Saturday, August 13, 2016

ஆவணி மாத ராசிப்பலன் 2016

ஆவணி மாத ராசிப்பலன்  2016

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Ph.D in Astrology. 

மலேசியா வருகை

தமிழக பிரபல சோதிடர்
திரு முருகுஇராசேந்திரன் அவரின்
மகன்
தமிழ் மலர் வாரராசிப்பலன் ஜோதிடர்
விஜய் டிவி புகழ் ஜோதிட மாமணி,
முனைவர்  முருகு பால முருகன் Ph.D in Astrology.
அவர்கள் தற்போது குறிகிய கால விஜயமாக மலேசியாவிற்கு வருகை தந்துள்ளாா்
மலேசியாவில் கோலாலம்பூர்,
தங்கும் நாட்கள் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் 21 வரை    

 நேரில் தொடர்பு கொள்ளலாம்
 Murugubalamurugan

18 Jalan Ipoh Kecil

Off Jalan Ipoh

50350  Kuala lumbur

cell- - 0167642631


மேஷம்
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியனும், அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சனியும் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை காணப்பட்டாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்த கொள்வது நல்லது. சுக வாழ்வு சொகுசு வாழ்வில் பாதிப்புகள் ஏற்படுவதுடன், அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் ஏற்பட்டாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்படவும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது மிகவும் நல்லது.

ரிஷபம்  
சுக ஸ்தானமான 4ல் புதன் சுக்கிரனும், 5ல் குருவும் சஞ்சரிப்பதால் சுக வாழ்வு சொகுசு வாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. நீங்கள் நினைத்தது நினைத்தபடி நிறைவேறும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உணவு விஷயத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்க முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும், பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். புத்திர வழியிலும் மகிழ்ச்சி தரக்சுடிய சம்பவங்கள் நடைபெறும். சுட்டு தொழில் செய்வபர்களுக்கு சிறு சிறு நெருக்கடிகள் தோன்றினாலும் எதையும் சமாளிக்க கூடிய பலமும் வலிமையும் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

மிதுனம்   
முயற்சி ஸ்தானமான 3ல் சூரியன், ராகுவும் 6ல் செவ்வாய் சனியும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். நினைத்த தெல்லாம் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் கை கூடும். கொடுக்கல் வாங்கலிருந்தப் பிரச்சனைகள் விலகி கொடுத்த கடன்களும் வசூலாகும். தொழில் வியாபாரத்திலும் லாபம் பெருகும். போட்டி பொறாமைகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். வேலை பளு குறையும். தேவையற்ற அலைச்சல்கள் சற்றே அதிகரிக்கும். சிவ பெருமானை வழிபடுவது நல்லது.

கடகம்   ஜென்ம ராசிக்கு 2ல் ராகு, சூரியன் சஞ்சாரம் செய்வதும் 3ல் குரு சஞ்சரிப்பதும் குடும்பத்தில் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணவரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர் பாராத உதவிகள் கிடைக்கும்.  ஆடம்பர செலவுகளை குறைப்பது உத்தமம். உற்றார் உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் ஏற்பட்டாலும் தேவையற்ற அலைச்சல்களை சந்திக்க வேண்டி வரும். சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சிம்மம்    
ஜென்ராசியில் சூரியன், 4ல் செவ்வாய், சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் 2ல் குரு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தர கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். இது வரை தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் அனைத்தும் தடை விலகி கைகூடும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சொந்த பூமி, மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகமும் அமையும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். சிலர் நினைத்தவரையே கரம் பிடித்து மகிழ்வர். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகுவதுடன் புதிய புதிய வாய்ப்புகள் யாவும் தேடி வரும். தினமும் விநாயகரை வழிபடவும்.

கன்னி    
விரய ஸ்தானமான 12ல் சூரியன், சுக்கிரன் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்றாலும், முயற்சி ஸ்தானமான 3ல் செவ்வாய் சனி சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது உத்ததம். உற்றார் உறவினர்களிடம் சிறுசிறு வாக்கு வாதங்கள் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகும். சிவ பொருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

துலாம்    லாப ஸ்தானமான 11ல் சூரியன், புதன், சுக்கிரன், ராகு சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் லாபத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். தொழில் வியாபாரத்திலுள்ள போட்டி பொறாமைகளை ஒட ஒட விரட்டியடித்து எதிலும் ஜொலிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெற்று கைநிறைய சம்பாதிப்பார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலங்கள் உண்டாகும். பொன்னும் பொருளும் சேரும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது மேலும் நல்லது.

விருச்சிகம்    ஜென்ம ராசிக்கு 10ல் சூரியன், புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும், 11ல் குரு சஞ்சாரம் செய்வதும் தொழில் வியாபார ரீதியாக முன்னேற்றத்தை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துகளால் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளால் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் அமையும். அம்மன் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

தனுசு    
பாக்கிய ஸ்தானமான 9ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் பண வரவுகள் சுமாராக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவது மூலம் வீண் விரயங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறியான நிலையே இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதும், வேலையாட்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பதும் நல்லது. பல்வேறு பொதுநல காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பும் உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

மகரம் 
அஷ்டம ஸ்தானமான 8ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் பாக்கிய ஸ்தானமான 9ல் குரு, 11ல் செவ்வாய், சனி சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவதுடன் குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியுடனிருக்க முடியும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். ஆஞ்சனேயரை வழிபடுவது நல்லது.

கும்பம்  
ஜென்ம ராசிக்கு 7ல் சூரியன், 8ல் குரு சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உண்டாகும். கணவன் மனைவியிடையேயும், உற்றார் உறவனர்களிடையேயும் ஒற்றுமைக் குறைவினை உண்டாக்கும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிக்கவும், திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணியில் நிம்மதியான நிலையையும் அடைவார்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கும் கூட்டாளிகளால் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.

மீனம் 
ஜென்ம ராசிக்கு 6ல் சூரியன், ராகு, 7ல் குரு சஞ்சரிப்பதால் நினைத்தது நிறைவேறும். பணவரவுகளும் சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். உற்றார் உறவினர்களால் சில மனசஞ்சலங்கள் ஏற்பட்டாலும் உடனே சரியாகி விடும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியாகப் பணியாற்ற முடியும். ஊதிய உயர்வுகள் தடையின்றிக் கிட்டும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

No comments: