Thursday, March 26, 2020

வார ராசிப்பலன் மார்ச் 29 முதல் ஏப்ரல் 4 வரை


வார ராசிப்பலன் மார்ச் 29 முதல் ஏப்ரல் 4 வரை 
பங்குனி 16 முதல் 22 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

சூரிய

சுக்கி சந்தி
ராகு
புதன்
திருக்கணித கிரக நிலை


சனி செவ்

கேது  குரு

 


கிரக மாற்றம்
30-03-2020 மகரத்தில் குரு காலை 06.24 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
ரிஷபம்
28-03-2020 இரவு 10.00 மணி முதல் 31-03-2020 காலை 08.35 மணி வரை.
மிதுனம்
31-03-2020 காலை 08.35 மணி முதல் 02-04-2020 பிற்பகல் 04.03 மணி வரை.
கடகம்      
02-04-2020 பிற்பகல் 04.03 மணி முதல் 04-04-2020 இரவு 07.38 மணி வரை.
சிம்மம்
04-04-2020 இரவு 07.38 மணி முதல் 06-04-2020 இரவு 08.02 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
30.03.2020 பங்குனி 17 ஆம் தேதி திங்கட்கிழமை சஷ்டி திதி ரோகிணி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.00 மணி முதல் 08.00 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
தன்னுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதால் இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். 2-ல் சுக்கிரன், 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சியில் அனுகூலங்களையும், பொருளாதார ரீதியாக மேன்மைகளையும் அடைவீர்கள். திருமண சுபகாரியங்கள் கை கூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார், உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் அனுகூலமானப் பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்வடைவார்கள். முருக கடவுளை வணங்கி வழிபட்டால் வாழ்வில் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  31, 1, 2.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் ரிஷப ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதும் வரும் 30-ஆம் தேதி முதல் குரு அதிசாரமாக 9-ல் சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக அனுகூலத்தை தரும் அமைப்பாகும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். 8-ல் கேது சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் கைகூடும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். வீடு வாகனம் வாங்கும் எண்ணங்கள் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று நிதானத்துடன் நடந்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும். எதிர்பார்த்த லாபங்கள் அடைவதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது உத்தமம். துர்கையம்மன் வழிபாடு மற்றும் விநாயகர் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  29, 30, 3, 4.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
சற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சனி, செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால்  வரவுக்கு மீறிய வீண் செலவுகள், தேவையற்ற அலைச்சல் ஏற்படும் என்பதால் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பேச்சில் நிதானத்தை கடை பிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. திருமண முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் அனுகூலமான பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். சூரியன் 10-ல் சஞ்சரிப்பதால் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் தக்க சமயத்தில் கிடைத்து அனுகூலங்கள் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. தட்சிணாமூர்த்திக்கு முல்லை மலர் சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் குடும்பத்தில் செல்வ நிலை உயரும்.
வெற்றி தரும் நாட்கள் -  31, 1, 2.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்களாக இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் வரும் 30-ஆம் தேதி முதல் குரு அதிசாரமாக 7-ல் சஞ்சரிப்பதும் மிகவும் சிறப்பான அமைப்பு என்பதால் சகல விதத்திலும் மேன்மையான பலன்களை அடைவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. கணவன்- மனைவி இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்க்கும் இடமாற்றம் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கான வாய்ப்புகளும் தேடி வரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை தடையின்றி பெற முடியும். சனி பகவானை வழிபடுவது, சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -- 29, 30, 2, 3, 4.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
பிறர் பழிச்சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சனி, செவ்வாய், 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி தாராள தன வரவுகள் உண்டாகும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தி ஆகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சியும், அனுகூலங்களும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது, ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். விஷ்ணு பகவானையும் மகா லட்சுமி தேவியையும் வழிபட்டால் நன்மைகள் பல உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  29, 30, 31, 1, 2.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் வரும் 30-ஆம் தேதி முதல் குரு அதிசாரமாக 5-ல் சஞ்சரிப்பதும் நல்லது என்பதால் உங்களுக்கு இருந்த அலைச்சல்கள் குறைந்து வளமான பலன்களை பெறுவீர்கள். உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். தொழில் வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். கூட்டாளிகளையும் மற்றும் தொழிலாளர்களையும் அனுசரித்து சென்றால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறமையுடன் செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். பேச்சில் பொறுமையும் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். சுப காரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புத்திர வழியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த பிரச்சினைகள் ஓரளவுக்கு நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிவ பெருமானையும் அம்பிகையையும் வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் -  31, 1, 2, 3, 4.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
தராசு சிறியதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை போல மற்றவர்களின் குணங்ளை எடைபோட்டு பழகும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் கேது, 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனே சரியாகி விடும். அசையா சொத்துகள் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. சனி, செவ்வாய் 4-ல் இருப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், தேவையற்ற அலைச்சல் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை அளிக்கும்.  மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விடுவார்கள். மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொண்டால் மங்கள காரியங்கள் இனிதே நடைபெறும்.
வெற்றி தரும் நாட்கள் -  29, 30, 3, 4.
சந்திராஷ்டமம் -   28-03-2020 இரவு 10.00 மணி முதல் 31-03-2020 காலை 08.35 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
என்ன தான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சியில் மனம் தளராமல் பாடுபட்டு வெற்றி பெறும் விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராசியதிபதி செவ்வாய், சனி சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதாலும், 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய உன்னதமான வாரமாக இவ்வாரம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நல்ல லாபம் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள். துர்கையம்மன் வழிபாட்டை மேற்கொள்வதும், தட்சிணாமூர்த்தியை வழிபடுவதும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  29, 30.
சந்திராஷ்டமம் -   31-03-2020 காலை 08.35 மணி முதல் 02-04-2020 பிற்பகல் 04.03 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
எப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும், எல்லோருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், சனி, 4-ல் சூரியன் சஞ்சரிப்பது தேவையற்ற அலைச்சல்களை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் வரும் 30-ஆம் தேதி முதல் குரு அதிசாரமாக 2-ல் சஞ்சரிப்பதால் உங்களுடைய பொருளாதார நெருக்கடிகள் விலகி அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும் நிலை, கடன்கள் பைசலாகும் சூழல் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றமான நிலை உண்டாகும். வேலையாட்களை மட்டும் சற்று அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே ஏற்படும் கருத்து வேறுபாட்டால் குடும்ப ஓற்றுமை சற்று குறையும். பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் எண்ணங்கள் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் ஓரளவுக்கு ஆறுதலைத் தரும். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். முருக கடவுளுக்கும், சனி பகவானுக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  29, 30, 31, 1.
சந்திராஷ்டமம் -   02-04-2020 பிற்பகல் 04.03 மணி முதல் 04-04-2020 இரவு 07.38 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்பாக பழகும் மகர ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை அடைவீர்கள். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். புதிய வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவு ஆதரவுடன் செயல்படுவார்கள். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் லாபகரமான பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமதம் ஏற்படும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சிறு தாமதத்திற்கு பின் கிடைக்கும். முருக வழிபாடும், தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -  31, 1, 2, 3, 4.
சந்திராஷ்டமம் -   04-04-2020 இரவு 07.38 மணி முதல் 06-04-2020 இரவு 08.02 மணி வரை.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
தவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிக்கும் குணமும், தன்னிடம் பழகுபவர்களை  துல்லியமாக எடை போடும் ஆற்றலும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 12-ல் செவ்வாய், சனி சஞ்சரிப்பதால் எதிலும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. நல்ல பணவரவு உண்டாகி உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் கணவன்- மனைவி தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து, விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். உடல் ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. நெருங்கியவர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். அசையும், அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். அலைச்சல், டென்ஷன் அதிகரிக்ககூடும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை இருந்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிட்டும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. முருக வழிபாடு செய்வது, சஷ்டி மற்றும் கிருத்திகை விரதம் மேற்கொள்வது நன்மையை அளிக்கும்.
வெற்றி தரும் நாட்கள் -  2, 3, 4.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
சமயத்திற்கு ஏற்றார்போல மாறிவிடும் சுபாவம் இருக்கும் என்றாலும் துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகாத மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதும், வரும் 30-ஆம் தேதி முதல் குரு 11-ல் சஞ்சரிப்பதும் நல்லது என்பதால் தாராள தனவரவு உண்டாகி எல்லா வகையிலும் ஏற்றங்களை அடைவீர்கள். பொருளாதார நிலையும் மேன்மையடையும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே சிறப்பான ஒற்றுமை இருக்கும். சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். அம்பிகை வழிபாட்டை மேற்கொண்டால் குடும்பத்தில் சுபிட்சங்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  31, 1, 2.

No comments: