Thursday, August 25, 2016

வார ராசிப்பலன் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 3 வரை 2016

வார ராசிப்பலன் ஆகஸ்ட் 28  முதல்  செப்டம்பர் 3   வரை   2016

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை -- 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com







கேது 
கிரக   மாற்றம்

30.08.2016 புதன் வக்ர ஆரம்பம்




ராகு  சூரிய

சனி  செவ்     

குரு புதன்  சுக்கி 

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மிதுனம்   - 26.08.2016 இரவு 10.21 மணி முதல் 29.08.2016 காலை 03.04 மணி வரை.
கடகம்      -29.08.2016 காலை 03.04 மணி முதல் 31.08.2016 காலை 09.49 மணி வரை.
சிம்மம்     -31.08.2016 காலை 09.49 மணி முதல் 02.09.2016 இரவு 06.53  மணி வரை.
கன்னி       - 02.09.2016 இரவு 06.53  மணி முதல் 05.09.2016 காலை 08.14 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
29.08.2016 ஆவணி 13 ஆம் தேதி திங்கட்கிழமை துவாதசிதிதி புனர்பூச நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் துலா இலக்கினம். தேய்பிறை


மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 5ல் சூரியன் ராகு, 8ல் சனி, செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கரை எடுக்க வேண்டியிருக்கும். குடும்பத்திலுள்ளவர்வர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் தோன்றும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்திலும் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்து கொள்வது உத்தமம். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படமாட்டார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும். சனிக்கு பரிகாரம் செய்வது சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 28,3

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்புதன்மை  அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 5ல் குரு, புதன், சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் ஏற்பட்டு உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன் மனைவியிடையே வீண் வாக்கு வாதங்களை தவிர்த்து பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும்சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல்  வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் மேம்படும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். சனிபகவானுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 29,30

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
எந்த வித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 3ல் சூரியன் ராகு, 6ல் செவ்வாய் சனி சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். சுபச்செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபங்களை அடையலாம். தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே குறையும். லாபங்கள் சிறப்பாக இருக்கும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம் பட செயல்பட முடியும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். புதிய வேலை மேடீபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 28,31,1,2.

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே விரய ஸ்தானமான 2ல் சூரியன் ராகு 5ல் செவ்வாய், சனி சஞ்சரிப்பதால் நன்மை தீமை கலந்த பலன்களையே பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றியினை அடைவீர்கள். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். பணம் கொடுக்கல் வாங்கலில் சிந்தித்துச் செயல்பட்டால் லாபத்தினை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினைப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனம் தேவை. கூட்டாளிகளாலும் தொழிலாளர்களாலும் வீண் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன் மூலம் ஆதாயங்களும் உண்டாகும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள் 29,30,3.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசியாதிபதி சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சரித்தாலும் 2ல் குரு புதன் சுக்கிரன் சஞ்சாரம்  செய்வதால் எதையும் எளிதில் எதிர்கொண்டு வெற்றியையும் லாபத்தினையும் பெறுவீர்கள். தடைப்பட்டுக்கொண்டிருந்த திருமண சுப காரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் பாதிக்காது. கணவன்  மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். அசையும் அசையா சொத்துகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கடன்கள் சற்று நிவர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் லாபம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களை அடைய முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகளால் வெளிவட்டாரம் விரிவடையும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். துர்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 28,31,1,2.

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
மென்மையான சுபாவமும் சிறந்த அறிவாற்றலும் கொண்ட கன்னி ராசி நேயர்களே 3ல் சனி செவ்வாய், சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பணவரவுகளும் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவினை உண்டாக்கும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களிடமிருந்தும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபார ரீதியாகவும் முன்னேற்றங்கள் உண்டாகும். போட்டிகள் குறையும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வினைப் பெற்று வாழ்வில் முன்னேற்ற மடைவார்கள். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் 28,29,30,3.

துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
மற்றவர்களின் குணாதிசயங்களை துல்லியமாக எடை போடும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே 2ல் சனி செவ்வாய், சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 11ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதையும் எளிதில் எதிர்கொண்டு வெற்றியை அடையும் ஆறணுறலைப் பெறுவீர்கள். தொழில் வியாபார ரீதியாக வீண் விரயங்களையும், நெருக்கடிகளையும் சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளிக்கும் வலிமையும் வல்லமையும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைபளு அதிகரித்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் நிம்மதியான நிலையிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றும் என்பதால் கவனமுடனிருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச்  செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு சுமாராக இருக்கும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடியிருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 29,30,31,1,2.

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
முன் கோபம் இருந்தாலும் எதிலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே 10ல் சூரியன், 11ல் சுக்கிரன் குரு புதன், சஞ்சரிப்பதால் பணவரவுகளிலிருந்த தடைகள் விலகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குபின் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். பொன் பொருள் சேரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 31,1,2,3.
சந்திராஷ்டமம்                      26.08.2016 இரவு 10.21 மணி முதல் 29.08.2016 காலை 03.04 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
கஷ்டபடுபவர்களுக்கு உதவி செய்ய கூடிய மன பக்குவம் கொண்ட தனுசு ராசி நேயர்களே ஏழரைசனி தொடருவதும், 10ல் சுக்கிரன் குரு புதன், சஞ்சரிப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலப் பலன் உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகளை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து லாபங்கள் பெருகும். பயணங்களால் நற்பலனை அடைவீர்கள். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலமான பலனை அடையலாம். உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை அடைய முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சியளிக்கும். சிவ பெருமானை வழிபாடு செய்யவும்.

வெற்றிதரும் நாட்கள் 28,3.
சந்திராஷ்டமம்                      29.08.2016 காலை 03.04 மணி முதல் 31.08.2016 காலை 09.49 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
எந்தவித கஷ்டங்களையும் எளிதில் தாங்கி கொள்ள கூடிய குணம் கொண்ட மகர ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 9ல் குரு 11ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்றாலும் 8ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மூலம் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தொழில் வியாபார  ரீதியாக ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் சிறப்பான லாபம் அமையும்குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் இருக்கும் என்றாலும் உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லதுதிருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பாராத உதவிகளும் கிடைப்பதால் குடும்பத்தில் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். முருகப் பெருமா9னை வழிபபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 28,29,30.
சந்திராஷ்டமம்                      31.08.2016 காலை 09.49 மணி முதல் 02.09.2016 இரவு 06.53  மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
தன்மானமும் வரட்டு கௌரவமும் அதிகம் கொண்ட கும்ப ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 7ல் சூரியன் 8ல் குரு சஞ்சரிப்பது எதிலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளித்து விட கூடிய ஆற்றல் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும்பூர்வீக சொத்துகளால்  ஒரளவுக்கு லாபம் கிட்டும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை எதிர்கொள்ள நேரிட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. தொழிலாளர்களால் சிறுசிறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகி வீண் அலைச்சல்கள் ஏற்படும். சனிபகவானை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள் 29,30,31,1,2.
சந்திராஷ்டமம்                      02.09.2016 இரவு 06.53  மணி முதல் 05.09.2016 காலை 08.14 மணி வரை.



மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அனைவரிடமும் அளந்து பேசும் குணம் கொண்ட மீன ராசி நேயர்களே 6ல் சூரியன் ராகு 7ல் குரு சஞ்சாரம் செய்வதால் அற்புதமான அமைப்பு என்பதால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலையினை அடைய முடியும். தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்களும் பணியில் மன நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்துக் காத்திருந்த ஊதிய உயர்வு, இடமாற்றம் போன்றவையும் கிடைக்கப் பெறும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். உத்தியோக ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்திலும் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பேச்சில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. திருமண சுழு காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். கடன்கள் நிவர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. சனிக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.


வெற்றிதரும் நாட்கள் 31,1,2,3.

No comments: