வார ராசிப்பலன்-- மே 26 முதல் ஜுன் 1 வரை
வைகாசி 12 முதல் 18 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
|
சுக்கி
|
சூரிய புதன்
|
செவ் ராகு
|
சந்தி
|
திருக்கணித கிரக நிலை
26.05.2019
|
|
|
|
|
||
சனி(வ) கேது
|
குரு(வ)
|
|
|
கிரக மாற்றம் இல்லை
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
கும்பம் 25-05-2019
இரவு 11.44 மணி முதல் 28-05-2019 பகல் 12.18 மணி வரை.
மீனம் 28-05-2019 பகல் 12.18 மணி முதல் 30-05-2019 இரவு
11.04 மணி வரை.
மேஷம் 30-05-2019 இரவு 11.04 மணி
முதல் 02-06-2019 காலை 06.45 மணி வரை.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
24.05.2019 வைகாசி 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை
சஷ்டி திதி உத்திராடம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள்
ரிஷப இலக்கினம்.
29.05.2019 வைகாசி 15 ஆம் தேதி புதன்கிழமை
தசமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள்
கடக இலக்கினம். தேய்பிறை
மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை
1-ஆம் பாதம்.
தைரியமும், அஞ்சா நெஞ்சமும் உடன்
பிறந்தது என்பதால் எந்தவித பிரச்சினைகளையும் எளிதில் சமாளித்து விடும் ஆற்றல் கொண்ட
மேஷ ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன் முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய்,
ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும்.
எடுக்கும் முயற்சிகளில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால்
குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக்
கொள்வது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருந்தாலும் அடிக்கடி சிறுசிறு ஒற்றுமை
குறைவுகளும் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களின்
வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபத்தினை
அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்க பெறுவதோடு
எதிர்பார்த்த லாபங்களும் கிடைக்கும். தொழிலாளர்களும், கூட்டாளிகளும் அனுகூலமாக செயல்படுவார்கள்.
பயணங்களால் சாதகப்பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும்.
எதிர்பார்க்கும் இடமாற்றம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும். தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் சகல
நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 26, 27, 31, 1.
ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள்
ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
பார்ப்பதற்கு சாதாரணமானவராக இருந்தாலும்
யார் வம்புக்கு வந்தாலும் ஓட ஓட விரட்டியடிக்கும் குணம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே,
குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பணவரவு திருப்திகரமாக இருந்து உங்கள் தேவைகள்
பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய்,
ராகு, 8-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து
வேறுபாடுகள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, விட்டுக் கொடுத்து நடப்பது
நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். அசையும், அசையா
சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது
நல்லது. பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை
ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு
கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தியை
பெருக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
வேலைபளு சற்று குறைவாகவே இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை உண்டாக
கூடும் என்பதால் முழு மூச்சுடன் முயன்று படிப்பது உத்தமம். முருக வழிபாட்டை மேற்கொண்டால்
வாழ்வில் முன்னேற்றங்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள் - 26, 27, 28, 29, 30.
மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
தன்னுடைய ரசிக்கும் படியான பேச்சாற்றலால் மற்றவர்களின் நம்பிக்கைக்கு
எளிதில் பாத்திரமாக கூடிய மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய்,
ராகு, 7-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. முடிந்தவரை
உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது சிறப்பு. பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும்.
குரு 6-ல், சூரியன் 12-ல் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளை
குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள்
தோன்றி மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள்
உண்டாககூடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, குடும்பத்தினரிடம் விட்டுக்
கொடுத்து நடப்பது நல்லது. சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு வீண் செலவுகள்
ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள்
தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு
போட்டி பொறாமைகள் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றமானப் பலன்களைப் பெறுவீர்கள்.
மாணவர்கள் கல்விக்காக மேற்கொள்ளும் பயணங்களால் சற்றே அலைச்சல்கள் அதிகரிக்கும். விநாயகர்
வழிபாடு செய்வது, பிரதோஷ காலங்களில் விரதமிருந்து சிவ பெருமானை வணங்குவது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 29, 30, 31, 1.
கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம்,
பூசம், ஆயில்யம்.
கள்ளம் கபடமின்றி வெளிப்படையாக பேசும்
வெகுளித்தனமும், பிறருக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் நடந்து கொள்ளும் பண்பும் கொண்ட
கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால்
சகல விதத்திலும் மேன்மையான பலன்களை அடைவீர்கள். தாராள தன வரவால் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும்.
குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகி கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள்
கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பு ஏற்படும். சிலருக்கு சொந்த
வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள்
உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த
கடன்களும் வசூலாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்களும்
நல்ல லாபத்தினை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். வெளியூர்,
வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில்
சிறந்து விளங்கி பள்ளி, கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். முருக வழிபாட்டையும் அம்பிகை
வழிபாட்டையும் மேற்கொண்டால் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 31, 1.
சந்திராஷ்டமம் - 25-05-2019 இரவு 11.44 மணி முதல் 28-05-2019 பகல் 12.18 மணி வரை.
சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டு நடக்கும்
பண்பும், தன்னை போலவே பிறரும் நடந்து கொள்ள வேண்டும் என நினைக்கும் குணமும் கொண்ட சிம்ம
ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன் 10-ல் புதன் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதும்
லாப ஸ்தானத்தில் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை
தேடி வரும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு
நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று சுபகாரியங்கள் கைகூடும். பண வரவுகள் தாராளமாக இருக்கும்.
தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று குறையும். உடல் ஆரோக்கியம் ஓரளவு
சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். கொடுக்கல்- வாங்கலில்
பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய
வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் லாபங்கள் பெருகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும்
வெற்றிகள் கிட்டும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி
ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைகேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு
ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். சனி பகவானையும் விநாயகப்
பெருமானையும் வணங்கி வழிபட்டால் கஷ்டங்கள் குறையும்.
வெற்றி தரும் நாட்கள் - 26, 27.
சந்திராஷ்டமம் - 28-05-2019 பகல் 12.18 மணி முதல் 30-05-2019 இரவு 11.04 மணி வரை.
கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
தவறு செய்பவர்களைக்கூட தன் அன்பான
பேச்சாற்றலால் திருத்தி விடும் இயல்புடையவராக விளங்கும் கன்னி ராசி நேயர்களே, உங்கள்
ராசியதிபதி புதன், சூரியன் சேர்க்கைப் பெற்று பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும்
10-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் ஏற்றங்களை அடைவீர்கள்.
பணவரவுகள் ஓரளவுக்கு தாராளமாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் தேடி வரும். செலவுகளும்
கட்டுக்குள் இருப்பதால் சேமிக்க முடியும். உடல் நிலையில் சற்றே மந்தநிலை உண்டானாலும்
அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றல் இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை
நிலவும். பொன், பொருள் சேரும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான
பலனை அடைய முடியும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால்
லாபம் கிட்டும். செய்யும் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். வெளியூர்
பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை
எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு
உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று
அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். சனிப்ரீதியாக ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை
சாற்றி வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - 26, 27, 28, 29, 30.
சந்திராஷ்டமம் - 30-05-2019 இரவு 11.04 மணி முதல் 02-06-2019 காலை 06.45 மணி வரை.
துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
தோல்விகளை கண்டு துவண்டு விடாமல்
எதற்கும் சலைக்காமல் பாடுபடும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி
சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதும் முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் நல்ல
அமைப்பு என்பதால் வலமான பலன்களை பெறுவீர்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில்
மகிழ்ச்சி ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து
விட முடியும். சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது
நல்லது. நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலைகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது
உத்தமம். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவியிடையே
ஒற்றுமை பலப்படும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலமானப் பலனை
அடைவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி எதிர்பார்த்த லாபத்தை
அடைந்துவிட முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
தொழிலாளர்கள் மற்றும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்கள்
பணியில் திறம்பட செயல்படகூடிய ஆற்றலை பெறுவார்கள். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில்
ஈடுபடும் போது கவனம் தேவை. சிவ வழிபாட்டையும், முருக வழிபாட்டையும் மேற்கொள்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 29, 30, 31, 1.
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
மற்றவர்களின் எதிர்ப்புகளுக்கு அஞ்சாது
பிறர் போற்றும் வகையில் வெற்றி பெற்று முன்னேறும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே,
உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், 8-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களால்
நிம்மதி குறைவு, தொழில் ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். முன்கோபத்தைக் குறைத்துக்
கொண்டு உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் கடினமாக
உழைத்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பண
வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.
திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளை எதிர்கொள்ள நேரிடும். குடும்பத்தில் சிறுசிறு
வாக்குவாதங்கள் தோன்றி ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். தேவையின்றி பிறர் விஷயங்களில்
தலையீடு செய்யாது இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும்
என்றாலும் வேலைபளு கூடும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது.
தேவையற்ற பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரியத் தொகைகளை
ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த
மதிப்பெண்களைப் பெற முடியும். ராகு காலங்களில் துர்கையம்மனை தீபம் ஏற்றி வழிபட்டால்
நன்மைகள் பல உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 31, 1.
தனுசு மூலம், பூராடம், உத்திராடம்
1-ஆம் பாதம்.
யாருக்கும் கீழ் படிந்து அடிமையாக
நடப்பதென்பதை இயலாத காரியமாக கருதும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசியில்
சனி, கேது சஞ்சரிப்பதால் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வீர்கள் என்றாலும் 6-ல் சூரியன்
சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும்.
எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள்.
ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் தேவையற்ற கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கணவன்-
மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம்
ஓரளவுக்கு அனுகூலப்பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும்.
தொழில், வியாபாரம் சற்று மந்த நிலையில் நடைபெற்றாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. புதிய
ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினைப் பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து
செயல்படுவது மூலம் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள்
அதிகரிக்கும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சற்றே கவனம் தேவை.
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவரின் ஒத்துழைப்பு
கிடைக்கும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களை தவிர்ப்பது உத்தமம். குருப்ரீதியாக
தட்சிணாமூர்த்தியை வணங்குவது, முடிந்த உதவியை ஏழை எளியவர்களுக்கு வழங்குவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 26, 27, 28.
மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை
உணர்வுடனும், கள்ள கபடமன்றி வெகுளித்தனமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள்
ராசிக்கு 4-ல் சுக்கிரன் 6-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த
பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்க்கும் வெற்றிகளைப் பெறுவீர்கள்.
குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது
அனைவரிடமும் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக்
கொள்வது மூலம் மருத்துவ செலவுகளை குறைத்து கொள்ள முடியும். தொழில், வியாபாரத்தில் இருந்த
மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். நிறைய போட்டிகள் ஏற்பட்டாலும் அவை அனைத்தையும்
சமாளிக்கும் திறன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை
தவிர்க்கவும். பணவரவுகளில் சுமாரான நிலையிருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து குடும்பத்
தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
உத்தியோகஸ்தர்கள் பணியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறலாம்.
மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாட்டையும், விநாயகர் வழிபாட்டையும்
செய்து வந்தால் நற்பலன்கள் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள் - 28, 29, 30.
கும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள்
சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
தனக்கு பிடித்தவர்களிடம் அன்புடன்
நெருங்கி பழகும் பண்பும், பிடிக்காதவர்களை ஏறெடுத்தும் பார்க்காத பிடிவாத குணமும் கொண்ட
கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி, கேது சேர்க்கைப் பெற்று 11-ல் சஞ்சரிப்பதும்
4-ல் புதன் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் நற்பலன்களை அடைவீர்கள். பணவரவுகள்
திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது.
கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள்.
திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து
கொள்வதன் மூலம் அனுகூலப் பலன்களைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை
பெற சற்று தாமத நிலை உண்டாகும் என்றாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி
அளிப்பதாக அமையும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு
கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்தே
லாபத்தினைப் பெற முடியும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடன்
செயல்படுவார்கள். பிரதோஷ காலங்களில் சிவ பெருமானையும் அம்பிகையையும் வழிபட்டால் குடும்பத்தில்
சுபிட்சம் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள் - 26, 27, 31, 1.
மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி,
ரேவதி .
சின்ன சின்ன விஷயங்களில் கூட குற்றம்
கண்டுபிடித்து பேசும் போது, வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் என உணர்த்தும் குணம் கொண்ட
மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும்
முயற்சியில் ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில்
இருந்த தடைகள் விலகி குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் கைகூடும். பணம் பல வழிகளில்
தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்.
குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமையும் சுபிட்சமும்
சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வீடு, மனை போன்றவற்றை
வாங்கும் முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான
முன்னேற்றம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். பல பெரிய மனிதர்களின் உதவிகளும்
கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும்.
உத்தியோகஸ்தர்கள் பணியில் எதையும் சிறப்புடன் செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை
பெற முடியும். மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர்களுக்கு கீழ் படிந்து நடந்து கொண்டால் அனைவரின்
ஆதரவுகளையும் பெறலாம். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. முருக வழிபாடு
செய்வதும் உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 28, 29, 30.
No comments:
Post a Comment