிரச்சனைகள், வாக்குவாதங்கள் போன்றவை தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தாமத நிலை உண்டாகும். உற்றார்- உறவினர்கள் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. அசையும், அசையா சொத்துக்களாலும் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே ஏற்றம் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு சற்றே அலைச்சல்கள் ஏற்படும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும் என்பதால் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் முழு முயற்சியுடன் செயல்பட்டு படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். முருகப்பெருமானை வழிபடுவது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -               - 11, 12, 15, 16, 17.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர் கொண்டு வாழக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 4-ல் சுக்கிரன், 6-ல் செவ்வாய், 9-ல் குரு சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும்தடைப்பட்ட திருமண சுப காரியகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலனை அடைய முடியும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பொன், பொருள் சேரும். சொந்த பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெற முடியும். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். வெளியூர், வெளி மாநிலங்களுக்கு சென்று பணிபுரிய கூடிய வாய்ப்பும் அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். விநாயக பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -               - 13, 14, 17.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே சர்பகிரகங்கள் 1,7-ல் சஞசரிப்பதும், ஜென்ம ராசிக்கு 4-ல் சூரியன், 8-ல் குரு சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் குடும்ப தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் கிடைப்பதில் தாமத நிலை ஏற்படும். கணவன்- மனைவி இடையே இருந்த தேவையற்ற கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. அசையும் அசையா சொத்துகளால் சிறுசிறு செலவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படவும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஓத்துழைப்புகளால் எதையும் சாதிக்க முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைப்பதில் தடை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். கூட்டாளிகளிகளை அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களால் அலைச்சல் ஏற்படும்மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விடுவார்கள். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -               - 11, 12, 15, 16, 17.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமை சாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் சூரியன், 6-ல் ராகு 7-ல் குரு சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் சாதகமான நடந்து கொள்வதால் அவர்களால் நற்பலன்களை பெற முடியும். பொன், பொருள் சேர்க்கைகள் கிட்டும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். பயணங்களால் நற்பலன் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -  11, 12, 13, 14, 17.


No comments: