Tuesday, May 14, 2019

Today rasi palan - 15.05.2019


Today rasi palan - 15.05.2019
இன்றைய ராசிப்பலன் -  15.05.2019
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
15-05-2019, வைகாசி 01, புதன்கிழமை, ஏகாதசி திதி பகல் 10.36 வரை பின்பு வளர்பிறை துவாதசி. உத்திரம் நட்சத்திரம் காலை 07.16 வரை பின்பு அஸ்தம் நட்சத்திரம் பின்இரவு 05.41 வரை பின்பு சித்திரை. அமிர்தயோகம் காலை 07.16 வரை பின்பு மரணயோகம் பின்இரவு 05.41 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00


சூரிய புதன் சுக்கி

ராகு செவ்

திருக்கணித கிரக நிலை
15.05.2019



கேது சனி (வ)
குரு (வ)
 
சந்தி

இன்றைய ராசிப்பலன் -  15.05.2019
மேஷம்
இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். கூட்டாளிகளின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். வருமானம் பெருகும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை தோன்றும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலையில் உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது உத்தமம்.
மிதுனம்
இன்று அலுவலகத்தில் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த கடனுதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் கிட்டும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.
கடகம்
இன்று பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். எதிர்பார்த்த வங்கி கடன்  கிடைப்பதற்கான சூழ்நிலை உருவாகும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். சுபகாரியங்கள் கைகூடும்.
சிம்மம்
இன்று இல்லத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும்.
கன்னி
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சிலருக்கு வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடல்நிலை சுறுசுறுப்பாக இருக்கும். சுபசெலவுகள் ஏற்படும்.
துலாம்
இன்று நீங்கள் அக்கம் பக்கத்தினரை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழிலில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். கோபத்தை குறைத்து எந்த செயலிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழிலில் வேலையாட்கள் சாதகமாக இருப்பார்கள். அலுவலகத்தில் நீண்ட நாள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
தனுசு
இன்று உங்களுக்கு உடல்நிலையில் சிறு உபாதைகள் ஏற்படும். வாகனங்களால் வீண் செலவுகள் உண்டாகலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும்.
மகரம்
இன்று உங்களுக்கு குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமதம் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
கும்பம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்த நிலை தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தினருடன் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.
மீனம்
இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் ஏற்படும். தொழில் ரீதியான புதிய திட்டங்கள் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வெற்றியை ஏற்படுத்தும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கொடுத்த வாக்கை காபாற்ற முடியும்.

No comments: