Friday, August 12, 2016

வார ராசிப்பலன் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை 2016

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Ph.D in Astrology. 

மலேசியா வருகை

தமிழக பிரபல சோதிடர்
திரு முருகுஇராசேந்திரன் அவரின்
மகன்
தமிழ் மலர் வாரராசிப்பலன் ஜோதிடர்
விஜய் டிவி புகழ் ஜோதிட மாமணி,
முனைவர்  முருகு பால முருகன் Ph.D in Astrology.
அவர்கள் தற்போது குறிகிய கால விஜயமாக மலேசியாவிற்கு வருகை தந்துள்ளாா்
மலேசியாவில் கோலாலம்பூர்,
தங்கும் நாட்கள் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் 21 வரை    

 நேரில் தொடர்பு கொள்ளலாம்
 Murugubalamurugan

18 Jalan Ipoh Kecil

Off Jalan Ipoh

50350  Kuala lumbur

cell- - 0167642631


வார ராசிப்பலன்    ஆகஸ்ட் 14  முதல்  20   வரை   2016

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com






கேது 
கிரக   மாற்றம் 

16.08.2016           சிம்மம் சூரியன்
19.08.2016           கன்னி புதன்

சூரிய

ராகு  புதன்  சுக்கி     

சனி  செவ்

                குரு    


இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
தனுசு           13.08.2016 இரவு 10.18 மணி முதல் 16.08.2016 காலை 06.38 மணி வரை.
மகரம்       16.08.2016 காலை 06.38 மணி முதல் 18.08.2016 பகல் 11.51 மணி வரை.
கும்பம்     18.08.2016 பகல் 11.51 மணி முதல் 20.08.2016 மதியம் 02.53 மணி வரை.
மீனம்        20.08.2016 மதியம் 02.53 மணி முதல்22.08.2016 மாலை 04.57 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

14.08.2016 ஆடி 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏகாதசிதிதி மூல நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

17.08.2016 ஆவணி 01 ஆம் தேதி புதன்கிழமை சதுர்தசி திதி திருவோண நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை


மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
பிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டுபிடிக்காதவாறு பேசும் ஆற்றல் கொண்ட  மேஷ ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 4ல் சூரியன் 6ல் குரு 8ல் செவ்வாய் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பதும், பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால்  விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. புத்திர வழியில் தேவையற்ற மனசஞ்சலங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் வீண் செலவுகள் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள் 16,17,18,19,20.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 3ல் சூரியன், 4ல் புதன் சுக்கிரன் 5ல் குரு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய மருத்துவ செலவுகள் ஏற்படாது. பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நற்பலனை தரும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் உண்டாகும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்யவும்.
வெற்றிதரும் நாட்கள் 19,20.
சந்திராஷ்டமம்                        13.08.2016 இரவு 10.18 மணி முதல் 16.08.2016 காலை 06.38 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
கற்பனை திறனும் நல்ல ஞாபக சக்தியும் கொண்ட மிதுன ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 3ல் ராகு 6ல் சனி, செவ்வாய், 16ம் தேதி முதல் 3ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்களே உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடன்களும் குறையும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன், பொருள் சேரும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். 2ல் ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்வது உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 14,15.
சந்திராஷ்டமம்                      16.08.2016 காலை 06.38 மணி முதல் 18.08.2016 பகல் 11.51 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
கற்பனை திறனும் நல்ல ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசியில் சூரியன் 3ல் குரு சஞ்சரிப்பதால் ஏற்ற இறக்கமானப் பலன்களைப் பெறுவீர்கள். பண வரவுகளில் சிறுசிறு நெருக்கடிகளும், உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினைகளும் உண்டாகும் என்றாலும் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்தே இருக்கும். அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேர்ந்தாலும் எதிர்பாராத திடீர் உதவிகள் கிடைக்கப் பெற்று தேவைகள் யாவும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளிலும் லாபம் கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் நற்பலனைப் பெற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடனிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஒரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பிவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் பிறருக்கு முன் ஜாமீன்  கொடுப்பதைத் தவிர்க்கவும். ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் 14,15,16,17
சந்திராஷ்டமம்                      18.08.2016 பகல் 11.51 மணி முதல் 20.08.2016 மதியம் 02.53 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
தனக்கு நிகரில்லாதவர்களிடம் பழகுவதை தவிர்க்கும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 4ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 2ல் குரு சஞ்சரிப்பதால் ஏற்ற இறக்கமானப் பலன்களைப் பெறுவீர்கள். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடன்களும் குறையும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன், பொருள் சேரும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். 2ல் ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்வது உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் 16,17,18,19.
சந்திராஷ்டமம்                      20.08.2016 மதியம் 02.53 மணி முதல்22.08.2016 மாலை 04.57 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
மனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டால் அனைவரிடமும் சகஜமாக பழகும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 3ல் செவ்வாய் சனி 6ல் கேது சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் படிப்படியாக விலகும். நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். சிலருக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் சாதகப் பலனை அடைய முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துகளாலும் அனுகூலப்பலன் ஏற்படும். பல பெரிய மனிதர்களின் உதவியும் ஆதரவும் தடையின்றிக் கிடைக்கும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் 19,20.

துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
ஆடை ஆபரணங்கள் அணிந்து கொள்வதில் அலாதி பிரியம் கொண்ட துலா ராசி நேயர்களே 11ல் ராகு சுக்கிரன், 16ம் தேதி முதல் 11ல் சூரியன் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் உண்டாகி அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடன்களும் குறையும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன், பொருள் சேரும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்வது உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் 14,15.

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
முன்கோபம் உடையவராகவும், எளிதில்  உணர்ச்சி வசப்படக்கூடியவராகவும் விளங்கும் விருச்சிக ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சனி சஞ்சரித்தாலும், 11ல் குரு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விட முடியும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகள் கிடைக்கப் பெற்று வாழ்க்கைத் தரம் உயரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களையும் பெற்று விடுவீர்கள். கூட்டாளிகளும் ஆதரவாக அமைவார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதினால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. முருகபெருமானுக்கு பரிகாரம் செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் 16,17,18.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமையும், தற்பெருமையும் அதிகம் கொண்ட தனுசு ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 10ல் குரு 12ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் சுபகாரியங்களில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லதுஉத்தியோகத்திலிருப்பவர்கள் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். னுன்றாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைபடும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தேவையற்ற அலைச்சல்களும் அதிகரிக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபங்களும் அபிவிருத்தியும் பெருகும். தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் 14,15,19,20.

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட மகர ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 9ல் குரு 11ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதுல் அற்புதமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி சாதகப் பலனை அடைய முடியும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக நடந்து கொள்வார்கள். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் படிப்படியாக விலகி நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். சிலருக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். அசையும் அசையா சொத்துகளாலும் அனுகூலப்பலன் ஏற்படும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் 16,17,18.

கும்பம்  அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
முன் கோபமும் முரட்டு பிடிவாதமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 7ல் சுக்கிரன், புதன் 10ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினை பெற்று விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகளும் கணவன் மனைவியிடையே வாக்குவாதங்களும் உண்டாகும் என்பதால் அனைவரிடமும் சற்று விட்டு கொடுத்து நடந்து கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் தடைப்படாது. அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்-.
வெற்றிதரும் நாட்கள் 14,15,19,20


மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் மீன ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 6ல் ராகு, 7ல் குரு 16ம் தேதி முதல் 6ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களால் மகிழ்ச்சி, பொருளாதார மேன்மை யாவும் சிறப்பாக அமையும். தேக ஆரோக்கியமும் நல்ல முறையிலிருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் பலவகையில் முன்னேற்றங்களை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெற முடியும். தொழில் வியாபாரமும் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நற்பலன்களை செய்வார்கள். சேமிப்பும் பெருகும். சிவபெருமானை வழிபாடு செய்யவும்.

வெற்றிதரும் நாட்கள் 14,15,16,17,18.

No comments: