Sunday, December 4, 2016

புத்தாண்டு பலன்கள் 2017 ரிஷபம்




புத்தாண்டு பலன்கள் 2017  ரிஷபம் 
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் -  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி
சென்னை -- 600 026 தமிழ்நாடுஇந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


(கிருத்திகை 1, 2, 3-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2-ஆம் பாதங்கள்)


எல்லாரையும் வசீகரப்படுத்தும் தோற்றமும் இனிமையான சுபாவமும் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த 2017-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பொன்னவன் என போற்றப்பட்டக்கூடிய குருபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். பணவரவுகள் தாராளமாக அமைந்து குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன் சுமைகளும் குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுக்கும் பஞ்சம் இருக்காது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு திருமணம் நடைபெறும். புத்திரபாக்கியம் வேண்டுபவர்களுக்கு தடையின்றி புத்திரபாக்கியம் அமையும். பொன்பொருள், ஆடை, ஆபரணம் யாவும் சேரும். அசையா சொத்துகளால் அனுகூலப்பலனைப் பெறுவீர். சனி பகவான் 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளின்றி நல்ல முறையில் லாபத்தை அடைய முடியும் என்றாலும், கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடப்பது உத்தமம். வரும் 27-07-2017-ஆம் தேதி ஏற்படவுள்ள சர்ப்பகிரக மாற்றத்தால் ராகு 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியைப் பெறுவீர்கள். குரு பகவான் வரும் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி  முதல் ருணரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிக்கவுள்ளார். இது சாதகமான அமைப்பு இல்லை என்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நிதானமுடன் செயல்படுவது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் கவனம் தேவை. மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகும். முடிந்தவரை பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்க்கும் நற்பலனைப் பெறமுடியும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன்  குறைந்தாலும் உடல்நிலையில் சோர்வு, மனநிம்மதி குறைவு உண்டாகும். எடுக்கும் காரியங்களைக்கூட ஒழுங்காகச் செய்து முடிக்க முடியாது என்றாலும் எதையும் உங்கள் திறமையால் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள்.

குடும்பம், பொருளாதார நிலை

குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களும் தடையின்றி கைகூடும். பணவரவுகள்  சிறப்பாக இருப்பதால் பொன்பொருள் சேரும். கடன்களும் படிப்படியாகக் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். சனி 7-ல் சஞ்சரிப்பதால் உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு  அனுகூலமானப் பலன்கள் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். செப்படம்பர் மாதம் முதல் குரு 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் வீண் வம்பு, வழக்குகள் ஏற்படும் என்றாலும் கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைந்து விட முடியும். வங்கிக் கடன்கள் தடையின்றிக் கிடைக்கும். செப்டம்பர் மாதத்திற்குபின் பண விஷயங்களிலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களிலும் கவனம் தேவை. தொழிலாளர்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் ஓரளவுக்கு அனுகூலப் பலன்களை அடைய முடியும்.

உத்தியோகம் 

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் ஏற்ற இறக்கமானப் பலன்கள் ஏற்பட்டாலும், நிம்மதியாக செயல்படக்கூடிய சூழ்நிலை ஏற்படும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைத்தாலும் உடன் பணிபுரிபவர்களிடம் அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும். எதிர்பார்க்கும் உயர்வு ஆண்டின் முற்பாதியில் கிடைக்கும் என்றாலும் பிற்பாதியில் எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் ஏற்படலாம். எதிலும் சிந்தித்துச் செயல்படவும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் சற்று மந்தமாக இருந்தாலும் எடுக்கும் காரியங்களை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்ப அமையும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் ஆண்டின் தொடக்கத்தில் நிறைவேறும். உற்றார்- உறவினர்களை சற்று அனுசரித்து நடப்பது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு சற்றே முன்னேற்றம் உண்டாகும்.

அரசியல் 

அரசியல்வாதிகள் எடுக்கும் காரியங்களை செய்துமுடிப்பதில் சிறுசிறு இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் மக்களின் ஆதரவு எப்பொழுதும் இருக்கும். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பும் மரியாதையும் கிட்டும். கட்சிப் பணிகளுக்காக வீண்செலவுகள் செய்ய நேர்ந்தாலும் அதன்முலம் நற்பலனை அடைவீர்கள்.

விவசாயிகள்

விவசாயிகள் எதிர்பார்த்த லாபத்தினை தடையின்றி பெற்றுவிட முடியும். என்றாலும் புழு பூச்சிகளின் தொல்லைகளினால் வீண்விரயங்களை எதிர்கொள்வீர்கள். இதனால், சிறுசிறு கடன்கள் ஏற்படலாம். குடும்பத்தில் சுபகாரியங்கள் ஆண்டின் முற்பாதியில் நிறைவேறும். கால் நடைகள், காய், கனி, கீரை வகைகளாலும் ஓரளவு லாபம் உண்டாகும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் இதுவரை இருந்த தடைகள் விலகும். குரு 5-ல் சஞ்சரிப்பதால் உயர்கல்வி பயிலுபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். பொழுதுபோக்குகளைத் தவிர்ப்பது நல்லது. உடன் பழகும் நண்பர்களிடம் சற்று கவனம் தேவை. பெற்றோர், ஆசிரியர்களின் சொற்படி நடப்பது ஏற்றத்தைத் தரும்.


மாதப்பலன்கள்



ஜனவரி

இம்மாதம் உங்கள் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் செவ்வாய், சுக்கிரன், சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலும் மாத முற்பாதி வரை அஷ்டம  ஸ்தானமான 8-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் லாபமும் உண்டாகும். 5-ல் குரு சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை உயர்வடையும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்களும் கைகூடும். தொழில், வியாபாரத்திலும் கூட்டாளிகளால் லாபம் கிட்டும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வதும் நல்லது.

சந்திராஷ்டமம்:  24-01-2017 மாலை 04.36 மணி முதல் 27-01-2017 அதிகாலை 02.53 மணி வரை 

பிப்ரவரி

உங்கள் ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய், சுக்கிரன், சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். திருமண சுபகாரியங்கள் நடைபெறக்கூடிய வாய்ப்பு, புத்திர வழியில் பூரிப்பு, கணவன் மனைவியிடையே ஒற்றுமை, உற்றார்- உறவினர்களால் ஆதரவு போன்றவை அமையும். பொன் பொருள் சேரும். சிலர் புதிய பூமி, மனை போன்றவற்றை வாங்குவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பயணங்களால் அனுகூலம் உண்டு. துர்க்கை அம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்:  20-02-2017 இரவு 12.55 மணி முதல் 23-02-2017 பகல் 11.33 மணி வரை

மார்ச்

ஜென்ம ராசிக்கு 10, 11-ல் மாத கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், லாப ஸ்தானமான 11-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்தது நிறைவேறும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமைந்து அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் தீரும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். உத்தியோகத்தில் உயர்வுகள் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது உத்தமம். விநாயகரை வழிபடவும்.

சந்திராஷ்டமம்:  20-03-2017 காலை 09.11 மணி முதல் 22-03-2017 இரவு 08.33 மணி வரை

ஏப்ரல்

மாத முற்பாதியில் 11-ல் மாத கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், லாப ஸ்தானமான 11-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் 5-ல் குரு சஞ்சரிப்பதும் குடும்பத்தில் ஒற்றுமையும், சுபிட்சமும் உண்டாக்கக்கூடிய அமைப்பாகும். கணவன்- மனைவிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நினைத்த காரியங்களை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு மனதுக்குப் பிடித்தவரையே மணம்முடிக்கும் ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். தொழில், வியாபார ரீதியாக இருந்த பிரச்சினைகள் விலகி கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் நற்பலனை அடைவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். பணியில் எதிர்பாராத உயர்வுகள் உண்டாகும். முருகப் பெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்:  16-04-2017 மாலை 04.40 மணி முதல் 19-04-2017 அதிகாலை 04.43 மணி வரை

மே

விரய ஸ்தானமான 12-ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 5-ல் குரு, 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. நெருங்கியவர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகளை அடைவீர்கள். உற்றார்- உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறு பாடுகள் ஏற்பட்டாலும் எதிலும் நிதானத்தைக் கடைப்பிடித்தால் பிரச்சினைகளின்றி தவிர்த்துவிட முடியும். பொன்னும் பொருளும் சேரும். கடன்கள் குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடையமுடியும் என்றாலும் தேவையற்ற பயணங்களை தவிர்த்துவிடுவது உத்தமம். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்:  13-05-2017 இரவு 11.11 மணி முதல் 16-05-2017 பகல் 11.32 மணி வரை

ஜுன்

ஜென்ம ராசியில் சூரியன், குடும்ப ஸ்தானமான 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பது தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். முடிந்தவரை பிறர்விஷயங்களில் தலையீடு செய்யாதி ருப்பதும், பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் உத்தமம். 5-ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படாது. ஆடம்பரச் செலவுகளை சற்று குறைப்பது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் சில இடையூறுகளை எதிர்கொள்ள நேரிடும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிட்டும். தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபம் கிட்டும். சனிக்குப் பரிகாரம் செய்வது, முருகனை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்:  10-06-2017 காலை 05.11 மணி முதல் 12-06-2017 மாலை 05.26 மணி வரை

ஜுலை

ஜென்ம ராசிக்கு 5-ல் குரு சஞ்சரிப்பதும் மாதப் பிற்பாதியில் சூரியன் செவ்வாய் 3-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பாகும். இம்மாதம் 27-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு- கேது பெயர்ச்சியின் மூலம் ராகு 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பது நல்ல அமைப்பாகும். இதனால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்துச் செயல்பட்டால் அனுகூலப்பலனைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்படையும். இம்மாதம் நீங்கள் சிவபெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்:  07-07-2017 பகல் 11.21 மணி முதல் 09-07-2017 இரவு 11.21 மணி வரை 

ஆகஸ்ட்

ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், செவ்வாய், ராகு, 5-ல் குரு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமானப் பலனைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். 7-ல் சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி சற்று விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. தொழில், வியாபா ரத்தில் எதிர்பார்த்த லாபத்தைப் பெற்றுவிடுவீர்கள். உடனிருப்பவர்கள் சிறுசிறு பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்றாலும் பெரிய கெடுதி யில்லை. பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோ கஸ்தர்களுக்கு உயர்வுகள் உண்டாகும். விநாயகப் பெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்:  03-08-2017 மாலை 06.13 மணி முதல் 06-08-2017 காலை 06.06 மணி வரை

செப்டம்பர்

இம்மாதம் 2-ஆம் தேதிமுதல் ஏற்படவுள்ள குரு பெயர்ச்சியின் மூலம் ருணரோக ஸ்தானமான 6-ல் குரு சஞ்சரிக்கவுள்ளார். இது சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. இதுமட்டுமின்றி சுக ஸ்தானமான 4-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால்  பொருளாதார நிலையில் நெருக் கடிகள் ஏற்படும் என்றாலும் எதிர்பாராத உதவிகளும் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றியை அடைவீர்கள். உற்றார்- உறவினர்களின் ஆதரவு அவ்வளவு சிறப்பாக இருக்கும் எனக் கூறமுடியாது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும்போது வேகத்தைக் குறைத்து, நிதானத் தைக் கடைபிடிப்பது நல்லது. குரு, சனிக்குப் பரிகாரங்கள் செய்யவும்.

சந்திராஷ்டமம்:  31-08-2017 அதிகாலை 01.52 மணி முதல் 02-09-2017 பகல் 01.56 மணி வரை மற்றும்  27-09-2017 காலை 09.55 மணி முதல் 29.09.2017 இரவு 10.23 மணி வரை 

அக்டோபர்

முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு, மாதப் பிற்பாதியில் ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் நினைத்தது நிறைவேறும். பொருளாதாரநிலையில் சற்று நெருக்கடிகள் ஏற்பட்டாலும் சிக்கனமாக செயல்பட்டால் நற்பலனை அடையமுடியும். உடல்நிலையில் பாதிப்பும் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாமல் போகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எனவே, அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்:  24-10-2017 மாலை 05.42 மணி முதல் 27-10-2017 காலை 06.32 மணி வரை

நவம்பர்

முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு, 7-ல் புதன், மாத முற்பாதி வரை ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் காரியங்களை எதிர்நீச்சல் போட்டாவது முடித்துவிடுவீர்கள். ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை சுமாராக இருக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனம் தேவை. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு சற்று வேலைப்பளு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் அனுகூலப் பலனை பெறமுடியும். முருகனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்:  20-11-2017 இரவு 12.44 மணி முதல் 23-1-2017 பகல் 01.41 மணி வரை

டிசம்பர்

இம்மாதம் ருணரோக ஸ்தானமான 6-ல் குரு, 7-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் தேவையற்ற வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். உற்றார்- உறவினர்களும் தன் பங்கிற்கு வீண்பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். உடல் ஆரோக்கியத்திலும் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவினை உண்டாக்கும். எடுக்கும் காரியங்களில் முழுப் பலனைப்பெற அதிக முயற்சிகளை மேற்கொள்ள நேரிடும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடனிருப்பதும் உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடப்பதும் நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்தமான நிலையிருக்கும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. சிவபெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்:  18-12-2017 காலை 07.04 மணி முதல் 20-12-2017 இரவு 07.57 மணி வரை 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் : 5, 6, 8; நிறம் : வெண்மை, நீலம்; கிழமை : வெள்ளி, சனி; கல் :  வைரம்; திசை : தென்கிழக்கு; தெய்வம் : விஷ்ணு, லக்ஷ்மி.

No comments: