வார ராசிப்பலன் - மார்ச் 8 முதல் 14 வரை
மாசி 25 முதல் பங்குனி 1 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில்
தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு,
இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
|
சுக்கி
|
|
ராகு
|
சூரிய புதன் (வ)
|
திருக்கணித கிரக நிலை
|
சந்தி
|
|
சனி
|
|
||
கேது செவ் குரு
|
|
|
|
கிரக மாற்றம்
10-03-2020 புதன் வக்ர முடிவு
காலை 09.19 மணிக்கு
14-03-2020 மீனத்தில் சூரியன்
பகல் 11.53 மணிக்கு
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
சிம்மம்
08-03-2020 காலை 06.52 மணி முதல்
10-03-2020 காலை 06.22 மணி வரை.
கன்னி
10-03-2020 காலை 06.22 மணி முதல்
12-03-2020 காலை 05.35 மணி வரை.
துலாம்
12-03-2020 காலை 05.35 மணி முதல்
14-03-2020 காலை 06.41 மணி வரை.
விருச்சிகம்
14-03-2020 காலை 06.41 மணி முதல்
16-03-2020 பகல் 11.12 மணி வரை.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
12.03.2020 மாசி 29 ஆம் தேதி
வியாழக்கிழமை திருதியை திதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல்
10.00 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை
13.03.2020 மாசி 30 ஆம் தேதி
வெள்ளிக்கிழமை சதுர்த்திதுழதுது திதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.30
மணி முதல் 07.30 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை
மேஷம் அசுவனி, பரணி,
கிருத்திகை 1-ஆம் பாதம்.
தன்னிடத்தில் அன்பும் பாசமும்
கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு
உதவும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சுக்கிரன் லாப ஸ்தானத்தில்
சூரியன் புதன் சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களும் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள்.
தாராள தனவரவுகளால் குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். உங்களுடைய அனைத்து தேவைகளும்
பூர்த்தியாகும். குரு 9-ல் சஞ்சரிப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடுவதற்கான
யோகம் உண்டாகும். கடன்கள் சற்றே குறையும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை
அளிக்கும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். உடல்
ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலனை
பெறுவீர்கள். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். பெரிய மனிதர்களின்
தொடர்பு கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல்
டென்ஷன்கள் ஏற்பட்டாலும் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையும் உயர்வுகளும் கிடைக்கும்.
கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும்.
மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதுடன் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்க
முடியும். சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகர் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 10, 11, 12, 13.
சந்திராஷ்டமம் - 14-03-2020 காலை 06.41 மணி முதல் 16-03-2020 பகல் 11.12 மணி வரை.
ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம்
பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய
சகிப்புதன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன்,
புதன் சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். நல்ல
வாய்ப்புகள் தேடி வரும். சொந்த தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பொருளாதார
ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். திறமைகள்
பாராட்டப்படும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். வேலைபளு குறையும்.
பணவரவுகள் ஓரளவு சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குரு,
செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனமாக செயல்படுவது நல்லது.
கணவன்- மனைவி இடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை
கடைபிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற
பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள்
ஏற்பட்டாலும் பெரிய கெடுதி இருக்காது. உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப்
பலன் கிட்டும். உங்கள் மீது இருந்த பழிச்சொல் விலகி நற்பெயர் எடுப்பீர்கள்.
மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் வாழ்வில்
மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 12, 13, 14.
மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும்
கலை, இசைத் துறைகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே,
உங்கள் ராசியதிபதி புதன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில்
சுக்கிரன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பாகும். தாராள பணவரவுகள் உண்டாகி
குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். ஆடை, ஆபரணம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு
அமையும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து
சென்றால் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும்.
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது
நல்லது. குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் இருந்த
பிரச்சினைகள் விலகி அனுகூலமான பலன்களை அடைய முடியும். கொடுத்த கடன்களும் வீடு தேடி
வரும். விரோதிகளும் நண்பர்களாக மாறுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு தகுதிக்கு ஏற்ற
உயர்வுகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு உடனிருப்பவர்களின்
சாதகமான செயல்பாடுகளால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். மாணவர்கள் அரசு
வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்பட்டாலும் ஆசிரியர்களின் ஊக்குவிப்பால்
முன்னேற்றம் அடைவார்கள். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மைகள் பல
அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் -- 8, 9, 14.
கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம்,
பூசம், ஆயில்யம்.
தன்னை நம்பியவர்களுக்கு நல்ல
எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி மற்றவர்களால் ஏமாற்றங்களை சந்திக்கும்
கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், கேது
சஞ்சரிப்பதும் 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் எதையும்
எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் உஷ்ண சம்பந்தபட்ட
பாதிப்புகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. வண்டி,
வாகனங்களில் பயணம் செய்யும் போது சற்று கவனம் தேவை. குடும்பத்தில் சிறு சிறு
ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து செல்வது உத்தமம்.
பணவரவுகள் சற்ற ஏற்ற இறக்கமாக இருந்தாலும் நெருங்கியவர்களின் உதவியால் உங்களுக்குள்ள
நெருக்கடிகள் குறையும். அசையும், அசையா சொத்துக்களால் அனுகூலமான பலன்களை
அடைவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும்
என்றாலும் கூட்டாளிகளை சற்று அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகளை
தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது
நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். மாணவர்கள்
கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று அனைவரின் ஆதரவைப் பெறுவார்கள். சிவ
வழிபாட்டையும் விஷ்ணு வழிபாட்டையும் செய்து வந்தால் கஷ்டங்கள் குறையும் செல்வ நிலை
உயரும்.
வெற்றி தரும் நாட்கள் - 10, 11.
சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
அன்பு, பண்பு, மரியாதை, தெய்வ
பக்தி யாவும் உடையவராகவும், சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில்
நம்பிவிடுபவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சுக்கிரன்
பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதும் 5-ல் குரு, 6-ல் சனி சஞ்சரிப்பதும் பல்வேறு
வகையில் உங்களுக்கு முன்னேற்றத்தை தரும் அமைப்பாகும். சூரியன் 7-ல் சஞ்சரிப்பதால்
உற்றார் உறவினர்களையும், உடனிருப்பவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது.
பணவரவுகள் தாராளமாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் சிலருக்கு
அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறு
சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். கொடுக்கல்-
வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை
இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் கிடைப்பதற்கான
சந்தர்ப்பங்கள் அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை
எதிர்கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். எடுக்கும்
முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றங்களை அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில்
மட்டுமின்றி விளையாட்டு போட்டிகளிலும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றியினைப் பெற
முடியும். சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருந்து விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டால்
தடைப்பட்ட காரியங்கள் கைகூடும்.
வெற்றி தரும் நாட்கள் - 8, 9, 12, 13.
கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம்
பாதங்கள்.
எவ்வளவு தான் கற்று அறிந்து
இருந்தாலும் எந்தவித தயக்கமும் இன்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு
கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், குரு சஞ்சரிப்பதால்
வரவுக்கு மீறிய செலவுகள், நிம்மதி குறைவு ஏற்படும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக
இருக்கும். மாத கோளான சூரியன் 6-ல் புதன் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால்
எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுக்குள்ள பிரச்சினைகள் குறையும். திருமண சுப
காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்ப
உறுப்பினர்களையும் உற்றார் உறவினர்களையும் சற்று அனுசரித்து செல்வதன் மூலம்
தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை
ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. கொடுத்த கடன்களை பெறுவதில் எதிர்பாராத
பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. சொந்த தொழில்,
வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே விலகி
ஓரளவுக்கு லாபம் உண்டாகும். பெரிய முதலீடு போட்டு செய்யும் செயல்களில் சற்று
சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தமான நிலையே
இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகமாக இருக்கும் என்றாலும் தேவையற்ற
பொழுது போக்குகளை தவிர்த்து விடுவது உத்தமம். குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை
வழிபடுவது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 10, 11, 14.
துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
எந்தவொரு விஷயத்திலும்
சிந்தித்து செயல்படும் ஆற்றலும், கொடுத்த வாக்குறுதியினை எப்பாடு பட்டாவது
காப்பாற்றும் பண்பும் கொண்டவராக விளங்கும் துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி
சுக்கிரன் 7-ல் சாதகமாக சஞ்சரிப்பதும் 3-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதும் நல்ல
அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை அடைவீர்கள்.
குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் நல்ல
பலன்கள் கிடைக்கும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்
உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்
என்றாலும் தனகாரகன் குரு பகவான் 3-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக்
கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதையும்
சமாளித்து விடுவீர்கள். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. தொழில்,
வியாபாரம் செய்பவர்களுக்கு உண்டாகக்கூடிய போட்டி பொறாமைகளால் வரவேண்டிய
வாய்ப்புகள் சில தடைகளுக்கு பின் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் உடன்
பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும்.
மாணவர்கள் முயன்று படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சனி பகவானை
வழிபடுவது சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 8, 9, 12, 13.
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
பேச்சில் கடுமை இருந்தாலும்
அதில் உண்மையிருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல்
கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சனி
சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும்
முயற்சியில் அனுகூலம் உண்டாகும். தாராள பணவரவு உண்டாகி உங்களுக்கு உள்ள கடன்
பிரச்சினைகள் குறையும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற நோக்கம்
நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். சூரியன் 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற
அலைச்சல், உடல் நிலையில் அடிக்கடி சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும். கணவன்-
மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்தால்
குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது,
பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் லாபகரமாக
இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று
லாபகரமான பலன்களை அடைவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சில கெடுபிடிகள்
ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். மாணவர்கள்
தேவையற்றப் பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் சற்று கவனமுடன் செயல்படுவது
உத்தமம். சிவ வழிபாடு செய்வதாலும் பௌர்ணமியன்று கிரிவலம் சென்று வருவதாலும்
நற்பலன்கள் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள் - 8, 9, 10, 11, 14.
தனுசு மூலம், பூராடம்,
உத்திராடம் 1-ஆம் பாதம்.
மற்றவர்களுக்கு உதவி செய்யும்
பண்பும் சிறு வயதிலிருந்தே தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் கொண்ட தனுசு ராசி
நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் குரு, செவ்வாய், 2-ல் சனி சஞ்சரிப்பதால்
நீங்கள் எதிலும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக
இருக்கும் என்றாலும் உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால்
நெருங்கியவர்களின் உதவியால் எதையும் சமாளிக்ககூடிய பலம் உண்டாகும். அசையும், அசையா
சொத்துக்களால் ஓரளவுக்கு லாபம் அடைவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி
பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு
பிரச்சினைகள் ஏற்படலாம். முடிந்த வரை வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
குடும்பத்தில் உள்ளவர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது
உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தொழில், வியாபார ரீதியாக
ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.
உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களின்
கல்வி திறன் சிறப்பாகவே இருக்கும். உடன் பழகும் நண்பர்களிடம் கவனமாக செயல்படுவது
உத்தமம். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபட்டால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள்
உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 10, 11, 12, 13.
மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம்
பாதங்கள்.
எப்பொழுதும் ஜாலியாகவும்,
நகைச்சுவை உணர்வுடனும், கள்ள கபடமற்று வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர
ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால்
தொழில் பொருளாதார ரீதியாக தேவையற்ற பிரச்சினைகள், நெருங்கியவர்களால் நிம்மதி
குறைவு, வீண் அலைச்சல், போன்றவை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு
பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. கணவன்- மனைவியிடையே வீண்
வாக்குவாதங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்து செல்வது உத்தமம்.
பணவரவுகள் தேவைகேற்றபடி அமைந்து தேவைகள் யாவும் பூர்த்தியாகும் என்றாலும் வீண்
செலவுகளை குறைப்பது, எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. திருமண சுபகாரிய
முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள்
அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது உத்தமம்.
கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில்
பெரிய தொகைளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில்
நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்கள் கல்வி ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களில்
கவனமுடன் இருப்பது உத்தமம். சஷ்டியன்று விரதமிருந்து முருக வழிபாட்டை மேற்கொண்டால்
மேன்மைகளை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - 12, 13, 14.
சந்திராஷ்டமம் - 08-03-2020 காலை 06.52 மணி முதல் 10-03-2020 காலை 06.22 மணி வரை.
கும்பம் அவிட்டம் 3,4-ஆம்
பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
தம்முடைய சொந்த பொருட்களையும்
பிறருக்கு தானமளிக்க கூடிய அளவுக்கு பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் கும்ப ராசி
நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் புதன், லாப ஸ்தானத்தில் குரு, கேது, செவ்வாய்
சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம்
இருக்கும். குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்திருக்கும். கணவன்- மனைவியிடையே
அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர
வழியில் மகிழ்ச்சி நிலவும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதோடு எதிர்பாராத தனவரவுகளால்
பொருளாதார நிலை உயர்வடையும். கடன்களும் படிப்படியாக குறையும். தேவைகள் அனைத்தும்
பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும்.
முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சரளமான
நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். உத்தியோகத்தில்
இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள்
நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். அடிக்கடி பயணங்கள்
மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். சிவ
வழிபாட்டையும் துர்கையம்மன் வழிபாட்டையும் செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 8, 9, 14.
சந்திராஷ்டமம் - 10-03-2020 காலை 06.22 மணி முதல் 12-03-2020 காலை 05.35 மணி வரை.
மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம்,
உத்திரட்டாதி, ரேவதி.
பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும்
தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல்
கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 10-ல் செவ்வாய், 11-ல்
சனி சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பொருளாதார நிலையும்
சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக
எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மையடையும். கூட்டாளிகளிடம் இருந்த கருத்து
வேறுபாடுகள் மறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த
உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த
இடமாற்றங்களும் கிடைக்கும். சிறப்பான பணவரவால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
கடன்களும் சற்று குறையும். திருமண சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி
அனுகூலப் பலன் கிட்டும். நல்ல வரன்கள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு,
மந்த நிலை தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்து இருக்கும். அசையும் அசையா
சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சிறு தடை தாமதத்திற்கு பின் அனுகூலப் பலன்
கிட்டும். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்படுவார்கள். லட்சுமி வழிபாடு
செய்தால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். பௌர்ணமியன்று கிரிவலம் வருவது
நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 8, 9, 10, 11.
சந்திராஷ்டமம் - 12-03-2020 காலை 05.35 மணி முதல் 14-03-2020 காலை 06.41 மணி வரை.
No comments:
Post a Comment