வார ராசிப்பலன் -மார்ச் 22 முதல் 28 வரை
பங்குனி 9 முதல் 15 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L,
M.A.astro. PhD in Astrology.
No:
19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.
வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
சூரிய
|
சுக்கி
|
|
ராகு
|
சந்தி புதன்
|
திருக்கணித கிரக நிலை
|
|
|
சனி
|
|
||
கேது செவ் குரு
|
|
|
|
கிரக மாற்றம்
22-03-2020 மகரத்தில் செவ்வாய்
பிற்பகல் 02.40 மணிக்கு
28-03-2020 ரிஷபத்தில் சுக்கிரன்
பிற்பகல் 03.38 மணிக்கு
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
கும்பம்
21-03-2020 காலை 06.20 மணி முதல்
23-03-2020 மாலை 06.37 மணி வரை.
மீனம்
23-03-2020 மாலை 06.37 மணி முதல்
26-03-2020 காலை 07.16 மணி வரை.
மேஷம்
26-03-2020 காலை 07.16 மணி முதல்
28-03-2020 இரவு 07.30 மணி வரை.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
22.03.2020 பங்குனி 09 ஆம் தேதி
ஞாயிற்றுக்கிழமை திரயோதசி திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல்
09.00 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை*****
26.03.2020 பங்குனி 13 ஆம் தேதி
வியாழக்கிழமை துவிதியை திதி அசுவனி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல்
09.00 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை
27.03.2020 பங்குனி 14 ஆம் தேதி
வெள்ளிக்கிழமை திருதியை திதி அசுவனி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல்
07.00 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை***
மேஷம் அசுவனி, பரணி,
கிருத்திகை 1-ஆம் பாதம்.
நல்ல வாக்கு சாதுர்யமும், சிறந்த
அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் 10-ல்
சஞ்சரிப்பதும் பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு
என்பதால் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் மேலோங்க கூடிய இனிய வாரமாக இவ்வாரம்
இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் உங்களை தேடி
வரும். எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். புதிய முயற்சிகள் அனைத்திலும்
அனுகூலமான பலன்களை அடைவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன்
செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும்.
சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு
அவர்கள் திறமைகேற்ப வேலை வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக
இருக்கும். சிறப்பான பணவரவால் பொருளாதார நிலை மேலோங்கும். திருமண வயதை
அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவி வீண்
வாக்குவாதங்களை தவிர்த்து பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. கொடுக்கல்-
வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். மாணவர்களுக்கு
அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் எளிதில் கிடைக்கும். சிவ வழிபாடும் விநாயகர்
வழிபாடும் செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - 22, 23, 26, 27, 28.
ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம்
பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
சாமர்த்தியமாகவும்,
சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றல் உடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி
நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் புதன், 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத
உதவிகள் கிடைத்து அனுகூலமான பலன்களை அடைவீர்கள். உங்களது பிரச்சினைகள் குறைந்து
குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பண வரவுகளில் இருந்த தேக்கங்கள் நீங்கி சரளமான
நிலை இருக்கும். உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும் என்றாலும் குரு, கேது 8-ல்
சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் மிகவும் சிக்கனமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவி
அனுசரித்து செல்வது, உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம்.
உடல் ஆரோக்கியத்தில் சற்றே அக்கறை செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரம்
செய்பவர்கள் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டி இருந்தாலும் பொருட் தேக்கம்
ஏற்படாது. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவுக்கு மகிழ்ச்சி
அளிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பணியில்
கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். பணம்
கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து
செயல்படுவது நல்லது. மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்வடைவார்கள். மகா
லட்சுமி வழிபாடு செய்தால் குடும்பத்தில் மங்களகரமான நிகழ்வுகள் நடைபெறும்.
வெற்றி தரும் நாட்கள் - 22, 23, 24, 25.
மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும்
சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே, குரு
பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் ராசியதிபதி புதன் 9-ல், சூரியன் 10-ல்
சஞ்சரிப்பதாலும் தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை அற்புதமாக இருக்கும்.
வெளியூர், வெளிநாட்டு தொடர்புகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம்
பெருகும். சிறப்பான பணவரவால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்து
கொண்டால் ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து
செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள்
ஏற்பட்டாலும் உடனே சரியாகி விடும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த
வாக்கை காப்பாற்ற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும்
உயர்வுகள் கிடைக்கப்பெறும். பயணங்களால் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க
நேரிட்டாலும் அனுகூலமான பலனை அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு
பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். கிருத்திகையன்று விரதமிருந்து முருக
கடவுளை வழிபட்டால் நன்மைகள் பல உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 24, 25, 26, 27, 28.
கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம்,
பூசம், ஆயில்யம்.
சுறுசுறுப்பாக செயல்பட்டு
எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள்
ராசிக்கு 6-ல் கேது, 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய
பலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள்
அதிகரித்தாலும் எதையும் சமாளித்து ஏற்றங்களை பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டு
தொடர்புடைய வாய்ப்புகளால் நல்ல லாபம் உண்டாகும். செவ்வாய், சனி 7-ல் சஞ்சரிப்பதால்
உத்தியோகஸ்தர்கள் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது, தங்கள் பணிகளில் மட்டும்
கவனம் செலுத்துவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வதும்,
முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதும் உத்தமம். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக
அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக்
கொண்டால் கடன்கள் ஏற்படாமல் பார்த்து கொள்ளலாம். திருமண சுபகாரியங்களுக்கான
முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். கணவன்- மனைவி ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து
நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களிடம் சற்று
கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை.
மாணவர்கள் எதிர்பார்க்கும் அரசு உதவிகள் கிடைக்கப் பெறும். விஷ்ணு பகவானை
வழிபட்டால் வாழ்வில் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 26, 27, 28.
சந்திராஷ்டமம் - 21-03-2020 காலை 06.20 மணி முதல் 23-03-2020 மாலை 06.37 மணி வரை.
சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
சூது வாது அறியாமல் அனைவரையும்
எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் குரு,
6-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் வெற்றி மேல் வெற்றி அடையகூடிய சிறப்பான வாரமாக
இவ்வாரம் இருக்கும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். தேவைகள் அனைத்தும்
பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்-
மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள்
அமையும். பொன், பொருள் சேரும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம்
உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த
கடன்களையும் வசூலித்து விட முடியும். உடல் ஆரோக்கியமும் ஓரளவு சிறப்பாக இருக்கும்.
எடுக்கும் காரியத்தை சுறுசுறுப்புடன் செய்து முடித்து விடுவீர்கள். பூர்வீக
சொத்துக்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் நிம்மதியான நிலையிருக்கும். வெளியூர், வெளிநாடுகளில் பணிபுரிவதற்கான
வாய்ப்புகள் தேடி வரும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
தடைபட்ட வாய்ப்புகளும் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். மாணவர்கள் கல்வியில்
சற்று அதிக கவனம் எடுத்து கொள்வது நல்லது. சிவராத்திரி நாளில் சிவாலயங்களுக்கு
சென்று சிவ பெருமானை வழிபட்டால் சகல நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 22, 23.
சந்திராஷ்டமம் - 23-03-2020 மாலை 06.37 மணி முதல் 26-03-2020 காலை 07.16 மணி வரை.
கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம்
பாதங்கள்.
சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை
மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல்
செவ்வாய், 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நெருங்கியவர்களை
அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள்
நிலவும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது மூலம் வீண் விரயங்களை
குறைத்து கொள்ள முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து
நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகளை பெற முடியும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை
இருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் விட்டு
கொடுத்து சென்றால் ஒற்றுமை குறையாது. முடிந்த வரை குடும்ப உறுப்பினர்களையும்,
உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண
சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பணம் கொடுக்கல்-
வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் தோன்றினாலும்
உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் எதையும் சமாளிக்க முடியும். வேலைபளு சற்று
அதிகரிக்கும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க
நேரிடும். தினமும் விநாயகர் வழிபாட்டை செய்தால் தடைப்பட்ட காரியங்கள் கைகூடும்.
வெற்றி தரும் நாட்கள் - 22, 23, 24, 25.
சந்திராஷ்டமம் - 26-03-2020 காலை 07.16 மணி முதல் 28-03-2020 இரவு 07.30 மணி வரை.
துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா
ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதும் 3-ல் கேது, 6-ல்
சூரியன் சஞ்சரிப்பதும் உங்களுக்கு வளமான பலன்களை தரும் அமைப்பாகும். குடும்பத்தில்
மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்
கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் வீண் அலைச்சல்கள் குறையும்.
கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமை
நிலவும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பல பெரிய
மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை
இருக்கும். உங்கள் ராசிக்கு குரு, சனி சாதகமற்று சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை
குறைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எந்தவித
பிரச்சினைகளையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றல் உண்டாகும். எதிர்பார்த்த வாய்ப்புகளும்
லாபமும் கிடைக்கும். கூட்டாளிகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்தில்
இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும்.
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடனும் தெம்புடனும்
செயல்படுவார்கள். செவ்வாய் வெள்ளி நாட்களில் ராகு காலங்களில் துர்கையம்மன்
வழிபாட்டை மேற்கொண்டால் குடும்பத்தில் சுபசெய்திகள் வந்து சேரும்.
வெற்றி தரும் நாட்கள் - 24, 25, 26, 27, 28.
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
நியாய அநியாயங்களை பயமின்றி
தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி
செவ்வாய், சனி சேர்க்கைப் பெற்று 3-ல் சஞ்சரிப்பதும் 2-ல் குரு சஞ்சரிப்பதும்
எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை உண்டாக்கும். பணம் பல வழிகளில் வந்து
சேரும். எடுக்கும் முயற்சிகளில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில்
சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும்.
தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்
பலன் உண்டாகும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை சிறப்பாக
இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பொன், பொருள் சேரும்.
தேவைகள் யாவும் நிறைவேறும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில்
பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும்
உயர்வுகளைப் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம்
அமையும். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். பயணங்களால்
அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின்
பாராட்டுதல்களை பெறுவார்கள். சிவ வழிபாடும் விநாயகர் வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 26, 27, 28.
தனுசு மூலம், பூராடம்,
உத்திராடம் 1-ஆம் பாதம்.
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை
கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், சனி, 4-ல் சூரியன்
சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், வரவுக்கு மீறிய
வீண் செலவுகள் உண்டாகும் என்பதால் நிதானமாக செயல்படுவது நல்லது. தேவையற்ற செலவுகளை
குறைத்து கொள்வதும், சிக்கனத்தை கடைபிடிப்பதும் உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சிறு
சிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் கணவன்-
மனைவி பேச்சில் பொறுமையுடன் இருப்பதும், உற்றார் உறவினர்களிடம் தேவையற்ற
வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை
சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்க
முடியும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில்
இருப்பவர்களுக்கு வேலை பளு கூடுதலாகவே இருக்கும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள்
உண்டாகும். தொழில், வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும்.
கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் தேவையற்ற
நண்பர்களின் சகவாசத்தால் வீண் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
சனிக்கிழமை சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் கஷ்டங்கள் குறையும்.
வெற்றி தரும் நாட்கள் - 22, 23.
மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம்
பாதங்கள்.
எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும்
அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர் கொண்டு வாழக்கூடிய ஆற்றல் கொண்ட மகர
ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது
முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உங்கள்
ராசிக்கு 3-ல் சூரியன், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் தாராள தனவரவு உண்டாகி உங்கள்
தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே சிறு சிறு ஒற்றுமை குறைவுகள்
ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சோர்வு
மந்தநிலை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்களின் வருகை
மகிழ்ச்சியினை அளிக்கும் என்றாலும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. புதிய
வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைய முடியும்.
கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம்.
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். கூட்டாளிகள்
மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகத்தில்
இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக
கவனம் எடுத்து கொண்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். சனிப்ரீதியாக
விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபட்டால் சகல நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 24, 25.
கும்பம் அவிட்டம் 3,4-ஆம்
பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
அன்பும் சாந்தமும் அமைதியான
தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் குரு,
கேது சஞ்சரிப்பதால் தாராள தனவரவு உண்டாகி உங்களது அனைத்து பிரச்சினைகளும் விலகும்.
2-ல் சூரியன், 12-ல் செவ்வாய், சனி சஞ்சரிப்பதால் தேவையற்ற வீண் செலவுகள்
ஏற்படும். தாராள தனவரவு உண்டாகி உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
குடும்பத்தில் சுபிட்சம், மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடிய அமைப்பு
இவ்வாரத்தில் உண்டு. ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கொடுக்கல்-
வாங்கலில் லாபகரமான பலன்கள் ஏற்படும். கொடுத்த கடன்களும் தடையின்றி வந்து சேரும்.
ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு
பணியில் நிம்மதியான நிலை இருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தற்சமயம்
பயன்படுத்தி கொள்வது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவு முன்னேற்றம்
உண்டாகும். பயணங்களால் சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும்
அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம்.
மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது.
முருக வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 22, 23, 26, 27, 28.
மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம்,
உத்திரட்டாதி, ரேவதி .
பொறுமையும் தன்னம்பிக்கையும்
கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான
11-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் அனுகூலங்களை அடைவீர்கள்.
எடுக்கும் முயற்சியில் வெற்றி, தாராள தனவரவால் உங்களது கடந்த கால பிரச்சினைகள்
குறையும் அமைப்பு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும்.
பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும்
படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதால் மருத்துவ செலவை
தவிர்க்க முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன்
உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். வெளிவட்டாரத்
தொடர்புகள் விரிவடையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி
லாபம் அடைவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும்.
தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். புதிய வாய்ப்புகள் தேடி
வருவதால் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை
இருக்கும். சிலருக்கு வெளியூர், வெளிமாநிலங்களுக்கு சென்று பணிபுரிய கூடிய
வாய்ப்பும் அமையும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு
பெருமை சேர்ப்பார்கள். சிவ வழிபாடும் துர்கையம்மன் வழிபாடும் செய்தால் மேன்மையான
பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - 24, 25.
No comments:
Post a Comment